இராஜேந்திர சோழன் :- (Thread)

இராஜேந்திர சோழன் சாதனைகளுள் மிகவும் குறிப்பிடத்தக்கது அவரது இலங்கை வெற்றி,

ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சோழர்களின் தேடுதலை இராஜேந்திரனே நிறைவு செய்தார் அதிக ஆண்டுகள் இலங்கையை ஆண்ட ஒரே தமிழ் மன்னன் இராஜராஜனே,

#ஆடித்திருவாதிரை
#இராஜேந்திரசோழன்
இராஜேந்திர சோழன் இல்லையென்றால் அது சாத்தியமேயில்லை,

தமிழ்நாட்டின் வரலாற்றில் பொற்காலத்தைப் படைத்தவர்கள்
இராஜராஜ சோழனும் அவன் மகன்
இராஜேந்திர சோழனும் ஆவார்கள்.

இவர்கள் ஏறத்தாழ இலங்கையை முற்றிலுமாக வென்று, சோழராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாகவே ஆக்கினார்கள்.
பராந்தகனால் முடியவில்லை..
சுந்தரச் சோழனால் முடியவில்லை..
இராஜராஜனாலும் முடியவில்லை..
இராஜேந்திரன் தான் முடித்து வைத்தார்..

கி.பி.910-ம் ஆண்டு,

முதலாம் பராந்தகச்சோழனுக்கும், இராசசிம்ம பாண்டியனுக்கும் வெள்ளூர் என்னும் இடத்தில் கடும்போர் நடைபெற்றது. போரில் தோல்வியுற்ற பாண்டியன்
இலங்கைக்கு தப்பிச் செல்கிறார், பாண்டியர்குல அடையாளமான
மணிமுடியையும், இந்திர ஹாரத்தையும் ஈழ மன்னனிடம் கொடுத்து மறைத்து வைக்கிறார்..

இதை மீட்பதற்கு சோழர்கள் கடும் முயற்சி மேற்கொண்டும் நிறைவேறவில்லை.
பராந்தகன் காலத்திலும் இலங்கையின் மீது சோழர்கள் படையெடுத்தனர் வெற்றிபெற இயலவில்லை.
சுந்தரச்சோழன் காலத்தில் நடந்த ஈழப்படையெடுப்பும் தோல்வியில் முடிந்தது.

இராஜராஜன் காலத்தில் நடந்த ஈழ படையெடுப்பு வெற்றிப் பெற்றாலும்,

பாண்டியனது மணிமுடியையும் ஆரத்தையும் மீட்க முடியவில்லை,
முப்பாட்டானாலும் முடியவில்லை, பாட்டனுக்கும் தோல்விதான்,
தந்தையாலும் முடியவில்லை,
கி.பி.982-ம் ஆண்டு,

ஐந்தாம் மகிந்தன் என்ற சிங்கள அரசன் இலங்கையை ஆண்டு வந்தான் அவன் சோழர்களுக்கு எதிரிகளான
பாண்டியனுக்கும், சேரனுக்கும்
உதவி செய்து வந்தான்.

எனவே, இலங்கை மீது படையெடுக்க
சோழமன்னன் இராஜராஜசோழன்
முடிவு செய்தார்.
தன் மகன் இராஜேந்திர சோழன் தலைமையில் ஒருபெரிய கப்பல்
படையை அனுப்பி வைத்தார்.

தமிழ்ப்போர் வீரர்களுடன் கப்பல்கள்
இலங்கையை சென்றடைந்தன.

போர்க் கப்பல்களைப் பார்த்து சிங்களர்கள் மிரண்டனர்.

சோழர் படையை எதிர்க்க துணிவின்றி, மன்னன் மகிந்தன் இலங்கையின் இன்னொரு பகுதியான ரோகண நாட்டிற்கு
தப்பி ஓடி விட்டான் சோழர் படை இலங்கையின் வடபகுதியை கைப்பற்றிக்
கொண்டது.

