#திருப்பட்டுர்:-

தலையெழுத்தை மாற்றும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்

திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோவில்.

🙏🇮🇳1
தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்? ஆனால் அப்படிப்பட்ட தலையெழுத்தை மாற்றும் சக்தி படைத்த ஆலயங்களும் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன.

அதில் ஒன்றுதான் திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில்.

🙏🇮🇳2
நம்மைப் படைத்த பிரம்மனுக்கு தனி சன்னிதிகளோ, ஆலயங்களோ அதிகம் கிடையாது. காரணம் பிரம்மனின் அகந்தை. சிவனுக்கு நிகராக ஐந்து தலைகளைப் பெற்ற கர்வத்தில் ஆணவமாகப் பேசிய பிரம்மனின் ஒரு தலையைக் கொய்தார் சிவ பெருமான். அதோடு அவரது படைப்புத் தொழிலுக்கு தடை விதித்தார்.

🙏🇮🇳3
தன் தவறை உணர்ந்த பிரம்மன், சிவனைப் பணிந்து அனுதினமும் பல தலங்களில் சிவலிங்கங்கள் உருவாக்கி பூஜைகள் செய்ததன் பலனாக இழந்தவைகளை மீண்டும் பெற்றார்.

பிரம்மனின் சாபத்தை, சிவபெருமான் போக்கி அருளிய இடமே திருப்பட்டூர். இங்கு பிரம்மனுக்கு தனிச்சன்னிதி இருக்கிறது.

🙏🇮🇳4
இத்தலத்தில் சிவனை அபிஷேகிப்பதற்காக, பிரம்மன் உருவாக்கிய தீர்த்தக்கிணறு ‘#பிரம்மதீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

வழிபாட்டுக்காக பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 12 லிங்கங்கள், இங்கே 12 சிறிய சன்னிதிகளில் பக்தர்களால் வணங்கப்படுகிறது.

🙏🇮🇳5
பிரம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 12 லிங்கங்களுடன், இங்குள்ள பிரம்ம புரீஸ்வரரையும் வணங்கும்போது, சிவபெருமானின் 13 திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும்.

🙏🇮🇳6
ஆகிய சிறப்பான சிவத்தலங் களின் லிங்கங்களே பிரம்மாவால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் ஆதிகோவிலாக அறியப்படும் கயிலாசநாதர் சன்னிதியில் நம்பிக்கையான வழிபாடுகள் அதற்குரிய பலனைத் தரும்.

🙏🇮🇳8
இங்கு அருள்பாலிக்கும் பிரம்மதேவனே, குரு பகவானாக வணங்கப்படுகிறார். எனவே அவருக்கு மஞ்சள் காப்பு செய்து ஆராதனை நடைபெறுகிறது.

🙏🇮🇳9
குருவுக்கு உகந்த வியாழக்கிழமைகளிலும், சிவனாருக்கு உகந்த திங்கட்கிழமைகளிலும், ராஜகிரகமான சூரியனின் ஆதிக்கம் உள்ள ஞாயிற்றுக்கிழமையிலும் இத்தலம் வந்து வழிபாடு செய்வது சிறப்பானது.

🙏🇮🇳10
வருடந்தோறும் பங்குனி 15, 16, 17 ஆகிய தேதிகளில் சூரியன், தன் கதிர்களால் சிவபெருமானை வழிபடும் காட்சி அற்புதமானது.

அந்த நாட்களில் காலை ஆறு மணிக்கு சென்றால் இந்த அற்புதக் காட்சியை கண்டு ரசிக்கலாம்.

🙏🇮🇳11
சூரியன் ஈசனை வழிபடும் தினத்தில் இங்கு வந்து, பிரம்மபுரீஸ்வரரையும், பிரம்மனையும் வழிபட்டால் கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.

இங்குள்ள கயிலாசநாதர் கோவில் புகழ்பெற்ற பல்லவர் காலக் கட்டுமானச் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளதைக் காணலாம்.

