#வால்மீகிராமாயணம் அதில் இருந்து: ராம ராவண இறுதிப் போரில் ராவணனின் தலைமை சேனாதிபதி பிரஹஸ்தன் கொல்லப்பட்ட பிறகு ராவணனே போர் புரிய வருகிறான். லக்ஷ்மணன் அவனுடன் போர் புரிய தயாராகிறார். அதற்குள் அனுமார் அவனை சீண்டிப் பார்க்கிறார். தன்னுடன் போர் புரிய அழைக்கிறார். ராவனனுக்குக் கடும்
கோபம் வருகிறது, நான் கண்டவனுடன் எல்லாம் யுத்தம் பண்ண மாட்டேன், உன் பலத்தை காட்டு, ஒரு குத்து விடு, அதை பார்த்து நான் உன்னுடன் சண்டை போடலாமா என்று முடிவு செய்கிறேன் என்று சொல்கிறான். அதற்கு அனுமார் முன்பு உன் மகன் அக்ஷனை வதம் செய்தேனே அதில் இருந்து ஏன் பலம் தெரியவில்லையா என்று
கேட்கிறார். உடனே ராவணனுக்கு ரோஷம் வந்து அனுமாரை ஒரு குத்து விடுகிறான். அனுமார் ஆடிப் போய் விடுகிறார். அடுத்து அனுமார் ராவணனை ஒரு குத்து விடுகிறார். அவன் தன் தேரிலேயே விழுந்து கலங்கி போய் விடுகிறான். பின் எழுந்து அனுமாரிடம் நீ ரொம்ப பலசாலி தான் உன்னுடன் நான் சண்டை இடுகிறேன்
என்கிறான். அதற்கு அனுமான் நான் ஒருவனுக்கு குத்து விட்டு அவன் உயிரோடு வந்து என்ன பாராட்டுவது எனக்கு பெருத்த அவமானம் என்கிறார். இதை கேட்ட ராவணனுக்கு கடுங்கோபம் வந்து அனுமான் மேல் பெரிய குத்தாக விடுகிறான். உடனே அவர் கீழே விழுந்து விடுகிறார். அடுத்து லக்ஷ்மணர் அவனுடன் போர் புரிகிறார்
கடுமையான யுத்தத்துக்குப் பிறகு ராவணன் ஒரு அஸ்திரத்தைப் பயன்படுத்தி அதனால் லக்ஷ்மணர் மயங்கி விழுந்து விடுகிறார். லக்ஷ்மணனை தூக்கிக் கொண்டு போக முயற்சி செய்கிறான், அவனால் விஷ்ணு அம்சமான லக்ஷ்மணனை தூக்க முடியவில்லை. அப்போ அனுமார் அங்க வந்து ராவணா, இன்னும் ஒரு குத்து பாக்கி இருக்கு,
இந்தா வாங்கிக்கோ என்று ஒரு குத்து விடுகிறார். அவன் இரத்தம் கக்கி மயங்கி விழுந்துவிடுகிறான். அப்போ அனுமார் லக்ஷ்மணனை தூக்குகிறார். ராம பக்தர் என்பதால், லக்ஷ்மணரை லகுவாக தூக்கி வந்து ராமரிடம் சேர்த்து விடுகிறார்.
