ஒரு இளம் ராணுவ அதிகாரி தீவிரவாதிபோல் உருமாறி தீவிரவாத இயக்கத்திற்குலேயே புகுந்து அதிரடி காட்டி அவர்களின் இயக்கத்தையே முடக்கிப் போட்டுவிட்டார். அந்த ஒப்பற்ற மாவீரனின் வீர சாகசங்கள் கீழே. காஷ்மீரில் ஹிஸ்புல் இயக்கத்தின் தளபதிகளான அபு தோறாரா & அபு சப்ஜார் ஆகிய இருவரின் தலைமையின்
கீழ் தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தின் மீதும், பொதுமக்கள் மீதும் கடும் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்திய ராணுவமும், உளவு அமைப்புகளும் எவ்வளவோ முயன்றும் இவர்கள் இருவர் இருக்கும் இடம் கண்டுபிடிக்க முடியவில்லை. நாளுக்கு நாள் காஷ்மீரில் தீவிரவாத செயல்கள் கட்டுக்கடங்காமல் சென்றன.
ஹிஸ்புலின் இரு தளபதிகளை தீர்த்துக்கட்ட ஆபரேஷன் இப்திகார் என்னும் ஒரு ரகசிய ராணுவ நடவடிக்கை எடுக்க ராணுவம் தயாரானது.. அந்த ரகசிய ஆபரேஷனின் கதாநாயகன் மேலே படத்தில் உள்ளவர். அவர் இப்திகார் பட் என்று தனது பெயரை மாற்றி காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் இருப்பிடம் தேடி
கிராமம் கிராமமாக அலைந்தார், அவர் செல்லும் கிராமங்களில் டீ கடையில், சாப்பிடுமிடத்தில், புகையிலை கடைகளில் எல்லாம் தனது இளைய சகோதரனை ராணுவம் கொன்றுவி ட்டது எனவே இந்திய ராணுவத்தை நான் பழிவாங்கவேண்டும் என்று உணர்ச்சி பொங்க பேசி எவனாவது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவன் சிக்குவானா
என்று வலைவிரித்து காத்திருந்தார். அவரது எதிர்பார்ப்பு வீண் போகவில்லை ஒரு தீவிரவாத தொடர்புடையவன் சிக்கினான் அவனிடம் தான் இந்திய ராணுவ செக்போஸ்டை தகர்க்க விரும்புவதாகவும் தனக்கு ஆயுதம் மற்றும் வெடிபொருட்கள் தேவை எனவும், தான் இனி தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து ராணுவத்தை கடுமையாக
எதிர்க்கப்போவதாகவும் கூறினார், இதை நம்பிய அவன் இவரை வேறு ஒருவனுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறான். இப்படியே நான்கு மாதம் தீவிரவாதிகளுடன் சுற்றி கடைசியாக ஹிஸ்புலின் தளபதிகளுடன் அறிமுகம் கிடைக்கிறது, அவர்கள் இவரை எளிதில் நம்பவில்லை கேள்விமேல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு
மாதகாலம் அவர்களுடனே சுற்ற ஆரம்பித்து அதன் பின்னும் அவர்கள் இவரை நம்பவில்லை,நம்ம சினிமா படத்துல வரது போல் என் மேல் நம்பிக்கை வரவில்லை என்றால் என்னை சுட்டுக் கொன்றுவிடுங்கள் என்று நெஞ்சை நிமித்தி நின்றார். நாட்கள் செல்லச் செல்ல தீவிரவாத தளபதிக்கு இவர் மீது நம்பிக்கை பிறந்தது.
ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த உனக்கு வேண்டிய ஆயுதங்கள் தருகிறோம் நீ வெற்றிகரமாக தாக்குதல் நடத்திவிட்டு வா என்று அவருக்கு ஆயுத பயிற்சியளிக்கிறார்கள், இவர்களை சரியான நேரம் பார்த்து தீர்த்துக்கட்ட வேண்டும் என்று சரியான தருணத்திற்காக காத்திருந்தார். பாக்கிஸ்தான் செல்வதற்காக
ஹிஸ்புல் தளபதிகள் இருவரும் ரகசியமாக கிளம்பி பாக்கிஸ்தான் எல்லை அருகே இருக்கும் ஒரு கிராமத்திற்கு சென்று பதுங்கி இருக்கிறார்கள், இவர்களை பின்தொடர்ந்து தனியாளாக அதிரடியாக வீட்டிற்குள் சென்று இருவருடனும் மோதி அவர்கள் இருவரையும் தீர்த்து கட்டிவிட்டு அவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் வெடி
பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அருகிலுள்ள இந்திய ராணுவத்தளத்திற்கு தப்பி வந்துவிடுகிறார். இவரது சாகசச் செயல்களைப் பாராட்டி இந்திய ராணுவம் இவருக்கு சேனா மெடல் அறிவித்தது. ஹிஸ்புல் தளபதிகள் சுட்டுக்கொல்லப்பட்டபின் அங்கு தீவிரவாதம் சற்று குறைந்தது. இவரின் தலைக்கு விலை வைத்தது
தீவிரவாத இயக்கம். இவரை கொல்பவருக்கு இனாம் அறிவித்தது. இந்திய ராணுவம் மேற்கொண்ட பல அதிரடி நடவடிக்கைகளில் பங்குபெற்று பல பதக்கங்களை வென்றார். மார்ச் 21, 2009ம் ஆண்டு பாகிஸ்தானில் பயிற்சிபெற்ற தீவிரவாதிகள் குப்புவாரா மாவட்டத்தில் உள்ள ஹபஹ்ருதா காடுகளில் ஊடுருவியிருப்பதாக செய்தி
வருகிறது, அவர்களை வேட்டையாட தனது குழுவுடன் புறப்பட்டு செல்கிறார். மிகவும் மோசமான வானிலை, தீவிரவாதிகள் பாதுகாப்பாக பதுங்கி இருக்கிறார்கள். அவர்களை தேடிச் சென்று ஒரு கட்டத்தில் அவர்களுடன் கடும் துப்பாக்கி சண்டை நடை பெறுகிறது. தனது சகாக்களை தங்களுக்கு காவேரிங் பயர் தர சொல்லிவிட்டு
எதிரிகளின் கூடாரத்தை நோக்கி நகர்ந்து செல்கிறார். தன்னுடன் நான்கு வீரர்களையும் அழைத்துச் செல்கிறார். தன்னந்தனியாக தீவிரவாதிகளின் பதுங்கு குழிக்குள் புகுந்து அங்கு பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பி ஓடும் தீவிரவாதிகளை தனது சகாக்களுடன் விரட்டிச் செல்கிறார்
மறைந்திருந்து தீவிரவாதிகள் சுட்டதில் தன்னுடன் வந்த இரண்டு வீரர்கள் கடுமையாக காயமுற்றார்கள். அவர்களை காப்பாற்றுவதற்காக ஊர்ந்து சென்று இருவரையும் மீட்டு பின்வாங்கும்போது இவரது தோள்பட்டையில் துப்பாக்கி குண்டு பதம் பார்த்துவிடுகிறது. ஒரு மறைவிடத்தில் தனது சகாக்களை அமர்த்திவிட்டு,
மீண்டும் தனது தாக்குதல்களை தொடுக்கிறார். கீழிருந்த தனது சகாக்களை மேலே வந்து காயம்பட்ட இரு ராணுவவீரர்களை காப்பாற்ற சொல்கிறார். மீண்டும் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் வீர மரணமடைகிறார். இவரது மனைவியும் ராணுவ அதிகாரி,
இந்திய அரசாங்கம் இவரது வீர சாகசங்களைப் பாராட்டி அமைதிக்காலத்தில் வழங்கப்படும் உயரிய விருதான அசோக் சக்ரா விருது கொடுத்து கொரவித்தது. தன்னலம் பாராமல் தாய்நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்த அந்த ராணுவ அதிகாரியின் பெயர் மோஹித் சர்மா. யாராவது நண்பர்கள் இவரை மோஹித் என்று அழைத்தால்
நான் மோஹித் அல்ல இப்திகார் என்று சொல்வாராம். இவரது இப்திகார் என்னும் பெயர் காஷ்மீரி இளைஞர்களிடையே மிகவும் பிரபலம். இவர் நமது மெட்ராஸ் ரெஜிமென்ட் படைப்பிரிவை சேர்ந்தவர். இவரது தியாகத்தின் நினைவாக டெல்லி ராஜேந்தர் நகர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு மேஜர் மோஹித் சர்மா மெட்ரோ ஸ்டேஷன் என்று
அரசாங்கம் பெயரிட்டு மரியாதை செய்தது. இவரது வீரத்தைப் போற்றும் வகையில் இப்திகார் என்னும் ஹிந்தி திரைப்படம் தயாராகி வருகிறது.
