ஒரு ஊரின் சத்திரத்தில் ஒருநாள் இரவு, ஒரு முனிவரும் அந்நாட்டின் அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் கூட்டமாக நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன.அமைச்சரால் தூங்கவே முடியவில்லை, அவருக்குக் கோபம் அதிகமானது.
நாய்களோ வெறித்தனமாகக் குரைத்து,இரவின் அமைதியைக் கெடுத்தன. இத்தனைக்கும் மத்தியில் முனிவர் அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.அவரை எழுப்பிய அமைச்சர், ”என்ன மனிதர் நீங்கள்?இவ்வளவு சத்தத்துக்கும் மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?"என்று புலம்பினார்.
அதற்கு முனிவர்,"அமைச்சரே!அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை. நாய்களுக்கு இங்கு ஒரு அமைச்சர் தங்கி இருப்பது தெரியாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அவை தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன.
நீங்கள் தூங்குகிற வேலையைப் பாருங்கள்" என்றார்."நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்"என்றார் அமைச்சர்.உடனே முனிவர், ”நீங்கள் அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள்.அப்படிப் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல,உங்கள் எதிர்ப்பு உணர்வு.
இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால் தான் தூங்கமுடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவதும் இல்லை. நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவதும் இல்லை.ஆனால் நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெறமுடியும்.
நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான். நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை அமைதிதான்"என்றார் முனிவர்."உதவாக்கரை யோசனை"என்று மனதுக்குள் பழித்தபடி போனார் அமைச்சர்.
ஆனால் காலையில் மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து முனிவரைச் சந்தித்தார் அமைச்சர்."எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதை கவனித்தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்” என்றார் அமைச்சர்.
முனிவர் பதில் உரைத்தார்,”இதை நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் கவனத்தை உள்முகமாகத் திருப்பு. எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய். உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை, நடப்பதற்கு வேறாக இருந்திருக்கும்.
அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய். அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம். உலகத்தை நமக்கேற்ப நிர்பந்தப்படுத்த முடியாது,நம்மால் மாற்ற முடியாது. அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய்” என்றார்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒருநாள் இரவு நெருங்கும் வேளையில் வயதான பெண்மணி ஒருவர், கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை ஒருவர் கவனித்தார். ரோட்டில் செல்லும் வாகனங்களை அந்தப் பெண்மணி கைக்காட்டி நிறுத்தப்பார்த்தார். ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை.
அந்த நபர் அருகில் சென்று என்னப் பிரச்சனை என்று அந்த பெண்மணியிடம் கேட்டார்.கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது என்றார் அந்த பெண்மணி."என் பெயர் தயாளன்.நீங்கள் காரில் உட்காருங்கள், நான் டயர் மாற்றிக் கொடுக்கிறேன் எனக்கூறி, சிறிது நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு டயரை மாத்தினார்.
அந்தப் பெண்மணி,"உங்கள் உதவிக்கு நான் ஏதாவது பணம் தர வேண்டும்"என்றார்.அதற்கு தயாளன்,"நான் சிறியதாக ஒரு டீக்கடை நடத்தி வருகிறேன். நீங்கள் பணம் எதுவும் தரவேண்டாம்.நீங்கள் கஷ்டப்படும் நேரத்தில் என்னாலான உதவி செய்தேன் அவ்வளவே. அப்படியே நீங்கள் பண உதவி செய்யவேண்டும் என்று எண்ணினால்,
மஹாராஷ்டிர மாநிலத்தில் பைதான் எனும் ஊரில் பாண்டுரங்கனின் பக்தரான ஏகநாதர் பிறந்தார்.அவருக்குத் திருமணமாகி ஒரு மகன் இருந்தான்.அவர் அடக்கம்,பொறுமை,மன்னிக்கும் சுபாவம்,கருணை வடிவுடன், கோபம் என்னும் குணத்தை வென்றிருந்தார்.
ஒருநாள் ஏழைப் பண்டிதன் ஒருவன்,தன் மகளுக்கு திருமணம் செய்யவேண்டி காசுக்காக ஊர்ஊராக அலைந்தான்.அப்போது ஏகநாதர் இருக்கும் ஊருக்கு வந்தான்.அந்த ஊர் பணக்காரனிடம் சென்று பணம் வேண்டினான்.அந்த பணக்காரனுக்கு ஏகநாதர் மீது பொறாமை,ஊரே அவரை புகழ்கிறதே என்று.அதனால் ஒரு திட்டம் தீட்டினான்.
