எழுதியவர் யார் என்று
தெரியவில்லை ஆனால்
படித்துப் பாருங்கள் , கரைந்து போவீா்கள் ;"

வாழைத்
தோட்டத்திற்குள்
வந்து முளைத்த...

காட்டுமரம் நான்..!

எல்லா மரங்களும்
எதாவது...
ஒரு கனி கொடுக்க ,

எதுக்கும் உதவாத...
முள்ளு மரம் நான்...!

தாயும் நல்லவள்...
தகப்பனும் நல்லவன்...
தறிகெட்டு போனதென்னவோ
நான்...

படிப்பு வரவில்லை...
படித்தாலும் ஏறவில்லை..

பத்து வயதில் திருட்டு...
பனிரெண்டில் பீடி...
பதிமூன்றில் சாராயம்...
பதினெட்டில் அடிதடி...

இருபதுக்குள் எத்தனையோ...

எட்டாவது பெயிலுக்கு...
ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும் ?

எவர் சொல்லியும் திருந்தாமல்...
எச்சிப் பிழைப்பு பிழைக்க ...

கை மீறிப்
போனதென்று...
கால்கட்டுக்கு ஏற்பாடு செய்தனா் .

மூக்குமுட்டத் தின்னவும்...
முந்தானை விரிக்கவும்...
மூன்று பவுனுடன் ...

விவரம் தெரியாத ஒருத்தி...
விளக்கேற்ற வீடு வந்தாள் .

தின்னு கொழுத்தேனே தவிர...
மருந்துக்கும் திருந்தவில்லை...
மூன்று பவுன் போட
முட்டாப் பயலா நான்...

இன்னும் ஐந்து வேண்டுமென்று ,
இடுப்பில் மிதித்து அனுப்பி வைக்க ...

கறவை மாட்டை சந்தைக்கு அனுப்பி ,
நான் கட்டினவளை வீட்டுக்கு அனுப்பினான் ,
சொந்தம் விட்டுப்போகாமல் இருக்க...
மாமனாரான மாமன்...!

மசக்கை என்று சொல்லி...
மணிக்கொரு முறை வாந்தி
வயிற்றைக் காரணம் காட்டி...
வாய்க்கு ருசியாய் சமைப்பதில்லை..,

சாராயத்தின் வீரியத்தால்...
சண்டையிட்டு வெளியே அனுப்ப..,

தெருவில் பார்த்தவரெல்லாம்
சாபம் விட்டுப்
போவார்கள் .

தர்ம ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக...
தகவல் சொல்லியனுப்ப..

ரெண்டு நாள் கழித்து...
கடமைக்கு எட்டிப் பார்த்தேன்...

கருகருவென
என் நிறத்தில்...

பொட்டபுள்ள..!

எவன் கேட்டான் இந்த மூதேவியை... ?

ஆறு மாதமாகியும் அவள் வரவில்லை...

அரசாங்க மானியம்
ஐயாயிரம்...
கிடைக்குமென்று
கையெழுத்துக்காகப்
பார்க்கப் போனேன் ,

கூலி வேலைக்குப் போனவளைக்
கூட்டி வரவேண்டி...
பக்கத்து வீட்டு பாப்பா ஓடிச் செல்ல...

ஆடி நின்ற ஊஞ்சலில்...
அழுகுரல் கேட்டது..,

சகிக்க முடியாமல்
எழுந்து ...
தூக்கினேன் ...

அதே அந்த பெண்
குழந்தை..!

அடையாளம் தெரியவில்லை ...
ஆனால் அதே கருப்பு..

வந்த கோபத்திற்கு...
வீசியெறியவே தோன்றியது...

