ஓணம் திருநாள்:- (Thread)

ஏன்டா படுத்திறீங்க...!

இந்த கொத்தடிமைங்களுக்கு ஒரு எழவும் தெரில ஓணம் பண்டிக்கைனா என்ன ?
ஏன் வந்தது ?
ஏன் கொண்டாடுறாங்க ?
எதுக்கு கொண்டறாங்க ?

இது எதுவும் தெரியல வாழ்த்து சொன்ன என்ன மலையாளின்னு சொல்றனுங்க அதான் ஒரு திரேட் போட்டு சொல்லாம்னு வந்தேன்.
ஓணம் பண்டிகை எனும் வாமண அவதார திருநாளை கொண்டாடும் நேரம் அந்த பண்டிகைக்கான காரணத்தையும் அது சொல்லும் நோக்குவதும் இந்துக்களின் பிரதான கடமை,

அந்த ஓணம் பண்டிகையின் காரணம் இப்படித்தான் தொடங்குகின்றது,

ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமான‌ சிவன் கோவிலில் ஒரு எலி புகுந்தது.
அங்கும் இங்கும் ஓடிகொண்டிருந்ததது, ஆளில்லா நேரம் அங்குமிங்கும் ஓடுவதும் குதிப்பதுமாக இருந்தது.

அந்த எலி கொஞ்சம் விஷேஷமான எலியாகவும் இருந்தது,

யாருமற்ற நேரத்தில் தீபத்தின் திரி பாதி எரிந்து கருகும் சமயத்துக்கு வந்ததால் அந்த எலி தன் தலையால் திரியினை முன் தள்ளி எரியவைக்கும்,
இதை அந்த எலி மிக சரியாக செய்து வந்தது,

எலியின் வாழ்நாள் குறுகியது என்பதால் அந்த எலியும் மரித்தது, சிவன் அந்த எலிக்கு மிகபெரிய வரத்தினை வழங்கினார்.

அடுத்த ஜென்மத்தில் அது மிகபெரிய இடத்தில் பிறக்க அருள்பாலித்தார் அது பிரகலாதன் வம்சத்தில் பேரனாக பிறந்தது,
ஆம், இரணியனின் மகனான அந்த பிரகலாதனின் பேரனாக அந்த பலி பிறந்திருந்தது.

என்னதான் பிரகலதனின் பேரன் என்றாலும் அசுரனுக்குரிய இயல்பும் அவனிடம் இருந்தது, அவனை அசுர கூட்டம் வளைத்தும் இருந்தது, குறிப்பாக அசுரகுரு சுக்கிராச்சாரியார் அவனை மிகபெரும் பிம்பமாக வளர்த்தெடுத்து கொண்டார்.
குருபக்தியில் மிக மிக உன்னதமான‌ அவன், குருவிடம் தன்னை ஒப்புகொடுத்த அவன் அவர் மேல் அவ்வளவு மரியாதை வைத்திருந்தான்.

அந்த மரியாதையினை கொண்டே பலியினை ஆட்டுவித்தார் சுக்கிராச்சாரியார்.

அந்த பலி அசுர இயல்பும் பிரகலாதனின் பக்தியும் நிரம்ப கொண்டிருந்தான்.
அவன் பக்திமான், நல்ல மனம் கொண்டவன் ஆனால் குருவுக்கு கட்டுபட்ட மாணவனும் அசுர குலத்து பாசமும் கொண்டவனாய் இருந்தான்.

ஒரு கட்டத்தில் சுக்கிராச்சாரியாரின் ஆலோசனைபடி மிகபெரும் யாகங்களும் அதன் பலன்களும் பலியினை சக்திமிக்கவனாக்கின, தவம் பெற்ற முனிவர்கள் கூட அவனை அசைக்க முடியவில்லை,
யோகிகளும், முனிகளும் இல்லாத இடத்தில் அதர்மம் அதிகரிக்கும், தர்மத்தின் வடிவான அவர்கள் இருக்கும் வரை அதர்மம் அங்கு காலூன்ற முடியாது, இதனால் அவர்களை குறிவைத்து அடித்தார் சுக்கிராச்சாரியார்,

அதை செய்வ்வனே செய்தான் பலி.

