தமிழ்நாடு நில அபகரிப்பு வழக்குகள் என்பது ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு 2011 ஆம் ஆண்டு பதவியேற்றவுடன்
2.பொதுமக்களிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்கப்பட்ட அல்லது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை உரியவர்களிடமே ஒப்படைப்பதற்காக எடுக்கப்பட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளைக் குறிக்கிறது.
3.தமிழ்நாட்டிலுள்ள நில உரிமையாளர்களிடமிருந்து நிலத்திற்கான முழுத்தொகையைக் கொடுக்காமலோ அல்லது போலி ஆவனங்கள் தயாரித்தோ அல்லது மிரட்டியோ நிலத்தைச் சட்டத்திற்குப் புறம்பாக அபகரித்துக் கொள்தல் அல்லது ஆக்கிரமிப்பு செய்து கொள்தல் போன்ற நடவடிக்கைகள்
4. தமிழ்நாடு முழுவதும் பரவலாக 2006-2011 காலகட்டத்தில் (திமுக ஆட்சிகாலத்தில்) அதிகமாக நடைபெற்றதாக் தமிழக அரசு குற்றம் சாட்டியது. இப்படி நிலங்களை இழந்த நிலங்களின் உரிமையாளர்கள் கொடுத்த புகார்களின் மேல் பதிவு செய்யப்படும் வழக்குகள்,
5.அதன் மீதான நடவடிக்கைகள் ”தமிழ்நாடு நில அபகரிப்பு வழக்குகள்” என்று அழைக்கப்படுகின்றன. நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்காக சூலை 10, 2011 அன்று தமிழக அரசு தனிப்பிரிவு ஒன்றை நிறுவியது.
6.அதன்படி காவல் துறையில், தனியாக சிறப்பு பிரிவு ஒன்று காவல் தலைமை அலுவலகத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கும்.
7.சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அங்கம்மாள் காலனி பொதுமக்கள் சிலர் தங்களது நிலத்தை சிலர் மிரட்டி அபகரித்து கொண்டதாக திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 13 பேர் மீது புகார் செய்தனர்.
8. இதனைத் தொடர்ந்து தான் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக அவர் உயர்நீதிமன்றத்தில் பிணை பெற முயற்சித்தார்.
9.அதனை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ராஜசூர்யா வரும் திங்கட்கிழமை சூலை 25, 2011 காலை பத்துமணிக்குள் சேலம் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகவும் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து மூன்று நாட்கள் காவல்துறை விசாரணை செய்யவும் அனுமதித்தார்.
10.மதுரையில் ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் பறிப்பு புகார் தொடர்பான வழக்கில் தி.மு.க. மாநகர் மாவட்டச் செயலர் கோ.தளபதி உள்ளிட்ட 4 பேர் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர்.
11.தேனி, வேங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சிவனாண்டி-பாப்பா தம்பதி மாவட்ட போலீஸ் எஸ்.பி. அஸ்ரா கர்க்கிடம் புகார் மனு அளித்தனர். அதில் திருமங்கலம் அருகே உள்ள தங்களது 5.14 ஏக்கர் நிலத்தை தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் மிரட்டி எழுதி வாங்கியிருப்பதாக கூறியிருந்தனர்.
12.தி.மு.க. மதுரை மாநகர் மாவட்டச் செயலர் கோ.தளபதி, திருமங்கலம் ஒன்றிய தி.மு.க. பிரமுகர் கொடி சந்திரசேகர், திருப்பரங்குன்றம் தி.மு.க. நகர்ச் செயலர் கிருஷ்ணபாண்டி, சுரேஷ்பாபு, எஸ்.ஆர். கோபி, உள்ளிட்ட 7 பேர் மீது புகார் கூறப்பட்டிருந்தது.
13.அவர்களுக்கு புறநகர் போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. சம்மனைப் பெற்றுக் கொண்டவர்களில் கோ.தளபதி, கொடி சந்திரசேகர், கிருஷ்ணபாண்டி, சுரேஷ்பாபு ஆகியோர் எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்தனர். விசாரணைக்குப் பின்னர் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
14.நிலமோசடி வழக்கில் மதுரை தி.மு.க., மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் வி.கே.குருசாமி மற்றும் அவரது மருமகன் பாண்டியனும் கைது செய்யப்பட்டனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் இவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
15.திருப்பூரில் மில் ஒன்றை அபகரித்தாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜே. அன்பழகன் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சட்டமன்றத்தொடரில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் பிணையில் விடுவிக்கவேண்டும் என நீதிமன்றத்தில் கோரினார்.