தூக்கிய நொடிமுதல்...
சிரித்துக் கொண்டே இருந்தது,

என்னைப் போலவே...
கண்களில் மச்சம்,

என்னைப் போலவே
சப்பை மூக்கு,

என்னைப் போலவே
ஆணாகப்..,
பிறந்திருந்தால் இந்நேரம் இங்கிருக்க
வேண்டியதில்லை...,

பல்லில்லா வாயில்...
பெருவிரலைத் தின்கிறது,

கண்களை மட்டும்..,
ஏனோ சிமிட்டாமல் பார்க்கிறது,
ஒரு கணம் விரல் எடுத்தால்...
உதைத்துக் கொண்டு அழுகிறது,

எட்டி... விரல் பிடித்துத்..
தொண்டை வரை வைக்கிறது,

தூரத்தில்
அவள் வருவது கண்டு...
தூரமாய் வைத்து விட்டேன்...

கையெழுத்து வாங்கிக்கொண்டு...
கடைசி பஸ்ஸுக்கு திரும்பி வருகிறேன்,

முன் சீட்டில் இருந்த குழந்தை...
மூக்கை எட்டிப் பிடிக்க
நெருங்கியும்...
விலகியும் நெடுநேரம்...

விளையாடிக் கொண்டு இருந்தேன்!

ஏனோ அன்றிரவு ...
தூக்கம் நெருங்கவில்லை,

கனவுகூட
கருப்பாய் இருந்தது,

வெளிச்சம் வரும்வரை காத்திருந்தேன்...

போட்ட கையெழுத்துப் பொருந்தவில்லை...
என்ற பொய்த்தனத்தோடு ,
இன்னொரு கையெழுத்துக்கு...
மீண்டும் சென்றேன்,

அதே கருப்பு,
அதே சிரிப்பு,

கண்ணில் மச்சம்,
சப்பை மூக்கு...

பல்லில்லா வாயில்
பெருவிரல் தீனி...

ஒன்று மட்டும் புதிதாய் ...

எனக்கும் கூட
சிரிக்க வருகிறது ...

கடைசி பஸ், ஆனால் பேருந்தில்...
எந்த குழந்தையும் இல்லை .
வீடு நோக்கி நடந்தேன்,

தூக்கம் இல்லை
நெடுநேரம்...

பெருவிரல்
ஈரம் பட்டதால் ...
மென்மையாக
இருந்தது ...

முகர்ந்து பார்த்தேன் ....

விடிந்தும் விடியாததுமாய்...
காய்ச்சல் என்று சொல்லி...
ஊருக்கு
வரச் சொன்னேன்,

பல்கூட விளக்காமல் ...
பஸ் ஸ்டேண்டுக்கு சென்று விட்டேன்,
பஸ் வந்ததும் லக்கேஜை
காரணம் காட்டி...
குழந்தையைக் கொடு என்றேன் !

பல்லில்லா வாயில் பெருவிரல் !

இந்த முறை பெருவிரலைத் தாண்டி... ஈரம் எங்கோ
சென்று கொண்டு இருந்தது...

தினமும் என் மீது படுத்துக்கொண்டு...
பொக்கை வாயில் கடிப்பாள்,

அழுக்கிலிருந்து
அவளைக் காப்பாற்ற...
நாளுக்கு நாலைந்து முறை குளிப்பேன்,

பான்பராக் வாசனைக்கு...
மூக்கைச் சொரிவாள் ,விட்டு விட்டேன் ...

சிகரெட் ஒரு முறை..,
சுட்டு விட்டது
விட்டு விட்டேன்...

சாராய வாசனைக்கு...
வாந்தியெடுத்தாள் ...விட்டு விட்டேன்,

ஒரு வயதானது ...

உறவுகளெல்லாம்...
கூடி நின்று ,
'அத்தை சொல்லு '
'மாமா சொல்லு '
'பாட்டி சொல்லு '
'அம்மா சொல்லு 'என்று...

சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்...

எனக்கும் ஆசையாக இருந்தது,
'அப்பா 'சொல்லு
என்று சொல்ல,

முடியவில்லை ......
ஏதோ என்னைத் தடுத்தது,

ஆனால் அவளை எதுவும் தடுக்கவில்லை...