சில முனிகளும் யோகிகளும் இது தவறு, அதர்மம் சீறியபொழுதும்
"இது என் குருநாதர் உத்தரவு" என எதிர்த்தான் மகாபலி.

தவத்தில் சிறந்த ஒரு முனி "எந்த குருவால் நீ பலமடைந்தாயோ, அந்த குருவினை நீ மீறும் நாளில் அழிவாய்" என சாபமிட்டு சென்றார், அதை பிரபஞ்சம் குறித்து கொண்டது,

சுக்கிராச்சாரி விக்ரஜித் என மிகபெரும் யாகம் செய்தார்,
அந்த யாகத்தின் விளைவால் பறக்கும் ரதம் வெல்லமுடியா ஆயுதம் என பல பலிக்கு கிடைத்தன,

அதில் ஏறி விண்ணகம் சென்ற பலி வானலோகத்தையும் பிடித்து தேவர்களை விரட்டி அடித்தான்.

எங்கும் அசுர ஆட்சி நடந்தது தர்மம் இல்லை ஒரே ஒரு அசுர சக்தியாக பேயாட்டம் ஆடி கொண்டிருந்தது பலி கோஷ்டி,
மூவுலகுக்கும் அவனே சக்கரவர்த்தி யாராலும் வெல்லமுடியா அவன் மகாபலி என்றானான்.

அவன் அசுரனே தவிர மனதால் நல்லவன், தர்மத்தை தவிர எல்லாம் வாழட்டும் எனும் அளவு நல்லவன், அவன் குடிகளுக்கு நல்லவன் தன் நாட்டு மக்களுக்கு பொற்கால ஆட்சி வழங்கி கொண்டிருந்தான்.
எல்லா அசுரனுக்கும் சுயநலமும் சுய குடும்ப நலமும் தன் மக்கள் நலனும் ஓங்கியிருக்கும்.

அது ராவணனுக்கு இருந்தது
சூரபத்மனுக்கு இருந்தது அப்படித்தான் மகாபலிக்கும் இருந்தது.

அதில் அவன் நாடு நலமாகவும் அவன் மக்கள் மகிழ்வாகவும் இருந்தனர் மற்ற உலகம் அழுதாலும் தன்உலகை நன்றாக வைத்து கொண்டான்
தன் சக்தி இன்னும் மிஞ்சி இரேழு உலகையும் ஆள மிகபெரும் யாகங்களை செய்ய ஆரம்பித்தான்.

அந்த மாபெரும் யாகம் முடிந்தால் அவன் சக்திபெறுவதை தடுக்க முடியாது என உணர்ந்த தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர்.

தர்மத்தை காக்க அவதாரம் எடுத்தார் விஷ்ணு, குள்ள வாமணனாக உருவெடுத்தார்.
ஒரு அந்தண வடிவில் குடையும் கையில் கமண்டலமும் கொண்ட அந்தணராக 3 அடி உருவில் வந்து நின்றார்,

யாகத்தின் முழு பலன் என்பது அவன் தானம் கொடுத்து முடிவதில்தான் கிடைக்கும்

ஆம் யாகம் செய்வது மட்டும் பலனளிக்காது. யாகம் முடிந்ததும் பல அந்தணர்களுக்கும் இன்னும் பலருக்கும் தானம் செய்யவேண்டும்.
அந்த தானத்தில் அவர்கள் அவனை வாழ்த்த வேண்டும்,அந்த வாழ்த்தே யாகத்தை முழுமை அடைய செய்யும்.

அந்தணர்களின் வாழ்த்தே வெற்றிகரமான பலனை கொடுக்கும்.
அந்தணருக்கு தானம் கொடுக்காமல் யாகம் முழுமை அடையாது.

தானத்துக்கும் தர்மத்துக்கும் வித்தியாசம் உண்டு.
தானம் என்பது பலனை எதிர்பார்த்து செய்வது, தர்மம் என்பது பலன் கருதாதமல் செய்வது.

கன்னிகாதானம் என்பார்கள் அல்லவா, கன்னியினை தானம் செய்தால் தன் சந்ததி வளரும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் அப்படி சொல்லபட்டது

அப்படி மகாபலி தானம் செய்யும்பொழுது வாமணனும் கடைசி வரிசையில் வந்து நின்றார்.
அவர் வரும்பொழுது மன்னனிடம் தானம் செய்ய ஏதுமில்லை, ஆனால் யாக தத்துவபடி கடைசி ஆளுக்கும் தானம் செய்தாக வேண்டும்.