🙏🇮🇳12
ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த இதன் தேர் வடிவிலான கோவில் அமைப்பும், எந்நேரமும் மேலிருந்து விழும் அபிஷேகத்தில் குளிர்ந்தவராக அருளும் பதினாறு பட்டைகள் கொண்ட தாராலிங்கமாக இங்கே ஈசன் அருள்பாலிக்கிறார்.

🙏🇮🇳13
இந்த லிங்கத்தை ‘சந்திரகலா லிங்கம்’ என்கின்றனர். இந்த சன்னிதிக்கு எதிரில் உள்ள நந்தி, நிஜ உருவத்தைப் போன்று அமைந்து வியக்க வைக்கிறது.

ஈஸ்வரருக்கு 64 மூர்த்தங்கள் உண்டு. அதில் தத்புருஷ மூர்த்தங்கள் 25 வகை என்கின்றன சைவ நூல்கள். அவற்றுள் காலபைரவரும் ஒருவர்.

🙏🇮🇳14
நம் பாவபுண்ணியக் கணக்குகளை கணித்து நமக்கு நன்மைகளை வழங்குவதில் காலபைரவர் நிகரற்றவர். பொதுவாக வடகிழக்கு மூலையில் தெற்கு திசையை நோக்கியபடி உள்ள காலபைரவரையே தரிசித்திருப்போம்.

🙏🇮🇳15
ஆனால் திருப்பட்டூர் தலத்தில் மேற்கு நோக்கியபடி இருக்கிறார் கால பைரவர். இவரின் வலது செவியும் அதில் இருக்கும் தாடங்கமும் மற்ற தலங்களில் உள்ளதுபோல் இல்லாமல் வித்தியாசமாக இருப்பதும் கூடுதல் சிறப்பு.

🙏🇮🇳16
இந்த ஆலயத்தில் 36 தீபங்களை ஏற்றி வழிபடுவது சிறப்பான பலன் களைத் தரும் என்பது நம்பிக்கை.

🙏🇮🇳17
நம்மை ஆட்சி செய்யும் 27 நட்சத்திரங்கள் மற்றும் ஒன்பது கிரகங்களைக் குறிக்கும் வகையில் 36 தீபங்களை ஏற்றி, ஒன்பது முறை பிரகாரத்தை வலம் வந்து பிரார்த்தனை செய்யும்போது, நமது துன்பங்கள் அனைத்தும் விலகும்.
கிரக தோஷங்கள் நீங்கும் என் கிறார்கள்.

🙏🇮🇳18
ஒவ்வொருவரின் ஜென்ம நட்சத்திர நாளிலும் இங்கு வந்து இந்தப் பிரார்த்தனையைச் செய்வது நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.

பிரம்மாவின் தலையைக் கொய்ததால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதில் இருந்து விடுபடுவதற்காக, மகாவிஷ்ணுவை சிவபெருமானை வழிபட்டார்.

🙏🇮🇳19
இதனால் மகிழ்ந்த விஷ்ணு, ஈசனின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கியருளினார் என்பது புராண வரலாறு.

🙏🇮🇳20
அதன்படி மகாவிஷ்ணுவுக்கும் இங்கு தனிக் கோவில் இருக்கிறது. பிரம்ம புரீஸ்வரர் ஆலயத்தின் மேற்குப்பகுதியில் அது அமைந்துள்ளது. இந்த வரதராஜப் பெருமாள் திருக்கோவில், எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்ம பல்லவனால் கட்டப்பட்டதாகும்.

🙏🇮🇳21
இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று பிரதோஷ வேளை. இத்தலத்தில் பிரதோஷ நாளில் நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும் போது, அங்கிருந்தபடி ஒரு துணில் இருக்கும் நரசிம்மரையும் தரிசிக்க முடியும்.

🙏🇮🇳22
ஒரு பிரதோஷ நாளில் தான் மகாவிஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை வதம் செய்தார்.