16.சென்னை தி.நகரில் நடந்த ஒரு நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாகவும் முன்பிணை கோரியிருந்தார். இந்த இரு வழக்குகளையும் ஆராய்ந்த நீதிபதி
17.அவரை சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு வசதியாக கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றி, அங்கிருந்து தினமும் சட்டசபைக்கு அவரை அழைத்துவர வேண்டும் என்று கூறினார்.
18.கரூர் தளவாபாளையம் பகுதியை சேர்ந்த, மணி & அவரது மனைவி பார்வதியின் நிலத்தை மோசடி செய்துவிட்டதாக கூறப்படும் வழக்கில் தி.மு.க.வின் முன்னாள் மாவட்ட செயலாளர் வாசுகியின் கணவர் முருகேசன் மற்றும் அவரது தம்பி ரவிக்குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்
19.ஈரோட்டுக்கு அருகிலுள்ள பெருந்துறையில் ராமசாமி, மலர்விழி தம்பதியின் நிலத்தை அபகரித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் என்கேகேபி ராஜா, ஈரோடு மேயர் முருகேஷ், திமுக மாவட்ட துணைச் செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
20.மதிமுக நிர்வாகி கண்ணையன் என்பவர் பொன்மலை திமுக செயலாளர் தர்மராஜ் மீது நில மோசடி புகார் கொடுத்ததின் விளைவாக தர்மராஜ் கைது செய்யப்பட்டார்
21.நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் கதிர்வேல் என்பவர் திருச்சி போலீஸ் ஆணையரிடம் கொடுத்துள்ள புகாரில் திருச்சியில் உள்ள ஓட்டல் காஞ்சனா தனக்குச் சொந்தமானது என்றும் அதை முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தூண்டுதலின்பேரில் சிலர் பறித்துக்கொண்டதாக கூறியுறள்ளார்.
22.அதைத்தொடர்ந்து தான் கைது செய்ப்படக்கூடும் என்று முன்பிணை கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி மாலா, ஆகத்து 14, 2011ம் தேதி வரை கே.என்.நேருவை கைது செய்ய காவல்துறையினருக்கு தடை விதித்தார்.
23.முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ப.ரங்கநாதனும் அவரது கூட்டாளி கவுரிசங்கரும் இணைந்து போலி ஆவணம் தயாரித்து சென்னை முகப்பேரை அடுத்த நொளம்யூர் பகுதியிலுள்ள அண்ணாமலை அவென்யூ என்ற குடியிருப்பு பகுதியின் 20 ஏக்கர் நிலத்தை அபகரித்துக் கொண்டதாக கூறப்பட்ட
24.குற்றச்சாட்டின் காரணமாக கைது செய்யப்பட்டனர்.இவர்கள் இருவரும் ஆகத்து 8, 2011 முதல் குண்டர் சட்டத்தின் படி கைதாகியுள்ளனர்.
25.மு. க. அழகிரி இயக்குனராக உள்ள தயா சைபர் பார்க் அதிகாரி காவல்துறை அழகிரி மற்றும் அவர் குடும்பத்தினரை கைது செய்ய தடை விதிக்க கோரிய வழக்கை உயர் நீதி மன்றம் அவர்கள் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை எதையும் சுமத்தவில்லை என்பதால் நிராகரித்தது.
26.பல்லடத்திற்கு அருகிலுள்ள அவினாசிபாளையத்திற்கு அருகிலுள்ள வெள்ளம்பட்டி ஊரிலுள்ள வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான 15.16 ஏக்கர் நிலத்தை அபகரித்ததிற்காக முன்னாள் பொங்கலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ எசு மணி கைது செய்யப்பட்டார்.
27.இவ்வழக்கு தொடர்பாக முன்னாள் திமுக அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் பைந்தமிழ் பாரி கோவையில் கைது செய்யப்பட்டார்.