அந்தப்பகுதிக்கு `மும்முடிச் சோழ
மண்டலம்' என்ற பெயர் சூட்டி
தலைநகரமான அனுராதபுரம் அழிக்கப்பட்டது அதற்கு பதிலாக
பொலனறுவா நகரம் புதிய தலைநகரம் ஆக்கப்பட்டது.

அதற்கு `சனநாதமங்கலம்' என்ற
புதிய பெயர் சூட்டப்பட்டது.
சிங்கள மன்னனின் கருவூலத்தில்
இருந்த நகைகள், வைர மாலைகள்,
அரச அணிகலன்கள் முதலியவை கைப்பற்றப்பட்டன.

உடைக்க முடியாத வாள் ஒன்று சோழர் வசமாகியது.

இரண்டாவது படையெடுப்பு ரோகண
நாட்டிற்கு தப்பி ஓடிய மகிந்தன், சும்மா இருக்கவில்லை சோழருக்கு எதிராக
பெரும்படை ஒன்றை திரட்டினான்.
இலங்கையில் சோழர்கள் கைப்பற்றிய பகுதியை மீட்க போர் தொடுத்தான்.

இதுபற்றி சோழ மன்னன்
இராஜேந்திரனுக்குத் தெரிந்தது.

அவர் கி.பி. 1017-ம் ஆண்டில் மீண்டும்
இலங்கை மீது படையெடுத்தார் இரு தரப்புக்கும் இடையே பெரும் போர் நடந்தது.

சோழ படைகளின் தாக்குதலை,
மகிந்தன் படைகளால் சமாளிக்க முடியவில்லை.

போரில் சோழர் படை வென்றது சிங்களர்
படை தோற்றது.

இராஜேந்திரனிடம் தோல்வியுற்ற இலங்கை வேந்தன் மகிந்தன் தப்பியோடினார்.

தப்பியோடிய மகிந்தனை இராஜேந்திரனின் தளபதி ஜயங்கொண்ட மூவேந்தவேளான் என்பவர் தேடிப்பிடித்து கைது செய்து தமிழகம் கொண்டு வந்தார்.
இந்நிகழ்வை இலங்கையில் உள்ள கல்வெட்டு சாசனம் விவரிக்கிறது..
( இலங்கை தமிழ் சாசனங்கள்..பக் 73)

இலங்கையை வெற்றி கொண்டு, பாண்டியனது மணிமுடியையும் இந்திர ஆரத்தையும் மீட்டு தமிழகம் கொண்டு வந்தார்.

இந்நிகழ்வை இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சமும் உறுதி செய்கிறது.
"பொருகடல் ஈழத்து அரசர் தம்முடியும்
ஆங்கவர் தேவியர் ஓங்கு எழில் முடியும்
முன் அவர் பக்கல் தென்னவன் வைத்த
சுந்தரமுடியும் இந்திரன் ஆரமும்
தெண்டிரை ஈழமண்டலம் முழுவதும்."

ஈழமண்டலம் முழுவதையும் கைப்பற்றி... இலங்கை வேந்தனின் முடியையும் கைப்பற்றிய இராஜேந்திரன்..
அடுத்த வரிதான் மிக முக்கியமானது..

"தென்னவன் வைத்த சுந்தரமுடியும் இந்திர ஆரமும்."

பாண்டியனது மணிமுடியும், பாண்டியனின் ஆபரணமான இந்திர ஆரத்தையும் இலங்கையில் இருந்து மீட்டான் இராஜேந்திரன்..

இது தான் பாடலின் விளக்கம்,

#ஆடித்திருவாதிரை
#இராஜேந்திரசோழன்
இராஜேந்திரசோழன் தமிழ்நாட்டுக்கு திரும்பும்போது, மகிந்தனும் கொண்டு செல்லப்பட்டான்.

கும்பகோணம் அருகே உள்ள கோனேரிராஜபுரம் என்னும் திருநல்லம் என்னும் ஊருக்கு இராஜேந்திரன் வந்திருந்தபோது இராஜேந்தினை இலங்கை வேந்தன் வணங்கியதாக திருநல்லம் கல்வெட்டு பதிவு செய்கிறது..
" இலங்கேஸ்வரன் வந்தடி வணங்க
இனிதங்கியிருந்த கொப்பரகேசரிவன்மரான ஸ்ரீராஜேந்திர
சோழதேவர் "
என்பது கல்வெட்டு செய்தி.