அவர் தீவிரவாதிகளுடன் சுற்றியபோதும், ராணுவத்தில் பணிபுரிந்தபோதும் எடுத்த புகைப்படங்கள் தான் மேலே உள்ளவை. மார்ச் 21 இவரது நினைவுதினம்.
வீர வணக்கம் மாவீரனே!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

22 Mar
கடந்த சில ஆண்டுகளில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் கூட தமிழகத்திலும் சரி மற்ற மாநிலங்களிலும் சரி #பாஜக கணிசமான வாக்குகள் வாங்குகிறதே அந்த ரகசியம் என்ன? வேறு மத ஆண்களுக்கும் பெண்களுக்கும் புரியாத விஷயம். ஏன் நிறைய முஸ்லிம் ஆண்களுக்கே புரியாதது அது. பல நூறு ஆண்டுகளாக இஸ்லாமிய
பெண்கள் அனுபவித்து வந்த கொடுமை என்ன என்று பார்ப்போம். எந்த முஸ்லிம் வீட்டிலும் பார்த்தீர்களானால் குடும்பம் இல்லாமல் ஒரு முஸ்லிம் பெண் வாழ்ந்து வருவார். 30 வயது 40 50 60 எந்த வயசிலும் இருப்பாங்க. இவர்கள் அந்த வீட்டில் உள்ள யாருக்காவது அக்கா முறையோ அத்தை முறையோ சித்தி பெரியம்மா
முறையோ பாட்டி முறையோ இருப்பாங்க. இவர்கள் தான் வசிக்கும் அந்த வீட்டில் முடிந்த வரையான வீட்டு வேலைகளை செய்து கொடுத்து தன் உறவுகளோடு உணவு பகிர்ந்து உண்டு அமைதியாக வாழ்ந்து வருவார்கள். குடும்பம் குழந்தைகள் இல்லாமல், அவர்களுடைய மனதிலே வெளியில் சொல்லமுடியாத தாங்கமுடியாத துயரம் வேதனை
Read 10 tweets
20 Mar
#வால்மீகிராமாயணம் அதில் இருந்து: ராம ராவண இறுதிப் போரில் ராவணனின் தலைமை சேனாதிபதி பிரஹஸ்தன் கொல்லப்பட்ட பிறகு ராவணனே போர் புரிய வருகிறான். லக்ஷ்மணன் அவனுடன் போர் புரிய தயாராகிறார். அதற்குள் அனுமார் அவனை சீண்டிப் பார்க்கிறார். தன்னுடன் போர் புரிய அழைக்கிறார். ராவனனுக்குக் கடும்
கோபம் வருகிறது, நான் கண்டவனுடன் எல்லாம் யுத்தம் பண்ண மாட்டேன், உன் பலத்தை காட்டு, ஒரு குத்து விடு, அதை பார்த்து நான் உன்னுடன் சண்டை போடலாமா என்று முடிவு செய்கிறேன் என்று சொல்கிறான். அதற்கு அனுமார் முன்பு உன் மகன் அக்ஷனை வதம் செய்தேனே அதில் இருந்து ஏன் பலம் தெரியவில்லையா என்று
கேட்கிறார். உடனே ராவணனுக்கு ரோஷம் வந்து அனுமாரை ஒரு குத்து விடுகிறான். அனுமார் ஆடிப் போய் விடுகிறார். அடுத்து அனுமார் ராவணனை ஒரு குத்து விடுகிறார். அவன் தன் தேரிலேயே விழுந்து கலங்கி போய் விடுகிறான். பின் எழுந்து அனுமாரிடம் நீ ரொம்ப பலசாலி தான் உன்னுடன் நான் சண்டை இடுகிறேன்
Read 16 tweets
19 Mar
His Holiness Sri Krishna Desika Jeeyar Swamy explains beautifully what is Samsrayanam and Sharanagathi. Who all can do it-He speaks in English very eloquently. If interested please watch.
Man or woman, from any family, whatever your past life has been, no issues Jeeyar says, no questions asked Samasrayanam will be done and Sharanagati or total surrender will lead you to Mukti.
By taking Samasrayam you avoid going to Naraka and by doing Sharanagathi you are assured of going to Vaikuntam.
