ஒரு ஊரில் விறகு வெட்டுபவன் ஒருவன் வாழ்ந்துவந்தான்.அவனுக்கு கடவுள் மேல் நம்பிக்கை உண்டு. தினமும் காட்டிற்குச் சென்று விறகுவெட்டி,அதைக் கொண்டுபோய் விற்பனை செய்வான். நல்ல வருமானம் வந்தது. அதை வைத்து நிம்மதியாக திருப்தியாக வாழ்க்கை நடத்திவந்தான்.
ஒருநாள் அவன் காட்டுக்குச் செல்லும்போது, அங்கே ஒரு நரியைக் கண்டான்.அந்த நரி ஏதோ விபத்தில், தன் இரண்டு முன்னங்கால்களை இழந்துவிட்டது. அது ஒரு மரத்தடியில படுத்திருந்தது. அதை இவன் பார்த்தான்.அப்பொழுது இவன் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது.
"இந்த நரிக்கு இரண்டு கால்கள் இல்லை.அப்படி இருக்கும்பொழுது, இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும்?" என்று யோசிக்க ஆரம்பித்தான்.அப்படி அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போது,அந்தப் பக்கமாக ஒரு புலி வந்தது.
அதைப் பார்த்த உடன் இவன் ஓடிப்போய் ஒரு மரத்திற்குப் பின்னால் ஒளிந்துக்கொண்டான். என்ன நடக்கிறது என்று கவனிக்க ஆரம்பித்தான்.அந்தப் புலி,ஒரு பெரிய மானை அடித்து இழுத்துக் கொண்டுவந்து அதைச் சாப்பிட்டது. தான் சாப்பிட்டது போக மீதியை அங்கேயே போட்டுவிட்டுப் போய்ட்டது.
புலி போனதற்குப் பிறகு, முன்னங்கால் இல்லாத அந்த நரி மெதுவாக நகர்ந்து வந்து மிச்சமிருந்ததை சாப்பிட்டுவிட்டு, திரும்பவும் போய் படுத்துக்கொண்டது. இவ்வளவையும் மரத்திற்குப் பின்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்த விறகுவெட்டி யோசிக்க ஆரம்பித்தான். "இரண்டு காலும் இல்லாத ஒரு வயதான நரிக்கே,
ஆண்டவன் சாப்பாடு போடுகிறான்.அப்படி இருக்கும்பொழுது, தினமும் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிடும் எனக்கு சாப்பாடு போடாமல் விட்டுவிடுவானா?நான் எதற்கு அனாவசியமாக வெய்யில் மழையில் கஷ்டப்பட்டு,வேர்வை சிந்தி விறகு வெட்டவேண்டும்” என்றெல்லாம் யோசித்தான்.அதற்குப் பிறகு அவன் காட்டிற்கே
போகவில்லை.கோடாலியை தூக்கி எறிந்தான்.பேசாமல் கோயிலின் ஒரு மூலையிலே உட்கார்ந்துவிட்டான்.கடவுள் என்னைக் காப்பாற்றி, எனக்கு வேண்டிய உணவைக் கொடுப்பார்"என்றுக்கூறி வந்தான். ஒவ்வொரு நாளும் போனது.சாப்பாடு மட்டும் வந்த பாடில்லை. இவன் பசியால் வாடிப் போனான்.உடம்பு இளைத்துப் போய்விட்டது.
ஒருநாள் ராத்திரி நேரம்.கோயிலில் யாருமே இல்லை. இவன் மெதுவாக கண்ணைத் திறந்து கோயில் சிலையைப் பார்த்தான்.