இராமர் இராவணனுடன் யுத்தம் செய்ய கிளம்புகிறார். உடனே அனுமார் தன் மீது
ஏறிக் கொள்ள சொல்கிறார். எப்படி கருடபகவான் மேல ஏறிக் கொண்டு விஷ்ணு பகவான் யுத்தம் செய்வாரோ அந்த மாதிரி என்மேல் எறிக் கொண்டு ராவணனுடன் யுத்தம் செய்யுங்கள் என்கிறார். இதை கொண்டுதான் கருடபகவானை பெரிய திருவடி என்றும் ஆஞ்சநேயரை சிறிய திருவடி என்றும் சொல்லுவது உண்டாயிற்று. சண்டை
ஆரம்பித்தது. ராவணன் விடுகிற அம்புகள் எதுவுமே ராமர் மேல் படவில்லை. ராவணனுக்கு அனுமார் மேல் மிகுந்த கோபம். இவன் தான் நமக்குப் பெரும் நாசத்தை ஏற்படுத்தியவன் என்று அனுமார் மேல் அம்பு மழை பொழிகிறான். ராமருக்கு இப்படி அம்பு மழை பொழிகிறது, ஆனால் நம் மேல் எதுவுமே படவில்லையே என்று
பார்க்கிறார். எல்லாம் அனுமார் மேல பட்டு, அவர் மேலிருந்து இரத்தமாக கொட்டுகிறது,
“ததோ ராமோ மஹாதேஜா: ராவணேன க்ருதவ்ரணம் |
திருஷ்ட்வா ப்ளவகஸார்துலம் கோபஸ்ய வஷமேயிவான் ||
ராமர் காலெல்லாம் இரத்தம். இதைப் பார்த்த உடனே, “கோபஸ்ய வஷமேயிவான்” அவர் கோபத்துக்கு ஆளாகிவிட்டார், அதாவது பகவான்
காமத்தையோ, கோபத்தையோ, பயத்தையோ ஒரு காரணத்துக்கு எடுத்துக் கொண்டு அது மூலமாக ஒரு நல்லதை செய்வார். "கோபத்துக்கு வசமானார்"என்கிறது இந்த ஸ்லோகம். ஏனென்றால் பக்தனுக்கு ஒரு கஷ்டம் என்றால் பகவான் கோபத்துக்கு வசமாகி விடுகிறார்.உடனே ராமர் பதிமூன்று அம்புகளை எடுத்து பட பட என்று ராவணன் மேல்
விடுகிறார். ஒன்று அவன் தேரை உடைகிறது. ஒன்று சாரதியை வதம் செய்கிறது. ஒன்று அவன் வில்லை தள்ளிவிடுகிறது. மற்றொன்று தலைப்பாகையை தூக்கிவிடுகிறது. குதிரைகள், கவசம் போய்விடுகின்றன. ராவணனை நிராயுதபாணியாக ஆக்கிவிடுகிறார். அடுத்த அம்பு போட்டா ராவணன் வதம் ஆகிவிடுவான். அப்படி ராமர் கோபமாக
ராவணன் மேலே அம்புகளை போட்டு தன்னுடைய வீரத்தை காட்டுகிறார். ராவணன் முதல் தடவையாக வாழ்க்கையில் ராம பாணத்தின் சக்தியை பார்க்கிறான். அவனுக்கு உயிர்பயம் வருகிறது. இந்த இடத்தில் ராமர் பகைவனுக்கும் அருள்வாய் என்று சொல்வது போல இந்த ஸ்லோகத்தை சொல்றார்.
கச்சானுஜானாமி ராணார்திதஸ்த்வம்
ப்ரவிஷ்ய ராத்ரிம்சரராஜ லங்காம் |
ஆஷ்வாஸ்ய நிர்யாஹி ரதி ச தன்வி
தாதா பலம் தரக்ஷ்யஸி மே ரதஸ்தஹ ||
கச்ச அனுஜானாமி–
நீ போகலாம். உனக்கு நான் அனுமதி அளிக்கிறேன். ராணார்திதஸ்த்வம்–இன்று யுத்தத்தில் நன்றாக யுத்தம் செய்து அடிபட்டு களைத்துள்ளாய். ப்ரவிஷ்ய ராத்ரிம்சரராஜ லங்காம்–ராத்ரிம்சர
ராக்ஷசர்கள் இரவில் சுத்துபவர்கள். இவன் அவர்களின் அரசன். லங்காம் ப்ரவிஷ்ய – மீண்டும் இலங்கைக்குள் போய் கொள். ஆஷ்வாஸ்ய நிர்யாஹி ரதி ச தன்வி – களைப்பை போக்கிக் கொண்டு ஒரு தேரையும் வில் அம்புகளையும் எடுத்துக் கொண்டு மீண்டும் யுத்தத்துக்கு வா. தாதா பலம் தரக்ஷ்யஸி மே ரதஸ்தஹ–அப்போது என்
பலத்தை நான் காட்டுகிறேன். இதைத்தான் கம்ப ராமயாணத்தில் இன்று போய் நாளை வா என்று ராமர் சொன்னார் என்று வரும். அப்படி ராமர் ராவணனுக்கு உயிர்பிச்சை கொடுக்கிறார். பகைவனுக்கும் அருளும் நன்நெஞ்சம், ராமருக்கு. பக்தனுக்குத் துன்பம் வந்தால் உடனே கடுமையான நடவடிக்கை எடுப்பார், ஆனால் அதே
