சிறுகதை:-

ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான்.

அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர்.

இதை உணர்ந்த அந்த ஏழை இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே,

#SSRThreads
1/n
வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான்.

நேரம் போய்க்கொண்டே இருந்தது.

இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள்.

2/n
சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.

இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம்.

எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்?
எவ்வளவு இழிசொல்?

3/n
போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே?

என்று தன் விதியை நொந்துகொண்டான்.

மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அப்பனே ஆண்டவா என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்,

4/n
என்று கோபுரத்தை பார்த்து மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி, கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தான்.

குளத்து நீரை கையில் எடுத்து முகத்தை கழுவி, படியில் சோர்வாக அமர்ந்தான்.

ராஜா அன்னதானம் கொடுத்து முடித்து, அந்த படித்துறையில் காலாற நடந்து வந்தார்.

5/n
என்னப்பா சாப்பிட்டாயா?

என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார்.

கேட்பது ராஜா என்று தெரியாமல் ஊரே சாப்பிட்டது என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா என்றான் விரக்தியாக,

6/n
முகத்தை திருப்பாமல் குளத்துநீரை பார்த்தபடியே பதில் சொன்னான் அந்த ஏழை.

அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது.

என் பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம்?

7/n
ஒரு அப்பாவி ஏழை இப்படி விடுபட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து மன்னித்துவிடப்பா ரொம்ப பசிக்கிறதா உனக்கு என்று கேட்க?

குளத்து நீரில் தலையில் கிரீடம், காதல் குண்டலம், நெற்றியில் திருநீர், முகத்தில் வாஞ்சை என்று ராஜா தெரிய திடுக்கிட்டு எழுந்தான்.

8/n
ராஜா நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்.

மன்னிக்க வேண்டுகிறேன் என்று பதறினான்.

அந்த எழையின் பேச்சை கேட்ட
ராஜா சத்தமாக சிரித்தார் பின் பேச்சை தொடர்ந்தார்.

இன்று நீ என்னோடும் ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய் என்று அவனை பேசவிடாமல்

8/n
இழுத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு அரண்மனைக்கு விரைந்தார்.

போய் குளித்துவிட்டு வா என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார்.

குளித்து, புத்தாடை அணிந்தது வந்தான்.

அறுசுவை விருந்து கொடுத்தார்.

9/n
சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்த்தார் இன்றிலிருந்து நீ ஏழை இல்லை.

இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்க என்று வாழ்த்தினார்.

அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது.

10/n
ஏனப்பா அழுகிறாய் என்று ராஜா கேட்க ?

நான் இதுநாள் வரை பிறவி ஏழை என்று மட்டும் தான் நினைத்திருந்தேன் இந்தத் தருணம்தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்து கொண்டேன் என்று சொன்னான்.

ராஜா ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்க ?

11/n
வாழ்க்கையில் இன்றுதான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன்.

கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டான் அந்த இறைவன்.

12/n
கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பல மடங்கு தருவான் என்று இன்றுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன் என்று சொல்லி அழுதான்.

நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் சராசரியைவிட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும்.

13 /n
சும்மாவா சொன்னார்கள்

கோபுர தரிசனம் கோடி புண்னியம் என்று

#நோக்கம்சிவமயம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SSR 🚩

SSR 🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SSR_Sivaraj

16 Jul
இராவணனிடம் லட்சுமணன் கேட்ட அறிவுரை :-

இலங்கையை ஆண்ட மாமன்னர் இராவணன் போரின் இறுதியில் ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய் உயிர் பிரியாமல் இருந்தது

அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா இராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன்.

#SSRThreads
1/n Image
நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.

நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் நீ பெற்று வா என்று கட்டளையிட்டு அனுப்பினார்.

அண்ணன் ராமரின் ஆணையை ஏற்று இராவணன் அருகே சென்ற லக்ஷ்மணனிடம் ராவணன் எதுவும் கூறவில்லை.

2/n Image
சில நிமிடம் ராவணனின் தலை பக்கம் நின்றுவிட்டு திரும்பிய லக்ஷ்மணன், தன்னிடம் ராவணன் எதுவும் கூறவில்லை என்று தெரிவிக்க.

அதற்கு பதிலளித்த ராமர், ஒருவரிடம் நாம் பாடம் கற்கும்போது, கற்பிப்பவரின் தலை பக்கம் நிற்காமல் கால் பக்கமாக நின்று கற்க வேண்டும் என்று அறிவுரை வழங்க,

3/n Image
Read 10 tweets
14 Jul
சிற்றரத்தை:-

நமது தேசத்திலிருந்து ஏற்றுமதியாகி, நமது நாட்டுக்கே திரும்பவும் மேலை மருந்துகளின் வழியே வரும் முக்கியமான மூலிகைகளில் ஒன்றுதான் சித்தரத்தை.

அக்காலத்தில் வீடுகளில் இருக்கும் மூலிகை மருந்துகளில் முக்கிய இடம் சித்தரத்தைக்கு உண்டு.

#மூலிகைஅறிவோம்
Continue>>>>> Image
குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, சிறிதளவு சித்தரத்தையை தூளாக்கி, அரை தேக்கரண்டி தேனில் குழைத்து கொடுக்கவேண்டும். இது எந்த பக்கவிளைவையும் ஏற் படுத்தாது. ஜீரணத்தை தூண்டும்.

கால் டீஸ்பூன் அளவு சித்தரத்தைப் பொடியைத் தேனில் குழைத்து காலை மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டால் Image
நுரையீரலில் ஒட்டிக்கொண்டு அகல மறுக்கும் கோழைச் சளியை, இளக்கிக்கொண்டுவந்து வெளியேற்றி, இருமலைப் போக்கும்

சித்தரத்தை சிறந்த மணமூட்டியாக திகழ்வதால் வாயின் துர்நாற்றம் போக்க மவுத் ஃபிரஷ்னர் ஆகப் பயன்படுகிறது, மூலிகை மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. Image
Read 13 tweets
13 Jul
சங்கியாக எனது முதல் திரேட்:- (Part-1)

தலைப்பு:- கொங்கு நாடு

கொங்கு நாடு தனி யூனியன் பிரதேசமாக வாய்ப்புள்ளதா?
அதற்கான சட்டம் இருக்கிறதா ?
மத்திய அரசு நினைத்தால் இதை நடத்தி காட்ட முடியுமா ?
மாநில அரசு ஒத்துழைக்காமல் இது
நிறைவேறுமா ?

#SSRThreads
Continue>>>>
திருட்டு திமுக ஒன்றிய அரசு என அழைப்பதால் மத்தியஅரசு திமுகவை பயமுறுத்த இப்படி பேசுகிறதா ?

என நிறைய கேள்விகளுக்கு பதிலாகவும் அப்படி கொங்கு நாடு தனியாக பிரிந்தால் எப்படி இருக்கும் என்பதை ஒரு அலசு அலசுவோம் வாருங்கள்,

தமிழகத்தின் மேற்கு மண்டலங்களை ஒருங்கிணைத்து கொங்கு நாடு என
தனி மாநிலமாக உருவாக்க பல ஆண்டுகளாக கோரிக்கை உள்ளது,

கொங்கு நாடு என்பது சங்ககாலம் தொட்டு மருவி வரும் பெயர் .

அது அந்த பகுதியை சேர்ந்த தமிழர்களின் அடையாளம்.

இந்நிலையில் கொங்கு மண்டலம் எனப்படும் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து
Read 27 tweets
28 Jun
மூலிகை பொடியும் அதன் பயன்களும்:-

அருகம்புல் பொடி;
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

நெல்லிக்காய் பொடி;
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

கடுக்காய் பொடி;
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

#மூலிகைஅறிவோம்

Continue>>>>>
வில்வம் பொடி;
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

அமுக்கரா பொடி;
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

சிறுகுறிஞான் பொடி;
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

நவால் பொடி;
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
வல்லாரை பொடி;
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளை பொடி;
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசி பொடி;
மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

ஆவரம்பூ பொடி;
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
Read 14 tweets
28 Jun
கடவுள் எங்கே? (Thread)

நீதிமன்றங்களில் யாரை பெயர் சொல்லி அழைக்கிறார்களோ அவர்கள்தான் உள்ளே போவார்கள் ஆனால் அன்று வாய்தாவுக்கு வந்திருந்த அனைவருமே கும்பலாக நீதிமன்றத்திற்குள்‌ குழுமியிருந்தார்கள்

நானும் வாய்தாவுக்கு ஆஜராக போயிருந்தேன் உள்ளே கூட்டத்தோடு கூட்டமாக எட்டிப்பார்த்தேன்.
இது சில வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம்

அதாவது மதுரையில் ஒரு பெண்ணை ஒரு இளைஞன் கேலி பண்ணுகிறான்

அந்தப் பெண்ணின் அக்காள் புருஷன் அந்தப் பையனை கண்டிக்கிறார்,

பையனின் மனசில் வன்மம் குடியேறி பழிவாங்கும் வெறியாக மாறுகிறது கண்டித்தவரின் இரண்டு வயசு பெண் குழந்தையை கடத்துகிறான்.
மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு குழந்தையுடன் வந்து ஊர் சுற்றுகிறான்.

குழந்தை அழத் தொடங்குகிறது ஒரு‌ பெரிய யானைப் பொம்மையை வாங்கிக் கொடுக்கிறான்.

ஆனாலும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை.

நகரத்தை விட்டு தனியே இருக்கும் ஒரு கோயிலுக்குப் போய் சேரும்போது சாயங்காலமாகிவிடுகிறது.
Read 10 tweets
26 Jun
நொச்சி:- (Thread)

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள வீடுகளில் பலரும் பின்பற்றி வரும் மூலிகை மருத்துவத்தில் ஆவி பிடித்தலும் ஒன்று.

ஆவி பிடிப்பதால் சுவாசப்பாதை சீராகும். மூச்சுவிட இலகுவாக இருக்கும்.

சளி அடைப்பு போகும் என்று கூறப்படுகிறது.

Continue>>>>> Image
ஆனால் மருத்துவர்கள் ஆவி பிடிப்பதால் எந்த பலனும் இல்லை வைரஸ் அழியாது என்று கூறுகின்றனர்.

இருப்பினும் மக்கள் தங்கள் வீடுகளில் ஆவி பிடித்து வருகின்றனர்.

ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில் ஆவிப்பிடிப்பது சிறந்த மருத்துவமாக பார்க்கப்படுகிறது. Image
பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் வீட்டு மருத்துவத்தில் ஆவி பிடித்தல் இன்றளவும் பின்பற்றப்படுகிறது.

இந்த ஆவி பிடித்தலில் பயன்படுத்தப்படும் மூலிகையில் முதன்மையானது நொச்சி இலை.

இந்த நொச்சி இலையில் இருக்கும் அற்புதமான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. Image
Read 20 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(