🙏 திருச்சிற்றம்பலம் 🙏

தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்:
(71)
பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்:

மூலவர்: பஞ்சவர்ணேஸ்வரர் (ஐவண்ணப்பெருமான்), திருமூக்கிச்சுரத்தடிகள்
அம்மன்: காந்திமதியம்மை
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: சிவதீர்த்தம், நாக தீர்த்தம்
புராண பெயர்: முக்கீச்சுரம்
ஊர்: உறையூர், திருச்சி
தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் "திருமூக்கீச்சுரம்" என்று பெயர் ஏற்பட்டது.

புகழ்ச்சோழ நாயனார் அவதரித்து ஆட்சி செய்தபதி.

இறைவன் சுயம்புவாக, 5 நிறங்களை பிரம்மனுக்கு காட்டினார்.
ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக மாறுவதை இப்போதும் நாம் காணலாம்.

பொன்மை நிறம் - மண் (காஞ்சிபுரம்)
வெண்மை நிறம் - நீர் (திருவானைக்காவல்)
செம்மை நிறம் - தீ (திருவண்ணாமலை)
கருமை நிறம் - காற்று (காளஹஸ்தி)
புகை நிறம் - ஆகாயம் (சிதம்பரம்)
அந்தந்த தலங்களில் அருள்புரியும் சிவபெருமான், ஐந்து பூதங்களையும் ஒன்றாக உள்ளடக்கி, இங்கே உறைவதால் ஊருக்கு உறையூர் என்று பெயர்.

வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவர், உதங்க முனிவர். தன் மனைவி பிரபையுடன் கங்கையில் நீராடிய போது அவளை ஒரு முதலை இழுத்துச் சென்று சின்னாபின்னப்படுத்தியது.
வாழ்வின் நிலையை உணர்ந்த முனிவர் என்றாலும் கூட, அவரது மனம் இந்நிகழ்ச்சியால் அலைந்து தத்தளித்தது. மனநிம்மதிக்காக அவர் உறையூர் வந்து சிவனை வழிபட்டார்.

காலை - ரத்தின லிங்கம்
உச்சி - ஸ்படிக லிங்கம்
மாலை - பொன் லிங்கம்
முதல் ஜாமம் - வைர லிங்கம்
அர்த்த ஜாமம் - சித்திர லிங்கம்
அந்தந்த வழிபாட்டு நேரத்தில் 5 வித லிங்கங்களாக சிவன் அவருக்கு காட்சியளித்தார்.

இதனால் அவரது மனம் அடங்கி அமைதியாகி, ஞான அனுபவம் பெற்று முக்தியடைந்தார்.
ஆடிப்பவுர்ணமியில் உதங்க முனிவருக்கு ஐந்து வண்ணம் காட்டியதாக வரலாறு என்பதால் அன்று இறைவனை தரிசிப்பது சிறப்பாக கருதப்படுகிறது.
இந்த உலகில் எந்த இடத்தில் சிவபூஜை செய்தாலும், சிவ தரிசனம் செய்தாலும் அனைத்தும் இங்கு வந்து தான் உறையும் என்பதால் உறையூர் எனப்பட்டது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

ஒருமுறை நாத்திகன் ஒருவன் கோயிலில் தரப்பட்ட திருநீறை அணிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்தான்.
இதற்காக மறுபிறவியில் பன்றியாக பிறந்து சேற்றில் உழன்றான்.

தன் முந்தைய பிறவி தவறை நினைத்து வருந்தி சிவனை வணங்கி, சிவதீர்த்தத்தில் நீராடி பாவ விமோசனம் பெற்றான்.

இத்தல காந்திமதி அம்மன் நாகலோகத்தில் நாககன்னியரால் பூஜிக்கப்பட்டு சோழமன்னனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
சோழ அரசர் ஒருவர் யானை மேல் உலா வந்த போது யானைக்கு மதம் பிடித்தது. அரசனும், பாகனும் செய்வதறியாது திகைத்தனர்.

அப்போது கோழி ஒன்று தன் குரலெழுப்பி வந்து, பட்டத்து யானையின் மத்தகத்தின் மேல் தன் மூக்கினால் கொத்தியதும், மதம் அடங்கிய யானை பழைய நிலையை அடைந்தது.
யானையை அடக்கிய கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது.