கரந்தை செப்பேடும் இந்நிகழ்வை பதிவு செய்கிறது
" சோழர் படையினால் தோற்கடிக்கப்பட்ட இலங்கை அரசன் இராஜேந்திரனுடைய திருவடியை வணங்கினான்."
( கரந்தைச் செப்பேடு சுலோகம் - 59)
இலங்கை முழுவதும் சோழர் வசமாயிற்று,
சோழ இலங்கேஸ்வரன் என்ற பெயருடன் இராஜேந்திரனின் மகன்களில் ஒருவர் இலங்கையின் ஆட்சி பொறுப்பை ஏற்றார்.

இலங்கையின் பொலனருவா நகரம் அன்று சோழர்காலத்தில் ஜனநாதமங்கலம் என்றழைக்கப்பட்டது.

ஜனநாதன் என்பது இராஜராஜனின் விருதுப் பெயர்..
பொலனருவாவில் இராஜேந்திரச் சோழனால் இரண்டு சிவாலயங்கள் எடுக்கப்பட்டன.

இவற்றில் ஒன்று தன் தாயின் பெயரால் எடுக்கப்பட்ட வானவன்மாதேவி ஈஸ்வரம்.

இக்கோவிலில் உள்ள கல்வெட்டில் இராஜேந்திரனின் மெய்கீர்த்தி வரிகளும் மற்றொரு கல்வெட்டில்
"வானவன் மாதேவி ஈஸ்வரமுடையார்" பெயரும் காணப்படுகிறது.
இக்கோவிலுக்கு அழகிய மணவாளர் என்னும் கல்யாணசுந்தரர் படிமத்தை எடுத்த செய்தியும் உள்ளது.

இக்கோவிலுக்கு அருகிலேயே இராஜேந்திரனால் எடுக்கப்பட்ட மற்றொரு சிவாலயமும் உள்ளது.

ஆலயத்தின் மேல்நிலை விமானமும் முன்மண்டப கூரைகளும் பெரிதும் சிதைந்து விட்டன கருவறை லிங்கமும் உடைக்கப்பட்டுள்ளது.
இராஜேந்திரன் தன் தாயின் பெயரால் எடுக்கப்பட்ட வானவன் மாதேவிச்சரம் என்னும் அழகிய கற்றளி இன்றும் முழுமையாக சோழர்காலக் கட்டமைப்புடன் இருக்கிறது.

இராஜேந்திர சோழன் வெற்றியை குறிக்கும் கல்வெட்டு ஒன்று,கொழும்பு நகரில் உள்ள
அருங்காட்சியகத்தில் இன்னும் உள்ளது.
மகிந்தனை இராஜேந்திரசோழன்
முறியடித்தது பற்றி, சிங்களர்களின்
வரலாற்று நூலான "சூளவம்ச''த்திலும்
குறிப்பிடப்பட்டுள்ளது.

இராஜேந்திர சோழனால் சிறை பிடிக்கப்பட்ட மகிந்தனுக்கு காசிபன் என்ற மகன் இருந்தான்.

போர் நடந்தபோது அவனுக்கு வயது 12.
அவனை சிங்களர்கள் ரகசியமாக
வளர்த்து வந்தனர்.
சோழ நாட்டு சிறையில் மகிந்தன் இறந்த
பிறகு, காசிபனை தங்கள் மன்னனாக
சிங்களர்கள் அறிவித்தனர்.

சோழர்களை எதிர்க்க அவன் பெரும்
படை திரட்டினான்.

இதை அறிந்த இராஜேந்திர சோழன்,
தன் மகன் இராசாதிராஜன்
தலைமையில் ஒரு படையை அனுப்பினான்.

கி.பி.1041-ல் நடைபெற்ற இந்தப்
போரில் காசிபன் மாண்டான்.
மொத்தத்தில்..,

இராஜேந்திரனுடைய இலங்கை வெற்றி பலவிதங்களிலும் தனித்துவமான ஒன்றாகும்.