அவள் சொன்ன முதல் வார்த்தையே
'அப்பா'தான்!

அவளுக்காக எல்லாவற்றையும்...
விட்ட எனக்கு ,

அப்பா என்ற
அந்த வார்த்தைக்காக...

உயிரைக்கூட விடலாம் என்று தோன்றியது,

அவள் வாயில் இருந்து வந்த..,

அந்த வார்த்தைக்காக மீண்டும் பிறந்தேன்,

இந்த சாக்கடையை...
அன்பாலேயே கழுவினாள்...

அம்மா சொல்லித் திருந்தவில்லை,
அப்பா சொல்லித் திருந்தவில்லை ,
ஆசான் சொல்லித் திருந்தவில்லை ,

நண்பர்கள் சொல்லித் திருந்தவில்லை ,
நாடு சொல்லியும் திருந்தவில்லை,

முழுசாய் மூன்று வார்த்தை பேச வராத ...

இந்த முகத்தை பார்த்து திருந்தி விட்டேன்..

வளர்ந்தாள்..,
நானும் மனிதனாக வளர்ந்தேன்...

படித்தாள்,
என்னையும் படிப்பித்தாள்...

திருமணம்
செய்து வைத்தேன் ,

இரண்டு குழந்தைகளுக்குத் தாயானாள்,

இரண்டு குழந்தைகளுமே...
பெரியவர்களாய் வளர்ந்து விட்டார்கள்,

நானும்கூட தாத்தாவாகி விட்டேன் ,

என்னை மனிதனாக்க...
எனக்கே மகளாய் பிறந்த...

அந்த தாய்க்காகக் காத்திருக்கிறது ...
#இந்த_கடைசி_மூச்சு..!

ஊரே ஒன்று கூடி..,
உயிர்த் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்,

எனக்குத் தெரியாதா என்ன?

யாருடைய பார்வைக்கப்புறம்...

பறக்கும் இந்த உயிரென்று?

வானத்தை பார்த்துக் காத்திருக்கிறேன்...
வாசலில் ஏதோ சலசலப்பு,

நிச்சயம் என் மகளாகத்தான் இருக்கும்..,
என் பெருவிரலை யாரோ
தொடுகிறார்கள் ,

அதோ அது அவள்தான்,
மெல்ல சாய்ந்து ...

என் முகத்தை பார்க்கிறாள் ...

என்னைப் போலவே...

கண்களில் மச்சம்,
சப்பை மூக்கு,
கருப்பு நிறம்,
நரைத்த தலைமுடி,
தளர்ந்த கண்கள்,

என் கைகளை முகத்தில் புதைத்துக் கொண்டு,
'அப்பா அப்பா' என்று குமுறிக் குமுறி அழுகிறாள்...

அவள் எச்சில்
என் பெருவிரலிட,

உடல் முழுவதும் ஈரம் பரவ...

ஒவ்வொரு புலனும் துடித்து...

#அடங்குகிறது.
.......................

"தாயிடம் தப்பி வந்த
மண்ணும்...
கல்லும்கூட ,

மகளின் ...
கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
இதை படிக்கும்போது கண்கள் ஈரமானல் நீங்கள் நல்ல தகப்பனாக பாசமுள்ள பிள்ளையாக இருப்பீர்கள்....🙏🙏🙏🙏♥♥ நன்றி அண்ணன் @nethaji321

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கண்ணன்தேவன்

கண்ணன்தேவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kannanthvan

7 Aug
அனுபவம்தத்துவம்

#குறள்320 நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
#உரை320 செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.

நமக்கு சில விஷயம் தெரியுதுனா?
தன்னை பெரிய ஆளாக காட்ட அல்ல?
அதிலிருந்து இன்னும் தெரிந்து தெளிந்து தன்னை உயர்ந்த ஒர் ஆயுதம்!!
அவ்வளவு தான்

பிடிக்காத வேலையையே பிடித்த மாதிரி செய்ய வைப்பதற்கு பெயரே வறுமை...!!