"ஆண்டவா என் பக்தியில் உனக்கு நம்பிக்கை இல்லையா?நான் இப்படியே பட்டினிக் கிடந்து சாக வேண்டியதுதானா? காட்டில் அந்த நரிக்கு, புலி மூலமாக சாப்பாடு போட்டாயே.அதைப் பார்த்துவிட்டு தானே
இங்கே வந்தேன். என்னை இப்படி தவிக்கவிட்டு விட்டாயே. இது நியாயமா?" என்று புலம்பினான்.அப்போது அந்த கடவுள் சிலை மெதுவாக கண்ணைத்திறந்தது. அதன் குரல் வெளியே வந்தது.
"முட்டாளே! நீ பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது நரியிடம் இருந்து இல்லை. புலியிடம் இருந்து." எனக் கூறியது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு ஊரின் சத்திரத்தில் ஒருநாள் இரவு, ஒரு முனிவரும் அந்நாட்டின் அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் கூட்டமாக நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன.அமைச்சரால் தூங்கவே முடியவில்லை, அவருக்குக் கோபம் அதிகமானது.
நாய்களோ வெறித்தனமாகக் குரைத்து,இரவின் அமைதியைக் கெடுத்தன. இத்தனைக்கும் மத்தியில் முனிவர் அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.அவரை எழுப்பிய அமைச்சர், ”என்ன மனிதர் நீங்கள்?இவ்வளவு சத்தத்துக்கும் மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?"என்று புலம்பினார்.
அதற்கு முனிவர்,"அமைச்சரே!அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை. நாய்களுக்கு இங்கு ஒரு அமைச்சர் தங்கி இருப்பது தெரியாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அவை தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன.
ஒருநாள் இரவு நெருங்கும் வேளையில் வயதான பெண்மணி ஒருவர், கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை ஒருவர் கவனித்தார். ரோட்டில் செல்லும் வாகனங்களை அந்தப் பெண்மணி கைக்காட்டி நிறுத்தப்பார்த்தார். ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை.
அந்த நபர் அருகில் சென்று என்னப் பிரச்சனை என்று அந்த பெண்மணியிடம் கேட்டார்.கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது என்றார் அந்த பெண்மணி."என் பெயர் தயாளன்.நீங்கள் காரில் உட்காருங்கள், நான் டயர் மாற்றிக் கொடுக்கிறேன் எனக்கூறி, சிறிது நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு டயரை மாத்தினார்.
அந்தப் பெண்மணி,"உங்கள் உதவிக்கு நான் ஏதாவது பணம் தர வேண்டும்"என்றார்.அதற்கு தயாளன்,"நான் சிறியதாக ஒரு டீக்கடை நடத்தி வருகிறேன். நீங்கள் பணம் எதுவும் தரவேண்டாம்.நீங்கள் கஷ்டப்படும் நேரத்தில் என்னாலான உதவி செய்தேன் அவ்வளவே. அப்படியே நீங்கள் பண உதவி செய்யவேண்டும் என்று எண்ணினால்,
மஹாராஷ்டிர மாநிலத்தில் பைதான் எனும் ஊரில் பாண்டுரங்கனின் பக்தரான ஏகநாதர் பிறந்தார்.அவருக்குத் திருமணமாகி ஒரு மகன் இருந்தான்.அவர் அடக்கம்,பொறுமை,மன்னிக்கும் சுபாவம்,கருணை வடிவுடன், கோபம் என்னும் குணத்தை வென்றிருந்தார்.
ஒருநாள் ஏழைப் பண்டிதன் ஒருவன்,தன் மகளுக்கு திருமணம் செய்யவேண்டி காசுக்காக ஊர்ஊராக அலைந்தான்.அப்போது ஏகநாதர் இருக்கும் ஊருக்கு வந்தான்.அந்த ஊர் பணக்காரனிடம் சென்று பணம் வேண்டினான்.அந்த பணக்காரனுக்கு ஏகநாதர் மீது பொறாமை,ஊரே அவரை புகழ்கிறதே என்று.அதனால் ஒரு திட்டம் தீட்டினான்.