Read 5 tweets
17 Mar
இறுதி தேர்தல் கணிப்பு #Election2021
திரு. பார்த்தசாரதி, பிரபல ஆங்கில நாளேட்டின் சீனியர் எடிட்டர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ் நாட்டு அரசியலை 50 ஆண்டு காலம் கவனித்து வருபவர். கருணாநிதி ஜெயலலிதா சோ போன்றோர் ஒவ்வொரு தேர்தலிலும் இவரிடம் கருத்து கேட்பது ஆண்டு. கட்சி பாகுபாடு
இல்லாமல் உண்மையை எடுத்து வைக்க கூடியவர். அவரின் கணிப்பு கட்டுரை:
2016 சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் எவ்வாறு வாக்களித்தன என்பதை சதவிகிதத்தில் பார்ப்போம், இது 2021தேர்தலுக்கு ஏற்ப மாற்றியமைத்து இருக்கிறேன்.
அதிமுக 40.8 % வாக்குகளைப் பெற்றது
திமுக 31.6 %
காங்கிரஸ் 6.4 %
பாமக 5.3 %
தேமுதிக 2.4%
பாஜக 2.8%
சிபிஐ 0.8%
சிபிஎம் 0.7%
வி.சி.க 0.8%
தாமக 0.5%
மதிமுக 0.9%
IMUL 0.7%
எம்.எம்.கே 0.5%
புதிய தமிழகம் 0.5%
தற்போதைய கூட்டணிக்கு ஏற்ப இந்த வாக்குப் பங்கை பிரிப்போம்.
அதிமுக, பாமக, பாஜக, தமாகா மற்றும் பி.டி ஆகியவை என மொத்தம் 49.9%
அதேசமயம் திமுக, காங்கிரஸ்,
Read 17 tweets
15 Mar
#பிள்ளைத்தமிழ் இலக்கியம் என்பது புலவர்கள் தாம் விரும்பிய இறைவனையோ மனிதர்களையோ குழந்தையாக எண்ணிப் பாடுவது. மூன்று மாதம் முதல் இருபத்தோரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கையை பத்துப் பருவங்களாகப் பிரித்து ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடப்படுவது வழக்கு.
பெரியாழ்வார் கண்ணன் மேல் பாடிய பிள்ளைத்தமிழ் பாசுரங்கள் தேனினும் சுவை மிகுந்தவை. அவை தான் முதலில் பிள்ளைத்தமிழ் பற்றிய நூல் என்று சொல்கின்றனர். ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் இவ்வகையில் முதல் என்றும் சொல்கின்றனர். பிள்ளைத்தமிழ் பற்றிய இலக்கணக்
குறிப்பை முதலில் வழங்கிய நூல் தொல்காப்பியமே ஆகும்.
குழவி மருங்கினும் கிழவது ஆகும்-(தொல். பொருள். புறம். 24)
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் குமரகுருபரர் இயற்றியவை. சேக்கிழார் பிள்ளைத்தமிழ்-திரிசிரபுரம் மீனாட்சி
Read 9 tweets
15 Mar
#EnjoyEnjaami பாடல்: அறிவு
குக்கூ குக்கூ
தாத்தா தாத்தா களவெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன் கொத்தி
குக்கூ குக்கூ
தண்ணியில் ஓடும் தவளக்கி
குக்கூ குக்கூ
கம்பளி பூச்சி தங்கச்சி
அள்ளி மலர்க்கொடி அங்கதமே
ஓட்டரே ஓட்டரே சந்தனமே
முல்லை மலர்க்கொடி முத்தாரமே
எங்கூரு எங்கூரு குத்தாலமே
சுருக்கு பையம்மா
வெத்தலை மட்டையம்மா
சொமந்த கையம்மா
மத்தளம் கோட்டுயம்மா
தாயம்மா தாயம்மா
என்ன பண்ண மாயம்மா
வள்ளியம்மா பேராண்டி
சங்கதியை கூறேண்டி
கண்ணாடியே காணோடி
இந்தர்ரா பேராண்டி
அன்னைக்கிளி அன்னைக்கிளி
அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி
நல்லபடி வாழச்சொல்லி இந்த
மண்ணை கொடுத்தானே பூர்வகுடி
கம்மங்கரை காணியெல்லாம்
பாடி திரிஞ்சானே ஆதிக்குடி
நாய் நரி பூனைக்கெல்லாம்
இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி
Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி
குக்கூ குக்கூ
முட்டைய போடும் கோழிக்கு
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!