அந்த இடத்தை தோண்டி பார்த்த போது சிவலிங்கம் இருக்கக் கண்ட மன்னன், சிவனே தன்னையும், மக்களையும் யானையிடம் இருந்து காப்பாற்றியதாகக் கருதி அவருக்கு கோயில் எழுப்பினான்.
எதிரி யானை அளவு பலம் பெற்றிருந்தாலும், இந்த இறைவனின் கருணை இருந்தால் அவனை வென்றிடலாம். இத்தல முருகனை குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

மூவேந்தர்களும் சேர்ந்து வழிபட்ட திருத்தலம்.
தேவாரப் பாடல்:

நீருள் ஆரும் மலர்மேல் உறைவான், நெடுமாலும் ஆய்,
சீருள் ஆரும் கழல் தேட, மெய்த் தீத்திரள் ஆயினான்
சீரினால் அங்கு ஒளிர் தென்னவன், செம்பியன், வில்லவன்,
சேரும் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் செம்மையே.

🙏 திருச்சிற்றம்பலம் 🙏
#நற்றுணையாவது_நமச்சிவாயவே 🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 🇮🇳 மேகோன் 🇮🇳

🇮🇳 மேகோன் 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ShanmuSundarS

23 May
🙏 திருச்சிற்றம்பலம் 🙏

தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்:
(58)
திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயில்:

மூலவர்: வைத்தியநாதசுவாமி
அம்மன்: சுந்தராம்பிகை, பாலாம்பிகை
தல விருட்சம்: பனை மரம்
தீர்த்தம்: கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம்
புராண பெயர்: மழுவாடி
ஊர்: திருமழபாடி, அரியலூர்
தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

மார்க்கண்டேய முனிவருக்காக இங்குள்ள சிவபெருமான் மழு ஏந்தி நடனம் ஆடியதால் மழுவாடி என்று பெயர்.

திருத்தலத்தில் தான் நந்தி தேவர் சிவகணங்களின் தலைமைப் பதவியையும், திருக் கயிலையின்
தலை வாயிலைக் காக்கும் உரிமையையும் பெற்றார்.

‘நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்’ என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நந்தி தேவரின் திருக்கல்யாணம் நடைபெற்ற தலமும் திருமழபாடி திருத்தலம்தான்.

சுந்தரர் சோழ நாட்டுசிவஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டபோது ஒரு நதியைக் கடந்து
Read 9 tweets
22 May
🙏 திருச்சிற்றம்பலம் 🙏

தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்:
(57)
வியாக்ரபுரீஸ்வரர் கோயில்:

மூலவர்: வியாக்ரபுரீஸ்வரர், புலியூர் நாதர்
அம்மன்: சவுந்தரநாயகி, அழகம்மை
தல விருட்சம்: சரக்கொன்றை
தீர்த்தம்: காவிரி, கோயில் தீர்த்தம்
ஊர்: திருப்பெரும்புலியூர், தஞ்சாவூர்
தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

புதர் மண்டிக்கிடந்த இத்தலத்தை மதுரை சுந்தர சுவாமிகள் வெளிஉலகிற்கு தெரியப்படுத்தினார்.

புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார்.
மரங்களில் ஏறி பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து சிவபூஜை செய்ய நகங்களில் கண்களையும் பெற்றார்.

நடராஜரின் சன்னதிகளில் ஒரு புறம் இவரும், மறுபுறம் பதஞ்சலி மகரிஷியும் உள்ளனர்.

புலிக்கால் முனிவராகிய இவர் வழிபட்ட தலங்கள் பஞ்ச புலியூர்த்தலங்களில் இதுவும் ஒன்று.
Read 5 tweets
21 May
🙏 திருச்சிற்றம்பலம் 🙏

தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்:
(56)
நெய்யாடியப்பர் கோயில்:

மூலவர்: நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர்
அம்மன்: பாலாம்பிகை, இளமங்கையம்மை
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: காவிரி
புராண பெயர்: திருநெய்த்தானம்
ஊர்: தில்லைஸ்தானம், தஞ்சாவூர் ImageImageImageImage
தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

சப்தஸ்தானத்தில் இத்தலம் ஏழாவது தலம். திருவிழா காலத்தில் ஏழூர் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் கண்டு களிக்கும் சிறப்புடைய தலம், சுந்தரர் வைப்புத்தலமாக பாடியுள்ளார்.

ஆண்டிற்கு 3 முறை திருவையாறிலிருந்து ஐயாறப்பர் இங்கு வருகிறார்.
காமதேனுவே பசுவாக வந்து பால் சொரிந்து சொரிந்து நெய் ஆன இடத்தை தோண்டி பார்த்த போது, சிவலிங்கம் இருந்தது. சிவபக்தனான மன்னன் இவ்விசயம் அறிந்து, கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து, தினமும் நெய்யினால் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தான்.