பண்டிதனிடம்,"நீ போய் ஏகநாதனை கோபப்படுத்தி பொறுமையிழக்கச் செய்யவேண்டும்.அப்படிச் செய்தால் உன் மகள் திருமணத்தை நடத்துவதற்கு பணத்தை நானே தருகிறேன்" என்றான்.பணம் வரும் ஆசையில் பண்டிதன்,நேராக ஏகநாதர் வீட்டிற்குச் சென்றான்.அங்கே ஏகநாதர் தன்வீட்டு திண்ணையில் அமர்ந்துகொண்டு,
ஒரு ஏழைச்சிறுவன் வீடுவீடாகச் சென்று,தேவைப்பட்ட பொருள்களை, பலருக்கும் விற்று சிறிது காசு சம்பாதித்தான்.கிடைக்கும் காசை வைத்து தன் பள்ளிக்கூட கட்டணத்தைக் கட்டினான். புத்தகங்களையும் தானே வாங்கினான்.ஒருநாள் விற்றுக்கொண்டிருக்கும்போது, சிறுவனுக்கு அதீத பசி எடுத்தது.ஆனால் அவன் கையிலோ
சிறிது காசே இருந்தது. தான் செல்லவிருக்கும் அடுத்த வீட்டில் அந்த காசைக்கொடுத்து ஏதேனும் வாங்கி உண்ணலாம் என்று முடிவு செய்தான்.ஆனால் அடுத்த வீட்டின் கதவைத் தட்டியபோது வெளியே வந்த அழகிய இளம் பெண்ணைப் பார்த்து அவன் தயங்கினான். தான் கேட்க நினைத்ததைக் கேட்க அவனால் முடியவில்லை.
ஆனால் பசியோ பசி.ஒரு டம்ளர் தண்ணீர் தருமாறு கேட்டான் அவன்.
அந்த இளம்பெண் அவன் முகம் வாடியிருப்பதைப் பார்த்து அவன் அளவற்ற பசியால் துடிக்கிறான் என்பதை உணர்ந்தாள்.ஆகவே தண்ணீருக்கு பதிலாக ஒரு பெரிய டம்ளரில் பாலைக் கொண்டுவந்து கொடுத்தாள்.மெதுவாக அதைக் குடித்த அந்தச் சிறுவன்,
ஒரு இளைஞன் காட்டுவழியே நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்கு பசியெடுத்தது.ஒரு மரத்தின் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான்.மரத்தின் மேல் சரசரவென்று ஏறினான்.மிக கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன.அவற்றை எட்டிப் பறிக்க,கிளையின் மேல் நகர்ந்து சென்றபோது
அவனது பாரம் தாங்காமல் அந்தக் கிளை முறிந்தது. சட்டென்று சுதாரித்த அவன்,கீழே இருந்த ஒரு கிளையை பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான்.குனிந்து பார்த்தான்.தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று
திரும்பத் திரும்ப கத்த ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்கும் நிலை வந்துவிட்டது. தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனை பார்த்தார். அவன்மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார்.
ஒருநாள் ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி, வாரம் இருமுறை உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தன. எனவே,தலைவர் குரங்கிடம் போய்,மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன்,தலைவர் குரங்கும் ”சரி அவ்வாறே செய்துவிடுவோம்.
அதற்கு முன்னால் உண்ணாவிரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்துவிடுங்கள்.ஏனெனில் விரதம் முடியும்பொழுது பசியாக இருக்போம்.எனவே, அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது” என்று அறிவுரை சொன்னது.
அதை ஆமோதித்த மற்ற குரங்குகளும்,அருகில் இருந்த தோட்டத்தில் இருந்து நிறைய வாழைப்பழங்களைக் கொண்டுவந்து தலைவர் முன் வைத்தன.உடனே தலைவர், ”சரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்து விடுவோம்” என்றார். அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு மூத்த அனுபவமுள்ள குரங்கு, ”தலைவரே! விரதம் துவங்குவதற்கு முன்,
போர் இனி தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. பாண்டவர்களை ஒழித்தால் தான் நிம்மதியாக அரசாள முடியும் என்ற முடிவுக்கு துரியோதனன் வந்தான். போர் ஆயத்தங்கள் முடிகின்ற நிலை."ஹூம்,அவர்களிடம் வெறும் ஏழு அக்ஷௌஹிணி சேனை மட்டும்தான். என்னிடமோ பதினோரு அக்ஷௌஹிணி சேனை.
ஒருவனை ஒருவன் வீழ்த்தினால் கூட மிச்ச்ம் நாலு மிஞ்சும் வெற்றியுடன். குடும்பத்தில் பெரியவரான பீஷ்மர் என் பக்கம். அனைவருக்கும் குருவான துரோணர் என் பக்கம். ஆசார்யர் கிருபர் என் பக்கம்.அருமைத்தம்பிகள்,மாமா சகுனி,ஏராளமான ராஜாக்கள்! அட இது போதாதா என் வெற்றிக்கு” என எண்ணி மகிழ்ந்தான்
துரியோதனன். ஆனால் அவனுக்கு ஒரே ஒரு உறுத்தல்.'அந்த மாயக் கண்ணன் அவர்கள் பக்கம்.அவன் ஏதாவது மாயாஜாலம் செய்து விடுவானோ',துரியோதனனுக்கு இந்த பயம் சற்று இருந்தது. அவனுக்கு பதில் தெரியவேண்டிய கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
'வெற்றி உறுதி என்ற போதிலும் கூட போர் எப்போது முடியும்,