அடிக்கடி ராஜீவ்காந்தி படுகொலையை தமிழர்கள்தான் செய்தனர் என பேசியும் வருகிறார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே, ராஜீவ்காந்தி படுகொலை தங்கள் மீது போடப்பட்ட அபாண்டமான பழி என கூறிய பின்னரும் கூட சீமானும் அவரது கட்சி நிர்வாகிகளும் ஏன் இப்படி பேச வேண்டும் ?
என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது. மேலும் சீமான் இப்படிப் பேசுவதால் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்கள் விடுதலையாகக் கூடாது என பாஜகவைப் போல நினைக்கிறாரா? என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.
சீமானுக்கு கடும் எதிர்ப்பு இதனால் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் சென்னை, ஈரோடு என போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர். 100 நாள் வேலைதிட்டத்தை கடுமையாக சீமான் விமர்சித்திருந்தார்.
அதை பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை வரவேற்றிருந்தார். இப்படி அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வரும் சீமான் இப்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு தகவலை தெரிவித்திருக்கிறார். சீமானின் இந்த பேச்சுதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
பெரியாரின் மேடைகளில் அரசியல் பயணத்தை தொடங்கிய சீமான், பாஜகவின் குரலாக தமிழகத்தில் பெரியார் சிலைகள் எதற்கு என கேள்வி எழுப்பி அதிர வைத்தார்.
அதன்பின்னர் பாஜகவின் கே.டி.ராகவன், பாலியல் விவகாரத்தில் சிக்கினார். இது தொடர்பான வீடியோவும் வெளியானது. ஆனால் சீமானோ, யாரும் செய்யாததையா கே.டி.ராகவன் செய்துவிட்டார் என ஆதரவு கொடுத்தார். அப்போதும் சீமான் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார்.
பெரியாரிஸ்டுகள் வேலை சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சீமான் பேசியதாவது: சீமானையும் மணியரசனையும் திட்டுவதுதான் திராவிடம் என்பது தெரியாமல் போய்விட்டது. இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. பெரியாரிஸ்டுகளின் வேலையே எங்களை திட்டுவது என்பதாக போய்விட்டது.
தேசிய இனங்களின் ஒருங்கிணைப்பை செய்திருக்க வேண்டியது யார்? இன்று கல்வி, மருத்துவ உரிமை என அனைத்தும் போய்விட்டது. எல்லா பொதுச்சொத்துகளும் தனியார் மயமாக்கிவிட்டன.
அகதிகளாகப் போகிறீர்கள்.. இங்கிருக்கிற முதல்வர்கள் அனைவரும் சந்தித்து தேசிய இனங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிற நிலையை கொண்டு வந்திருக்க முடியாதா? அவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.
நம்மை மொழியில் இருந்து வெளியேற்றி நம்மை வரலாற்றில் இருந்து வெளியேற்றி பன்னெடுங்காலமாக இருந்த வழிபாட்டில் இருந்து வெளியேற்றி உழைப்பில் இருந்து வெளியேற்றி- அதுதான் 100 நாள் வேலை திட்டம், அந்த உழைப்புக்கு வேறுநபர்களை திணித்துவிடுவார்கள்.
ஈழத்தில் அடித்துவிரட்டப்பட்ட போது ஏதிலிகளாக, அகதிகளாக அந்த தமிழர்கள் வருவதற்கு ஒரு தாய்நிலமாக தமிழகம் இருந்தது. ஆனால் இந்த நிலத்தில் நாம் அடித்துவிரட்டப்பட்டால் எங்கு செல்வோம் என்கிற எச்சரிக்கை உணர்வு வேண்டும். நாளை நிச்சயம் இது நடக்கும்
400 பேருக்கு குடியுரிமை உன் இனத்தை முன்னிறுத்து உன் இடத்தை உறுதி செய். இருக்க இடமற்றவன் அனைத்துலகம் பேச அருகதை அற்றவன். சர்வதேசம், ஆல் இந்தியா என பேசிக் கொண்டிருந்தால் கதைக்கு ஆகாது. உன் இடத்தை நீ உறுதி செய். நிற்க நிலமற்றவன் அனாதை. அடிமை. அவன் அகதி.