பகைவனுக்கும் அருள் புரிவார் ஸ்ரீமன் நாராயணன். #வால்மீகிராமாயணம்

Reference from this blog post valmikiramayanam.in/?p=2311

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

22 Mar
ஒரு இளம் ராணுவ அதிகாரி தீவிரவாதிபோல் உருமாறி தீவிரவாத இயக்கத்திற்குலேயே புகுந்து அதிரடி காட்டி அவர்களின் இயக்கத்தையே முடக்கிப் போட்டுவிட்டார். அந்த ஒப்பற்ற மாவீரனின் வீர சாகசங்கள் கீழே. காஷ்மீரில் ஹிஸ்புல் இயக்கத்தின் தளபதிகளான அபு தோறாரா & அபு சப்ஜார் ஆகிய இருவரின் தலைமையின் Image
கீழ் தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தின் மீதும், பொதுமக்கள் மீதும் கடும் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்திய ராணுவமும், உளவு அமைப்புகளும் எவ்வளவோ முயன்றும் இவர்கள் இருவர் இருக்கும் இடம் கண்டுபிடிக்க முடியவில்லை. நாளுக்கு நாள் காஷ்மீரில் தீவிரவாத செயல்கள் கட்டுக்கடங்காமல் சென்றன.
ஹிஸ்புலின் இரு தளபதிகளை தீர்த்துக்கட்ட ஆபரேஷன் இப்திகார் என்னும் ஒரு ரகசிய ராணுவ நடவடிக்கை எடுக்க ராணுவம் தயாரானது.. அந்த ரகசிய ஆபரேஷனின் கதாநாயகன் மேலே படத்தில் உள்ளவர். அவர் இப்திகார் பட் என்று தனது பெயரை மாற்றி காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் இருப்பிடம் தேடி
Read 18 tweets
19 Mar
His Holiness Sri Krishna Desika Jeeyar Swamy explains beautifully what is Samsrayanam and Sharanagathi. Who all can do it-He speaks in English very eloquently. If interested please watch.
Man or woman, from any family, whatever your past life has been, no issues Jeeyar says, no questions asked Samasrayanam will be done and Sharanagati or total surrender will lead you to Mukti.
By taking Samasrayam you avoid going to Naraka and by doing Sharanagathi you are assured of going to Vaikuntam.
Read 5 tweets
17 Mar
இறுதி தேர்தல் கணிப்பு #Election2021
திரு. பார்த்தசாரதி, பிரபல ஆங்கில நாளேட்டின் சீனியர் எடிட்டர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ் நாட்டு அரசியலை 50 ஆண்டு காலம் கவனித்து வருபவர். கருணாநிதி ஜெயலலிதா சோ போன்றோர் ஒவ்வொரு தேர்தலிலும் இவரிடம் கருத்து கேட்பது ஆண்டு. கட்சி பாகுபாடு
இல்லாமல் உண்மையை எடுத்து வைக்க கூடியவர். அவரின் கணிப்பு கட்டுரை:
2016 சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் எவ்வாறு வாக்களித்தன என்பதை சதவிகிதத்தில் பார்ப்போம், இது 2021தேர்தலுக்கு ஏற்ப மாற்றியமைத்து இருக்கிறேன்.
அதிமுக 40.8 % வாக்குகளைப் பெற்றது
திமுக 31.6 %
காங்கிரஸ் 6.4 %
பாமக 5.3 %
தேமுதிக 2.4%
பாஜக 2.8%
சிபிஐ 0.8%
சிபிஎம் 0.7%
வி.சி.க 0.8%
தாமக 0.5%
மதிமுக 0.9%
IMUL 0.7%
எம்.எம்.கே 0.5%
புதிய தமிழகம் 0.5%
தற்போதைய கூட்டணிக்கு ஏற்ப இந்த வாக்குப் பங்கை பிரிப்போம்.