குள்ள வாமணன் மெல்ல வணங்கி கையேந்தி நின்றான், மகாபலிக்கு சிக்கலான நிலை அந்தணன் கையேந்திவிட்டான் ஏதும் கொடுத்தாக வேண்டும் ஆனால் எல்லாம் முடிந்துவிட்டது.
வாமணன் மெல்ல சொன்னான் "மன்னா நானோ குள்ளன், என் கால்களோ சிறியவை நானும் எல்லோரையும் போலத்தான் வந்தேன் ஆனால் 6 அடி மனிதரோடு என்னால் போட்டி போட்டு ஓட முடியவில்லை, நான் என்ன செய்வேன்?" என கலங்கினான்.

கலங்கிய வாமணனை கண்ட மகாபலி என்ன கேட்டாலும் தருவதாக வாக்களிக்க,
மன்னா என் காலுக்கு 3 அடி நிலம் தா, நான் அதில் இருந்து தியானம் செய்வேன்" என மருகி நின்றான் அந்தணன்.

தள்ளி இருந்த சுக்கிராச்சாரிக்கு சந்தேகம் உண்டாயிற்று, இந்த வாமணன் தவம் இருக்க போகின்றானா, அதுவும் இந்த நாட்டிலா? என குழம்பியபடியே அருகில் வந்தார்,
வாமணின் கண்கள் காட்டிய தீர்க்கமும், புன்னகையும் ,தந்திரம் காடியமுகமும் அவன் சாதாரணமானவன் இல்லை என்பதை சுக்கிராச்சாரிக்கு சொன்னது,

மகாபலியினை எச்சரித்தார் சுக்கிராச்சாரி
ஆனால் தானம் கொடுக்கும் ஆசையில் , தன் யாகம் வெல்லும் ஆசையில் இருந்த மகாபலி அவரை மீறினான்
ஆம், குருவினை மீறினால் நீ அழிவாய் என முனிவன் சாபமிட்டது அந்த இடத்தில் வேலை காட்ட ஆரம்பித்தது, கமண்டலத்தை எடுத்து 3 அடி நிலம் தாரைவார்க்க முனைந்தான் மகாபலி,

ஆனால் அப்பொழுதும் வண்டாக மாறி கமண்டல துளையினை அடைத்து தடுத்தார் சுக்கிராச்சாரி,
ஒரு குச்சி வைத்து வண்டை தள்ளி நீரை வார்த்து 3 அடி உமக்கு சொந்தம் என வாக்களித்தான் மகாபலி

வாக்களித்து முடிக்கவும் அந்த 3 அடி குள்ள வாமணன் மூவுலகுக்கும் விஸ்வரூபமாய் நிற்க

ஒரு காலால் விண்ணையும் இன்னொரு காலால் பூமியினை அளந்தார்
இன்னொரு கால் வைக்க எங்கே இடம் என மகாபலியிடம் கேட்டார்
மகாபலிக்கு எல்லாம் புரிந்து போயிற்று, பிரகலாதனுக்காக நரசிம்மமாக வந்த பகவான் இப்பொழுது வாமணனாக வந்து விஸ்வரூபம் காட்டி தன் முன் தன்னை பலி கேட்கின்றார் என்பது புரிந்தது.

பகவானே ஒரு காலை என் தலையில் வையுங்கள் என இடம் கொடுத்தான் பலி, அவனை பாதாளத்தில் அழுத்தும் முன்
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என கேட்டார் பகவான்,

இந்நாடும் மக்களும் வளமாக வாழவேண்டும், ஆவணிமாதம் ஓண நட்சத்திரத்தின்பொழுது நான் இங்கு வந்து அவர்கள் ஆனந்தமாக வாழ்வதை காணவேண்டும் என கேட்டபடி பகவானின் பாதத்தை தாங்கினான் மகாபலி.

அப்படியே ஆகட்டும் என சொல்லி
அவன் தலைமேல் கால்வைத்து அழுத்தினார் விஷ்ணு, அவன் பாதாளத்தில் இறங்கினான்.