எனவே இறைவன் நெய்யாடியப்பர் என்றழைக்கப்படுகிறார்.
Read 6 tweets
26 Apr
🙏 திருச்சிற்றம்பலம் 🙏

தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்:
(31)
குற்றம் பொறுத்தநாதர் கோயில்:

மூலவர்: குற்றம் பொறுத்தநாதர், அபராதசமேஸ்வரர்
அம்மன்: கோல்வளை நாயகி, விஜித்ர வலையாம்பிகை
தல விருட்சம்: கொடி முல்லை
தீர்த்தம்: சூரிய புஷ்கரிணி, பொற்றாமரை, இந்திர தீர்த்தம்
புராண பெயர்: கருப்பறியலூர், காமநாசபுரம், மேலைக்காழி
ஊர்: தலைஞாயிறு, நாகப்பட்டினம்
தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், சுந்தரர்

சீர்காழி சட்டை நாதர் கோயில் அமைப்பை போலவே இக்கோயிலும் மலைக்கோயில் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. எனவே இத்தலத்தை 'மேலைக்காழி' என்பர்.
கோயிலின் முதல் தளத்தில் உமா மகேஸ்வரரும், இரண்டாவது தளத்தில் சட்டைநாதரும் அருள்பாலிக்கின்றனர்.

ராவணனின் மகன் மேகநாதன் இந்திரனை போரில் வென்றதால் இவனுக்கு இந்திரஜித் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு முறை இந்திரஜித் வானத்தில் புஷ்பக விமானம் மூலம் பறந்து கொண்டிருந்தான்.
Read 12 tweets
25 Apr
🙏 திருச்சிற்றம்பலம் 🙏

தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்:
(30)
வீரட்டேஸ்வரர் கோயில்:

மூலவர்: வீரட்டேஸ்வரர்
அம்மன்: ஞானம்பிகை
தல விருட்சம்: கடுக்காய் மரம், அரிதகிவனம்
தீர்த்தம்: திரிசூல் கங்கை, பசுபதி தீர்த்தம்
புராண பெயர்: திருக்குறுக்கை
ஊர்: கொருக்கை, நாகப்பட்டினம்
தேவாரம் பாடியவர்கள்: திருநாவுக்கரசர்

சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்ட வீரட்டத்தலங்களில் இது காமனை எரித்த தலம். எனவே இறைவன் காமதகன மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். காமதகன மூர்த்தி இடக்காலை மடித்து வலக்காலைத் தொங்கவிட்டு வலக்கை அபய முத்திரையுடன் இடக்கையை மடக்கிய கால்
மீது வைத்து அமர்ந்த நிலையில் யோகமூர்த்தியாக வீற்றிருக்கிறார்.

இங்கு சிவன் யோக மூர்த்தியாக இருப்பதால் நினைத்தவுடன் சென்று எளிதாக பார்க்க இயலாது. எப்படியாவது தடங்கல் வந்து விடும் . அதையும் மீறி சுவாமியை தரிசிப்பவர்களுக்கு யோக நிலை கைகூடும்.
Read 5 tweets
24 Apr
🙏 திருச்சிற்றம்பலம் 🙏

தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்:
(29)
திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில்:

மூலவர்: உத்வாகநாதர், கல்யாண சுந்தரேஸ்வரர்
அம்மன்: கோகிலா
தல விருட்சம்: கருஊமத்தை
தீர்த்தம்: சப்தசாகரம்
புராண பெயர்: மணஞ்சேரி, கீழைத்திருமணஞ்சேரி ImageImageImage
ஊர்: திருமணஞ்சேரி, நாகப்பட்டினம்
தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். திருமணம் வேண்டுவோர்க்கு அருள் புரியும் தலம். மூலஸ்தானத்தில் அம்பாள் தனியாக மணக்கோலத்தில்
மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் உள்ளார்.

சிவபெருமானும் உமாதேவியும் கயிலாயத்தில் இருக்கும் போது ஒருநாள் உமை ஈசனை வணங்கி மற்றொரு முறை தங்களை திருமணம் செய்து இன்புற வேண்டும் என்று வரம் கேட்க, தாராளமாக என்றார் ஈசன்.

ஆனால் எப்போது எங்கே என்று ஈசன் சொல்லாமல் இருந்ததால் நாட்கள் Image
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(