28.மதுரையை சேர்ந்த திமுக பொதுக் குழு உறுப்பினர் மின்னல்கொடி காவல்துறையினரால் கைது செய்துப்பட்டுள்ளார்.
29.ராஜபாளையத்தில் உள்ள தனக்குச் சொந்தமான 40 சென்ட் நிலத்தை மோசடியாக தனது பெயரில் பதிவு செய்து விட்டார் என உச்சம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த முருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
30.திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவும் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமியும் திருச்சியில் கலைஞர் அறிவாலயம் கட்டுவதற்காக தனது நிலத்தை பறித்துக் கொண்டதாக துறையூரைச் சேர்ந்த மருத்துவர் சீனிவாசன் என்பவர் புகார் கொடுத்தித்ததின் விளைவாக கைது செய்யப்பட்டனர்
31.இவ்வழக்கில் லால்குடி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செளந்தரபாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார் இவ்வழக்கு தொடர்பாக கே.என்.நேருவின் தம்பி இராமஜெயம் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
32.கே. என். நேருவின் பிணை மனுவை விசாரித்த நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து விட்டது.கே என் நேருவுக்கு மதுரை உயர் நீதிமன்றக்கிளை அனைத்து வழக்குகளிலும் பிணை வழங்கியது.
33.விழுப்புரத்தில் அரசு ஊழியர் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான பூங்கா உள்ளிட்ட இடங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார் என்று அந்த சங்கத்தின் அப்போதைய தலைவர் நாராயணசாமி அளித்த புகாரின் காரணமாக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டார்.
34.பொன்முடியின் பிணை மனுவை விசாரித்த நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து விட்டது.
35.நாமக்கல்லை அடுத்த கீரம்பூரைச் சேர்ந்த வசந்தி போலி ஆவணம் தயார் செய்து தங்கள் நிலத்தை பறித்துக்கொண்டதாக புகார் கொடுத்த வழக்கி காரணமாக திருச்செங்கோடு நகராட்சித் தலைவர் நடேசன் கைது செய்யப்பட்டார். இவர் திமுக நகரச் செயலாளராகவும் உள்ளார்.
36.சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில், கோயம்புத்தூர் ஜூவல்லர்ஸ் பெயரில் 2,100 சதுர அடியில் உள்ள இடத்தை தங்களுக்கு வேண்டும் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவரது மகன் ராஜேந்திரன்,
37.அவரது உதவியாளர் சேகர் மற்றம் சிலர் (மொத்தம் 16 பேர்) மிரட்டியதாக கோயம்பத்தூர் ஜூவல்லர்ஸ் என்ற நகைக் கடையை நடத்தி வரும் பிரேம்நாத் என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
38.முன்னாள் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன், நடுவக்குறிச்சியை சேர்ந்த குப்பையா பாண்டியன் தனது 3 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.
39.வேளச்சேரியில் காலி இடங்களை அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பெருங்குடி திமுக செயலாளர் & கவுன்சிலர் எஸ்.வி. ரவிச்சந்திரன் குண்டர்கள் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
40.ஆத்தூர் (சேலம்) நகர திமுக துணைச் செயலாளர் ஏ.பி.சேகர் (51), ஆத்தூர் புதுக்கடை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஆனந்தன் (40) என்பவர் கொடுத்த புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டார்.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்தே, தமிழகத்தில், அவருக்கு எதிராக கடுமையான காழ்ப்பு துாண்டப்பட்டு வருகிறது.
அவர் தமிழகம் வரும் போதெல்லாம், கருப்புக்கொடி காட்டுவதும், கருப்பு பலுான்கள் பறக்க விடுவதும், 'திரும்பிப்போ மோடி' என, கோஷமிடுவதும் தொடர்ந்து நடக்கிறது.
அந்த வெறுப்பை, தி.மு.க.,வும், அதன் ஆதரவு ஊடகங்களும், மக்கள் மனதில் தொடர்ந்து விதைத்து, பெரும்பாலான தமிழர்களை மூளைச் சலவை செய்து விட்டனர். அந்த அளவுக்கு, தமிழக மக்களால் வெறுக்கப்படுவதற்கு, தமிழகத்திற்கு மோடி என்ன துரோகம் இழைத்தார்?