பகவான் வாக்களித்தபடி வருடத்தின் ஆவணிமாதம் திருவோணம் அன்று அவன் வருவான் , தன் மக்களை பார்க்க வருவான். அதைத்தான் திருவோண பண்டிகை என கேரள மக்கள் கொண்டாடுகின்றார்கள்
மகாபலியின் ஆணவத்தை பகவான் அடக்கிய இடத்தில் வாமணனுக்கு பரசுராமர் ஒரு கோவில் எழுப்பினார்

இன்றும் அந்த கோவில் உண்டு திருகாட்கரை காட்கரையப்பன் எனும் பெயரில் கேரளாவில் உண்டு.

108 வைணவ தலங்களில் அது 68ம் தலமாக போற்றபடுகின்றது அங்கு மகாபலி தீர்த்தமெடுத்த கபில தீர்த்ட்தம் இன்றும் உண்டு
திருவோணம் ஒரு காலத்தில் இந்தியா முழுக்க கொண்டாடும் பண்டிகையாக இருந்தது பின் தென்னகத்துக்கு சுருங்கிற்று அதுவும் சமண புத்த காலங்களில் இங்கு அது வழற்றற்று போயிற்று
பரசுராமனின் காவலோ என்னமோ புத்தம் சமணம் ஆப்கானியர் பாதிப்பில்லா கேரளாவுக்கு மட்டும் அந்த திருவோண பாரம்பரியம் தொடர்ந்தது
திருவோணத்தன்று கேரள மக்களை மட்டும் மகாபலி பார்க்க வருவான் என்பதல்ல விஷயம்,

அவன் ஆண்ட இந்த மொத்த மண்ணையும் காணவருவான்,அப்படித்தான் அக்கால கொண்டாட்டம் இருந்தது
ஆனால் இந்து துவேஷ மதங்களின் ஆட்சியில் அக்கொண்டாட்டம் களையபட்டது.
கேரளா பெரும்பாலும் அடுத்த இனத்தின் ஆட்சியில் சிக்கவில்லை என்பதும், வாமணன் விஸ்வரூபமெடுத்த அந்த இடம் இன்று திருகாட்கரை ஆலயமாக கொச்சி அருகே நிற்பதும், அங்கு வாமண சிலை நிற்பதும் அந்த பண்டிகை கேரளாவில் தொடர்ந்துவர ஒரு காரணம்

மற்றபடி எல்லா இந்து மக்களும் கொண்டாட வேண்டிய பண்டிகை ஓணம்
மகாபலியின் வாழ்வும் வீழ்ச்சியும் சொல்வது என்ன?

சிவனுக்கு செய்யும் தொண்டு வீணாகாது, இந்த ஜென்மத்தில் இல்லையென்றாலும் அடுத்த பிறவியில் அது மாபெரும் கிரீடமாய் சிவனால் கொடுக்கபடும்.

ஒருவன் எவ்வளவு நல்லவனாயிருந்தாலும் சேருமிடம் மிக சரியாக இருக்க வேண்டும்,

#நோக்கம்சிவமயம்
மகாபலி சேர கூடாதவர்களை சேர்த்து அதர்மம் அவனால் வளர்ந்தது அதற்கு துணை சென்றான், ஒரு காலமும் அதர்மக்காரர் பக்கம் இருக்கவே கூடாது இருந்தால் அழிவு நிச்சயம்.

எக்காலமும் உலகில் முழு பலமானவன் என யாருமில்லை, ஒவ்வொரு பலசாலிக்கும் ஒரு பலவீனம் இருக்கும், தர்மம் அதில் தன்னை மீட்டெடுக்கும்.
ஆணவம் ஆசையினை கொடுக்கும் அந்த ஆசை எல்லை மீறி சென்று கொண்டே இருக்கும், பகவானின் காலடியினை சரணடைந்து அதை தலையால் ஏற்றாலே அகங்காரம் ஒழிந்து, ஞானம் பிறக்கும்.