நீங்கள் விலகி இருந்தால் உங்களிடம் வந்துவிடுவார்கள் என்று நினைக்காதீர், உங்களை மறந்து விடுவார்கள். அவ்வளவே!
எதார்த்தமாக கூறப்படும் வார்த்தைகளே அதிகம் ஆராயப் படுகின்றன.

வில்லங்க பார்வையில்
விபரீதங்களை
விலைபேச பார்க்கிறாள் போல ;

ஆரம்பத்திலேயே
தேவையானது ஏது....?
தேவையற்றது ஏது...?
தெரிந்தும் புரிந்தும்
கொள்ள வேண்டும்...

தூக்கி போட்டு விட்டு
தேடக்கூடாது
உறவுகளையும் தான்.....¡✍️
Read 10 tweets
7 Aug
நேற்று வரை 50 கோடிக்கும் மேலான பாரத தேசத்தவர்களுக்கு சீன பரிசோதனை நிலைய பெருந்தொற்றிற்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இணைப்பில் உள்ள புள்ளிவிவரம் அசர வைக்கிறது.
முதல் பத்து கோடி நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்த 85 நாட்கள் ஆன நிலையில் இப்போது வெறும் 20 நாட்களுக்குள்ளேயே அது சாத்தியமாகியுள்ளது. இந்த கால அளவு இன்னமும் குறையும்.

நம்மை விடவும் பொருளாதாரத்தில் வலு மிகுந்த நாடுகள் எல்லாம்
இன்னமும் தடுப்பூசிகளுக்கு அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில் அனாயாசமாக 50 கோடி பாரத தேசத்தவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது வியப்பின் சரித்திரக் குறியீடு. இந்த 50 கோடிகளிலும் சொற்ப எண்ணிக்கையைத் தவிர மீதமனைத்தும்
Read 7 tweets
6 Aug
அனுபவம்தத்துவம்

மற்றவர்கள் பொறாமைப்படும்
அளவிற்கு கூட வாழலாம், ஆனால்
பரிதாபப்படும் அளவிற்கு வாழக்கூடாது...!

எங்கே துன்பம் முடிகிறதோ அங்கே இன்பம் பிறக்கும்:
எங்கே பேராசை முடிகிறதோ அங்கே பேரின்பம் தொடங்கும்:
எங்கே தீர்வுகள் தெரிகிறதோ அங்கே கவலைகள் தொலையும்:
இவை எல்லாம் நம்மிடத்தில் தான் இருக்கிறது.வெளியில் இல்லை.இதை சரியான நேரத்தில் சரியான முறையில் புரிந்து கொள்வது தான் பகுத்தறிவு.

நம் வாழ்க்கை நாம் வாழ வேண்டும் சந்தோஷமாக அடுத்தவர்களுக்கு பாதிப்பில்லாமல்

வலிகள் நிறைந்த வாழ்க்கை
இருக்கலாம்

வழிகள் இல்லாமல் இருப்பதில்லை
வலிகள் வலிமையாக்குவதற்கே

நம்மிடம் பத்து ரூபாய் கையில் இருந்தா எத வாங்கலாம்ன்னு தோனும்....

அதே நோட்டு கிழிஞ்சி இருந்தா இத எவன் வாங்குவான்னு தோனும்....

இதான் #வாழ்க்கை

வாய்ப்பிருந்தும் வரம்பு மீறாமல் இருப்பது..
#நேர்மை_என்பது..
💙✨வாய்ப்பிருந்தும் வரம்பு
Read 12 tweets
6 Aug
இந்தியா தன் மிகபெரிய சாதனையினை செய்திருக்கின்றது, ஆம் மிக வரலாற்று சிறப்புமிக்க சாதனை இது
தன் சொந்த விமானதாங்கி கப்பலை தயாரித்து அதை வெள்ளோட்டம் விட்டு உலகை அதிர வைத்திருக்கின்றது இந்தியா.