எப்படிப்பட்ட நாட்டில் நாம் இருக்கிறோம் பாருங்க.. ஆஸ்திரேலியா அரவணைக்கிறது.. ஐரோப்பிய மக்கள் சொந்த தாயக மக்களைப் போல குடியுரிமை வழங்குது. நான் கடிதம் கொடுத்தால் பிரான்ஸ் குடியுரிமை கொடுக்குது...
நான் கடிதம் கொடுத்தால் பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை கொடுக்கிறது. சிறையில் கைது செய்து வைக்கிறார்கள்..
அப்புறம் விசா வேண்டும், குடியுரிமை வேண்டும் என்று சொன்னால் அந்த விண்ணப்பத்தில் என்னுடன் அரசியல் பணி செய்கிறார் என கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் குடியுரிமை கொடுத்துவிடுகிறார்கள். 400 பேருக்கு மேல் இதுவரை குடியுரிமை வாங்கி கொடுத்திருக்கிறோம். அந்த மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால் 35 ஆண்டுகளாக இங்கே ஈழத் தமிழருக்கு குடியுரிமை தர முடியவில்லை. இவ்வாறு சீமான் கூறினார்.
ஆஸ்திரேலியா அரவணைக்கிறது.
lஐரோப்பிய மக்கள் சொந்த தாயக மக்களைப் போல குடியுரிமை வழங்குது. நான் கடிதம் கொடுத்தால் பிரான்ஸ் குடியுரிமை கொடுக்குது... நான் கடிதம் கொடுத்தால் பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை கொடுக்கிறது. சிறையில் கைது செய்து வைக்கிறார்கள்..
உன் இனத்தை முன்னிறுத்து உன் இடத்தை உறுதி செய். இருக்க இடமற்றவன் அனைத்துலகம் பேச அருகதை அற்றவன். சர்வதேசம், ஆல் இந்தியா என பேசிக் கொண்டிருந்தால் கதைக்கு ஆகாது. உன் இடத்தை நீ உறுதி செய். நிற்க நிலமற்றவன் அனாதை. அடிமை. அவன் அகதி. எப்படிப்பட்ட நாட்டில் நாம் இருக்கிறோம் பாருங்க
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்' தொடரில் குறிப்பிடப்பட்டிருந்த அண்ணா, சம்பத் ஆகியோர் நடித்த "சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம்' நாடகத்தில் விடுப்பட்டுப் போன மறக்க முடியாத நகைச்சுவை நிகழ்வை மறைந்த எனது தந்தையார் இரா.சங்கரலிங்கனார் என்னிடம் கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அந்நாடகத்தில் அடுத்த காட்சிக்காகக் காத்திருக்க நேரிட்ட சம்பத், புகைபிடித்துக் கொண்டு இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, திடீரென்று திரை விலகி விளக்குகள் எரிந்தன. காகப்பட்டராக நடித்த அண்ணாவின் கேள்விக்கணைகளுக்குப்
பதிலளிக்கத் தொடங்கிய சம்பத்தின் வாயிலிருந்து சிகரெட்டின் புகையைப் பார்த்த அண்ணா, உடனே சுதாரித்துக் கொண்டு, ""சிவாஜி, கனல் கக்கப் பேசுவாய் என்று நினைத்தேன். ஆனால் நீயோ புகை கக்கப் பேசுகிறாயே'' என்று சொன்னபோது மாநாட்டு அரங்கத்தில் பலத்த சிரிப்பொலி.
இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழகத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய உறுதிமொழி கடிதம்.
இந்தி திணிப்பு விவகாரம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.வே.கி.சம்பத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய கடிதத்தில் என்ன குறிப்பிட்டிருந்தார் தெரியுமா?
இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக மக்களால்1937-ம் ஆண்டு முதல்முறையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது சென்னை மாகாணத்தில் முதல்முறையாக வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது.
ஈரோடு வெங்கடசாமியின் மகன் கிருஷ்ணசாமி. இவரது தம்பி தான் தமிழகத்தின் தந்தை பெரியார். கிருஷ்ணசாமியின் மகன் தான் சம்பத். 1926ல் பிறந்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்து முடித்ததும் சம்பத்தை திராவிடர் கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவர் பதவியில் அமரவைத்தார், அதன்பின் கருஞ்சட்டை படையின் அமைப்பாளராக்கினார்.
குயடிரசு இதழின் பொறுப்பை சம்பத் கவனித்தார். பெரியாரின் வாரிசு அவர் தான் என அனைவரும் நினைத்தனர். அந்தளவுக்கு சம்பத் இயக்கத்தில் வலம் வந்தார்.
கலைஞர் பாவாடை நாடா பற்றி சொன்னதாக அவர் மேல் வதந்தி பரப்பினர். விஜயகாந்தும் அப்படி சொல்ல.. கலைஞர் அவர் மீது அவதூறு வழக்கு போட...
கடைசியில் சட்டசபை குறிப்பில் அப்படி ஏதும் இல்லை எனக் கண்டறிந்த விஜயகாந்த் கடைசியில் மன்னிப்பு கேட்டுள்ளார்
வக்கீல் நோட்டீஸ்
27-2-2008 தேதியிட்ட குமுதம் வார இதழில் நீங் கள் (விஜயகாந்த்) பேட்டி கொடுத்துள்ளீர்கள். அதில் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் தவறானவை, அடிப்படை ஆதாரம் இல் லாதவை.
பேட்டியில் நீங்கள்,
"சட்ட சபையில் திராவிட நாடு பற்றிய ஒரு கேள்வியை எழுப்பி னார் காங்கிரசின் அனந்த நாயகி. இவர் உடனே எழுந்து, நாடாவைக் கழற்றி பாவா டையை தூக்கிப்பார் அங்கே தெரியும் என்றார். சட்டசபை அல்லோகலப்பட்டது. அரசுக் கோப்பின் நாடாவை அவிழ்த்து பார்ப்பதைத்தான்
`கந்தஹார் விமானக் கடத்தல்.. வாஜ்பாய் அரசு செய்தது தவறு' - பரபரப்பைக் கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி புத்தகம்
அமிர்தசரஸில் அரை மணி நேரம் விமானத்தை நிறுத்திவைக்கிறார் பைலட். சந்தேகமடைந்த தீவிரவாதக்குழுத் தலைவன், விமானத்தை எடுக்குமாறு பைலட்டை மிரட்டுகிறான்.
ஆனால், பைலட் மறுக்கிறார். உடனே 25 வயது பயணி ஒருவரைப் பதம் பார்க்கிறது தீவிரவாதக்குழுத் தலைவனின் கத்தி!
1999-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்குக் கடத்தப்பட்ட இந்திய விமானத்தை மீட்பதற்காக மூன்று பயங்கரவாதிகளை விடுவித்தது இந்திய அரசு. இதை `நவீன இந்திய வரலாற்றில் மிக மோசமாக பயங்கரவாதிகளிடம் சரணடைந்த சம்பவம் இது'
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை அடைந்த 26 பேரும், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் கே.டி.தாமஸ், டி.பி.வாத்வா, எஸ்.எஸ்.எம்.டுவாத்ரி ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்' இந்த வழக்கை விசாரித்தது.
11-5-1999 அன்று இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. நளினி, அவளது கணவன் முருகன், விடுதலைப்புலி சாந்தன், என்ஜினீயர் பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ராபர்ட், ஜெயக்குமார்,
ரவிச்சந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள். மீதி 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். நளினிக்கு தூக்கு தண்டனை விதிப்பதில், நீதிபதிகள் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது.