SSR Profile picture
26 Jun, 20 tweets, 7 min read
நொச்சி:- (Thread)

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள வீடுகளில் பலரும் பின்பற்றி வரும் மூலிகை மருத்துவத்தில் ஆவி பிடித்தலும் ஒன்று.

ஆவி பிடிப்பதால் சுவாசப்பாதை சீராகும். மூச்சுவிட இலகுவாக இருக்கும்.

சளி அடைப்பு போகும் என்று கூறப்படுகிறது.

Continue>>>>> Image
ஆனால் மருத்துவர்கள் ஆவி பிடிப்பதால் எந்த பலனும் இல்லை வைரஸ் அழியாது என்று கூறுகின்றனர்.

இருப்பினும் மக்கள் தங்கள் வீடுகளில் ஆவி பிடித்து வருகின்றனர்.

ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில் ஆவிப்பிடிப்பது சிறந்த மருத்துவமாக பார்க்கப்படுகிறது. Image
பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் வீட்டு மருத்துவத்தில் ஆவி பிடித்தல் இன்றளவும் பின்பற்றப்படுகிறது.

இந்த ஆவி பிடித்தலில் பயன்படுத்தப்படும் மூலிகையில் முதன்மையானது நொச்சி இலை.

இந்த நொச்சி இலையில் இருக்கும் அற்புதமான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. Image
ஏர் பூட்டும் முதல் உழவின்போது, நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து கழுத்தில் சூடிக்கொள்வார்களாம் நம் முன்னோர்கள்.

போரின்போது எதிரியின் முற்றுகையைத் தகர்த்தெறிந்த பிறகு, வீரர்கள் சூடிக்கொண்டது நொச்சி மலரைத்தான். ImageImage
அதன் பயன்பாடு கிராமங்களைத் தாண்டி இன்னும் அதிகரிக்கவில்லை.

இதனால் சென்னையில் சில இடங்களில் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது.

நீர் நிலைகளில் காணப்படும் நீர்நொச்சி, ஐந்து இலை கொண்ட நொச்சி, கருநிற இலைகள் கொண்ட நொச்சி என மூன்று வகைகளில் காணப்படுகிறது. ImageImage
இந்த நொச்சி இலையின் தாவரவையல் பெயர் Vitex negundo என்று அழைக்கப்படுகிறது.

இந்த கருநொச்சிதான் அதிக மருத்துவப் பலன் கொண்டது ஆனால் இது காட்டுப்பகுதி, மலைப்பகுதிகளில் மட்டுமே அரிதாக கிடைக்கும்.

நொச்சி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச்சுவைகள் கொண்டது. வெப்பத்தன்மையானது. Image
நொச்சி சிறு மரமாகவோ அல்லது குறுஞ்செடியாகவோ காணப்படும்.

நொச்சி மலர்கள் கொத்தாக நுனியில் அல்லது இலைக் கோணத்தில் அமைந்தவை. கருஞ்சிவப்பு அல்லது செங்கருநீலமானவை.

இந்திர சூரியம், நித்தில், நிர்க்குண்டி, சிந்துவாரம் ஆகிய பெயர்களும் நொச்சிக்கு உண்டு.
நொச்சி இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயன்கள் கொண்டவை.

இந்த நொச்சி இலைகளில் ஒவித நறுமண வாசனை இருக்கிறது.

அவைதான் சுவாசப்பாதையை சீராக்கி நன்மை அளிக்கிறது. கடுமையான நெஞ்சு சளி, இருமல் இருப்பவர்களுக்கு கொதிக்க வைத்த தண்ணீரில் நொச்சி இலை சேர்த்து ஆவி பிடிக்க சொல்கின்றனர்.
இதனுடன் கற்பூரவல்லி அல்லது துளசி சேர்த்து ஆவி பிடிக்கலாம்.

நொச்சி இலை போட்டு கொதிக்க வைத்த நீரை குளிக்க பயன்படுத்தினாலும் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன.

தீராத தலைவலியால் அவதிப்படுகிறீர்கள் எனில் நொச்சியின் காய்ந்த இலைகளை முகைமூட்டி அந்த புகையை சுவாசிக்க தலைவலி தீரும். Image
ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னை இருப்பவர்கள் இதை தவிர்க்கவும்.

நொச்சி இலையைக் கசக்கி தலையில் கட்டினால் தலைப்பாரம் குறையும்.

நொச்சி இலை, உடல் அசதியைத் தணிக்கும் சிறுநீரைப் பெருக்கும் காய்ச்சலைப் போக்கும் ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்தும் மாதவிலக்கை தூண்டும் வயிற்றுப் புழுக்களைக் கொல்லும். Image
ஒரு தேக்கரண்டி நொச்சி இலைச் சாற்றில் 1 கிராம் மிளகுத் தூள் சிறிதளவு நெய் சேர்த்து, காலை, மாலை வேளைகளில் சாப்பிட மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும்.

உணவுக் கட்டுப்பாடு அவசியம் மேலும் நொச்சி, உத்தாமணி இலைகளை வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் ஒற்றடம் கொடுக்க வேண்டும். Image
நொச்சி இலையுடன் மிளகு, பூண்டு, கிராம்பு சேர்த்து மென்று தின்று வந்தால், ஆஸ்துமா குணமாகும்.

கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றினைப் போக்கக் கூடியது. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும் மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. Image
நொச்சி இலைகளை தலையணையாகச் செய்து உபயோகிக்க, காய்ச்சல், தலைவலி, குணமாகும்.

உடலில் ஏதேனும் கட்டி, வீக்கம் இருப்பின் நொச்சி இலைகளை வதக்கி வீக்கங்களுக்கும் கட்டிகளுக்கும் கட்ட அவை கரைந்து போகும்.

இன்றைக்கும் கிராமங்களில் இந்த வழக்கம் இருந்துதான் வருகிறது. Image
ஏனெனில் நொச்சி பாதிக்கப்பட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து வலி, வீக்கத்தை குறைக்கிறது இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

காயங்கள் இருந்தால் நொச்சி இலை சாறை எடுத்து நல்லெண்ணெயில் கலந்து கொதிக்க வைத்து அதை பாட்டிலில் சேமித்துக்கொண்டு தினமும் தேய்த்துவர புண் ஆறிவிடும் Image
நொச்சி இலையை அரிசிக் கஞ்சியில் அரைத்து புண்களைக் குணமாக்க உபயோகிக்கலாம்.

பொதுவாக நொச்சி இலைச் சாற்றைக் கொண்டு புண்களை கழுவி மருந்திடலாம்.

நொச்சி இலைகளை நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி அந்த நீரில் குளிக்க பிரசவித்தவர்களின் அசதி குறையும். ImageImage
நொச்சி, வேம்பு, தழுதாழை, தும்பை, குப்பைமேனி, ஆடாதோடை, நாயுருவி ஆகியவற்றை வகைக்கு ஒரு பிடி எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பொறுக்கும் சூட்டில் வேது பிடிக்க வாதநோய்கள், தலைவலி போன்றவை குணமாகும். கொதித்த நீரைத் துணியில் நனைத்து ஒற்றமிடலாம். Image
கொசுவை விரட்ட காய்ந்த அல்லது பச்சையாக உள்ள நொச்சி, வேப்பிலை இலைகளை தீயில் எரித்து, புகைமூட்டம் போட்டு வந்தால் கொசுக்கள் விலகும்.

படுக்கை அறையில் வெறுமனே நொச்சி இலைகளை வைத்தாலும் கொசுக்கள் நெருங்காது.

மலைச்சரிவுகளில் மண் அரிப்பைத் தடுக்க நொச்சியை நெருக்கமாக வளர்க்கலாம். Image
ஆறுகள், நீரோடைகள் போன்றவற்றின் கரைகளிலும் இவற்றை நட்டு வைக்கலாம். இதனால் கரைகளுக்கு வலு சேர்க்கும்; வெள்ளம் ஏற்படும்போது கரைகள் உடையாமல் காக்கும்.

நீர்ச் செழிப்புள்ள இடங்களில் வளரக்கூடிய நொச்சி காற்றைத் தடுக்கும் தன்மை படைத்தது. வீடுகளின் முகப்பில் நடுவதால் தூசியை வடிகட்டும். Image
இந்த மூலிகைச் செடியை ஆடு, மாடுகள் உள்ளிட்ட விலங்குகள் நெருங்காது.

நொச்சி இலையின் மணம் காரணமாகச் சில பூச்சிகள் இதனை நெருங்குவதில்லை.

ஆதலால் தானியப் பாதுகாப்பில் நொச்சி இலை பயன்படுகிறது.

ஓலைச் சுவடிகளைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் நொச்சியை பயன்படுத்தியுள்ளனர். Image
உங்கள் வீட்டிலும் நொச்சி வளர்க்க நினைத்தால் ஒரு கிளையை வெட்டி வைத்தால் கூட நன்றாக வளரும்.

இதனை வீட்டில் வளர்ப்பதால் பல்வேறு சிகிச்சைகளை செய்வதற்கு உதவியாக இருக்கும். நொச்சியினை நாம் வீட்டு தோட்டங்களிலும், மாடி தோட்டங்களிலும் வளர்க்க வேண்டியது அவசியம்.

#மூலிகைஅறிவோம் ImageImage

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SSR

SSR Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SSR_Sivaraj

28 Jun
மூலிகை பொடியும் அதன் பயன்களும்:-

அருகம்புல் பொடி;
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

நெல்லிக்காய் பொடி;
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

கடுக்காய் பொடி;
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

#மூலிகைஅறிவோம்

Continue>>>>>
வில்வம் பொடி;
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

அமுக்கரா பொடி;
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

சிறுகுறிஞான் பொடி;
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

நவால் பொடி;
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
வல்லாரை பொடி;
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளை பொடி;
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசி பொடி;
மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

ஆவரம்பூ பொடி;
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
Read 14 tweets
28 Jun
கடவுள் எங்கே? (Thread)

நீதிமன்றங்களில் யாரை பெயர் சொல்லி அழைக்கிறார்களோ அவர்கள்தான் உள்ளே போவார்கள் ஆனால் அன்று வாய்தாவுக்கு வந்திருந்த அனைவருமே கும்பலாக நீதிமன்றத்திற்குள்‌ குழுமியிருந்தார்கள்

நானும் வாய்தாவுக்கு ஆஜராக போயிருந்தேன் உள்ளே கூட்டத்தோடு கூட்டமாக எட்டிப்பார்த்தேன்.
இது சில வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம்

அதாவது மதுரையில் ஒரு பெண்ணை ஒரு இளைஞன் கேலி பண்ணுகிறான்

அந்தப் பெண்ணின் அக்காள் புருஷன் அந்தப் பையனை கண்டிக்கிறார்,

பையனின் மனசில் வன்மம் குடியேறி பழிவாங்கும் வெறியாக மாறுகிறது கண்டித்தவரின் இரண்டு வயசு பெண் குழந்தையை கடத்துகிறான்.
மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு குழந்தையுடன் வந்து ஊர் சுற்றுகிறான்.

குழந்தை அழத் தொடங்குகிறது ஒரு‌ பெரிய யானைப் பொம்மையை வாங்கிக் கொடுக்கிறான்.

ஆனாலும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை.

நகரத்தை விட்டு தனியே இருக்கும் ஒரு கோயிலுக்குப் போய் சேரும்போது சாயங்காலமாகிவிடுகிறது.
Read 10 tweets
1 Jun
வந்தார் இராஜராஜர்:- (Thread)

ஜூன் 1 வருடம் 2018.
மூன்று வருடங்களுக்கு முன்பு இதே நாள்...,

தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டது.
குஜராத் மாநிலம் கலிக்கோ அருங்காட்சியகத்திலிருந்த இராஜராஜர் மற்றும் அவரது நம்பிராட்டியார் செப்புத்திருமேனிகள் தஞ்சை பெரியகோவிலை வந்தடைந்தன.

#SSRThreads
சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செப்புத்திருமேனிகள் தாயகம் வந்தன,

என்ன நடந்தது..?

சுருக்கமாய் இச்சிலைகள் மீட்கப்பட்ட வரலாறு ஐயா மா.மாரிராஜன் பதிவிலிருந்து,

தஞ்சை பெரியகோவிலாம் இராஜராஜேஷ்வரம்'

வெகு சாமானியர் முதல் பலரும் பல நிவந்தங்களை இக்கோவிலுக்கு கொடுத்துள்ளனர்,
எண்ணிலடங்கா செப்புத்திருமேனிகளாக இறை வடிவங்களை செய்து
இக்கோவிலுக்கு சமர்ப்பித்தனர்.

இராஜராஜரின் 29ஆம் ஆட்சியாண்டு (கி.பி 1014)
தஞ்சை பெரியகோவிலின் நிர்வாக அதிகாரியான மூவேந்த வேளானுக்கு ஓர் நோக்கம் தம் அரசனுக்கும் அரசிக்கும் படிமங்கள் எடுக்க வேண்டும் என,
Read 25 tweets
31 May
விழிப்புணர்வு திரேட் :-

#திருட்டு_திராவிட கட்சிகள், விசுவாசிகள் தயவு செய்து இந்த திரேட் படிக்க வேண்டாம், கருத்திடவும் வேண்டாம் ஏனெனில் ஆன்மீகம் சார்ந்த பதிவு இது.

திருட்டு திராவிட அரசுகள் நினைத்திருந்தால்
அறநிலையத்துறையையும் மேம்படுத்தி நிறைய மருத்துவமனைகளைக் கட்டியிருக்கலாம்.
ஆனால் தமிழின தலைவர் என சொல்லி கொண்ட கலைஞர் என்ன செய்தார் ?

அறநிலைதுறையை ஏற்படுத்தி கொள்ளைதான் அடித்தர் அந்த விஞ்சான ஊழல்வாதி,

இனி அவர்களை சொல்லி எதுவும் ஆக போவது இல்லை மக்களாகிய நாம் தான் விழிப்படைய வேண்டும்.

நடக்கும் அநியாயத்தை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அறநிலைதுறையில் கீழ் வரும் பழமை வாய்ந்த கோயிலின்
உண்டியலில் பணம் எங்கே ?

ஏன் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் ஆலயங்கள் பல அழிந்து போகும் நிலையில் உள்ளன ?

காரணம் என்ன??

எல்லாம் கட்டுமரம் வகுத்த வழியில் ஊழல் செய்வதால்.

ஒரு கணக்கு போடுவோமா ?
Read 22 tweets
30 May
#தினம்_ஒரு_திருமந்திரம் டேக்கில் 5 நாட்களாக பரியங்க யோகம் வந்து கொண்டிருக்கிறது நண்பர்கள் விளக்கமாக கேட்டுக்கொண்டதற்காக தனி திரேட் இது.

நான் திருமந்திரத்தை நித்திக்கிற மாதிரி சில திடீர் சைவர்கள் என்னை போலி சாமியார் ரேஞ்சுக்கு சித்திரிக்க முயற்சிக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி 🙏
சங்கம் அவர்களை காலுக்கு அடியில் தூக்கி போட்டு மதித்து விட்டு திரேட்க்குள் செல்கிறது.

இனிப்பை நாக்கில் வைக்காதவன் சாதாரண துறவி,

இனிப்பை நாக்கில் வைத்தும் உமிழ்நீர் சுரக்கவிடாமல் இனிப்பு சுவையை வென்றவன் மகா துறவி ஏன நாம் புரிந்துகொள்வது தெளிவு

அதாவது திருமூலர் என்ன சொல்லுறார்னா
யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

இந்த வான்வெளி பிரபஞ்சம் முழுவதும் நிறைந்த இறைவனுடன் சேர்ந்ததால் எல்லையற்ற இன்பம் பெர்றேன் அதை வேதமாக திருமந்திரத்தில் கூறியுள்ளேன்,
Read 30 tweets
29 May
ராமாயணத்தின் தத்துவம்:-

ராமாயணம் என்பது நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த கதை மட்டுமல்ல இது ஒரு தத்துவ ஆன்மீக முக்கியத்துவத்தையும் மற்றும் அதில் ஒரு ஆழமான உண்மையையும் கொண்டுள்ளது. ராமாயணத்தை நாமே நமது சொந்த உடலில் உணரலாம்.

இது எத்தனை பெருக்கு தெரியும் ?
‘ரா’ என்றால் ஒளி என்று பொருள். ‘ம’ என்றால் எனக்குள் என் இதயத்தில் என்று பொருள்.
‘ராம’ என்றால் எனக்குள் இருக்கும் ஒளி (ஆத்மா) என்று பொருள்.

ஆத்மா - ராமர்
மனம் - சீதை
மூச்சுக் காற்று - அனுமன்
விழிப்புணர்வு - லட்சுமணன்
அகங்காரம் - ராவணன்
ராமர் தசரதருக்கும் கௌசல்யைக்கும் பிறந்தவர்.

தசரத் என்றால் 10 தேர்கள் என்று பொருள்.

பத்து தேர்கள் என்பது மனிதர்களின் செயல் உறுப்புகளாகிய

வாய் (பேசுதல்)
கைகள் (செயல்)
கால்கள் (போக்குவரவு)
எருவாய் (கழிவுகளை நீக்குதல்)
கருவாய் (இன்பமும் பிறப்பும்)
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(