ஆகவே பிரதோஷ நேரத்தில் நந்தியோடு, நரசிம்மரையும் வழிபட்டால் நம் இன்னல்கள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை.

🙏🇮🇳23
இத்தலத்தில் உள்ள ஐந்து நிலை ராஜகோபுரத்தில் நுழைந்து, ஐந்தெழுத்து நாயகனான சிவனாரை தரிசித்தால் வாழ்வின் ஐந்து நிலைகளிலும் நம்மைக் காத்து ரட்சிப்பார் இத்தல இறைவன்.

🙏🇮🇳24
அதே போல் கோபுர வாசலில் இருந்து ஏழு நிலைகளை கடந்துதான் இறைவனை தரிசிக்க முடியும். சூரிய பகவானே தன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன், ஏழு நிலைகளைக் கடந்தே சிவனாரை தரிசிக்கிறார் என்பது ஐதீகம்.

🙏🇮🇳25
ஆகவே இங்கு வந்து தரிசிப்பவர்களின் ஏழேழு ஜென்மப் பாவங்களும் தீரும் என்கிறார்கள்.

🙏🇮🇳26
திருப்பட்டுர்_கோவில்_முகவரி:-

நடை_திறக்கும்_நேரம்:-

காலை 07.30 மணிமுதல் - மதியம் 12.00 மணிவரை,

மாலை 04.00 மணிமுதல் - இரவு 08.00 மணிவரை.

வியாழனன்று காலை காலை 06.00 மணிமுதல் - மதியம் 12.30 மணிவரை.

🙏🇮🇳27
முகவரி:-

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்,
சிறுகனூர்,
திருப்பட்டூர் - 621 105,
திருச்சி மாவட்டம்.

வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

28 May
தனியார் பள்ளி விவகாரத்தில் நியாயமான விசாரணை: இல்லையேல் ஆட்சிக்கலைப்பு சுவாமி எச்சரிக்கை

''பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், நியாயமான விசாரணையை மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை.
ஆனால், உள்நோக்கத்தோடு அரசு தரப்பில் செயல்படுவதாகத் தெரிய வந்தால், தமிழக அரசை கலைப்பதை தவிர வேறு வழியில்லை,'' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி கூறினார்.
அவர் அளித்த பேட்டி:சென்னை, கே.கே.நகரில் இயங்கி வரும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில், வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் ஆசிரியராக பணியாற்றிய ராஜகோபாலன் மீது, பாலியல் புகார் எழுந்துள்ளது.
Read 12 tweets
28 May
வீர் சாவர்க்கர் பிறந்த தினம் இன்று...

பூரண அரசியல் சுதந்திரத்தை 1900லேயே துணிவுடன் பிரகனபடுத்திய முதல் அரசியல் தலைவர்...

1905ல் அந்நியத் துணிகளை தீரமுடன் பகிஷ்க்கரித்த முதல் அரசியல் தலைவர்.
இந்திய நாட்டின்  சுதந்திரத்திற்காக  1906ல் சர்வதேச  அளவில்  புரட்சி  இயக்கத்தை  ஏற்பாடு செய்த முதல் இந்தியர்.
தேசவிடுதலைக்கான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்ததினால் சட்டம் பயின்று அதற்க்கான தேர்வுகளில் தேர்ச்சியுற்றும் ஆங்கிலேய வழக்குரைஞர் அவையில் (பார் கவுன்சில்) சேர அனுமதி மறுக்கப்பட்ட முதல் இந்திய மாணவர்.
Read 10 tweets
28 May
லட்ச தீவில் மத்திய அரசின் மாற்றங்களை அப்பகுதி மக்கள் எதிர்க்கவில்லை- ஆட்சியர் பேட்டி