மகாபலியின் வாழ்வு கர்ணனின் வாழ்வினை சார்ந்தது, இருவருமே நல்லவர்கள், கொடையாளிகள், ஆனால் சேரகூடா இடம் சேர்ந்து அழிந்தார்கள்
இருவருமே தானத்துக்கு வாக்கு கொடுத்து தானத்தால் அழிந்தார்கள்.

தானமும் தர்மமும் அவர்களின் பாவகர்மாவினை குறைத்து குறைத்து அவர்கள் நல்வழியில் வாழ்வினை முடிக்க வழிகாட்டிற்று,

இதனால்தான் யாருக்கும் கிடைக்கா விஸ்வரூப தரிசனத்தை பகவான் இவர்களுக்கு அருளினார்.
வாமண அவதாரம் என்பதும் மகாபலி வதம் என்பதும் என்றோ நடந்துவிட்ட ஒன்றல்ல, ஓணம் பண்டிகையோடு மட்டும் நினைவுக்கு வரும் ஒன்றல்ல‌,

ஒவ்வொருவன் மனமும் அனுதினம் நன்மைக்கும் தீமைக்கும் இடையே போராட்டத்தை ஒவ்வொரு நொடியும் நிகழ்த்துகின்றது அதில் பல நேரம் அகங்காரம்,ஆணவம்,ஆசை போன்றவையே ஆள்கின்றன‌
அதில் மனிதன் மிருகமாகின்றான், அசுரகுணம் கொண்டு மற்ற எல்லோரையும் வதைக்கின்றான்,

இந்த சுக்கிராச்சாரி என்பது மனதின் மாயை, இல்லாத ஒன்றை இருப்பதாக கருதி மாயை செய்யும் காட்சி அது. அந்த பேராசை மாயையே மனதை தூண்டி மனதின் தீய பக்கத்தை தூண்டி
மண், பொன், பெண், பணம், புகழ் என அவனுக்கு வழிகாட்டி அவனை வீழ்த்துகின்றது,

ஆனால் எல்லா மனிதனுக்குள்ளும் மனசாட்சி உண்டு அல்லது ஏதோ ஒரு நல்ல குணம் சிறிதளவு தர்மம் உறங்கி கொண்டிருக்கும்
அவன் அதில் மாயையினை மீறி, அதாவது சுக்காராச்சாரி வண்டாக மாறி தடுத்தும் அதை தாண்டி வாமணனை நெருங்கிய
மகாபலி போல பகவானை சரண்டைந்தால் போதும் அந்த மிக சிறிய தர்ம குணம், நல்ல குணம் விஸ்வரூபமாய் நம் மனதை ஆக்கிரமிக்கும் அதில் அந்த ஆசை, கோபம், காமம், மயக்கம் போன்ற மாயைகள் விலகி மனம் கோவிலாகும், ஆத்மா புனிதமாகும்.

மாயையினை வென்ற மனம் கடவுளாகும்,
அந்த மனிதனை ஒவ்வொருவரும் கோலமிட்டு வரவேற்பர், பொன்னூஞ்சலில் ஆட்டுவர்,
ஆம், மாயையினை வென்றவனை, இறைவனின் பாதம் சரண்டைந்தவனை, அகந்தையினை அழித்தவனை உலகம் கொண்டாடும்.

இந்த தத்துவத்தைத்தான் மகாபலியின் ஓணம் போதிக்கின்றது.

அகந்தை ஒழிப்பே ஞானத்தின் தொடக்கம், தெளிவின் முதல் படி,
ஆத்மாவின் தெளிவு என்பதை சொல்லும் காட்சிகள் இவை,

மலையாளி மட்டுமல்ல இத்தேசத்தின் தெய்வீக ஞானமரபினை, இந்த மண் சொல்லிய மிகபெரிய தத்துவத்தை, அராஜகம் அத்துமீறினால் தெய்வம் இறங்கிவந்து அதை சரிசெய்யும் எனும் மாபெரும் நம்பிக்கையினை கொடுக்கும் இந்த விழாவினை ஒவ்வொரு இந்தியனும் கொண்டாடலாம்.
அதனை கொண்டாடும் எல்லோருக்கும் இனிய ஓண பண்டிகை வாழ்த்துக்கள்..!

