இளம் துறவிகள் இரண்டு பேர் பிரயாணம் செய்யும போது, வழியில் ஆற்றைக் கடக்கவேண்டியிருந்தது. ஆற்றில் நிறைய நீர் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது இளம்பெண் ஒருத்தி துறவிகளை நோக்கி ஓடிவந்தாள். "ஐயா எனது தாயாருக்கு ரொம்பவும் உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.
அக்கரையில் உள்ள எனது வீட்டிற்கு ஆற்றைக்கடந்து எப்படிப் போவது என்று தெரியவில்லை. தண்ணீர் மிக ஆழமாக உள்ளது. தயவுசெய்து என்னை எப்படியாவது அக்கரைக்கு அழைத்துப்போங்கள்" என துறவிகளிடம் அழுதவண்ணம் மன்றாடினாள். அதைக்கேட்டு முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார் ஒரு துறவி.
இன்னொரு துறவி சிறிது நேரம் யோசித்துவிட்டு அந்தப்பெண்ணை அழைத்து, தனது தோளில் உட்கார வைத்து ஆற்றைக்கடந்தார். அக்கரைக்கு வந்ததும் அப்பெண்ணைத் தோளிலிருந்து இறக்கிவிட்டார். அப்பெண் அந்தத் துறவிக்கு நன்றி கூறி அவரை வாழ்த்தி விட்டுச்சென்றாள்.
இரண்டு துறவிகளும் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்கள். பெண்ணைத் தோளில் சுமந்து வந்த துறவியிடம் மற்ற துறவி, "ஒரு துறவி இப்படி நடந்துக் கொள்ளலாமா? இது நியாயம்தானா?" என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு மற்ற துறவி பதில் கூறாமலேயே வந்தார். கேள்வி கேட்ட துறவிக்கோ கோபம் அதிகமாயிற்று.
"உங்களுக்கு துறவு நிலை மறந்துவிட்டதா? அப்பெண்ணை நீங்கள் தோளில் சுமந்து வந்தது சரிதானா? நான் கேட்டதற்கு பதில் பேசாமல் வருவது ஏனொ?" என்று கடிந்தார். பொறுமையாக கேட்டுக்கொண்டு வந்த அந்தத் துறவி,
"துறவியாரே! நான் தோளில் சுமந்து வந்த அந்தப்பெண்ணை கரையிலேயே இறக்கி அனுப்பிவிட்டேன். நீங்கள் அவளை இன்னுமா சுமந்துக்கொண்டு வருகிறீர்கள்?" என்றார். கேட்டத் துறவியோ வெட்கித் தலைகுனிந்தார்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avvai 🇮🇳

Avvai 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Avvaitweets

22 Jul
"என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை"என்றான் ஒரு அரசன், ஞானியிடம். "உன் கடமையை நீ சரியாகச் செய்கிறாயா?"என ஞானி கேட்டார். "என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை.அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.
ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை.இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை"என்றான்.
"அப்படியானால் ஒன்று செய்.உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு"என்றார் ஞானி. "எடுத்துக் கொள்ளுங்கள்"என்றான் மன்னன்."நீ என்ன செய்வாய்" என்றார் ஞானி."நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து,
பிழைத்துக் கொள்கிறேன்"என்றான் அரசன்."எங்கோ போய்,தெரியாத வேலையைச் செய்வதை விட,என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை,ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு,வழக்குகளை பார்க்கிறேன்."என்றார். சரி என்றான் மன்னன்.
Read 7 tweets
16 Jul
ஒரு ஊரில் விறகு வெட்டுபவன் ஒருவன் வாழ்ந்துவந்தான்.அவனுக்கு கடவுள் மேல் நம்பிக்கை உண்டு. தினமும் காட்டிற்குச் சென்று விறகுவெட்டி,அதைக் கொண்டுபோய் விற்பனை செய்வான். நல்ல வருமானம் வந்தது. அதை வைத்து நிம்மதியாக திருப்தியாக வாழ்க்கை நடத்திவந்தான்.
ஒருநாள் அவன் காட்டுக்குச் செல்லும்போது, அங்கே ஒரு நரியைக் கண்டான்.அந்த நரி ஏதோ விபத்தில், தன் இரண்டு முன்னங்கால்களை இழந்துவிட்டது. அது ஒரு மரத்தடியில படுத்திருந்தது. அதை இவன் பார்த்தான்.அப்பொழுது இவன் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது.
"இந்த நரிக்கு இரண்டு கால்கள் இல்லை.அப்படி இருக்கும்பொழுது, இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும்?" என்று யோசிக்க ஆரம்பித்தான்.அப்படி அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போது,அந்தப் பக்கமாக ஒரு புலி வந்தது.
Read 9 tweets
14 Jul
ஒரு ஊரின் சத்திரத்தில் ஒருநாள் இரவு, ஒரு முனிவரும் அந்நாட்டின் அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் கூட்டமாக நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன.அமைச்சரால் தூங்கவே முடியவில்லை, அவருக்குக் கோபம் அதிகமானது.