அது, 2007 டிச., 15. திருநெல்வேலியில், தி.மு.க., இளைஞர் அணி மாநாடு. கருணாநிதி பேசுகிறார்: தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி, 'அவையத்து முந்தி இருப்பச் செயல்' என, வள்ளுவர் கூறி உள்ளார். இது, அவை என வைத்துக் கொண்டால், இங்கு எல்லாரும் பாராட்டி பேசினீர்களே. இதுதான் முந்தியிருப்ப செயல்.
இதை அவருக்கு நான் செய்து முடித்து விட்டேன்.
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, 'இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்' என்கிறார் வள்ளுவர். அதாவது, ஸ்டாலின் செயல்களைப் பார்த்து, ஊரில், நான்கு பேர், 'இவனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ' என புகழ்ந்தால்,
அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி
ஜோதிடத்தில் செவ்வாய் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் செவ்வாய் இருந்தால் அதை பரிவர்த்தனை யோகம் என்பர். அதுபோல இங்கு சுவாமி ஆற்றலை அம்பாள் வாங்கிச் சிவமயமாக உள்ளாள். 🙏🇮🇳1
அம்பாள் ஆற்றலைச் சுவாமி வாங்கி சக்திமயமாக உள்ளார். இதை பரிவர்த்தனை நிலை என்பர். இங்கு அம்பாளுக்கு தான் சிறப்பு எல்லாமே என்பதும் சிறப்பாகும். எனவே, சக்திதலமாகிய மதுரைக்குரிய மந்திர, யந்திர, தந்திர முறைகள் இங்கும் பின்பற்றப்படுகிறது. 🙏🇮🇳2
தந்திரம் என்பது பூஜை முறை, மந்திரம் என்பது தேவியை துதிக்கும் தோத்திரம் யந்திரம் என்பது சாமி சிலைகள் மருந்து சாத்தி?ப் பதிக்கப்படும் போது சிலைகளுக்கு அடியில் வைக்கப்படும் செப்புத் தகடு.
ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு பறவை அவரிடம் சென்று பேசியது.
ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன் என்றது.
பறவையே உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா?
முயற்சிப்பதில் தவறில்லை. ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள். பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு என்றார் சாது.
தலையசைத்து விட்டு பறந்தது பறவை. பக்கத்தில் இருந்த சீடனிடம் பேசினார் சாது.
சீடனே! முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும் என்றார் சாது.
பாட்லா ஹவுஸ் என்கவுன்டர் வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை
டில்லி: பாட்லா ஹவுஸ் என்கவுன்டர் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆரிஸ்கானுக்கு டில்லி கீழ்கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தலைநகர் டில்லியில், 2008ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த தொடர் குண்டுகள் வெடிப்பு சம்பவங்களில் 26 பேர் பலியாயினர்; 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள் டில்லி ஜாமியா நகரில் உள்ள, பாட்லா ஹவுஸ் அடுக்கு மாடி கட்டடத்தில், பதுங்கியிருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர், எம்.சி.சர்மா தலைமையில், ஏராளமான போலீசார் அந்த கட்டடத்தை சுற்றி வளைத்தனர்.
ஹிந்து அமைப்புகள் துண்டு பிரசுரம்; தி.மு.க., வேட்பாளர்கள் அதிர்ச்சி
சேலம்: தமிழகம் முழுதும், தி.மு.க.,வுக்கு எதிராக ஹிந்து முன்னணி, பூஜாரிகள் பேரவை உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள், துண்டு பிரசுரங்களை வீடுகள் தோறும் வினியோகித்து வருவதால், தி.மு.க., வேட்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஹிந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை, தி.மு.க.,வின் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் தேவாலயங்கள், பள்ளிவாசல்களுக்கு தயக்கம் இன்றி செல்வதும், அங்கு வழங்கப்படும் பொருட்களை ஏற்றுக் கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில், கோவில்களுக்கு சென்றால், திருநீறை அழிப்பது, பிரசாதத்தை வாங்க மறுப்பது ஆகியவற்றை தொடர்கின்றனர். இதனால், தி.மு.க.,வை, பா.ஜ., மட்டுமின்றி ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், பூஜாரிகள் பேரவை உட்பட, 10க்கும் மேற்பட்ட அமைப்புகள் எதிர்த்து வருகின்றன.