புகைப்பட உதவி.
Lankapuri Nks thiruchelvam.

ஓவியம்
Deiva arts,

Reference,
ஐயா மா.மாரிராஜன். அவர்கள் மற்றும்
இலங்கைத் தமிழ் சாசனங்கள்..
பேராசிரியர்.
சி.பத்மநாதன்..

#இராஜேந்திரசோழன்
#SSRThreads

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SSR 🚩

SSR 🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SSR_Sivaraj

3 Aug
இராஜேந்திர சோழன் :- (Thread)

சோழ சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய அரசர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் இராஜேந்திர சோழர்.
.
ஆட்சி செய்த 60 ஆண்டுகளில் போரில் தோல்வியே காணாமல் உலகின் கால் பகுதிகளை தன் காலடியில் வைத்திருந்த மாமன்னன் இராஜேந்திர சோழன்,

#ஆடித்திருவாதிரை
#இராஜேந்திரசோழன்
இந்தியாவின் முதல் பேரரசராக இராஜேந்திர சோழர் திகழ்ந்துள்ளார்.

தோல்வி என்றால் என்ன?

என்ற கேள்வி கேட்கும்படி பல போர்களில் வெற்றிகள் வாரிக்குவித்தவர் இராஜேந்திர சோழன்.

இருபது ஆண்டுகள் கடற்போர் புரிந்த மாபெரும் வீர அரசர் இராஜேந்திரா சோழர்.
அறுபது ஆயிரம் யானை படை, ஒரு லட்சம் பேர் கொண்ட காலாற்படையை வங்கக்கடல் கடந்து சென்று மறு கரையில் நிறுத்திய தருணமே அஞ்சி நடுங்கி தேசங்களை ஒப்படைத்தவர்களும் இருந்தனர்.

தனது போர் வீரத்தால் அடிப்பணிய வைத்தும் பல தேசங்களை வெற்றி வாகை சூடி சாதித்தார்.
Read 24 tweets
29 Jul
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில்:- (Thread)

இது 1000 வருட பாரம்பரியம் கொண்ட சிவதலம்.

தமிழ்நாட்டிலேயே மிகவும் பெரிய அளவிலான லிங்கம் இருப்பது இங்கு தான் இங்குள்ள லிங்கம் 13.5 அடி உயரம். 60 அடி சுற்றளவும் கொண்டது.

#நோக்கம்சிவமயம்
#இராஜேந்திரசோழன்
#SSRThreads

Continue>>
லிங்கம் அமைக்கப்பட்டிருக்கும் இடமான ஆவுடையைச் சுற்றி பலகை கட்டி அதன் மீது நின்று கொண்டு அர்ச்சர்கள் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது கண்கொள்ளாக் காட்சி.

இந்த லிங்கம் ஒரே கல்லால் ஆனது மிகவும் சிறப்பு.

இங்கு உள்ள நந்தியும் மிகவும் பெரிய அளவு கொண்டது.
இது முழுக்க சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டது.

நந்தி லிங்கத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது.

தினமும் சூரிய ஒளி இந்த நந்தி மீது பட்டுச் சிதறி அந்த ஒளிக்கதிர்கள் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீதும் பட்டு பிரதிபலித்து பிரகாசிப்பது மிகவும் அற்புதமான காட்சி.
Read 21 tweets
16 Jul
இராவணனிடம் லட்சுமணன் கேட்ட அறிவுரை :-

இலங்கையை ஆண்ட மாமன்னர் இராவணன் போரின் இறுதியில் ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய் உயிர் பிரியாமல் இருந்தது

அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா இராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன்.

#SSRThreads
1/n
நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.

நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் நீ பெற்று வா என்று கட்டளையிட்டு அனுப்பினார்.

அண்ணன் ராமரின் ஆணையை ஏற்று இராவணன் அருகே சென்ற லக்ஷ்மணனிடம் ராவணன் எதுவும் கூறவில்லை.