நாய்களோ வெறித்தனமாகக் குரைத்து,இரவின் அமைதியைக் கெடுத்தன. இத்தனைக்கும் மத்தியில் முனிவர் அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.அவரை எழுப்பிய அமைச்சர், ”என்ன மனிதர் நீங்கள்?இவ்வளவு சத்தத்துக்கும் மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?"என்று புலம்பினார்.
அதற்கு முனிவர்,"அமைச்சரே!அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை. நாய்களுக்கு இங்கு ஒரு அமைச்சர் தங்கி இருப்பது தெரியாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அவை தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன.
Read 9 tweets
11 Jul
ஒருநாள் இரவு நெருங்கும் வேளையில் வயதான பெண்மணி ஒருவர், கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை ஒருவர் கவனித்தார். ரோட்டில் செல்லும் வாகனங்களை அந்தப் பெண்மணி கைக்காட்டி நிறுத்தப்பார்த்தார். ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை.
அந்த நபர் அருகில் சென்று என்னப் பிரச்சனை என்று அந்த பெண்மணியிடம் கேட்டார்.கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது என்றார் அந்த பெண்மணி."என் பெயர் தயாளன்.நீங்கள் காரில் உட்காருங்கள், நான் டயர் மாற்றிக் கொடுக்கிறேன் எனக்கூறி, சிறிது நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு டயரை மாத்தினார்.
அந்தப் பெண்மணி,"உங்கள் உதவிக்கு நான் ஏதாவது பணம் தர வேண்டும்"என்றார்.அதற்கு தயாளன்,"நான் சிறியதாக ஒரு டீக்கடை நடத்தி வருகிறேன். நீங்கள் பணம் எதுவும் தரவேண்டாம்.நீங்கள் கஷ்டப்படும் நேரத்தில் என்னாலான உதவி செய்தேன் அவ்வளவே. அப்படியே நீங்கள் பண உதவி செய்யவேண்டும் என்று எண்ணினால்,
Read 9 tweets
10 Jul
மஹாராஷ்டிர மாநிலத்தில் பைதான் எனும் ஊரில் பாண்டுரங்கனின் பக்தரான ஏகநாதர் பிறந்தார்.அவருக்குத் திருமணமாகி ஒரு மகன் இருந்தான்.அவர் அடக்கம்,பொறுமை,மன்னிக்கும் சுபாவம்,கருணை வடிவுடன், கோபம் என்னும் குணத்தை வென்றிருந்தார். Image
ஒருநாள் ஏழைப் பண்டிதன் ஒருவன்,தன் மகளுக்கு திருமணம் செய்யவேண்டி காசுக்காக ஊர்ஊராக அலைந்தான்.அப்போது ஏகநாதர் இருக்கும் ஊருக்கு வந்தான்.அந்த ஊர் பணக்காரனிடம் சென்று பணம் வேண்டினான்.அந்த பணக்காரனுக்கு ஏகநாதர் மீது பொறாமை,ஊரே அவரை புகழ்கிறதே என்று.அதனால் ஒரு திட்டம் தீட்டினான்.
பண்டிதனிடம்,"நீ போய் ஏகநாதனை கோபப்படுத்தி பொறுமையிழக்கச் செய்யவேண்டும்.அப்படிச் செய்தால் உன் மகள் திருமணத்தை நடத்துவதற்கு பணத்தை நானே தருகிறேன்" என்றான்.பணம் வரும் ஆசையில் பண்டிதன்,நேராக ஏகநாதர் வீட்டிற்குச் சென்றான்.அங்கே ஏகநாதர் தன்வீட்டு திண்ணையில் அமர்ந்துகொண்டு, Image
Read 14 tweets
7 Jul
ஒரு ஏழைச்சிறுவன் வீடுவீடாகச் சென்று,தேவைப்பட்ட பொருள்களை, பலருக்கும் விற்று சிறிது காசு சம்பாதித்தான்.கிடைக்கும் காசை வைத்து தன் பள்ளிக்கூட கட்டணத்தைக் கட்டினான். புத்தகங்களையும் தானே வாங்கினான்.ஒருநாள் விற்றுக்கொண்டிருக்கும்போது, சிறுவனுக்கு அதீத பசி எடுத்தது.ஆனால் அவன் கையிலோ
சிறிது காசே இருந்தது. தான் செல்லவிருக்கும் அடுத்த வீட்டில் அந்த காசைக்கொடுத்து ஏதேனும் வாங்கி உண்ணலாம் என்று முடிவு செய்தான்.ஆனால் அடுத்த வீட்டின் கதவைத் தட்டியபோது வெளியே வந்த அழகிய இளம் பெண்ணைப் பார்த்து அவன் தயங்கினான். தான் கேட்க நினைத்ததைக் கேட்க அவனால் முடியவில்லை.
ஆனால் பசியோ பசி.ஒரு டம்ளர் தண்ணீர் தருமாறு கேட்டான் அவன்.
அந்த இளம்பெண் அவன் முகம் வாடியிருப்பதைப் பார்த்து அவன் அளவற்ற பசியால் துடிக்கிறான் என்பதை உணர்ந்தாள்.ஆகவே தண்ணீருக்கு பதிலாக ஒரு பெரிய டம்ளரில் பாலைக் கொண்டுவந்து கொடுத்தாள்.மெதுவாக அதைக் குடித்த அந்தச் சிறுவன்,
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(