நன்றி - ஐயா திருமுருகன் 🙏🙏

#SSRThreads

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SSR 🚩

SSR 🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SSR_Sivaraj

7 Sep
எண்ணெய் குளியல்:-(திரேட்)

4,5 மாதமாக முதுகுவலி கார்,பைக் ஓட்டுவதால் தான் என்று நினைத்து இரண்டையும் ஓட்டுவதை குறைத்துக்கொண்டு வருகிறேன்

இன்று இதை படிக்க நேர்ந்தது இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் யாராவது ஒருவர் படித்து பயனடைந்தால் இந்த திரேட்க்கு கிடைத்த வெற்றி
#SSRThreads
ஒரு முறை காஞ்சி மகா பெரியவா தரிசனத்திற்கு முதுகில் தீவிர வலியுடன் ஒரு பக்தர் வந்தார்.

உள்ளே வரும் போதே இப்படியும் அப்படியும் நெளிந்து கொண்டே வந்தார்.

மிகவும் கஷ்டப்பட்டு பெரியவாளுக்கு ஒரு நமஸ்காரம் செய்து விட்டுச் சொன்னார்.

பெரியவா.... முதுகு வலி..
அதை விட முதுகோட நடுத்தண்டுல ரொம்ப நாளா பெரும் வலி.

கொஞ்சம் கூட அசைய முடியலை.
ஏன் இருக்கோம்னு பல நேரம் தோண்றது.

என்றவரின் கண்களில் நீர்த்துளிகள் 😢😢

பெரியவா அவரைத் தீர்க்கமாக பார்த்தார். பதில் வரவில்லை,முதுகுவலிக்காரரே மீண்டும் தொடர்கிறார்,
Read 10 tweets
5 Sep
வாழைத்தண்டு:- (திரேட்)

வாழைத்தண்டின் முக்கியமான பயன்களை பற்றி இங்கு காண்போம்.

குறைவான விலையில், அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த காய்கறிகளுள் வாழைத்தண்டும் ஒன்று. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், சிறுநீர்ப்பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.

#மூலிகைஅறிவோம் Image
வாழைத்தண்டானது உடலின் தங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் தினசரி வாழைத்தண்டு ஜூஸ் பருகி வந்தால் சிறுநீரக கல் கரைந்து காணாமல் போகும்.

சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. Image
வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், இரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். Image
Read 10 tweets
19 Aug
அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டல் படியே நடக்கிறது. ஏற்கனவே இருந்த ஒருவரை நீக்கி அவ்விடத்தில் யாரையும் பணியமர்த்தவில்லை. காலிப் பணியிடங்களில் புதியவர்களை நியமனம் செய்கிறோம்.

60 வயதில் ஓய்வு பெறவேண்டும் என்பது நியதி.
69 வயதிலும் பணியில் இருப்பவர்களையே மாற்றுகிறோம்.

-அறநிலையத்துறை அமைச்சர் விளக்கம்.

வீட்டுக்கு அனுப்பப்பட்ட அர்ச்சகர்கள் 58 வயதை தாண்டியவர்கள் அப்படியென்றால் ?

அர்ச்சகர்களுக்கு சட்டப்படி ஓய்வு வயதை கருத்தில் கொண்டே அனுப்பப்பட்டார்கள் அப்படித்தானே ?
சரி இருக்கட்டும். அப்படி என்றால் அவர்களுக்கு லேபர் சட்டப்படி குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்பட்டதா?

ஞாயிற்றுக்கிழமையன்று வேலை பார்த்துள்ளார்கள். அதற்கு OT வழங்கப்பட்டதா?

குறைந்த பட்சம் 21 நாட்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தால் ஒப்பந்த தொழிலாளர்களாக இருந்தாலும் PF ESI
Read 7 tweets
17 Aug
சிறுகதை:-

ஒரு மரத்தடி பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான்.

எதிரில் ஒரு தட்டு அதில் சில நாணயங்கள், அந்தப் பக்கம் வருவோர் போவோரெல்லாம் அவனுக்கு பொருள், உணவு ஆகியவற்றை கொடுப்பார்கள்.

அவனுக்கு பக்கத்தில் ஒரு பிச்சைக்காரன் அமர்ந்திருப்பான் இருவரும் நண்பர்கள்.