2/n
சில நிமிடம் ராவணனின் தலை பக்கம் நின்றுவிட்டு திரும்பிய லக்ஷ்மணன், தன்னிடம் ராவணன் எதுவும் கூறவில்லை என்று தெரிவிக்க.

அதற்கு பதிலளித்த ராமர், ஒருவரிடம் நாம் பாடம் கற்கும்போது, கற்பிப்பவரின் தலை பக்கம் நிற்காமல் கால் பக்கமாக நின்று கற்க வேண்டும் என்று அறிவுரை வழங்க,

3/n
Read 10 tweets
15 Jul
சிறுகதை:-

ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான்.

அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர்.

இதை உணர்ந்த அந்த ஏழை இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே,

#SSRThreads
1/n
வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான்.

நேரம் போய்க்கொண்டே இருந்தது.

இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள்.

2/n
சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.

இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம்.

எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்?
எவ்வளவு இழிசொல்?

3/n
Read 15 tweets
14 Jul
சிற்றரத்தை:-

நமது தேசத்திலிருந்து ஏற்றுமதியாகி, நமது நாட்டுக்கே திரும்பவும் மேலை மருந்துகளின் வழியே வரும் முக்கியமான மூலிகைகளில் ஒன்றுதான் சித்தரத்தை.

அக்காலத்தில் வீடுகளில் இருக்கும் மூலிகை மருந்துகளில் முக்கிய இடம் சித்தரத்தைக்கு உண்டு.

#மூலிகைஅறிவோம்
Continue>>>>> Image
குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, சிறிதளவு சித்தரத்தையை தூளாக்கி, அரை தேக்கரண்டி தேனில் குழைத்து கொடுக்கவேண்டும். இது எந்த பக்கவிளைவையும் ஏற் படுத்தாது. ஜீரணத்தை தூண்டும்.

கால் டீஸ்பூன் அளவு சித்தரத்தைப் பொடியைத் தேனில் குழைத்து காலை மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டால் Image
நுரையீரலில் ஒட்டிக்கொண்டு அகல மறுக்கும் கோழைச் சளியை, இளக்கிக்கொண்டுவந்து வெளியேற்றி, இருமலைப் போக்கும்

சித்தரத்தை சிறந்த மணமூட்டியாக திகழ்வதால் வாயின் துர்நாற்றம் போக்க மவுத் ஃபிரஷ்னர் ஆகப் பயன்படுகிறது, மூலிகை மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. Image
Read 13 tweets
13 Jul
சங்கியாக எனது முதல் திரேட்:- (Part-1)

தலைப்பு:- கொங்கு நாடு

கொங்கு நாடு தனி யூனியன் பிரதேசமாக வாய்ப்புள்ளதா?
அதற்கான சட்டம் இருக்கிறதா ?
மத்திய அரசு நினைத்தால் இதை நடத்தி காட்ட முடியுமா ?
மாநில அரசு ஒத்துழைக்காமல் இது
நிறைவேறுமா ?

#SSRThreads
Continue>>>>
திருட்டு திமுக ஒன்றிய அரசு என அழைப்பதால் மத்தியஅரசு திமுகவை பயமுறுத்த இப்படி பேசுகிறதா ?

என நிறைய கேள்விகளுக்கு பதிலாகவும் அப்படி கொங்கு நாடு தனியாக பிரிந்தால் எப்படி இருக்கும் என்பதை ஒரு அலசு அலசுவோம் வாருங்கள்,

தமிழகத்தின் மேற்கு மண்டலங்களை ஒருங்கிணைத்து கொங்கு நாடு என
தனி மாநிலமாக உருவாக்க பல ஆண்டுகளாக கோரிக்கை உள்ளது,

கொங்கு நாடு என்பது சங்ககாலம் தொட்டு மருவி வரும் பெயர் .

அது அந்த பகுதியை சேர்ந்த தமிழர்களின் அடையாளம்.

இந்நிலையில் கொங்கு மண்டலம் எனப்படும் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து
Read 27 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(