அதிமுக, பாமக, பாஜக, தமாகா மற்றும் பி.டி ஆகியவை என மொத்தம் 49.9%
அதேசமயம் திமுக, காங்கிரஸ்,
Read 17 tweets
15 Mar
#பிள்ளைத்தமிழ் இலக்கியம் என்பது புலவர்கள் தாம் விரும்பிய இறைவனையோ மனிதர்களையோ குழந்தையாக எண்ணிப் பாடுவது. மூன்று மாதம் முதல் இருபத்தோரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கையை பத்துப் பருவங்களாகப் பிரித்து ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடப்படுவது வழக்கு.
பெரியாழ்வார் கண்ணன் மேல் பாடிய பிள்ளைத்தமிழ் பாசுரங்கள் தேனினும் சுவை மிகுந்தவை. அவை தான் முதலில் பிள்ளைத்தமிழ் பற்றிய நூல் என்று சொல்கின்றனர். ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் இவ்வகையில் முதல் என்றும் சொல்கின்றனர். பிள்ளைத்தமிழ் பற்றிய இலக்கணக்
குறிப்பை முதலில் வழங்கிய நூல் தொல்காப்பியமே ஆகும்.
குழவி மருங்கினும் கிழவது ஆகும்-(தொல். பொருள். புறம். 24)
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் குமரகுருபரர் இயற்றியவை. சேக்கிழார் பிள்ளைத்தமிழ்-திரிசிரபுரம் மீனாட்சி
Read 9 tweets
15 Mar
#EnjoyEnjaami பாடல்: அறிவு
குக்கூ குக்கூ
தாத்தா தாத்தா களவெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன் கொத்தி
குக்கூ குக்கூ
தண்ணியில் ஓடும் தவளக்கி
குக்கூ குக்கூ
கம்பளி பூச்சி தங்கச்சி
அள்ளி மலர்க்கொடி அங்கதமே
ஓட்டரே ஓட்டரே சந்தனமே
முல்லை மலர்க்கொடி முத்தாரமே
எங்கூரு எங்கூரு குத்தாலமே
சுருக்கு பையம்மா
வெத்தலை மட்டையம்மா
சொமந்த கையம்மா
மத்தளம் கோட்டுயம்மா
தாயம்மா தாயம்மா
என்ன பண்ண மாயம்மா
வள்ளியம்மா பேராண்டி
சங்கதியை கூறேண்டி
கண்ணாடியே காணோடி
இந்தர்ரா பேராண்டி
அன்னைக்கிளி அன்னைக்கிளி
அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி
நல்லபடி வாழச்சொல்லி இந்த
மண்ணை கொடுத்தானே பூர்வகுடி
கம்மங்கரை காணியெல்லாம்
பாடி திரிஞ்சானே ஆதிக்குடி
நாய் நரி பூனைக்கெல்லாம்
இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி
குக்கூ குக்கூ
முட்டைய போடும் கோழிக்கு
Read 13 tweets
12 Mar
இதை எழுதியிருப்பது அரசுக்கான தலைமை பொருளாதார ஆலோசகர். வெளிநாடுகள் நம் செயல்களை அது கிரிக்கட்டாக இருப்பினும் கோவிட் பரவலை தடுக்கும் செயலாக இருபின்னும், விவசாயிகள் போராட்டமாக இருப்பினும் அவற்றை பற்றி அவர்கள் கருத்து வெளியிடும்போது அவர்களுக்கு ஒரு நியாயம் நமக்கென்றால் வெறு நியாயம்!
நியுயார்க் அட்டர்னி ஜெனெரல் 76 பக்க அறிக்கையில் டெமொகிராடிக் ஆளுநர் 50% குறைத்து கரோனா இறப்புகளை பதிவு செய்துள்ளார் என்று அறிவித்து இருக்கிறார். இதைப் பற்றி இந்தியாவில் வேகுண்டு எழுதலோ பாலிவுட் நடிகர்கள் கருத்துத் தெரிவித்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்ததோ நடந்ததா? இதே இந்தியா
செய்திருந்தால் உலகம் முழுக்க இதற்கு கண்டனம் தெரிவித்துப் போராட்டமும் ட்விட்டரில் சர்வதேச பிரபலங்களும் எதிர்த்து கருத்துப் பொழிந்திருந்திருக்க மாட்டார்களா? இதே GDP கணக்கிடப்படும் முறை இந்தியாவில் மாற்றப்பட்ட போது உலகம் முழுக்க இதற்கு எதிர்ப்பு வந்தது? ஏன்? அவர்களுக்கும் நம்
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!