கேரளாவின் கொச்சியில் லட்சதீவு ஆட்சியர் ஆஸ்கர் அலி பேட்டி அளித்தார். லட்சதீவை எதிர்காலத்தில் மொரீஷியஸ், மாலத்தீவுபோல நவீனமயமாக்க மத்திய அரசு இந்த மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
இதனை இந்த தீவுகளில் வாழும் குடிமக்கள் யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் இதனை எதிர்த்து வருகின்றனர் என்றுள்ளார்.
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் டையூ யூனியன் பிரதேசத்தின் துணை நிலை கவர்னராக இருப்பவர் பிரபுல் படேல்.
லட்சத்தீவின் நிர்வாக பொறுப்பும் இவருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் மாட்டிறைச்சிக்கு தடை, மது விடுதிகளுக்கு அனுமதி, வளர்ச்சிக்கு நிலத்தை எடுத்துக்கொள்ளும் வரைவு சட்டம், குண்டர் சட்டம் அமல் போன்ற நடவடிக்கைகளை லட்சத்தீவில் எடுத்தார்.
Read 10 tweets
28 May
மத்திய அரசை வேறு மாதிரி சித்தரிக்க முயற்சி நடக்கிறது: ஜெய்சங்கர்

நியூயார்க் : ''மத்திய அரசை வேறு மாதிரியாக சித்தரிக்க அரசியல் ரீதியில் முயற்சி நடக்கிறது,'' என, வெளி விவகாரங்கள் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஜெய்சங்கர், ஹூவர் நிறுவனத்தின் கருத்தரங்கில், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டருடன் பங்கேற்றார். அப்போது ஜெய்சங்கர் பேசியதாவது: கொரோனா காரணமாக இந்தியா கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளது.
அமெரிக்க மக்கள் தொகையை விட, இரண்டரை மடங்கு அதிகமுள்ள மக்களுக்கு, பாரபட்சமின்றி இலவச உணவுப் பொருட்களும், வங்கிக் கணக்கில் நேரடியாக பணமும் வழங்கப்படுகின்றன. ஆனாலும், மத்திய அரசை வேறு மாதிரியாக சித்தரிக்க அரசியல் ரீதியில் முயற்சி நடக்கின்றன;
Read 5 tweets
28 May
இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம்அருள்மிகு #_பால்வண்ணநாதர்_
திருக்கோயில்.

🇮🇳🙏1
மூலவர் : பால்வண்ணநாதர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : வேதநாயகி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : கொள்ளிடம்
ஆகமம்/பூஜை : -
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருக்கழிப்பாலை, காரைமேடு
ஊர் : திருக்கழிப்பாலை
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு

🇮🇳🙏2
பாடியவர்கள்:

அப்பர், சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர்

தேவாரப்பதிகம்

எங்கேனும் இருந்துன் அடியேன் உனைநினைந்தால் அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்றருளி இங்கே என்வினையை அறுத்திட்டு எனையாளும் கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே.

-சுந்தரர்.

🇮🇳🙏3
Read 22 tweets
27 May
*இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டு வாழுங்கள்.!*

எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் கதவு சிறியது தான்.

எவ்வளவு பெரிய கதவாக இருந்தாலும் பூட்டு சிறியது தான்.

எவ்வளவு பெரிய பூட்டாக இருந்தாலும் சாவி சிறியது தான்.

இவ்வளவு சிறிய சாவியை வைத்து அவ்வளவு பெரிய வீட்டை திறந்து செல்கிறோம்.
வாழ்க்கையும் இதே மாதிரி தான்.

நமக்கு வரும் எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் அதன் தீர்வுக்கு ஒரு சிறிய மாற்றமோ, சிறிய தீர்மானமோ போதும்.

அதுவே அத்தனை பிரச்சினையைத் தீர்க்கும் சாவியாக அமைந்து விடும்.
சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை. தீர்வு இல்லாத பிரச்சினைகளை இறைவன் அனுமதிப்பதில்லை.

எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டு இருங்கள்.!

அவன் தான் இறைவன்
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(