பண்டிதனிடம்,"நீ போய் ஏகநாதனை கோபப்படுத்தி பொறுமையிழக்கச் செய்யவேண்டும்.அப்படிச் செய்தால் உன் மகள் திருமணத்தை நடத்துவதற்கு பணத்தை நானே தருகிறேன்" என்றான்.பணம் வரும் ஆசையில் பண்டிதன்,நேராக ஏகநாதர் வீட்டிற்குச் சென்றான்.அங்கே ஏகநாதர் தன்வீட்டு திண்ணையில் அமர்ந்துகொண்டு,
ஒரு ஏழைச்சிறுவன் வீடுவீடாகச் சென்று,தேவைப்பட்ட பொருள்களை, பலருக்கும் விற்று சிறிது காசு சம்பாதித்தான்.கிடைக்கும் காசை வைத்து தன் பள்ளிக்கூட கட்டணத்தைக் கட்டினான். புத்தகங்களையும் தானே வாங்கினான்.ஒருநாள் விற்றுக்கொண்டிருக்கும்போது, சிறுவனுக்கு அதீத பசி எடுத்தது.ஆனால் அவன் கையிலோ
சிறிது காசே இருந்தது. தான் செல்லவிருக்கும் அடுத்த வீட்டில் அந்த காசைக்கொடுத்து ஏதேனும் வாங்கி உண்ணலாம் என்று முடிவு செய்தான்.ஆனால் அடுத்த வீட்டின் கதவைத் தட்டியபோது வெளியே வந்த அழகிய இளம் பெண்ணைப் பார்த்து அவன் தயங்கினான். தான் கேட்க நினைத்ததைக் கேட்க அவனால் முடியவில்லை.
ஆனால் பசியோ பசி.ஒரு டம்ளர் தண்ணீர் தருமாறு கேட்டான் அவன்.
அந்த இளம்பெண் அவன் முகம் வாடியிருப்பதைப் பார்த்து அவன் அளவற்ற பசியால் துடிக்கிறான் என்பதை உணர்ந்தாள்.ஆகவே தண்ணீருக்கு பதிலாக ஒரு பெரிய டம்ளரில் பாலைக் கொண்டுவந்து கொடுத்தாள்.மெதுவாக அதைக் குடித்த அந்தச் சிறுவன்,
ஒரு இளைஞன் காட்டுவழியே நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்கு பசியெடுத்தது.ஒரு மரத்தின் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான்.மரத்தின் மேல் சரசரவென்று ஏறினான்.மிக கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன.அவற்றை எட்டிப் பறிக்க,கிளையின் மேல் நகர்ந்து சென்றபோது
அவனது பாரம் தாங்காமல் அந்தக் கிளை முறிந்தது. சட்டென்று சுதாரித்த அவன்,கீழே இருந்த ஒரு கிளையை பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான்.குனிந்து பார்த்தான்.தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று
திரும்பத் திரும்ப கத்த ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்கும் நிலை வந்துவிட்டது. தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனை பார்த்தார். அவன்மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார்.
ஒருநாள் ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி, வாரம் இருமுறை உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தன. எனவே,தலைவர் குரங்கிடம் போய்,மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன்,தலைவர் குரங்கும் ”சரி அவ்வாறே செய்துவிடுவோம்.
அதற்கு முன்னால் உண்ணாவிரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்துவிடுங்கள்.ஏனெனில் விரதம் முடியும்பொழுது பசியாக இருக்போம்.எனவே, அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது” என்று அறிவுரை சொன்னது.
அதை ஆமோதித்த மற்ற குரங்குகளும்,அருகில் இருந்த தோட்டத்தில் இருந்து நிறைய வாழைப்பழங்களைக் கொண்டுவந்து தலைவர் முன் வைத்தன.உடனே தலைவர், ”சரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்து விடுவோம்” என்றார். அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு மூத்த அனுபவமுள்ள குரங்கு, ”தலைவரே! விரதம் துவங்குவதற்கு முன்,