உலகில் வலுவான கப்பல்படைக்கு விமானம்தாங்கி கப்பல் அவசியம், இன்றும் அமெரிக்கா ஆதிக்கம் Image
செலுத்துகின்றது என்றால் அவர்களிடம் 11 விமானம் தாங்கி கப்பல் உண்டு
ஐரோப்பிய நாடுகளெல்லாம் இவற்றை வைத்து கொண்டு மிரட்டும், ரஷ்யா ஒரே ஒரு விமானம் தாங்கி கப்பலை மட்டும் களத்தில் வைத்திருக்கின்றது ஆனால் மறைவாக சில இருக்கலாம் என்பது தியரி.

சீனாவும் சொந்த விமானந்தாங்கி கப்பலை கட்டியது,
கப்பலும் ஓடியது ஆனால் விமானம் கப்பலில் ஏறி இறங்குவதை அவர்களால் செய்யமுடியவில்லை, விமானம் கப்பலில் இறக்கி ஏற்றும் பொழுது திணறினார்கள் இப்பொழுதும் சிக்கலில்தான் உள்ளார்கள். காரணம் விமானம் ஏறி இறங்கா விமானம் பருத்தி மூட்டைகளை சுமக்கத்தான் சரி,
Read 16 tweets
5 Aug
அவனிதனிலே பிறந்து... மதலை எனவே தவழ்ந்து.. அழகு பெறவே நடந்து இளைஞனே.... அரு மழலையே மிகுந்து.... குதலை மொழியே புகன்று...
அதி விதமாய் வளர்ந்து பதினாறஆய்.... சிவ கலைகள் ஆகமங்கள்.... மிகவு மறைஓதும் அன்பர்... திருவடிகளை நினைந்து துதி யாமல்... தெரிவையர்கள் ஆசை மிஞ்சி... வெகு கவலையாய் உழன்று திரியும் அடியேனை உன்றன் அடிசேராய்...
மவுன உபதேச சம்பு மதியறுகு வேணி தும்பை.... மணி முடியின் மீதணிந்த மகதேவர்.. மனம் மகிழவே அணைந்து... மலைமகள் குமார துங்க வடிவேலா...
Read 5 tweets
5 Aug
நாய் மனம்

ஒரு நாய் ஒரு சிவாலய வளாகத்துக்கு அருகே திரிந்து கொண்டிருக்குமாம்.அது அந்த ஊரில் போடப்படும் எச்சில் இலை உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வந்ததாம். இப்படியாக வாழ்ந்து வந்த காலத்தில் அந்த ஊர் சிவாலயத்தில் திருவிழா தொடங்கியதாம் அந்த ஊரில்
அனைவரும் பத்து நாளும் விரதம் இருந்தார்களாம்.விரத காலங்களில் சாப்பிட்ட இலைகளை நாய்க்கு போடக்கூடாது என்ற ஒரு நம்பிக்கையில் யார் வீட்டிலும் எச்சில் இலைகளை தூக்கி போடவே இல்லையாம். நாய்க்கு எச்சில் இலையே கிடைக்காததால் பசி தாங்க முடியாமல் கோயில் ஓரத்தில் வந்து படுத்து கிடந்ததாம்.
அப்போ அந்த சிவாலயத்தில் இராமாயணம் பற்றி பிரசங்கம் பன்னி இராமேஸ்வர தல மகிமையை விளக்கமாக பேசினார்களாம்.அதனை அந்த நாய் காது கொடுத்து கேட்டதாம்.ஆஹா!! இராமேஸ்வரத்துக்கு இத்தனை மகிமையா? எல்லாரும் போகனும்னு சொல்றாங்களே!! நாமும் இப்படியே எச்சில் இலை பொறுக்கி தின்றே காலத்தை
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(