#SSRThreads

Cont>>
அடுத்தவர்களை கவர்ந்திழுக்க பார்வையற்றவன் இனிய குரலில் பாடுவான்.

ஒரு நாள் அவன் பாடிக்கொண்டிருந்தான் அவ்வழியே அந்த நாட்டு அரசன் சென்று கொண்டிருந்தான்.

பாட்டு அரசனை கவர்ந்தது.

நீ அருமையாக பாடுகிறாய். உனக்கு ஏதாவது பரிசளிக்க விரும்புகிறேன் என்ன வேண்டும் கேள் என்றான் அரசன்.
மகிழ்ந்து போனான் பார்வையற்றவன்.

அரசே, நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆசை.

அரசராகிய நீங்கள் சாப்பிடும் மதிய உணவை ஒரு நாளாவது நான் சாப்பிட வேண்டும்.

இந்த ஆசையை நிறைவேற்றுவீர்களா? என்று கேட்டான்.

இதென்ன பிரமாதம் நாளையே உன்னுடைய ஆசையை பூர்த்தி செய்கிறேன் மதியம் உணவுடன் சந்திக்கிறேன்,
Read 18 tweets
4 Aug
இராஜேந்திர சோழன் :- (Thread)

இராஜேந்திர சோழன் சாதனைகளுள் மிகவும் குறிப்பிடத்தக்கது அவரது இலங்கை வெற்றி,

ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சோழர்களின் தேடுதலை இராஜேந்திரனே நிறைவு செய்தார் அதிக ஆண்டுகள் இலங்கையை ஆண்ட ஒரே தமிழ் மன்னன் இராஜராஜனே,

#ஆடித்திருவாதிரை
#இராஜேந்திரசோழன்
இராஜேந்திர சோழன் இல்லையென்றால் அது சாத்தியமேயில்லை,

தமிழ்நாட்டின் வரலாற்றில் பொற்காலத்தைப் படைத்தவர்கள்
இராஜராஜ சோழனும் அவன் மகன்
இராஜேந்திர சோழனும் ஆவார்கள்.

இவர்கள் ஏறத்தாழ இலங்கையை முற்றிலுமாக வென்று, சோழராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாகவே ஆக்கினார்கள்.
பராந்தகனால் முடியவில்லை..
சுந்தரச் சோழனால் முடியவில்லை..
இராஜராஜனாலும் முடியவில்லை..
இராஜேந்திரன் தான் முடித்து வைத்தார்..

கி.பி.910-ம் ஆண்டு,

முதலாம் பராந்தகச்சோழனுக்கும், இராசசிம்ம பாண்டியனுக்கும் வெள்ளூர் என்னும் இடத்தில் கடும்போர் நடைபெற்றது. போரில் தோல்வியுற்ற பாண்டியன்
Read 23 tweets
3 Aug
இராஜேந்திர சோழன் :- (Thread)

சோழ சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய அரசர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் இராஜேந்திர சோழர்.
.
ஆட்சி செய்த 60 ஆண்டுகளில் போரில் தோல்வியே காணாமல் உலகின் கால் பகுதிகளை தன் காலடியில் வைத்திருந்த மாமன்னன் இராஜேந்திர சோழன்,

#ஆடித்திருவாதிரை
#இராஜேந்திரசோழன்
இந்தியாவின் முதல் பேரரசராக இராஜேந்திர சோழர் திகழ்ந்துள்ளார்.

தோல்வி என்றால் என்ன?

என்ற கேள்வி கேட்கும்படி பல போர்களில் வெற்றிகள் வாரிக்குவித்தவர் இராஜேந்திர சோழன்.

இருபது ஆண்டுகள் கடற்போர் புரிந்த மாபெரும் வீர அரசர் இராஜேந்திரா சோழர்.
அறுபது ஆயிரம் யானை படை, ஒரு லட்சம் பேர் கொண்ட காலாற்படையை வங்கக்கடல் கடந்து சென்று மறு கரையில் நிறுத்திய தருணமே அஞ்சி நடுங்கி தேசங்களை ஒப்படைத்தவர்களும் இருந்தனர்.

தனது போர் வீரத்தால் அடிப்பணிய வைத்தும் பல தேசங்களை வெற்றி வாகை சூடி சாதித்தார்.
Read 24 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(