ஸுப்ரமண்ய புஜங்கத்தில் திருச்செந்தூரில் பன்னீர் இலையில வைத்துக் கொடுக்கப்படும் விபூதியின் மஹிமையைப் பற்றி ஆதிசங்கர பகவத்பாதாள் விசேஷமாக சொல்கிறார். ‘மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு’ என்று மாணிக்கவாசகர் பாடுகிறார்.
பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா Image
அணியி னான்தன் தொழும்பரோ டழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே
என்று சொல்கிறார். விபூதி தரித்துக் கொண்டவர்களிடம் எனக்கு பயம் இருப்பதில்லை. மற்றோரை பார்த்தல் பயம் ஏற்படுகிறது என்கிரார். அச்சப்பத்து-என்று பத்துப் Image
பாடல், பகவானிடம் நெருக்கம் ஏற்பட்ட பின் உலக விஷயங்களைப் பார்த்தாலே பயமாக உள்ளது என பத்து பாடல்கள் இயற்றியுள்ளார். அதில் வெண்ணீறு அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே என்று சொல்கிறார். விபூதிக்கு அத்தனை மகிமை. திருநீறு இட்டுக் கொண்டு வந்தால் பஞ்சமா பாதங்களும் போகும், கைலாசம்
சித்திக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. `நீறில்லா நெற்றி பாழ்' என்பது ஓளவை வாக்கு. திருநீற்றின் பெருமை சொல்லவே உருவானது திருஞானசம்பந்தரின் `திருநீற்றுப் பதிகம்'. மந்திரச் சொற்களுக்கு நிகரானது திருநீறு. சைவ சமயத்தவரின் அடையாளமாக மட்டுமல்லாமல், தெய்விக ஆற்றல் தரும் புனிதச் Image
சின்னமாகவே திருநீறு போற்றப் படுகிறது. பிறப்பெடுக்கும் எவரும் முடிவில் பிடி சாம்பலாகத்தான் வேண்டும் என்பதால், எதிலும் அளவுக்கு அதிகமான ஆசை வைக்காமல் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவது திருநீறு. `நீறு' என்றால் சாம்பல்; `திருநீறு' என்றால் மகிமை பொருந்திய நீறு என்று பொருள்.
விபூதி என்றால் ஞானம், ஐஸ்வர்யம் என்றெல்லாம் பொருள் தரும். `பிறப்பு, இறப்பு என்னும் கொடுமையான பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து, ஈசனின் திருவடிகளில் நம்மைக் கொண்டு சேர்க்கும் மாமருந்து திருநீறு’ என்று போற்றுகிறது திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகம். விபூதியை, ஜபம், மந்திரித்தல்,
யந்திரங்கள், மருத்துவம்... எனப் பல்வேறு பணிகளுக்காகப் பயன்படுத்திய விதத்தை அகத்திய மாமுனி `அகத்தியர் பரிபூரணம்' என்ற நூலில் விளக்கியிருக்கிறார். இதைப் படிப்பவர்கள் விபூதியைத் தவிர்க்கவே மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். திருச்சிற்றம்பலம்', `சிவாயநம:' அல்லது 'சிவ சிவ' என்று Image
சொல்லி அணிந்துகொள்ள வேண்டும். காலை, மாலை, மற்றும் இரவு படுக்கப் போகும்போதும், வெளியே கிளம்பும்போதும் திருநீறு தரிக்க வேண்டும். நடந்து கொண்டும், படுத்துக்கொண்டும் விபூதி தரிக்கவே கூடாது. ஸ்வாமி முன்பும், குரு முன்பும், சிவனடியார் முன்பும் முகத்தைத் திருப்பி நின்று விபூதி அணிய
வேண்டும். திருநீற்றைக் கொடுப்பவர் செய்த தவப் பயன் மற்றும் பூஜா பலன்கள் அதை வாங்குவோருக்கும் போய்ச் சேர்ந்துவிடும். எனவே தியானத்தில் சிறந்த உயர் நலன்கள் உள்ளவர்களிடம் மட்டுமே விபூதியைப் பெற வேண்டும் என்கிறார் அகத்தியர். `ரூம் றீம் சிம்ரா' என்று சொல்லி பெரியவர்களிடம் திருநீறு
வாங்கினால் அவர்களின் பரிபூரண ஆசியைப் பெறலாம் என்றும் கூறுகிறார். திருநீறு ஆன்மிக பலத்துக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் உகந்தது என்கிறது நவீன அறிவியல். `மகிமை என்ற பொருளைக்கொண்ட விபூதியின் ஆற்றல், சிவனுக்கு நிகரானது’ என்கிறது திருஞான சம்பந்தரின் தேவாரம். Image
திருநீற்றை அணிந்து நாளும் வளமோடு வாழ்வோம்! ImageImageImageImage
"மந்திரமாவது நீறு" பதிகம் அருளியவர் திருஞானசம்பந்தர். இரண்டாம் திருமுறை, திருநீற்றுப்பதிகம்.
'பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்.. இந்தப் பதிகத்தைப் பாடியவர் மாணிக்கவாசகர். இழையில் உள்ள பிழைக்கு வருந்துகிறேன். திருத்தி வாசிக்கவும்.🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

20 Oct
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒருவருக்கு தேதி குறித்து விட்டால், அந்த தேதியில் உயிரை எமதர்மன் எடுத்து விடுவார் என்று சொல்லுவார்கள். அவ்வாறு ஒரு சிற்பி கந்தனுக்கு தேதி குறித்து விட்டார் எமதர்மன். அந்த தேதி பற்றி சிற்பி கந்தனுக்கும் எப்படியோ தெரிய வந்து விட்டது. கந்தனுக்கு இறக்க விருப்பம் Image
இல்லை. எமன் ஒருமுறை தான் பாசக் கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும். அதனைப் பயன் படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார் கந்தன். தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப் போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள்
செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்க வைத்து விட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டு படுத்து விட்டார். எமன் வந்தார், பார்த்தார். திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டு தான் சிலைகள் என்பதை யூகித்து விட்டார். ஆனால் எவை சிலைகள் எது சிற்பி
Read 7 tweets
20 Oct
காஞ்சி மடத்தில் ஒரு விசேஷ நாள் என்பதால் கூட்டம் நிறைய இருந்தது. சலசலத்த நபர்கள் பெரியவாளை தரிசனம் பண்ணவேண்டிய முறை வந்தது. அந்த நபர்கள்ல முதல்ல நின்னவரைப் பார்த்த ஆசார்யா,
"நோக்கு சிவபுராணம் தெரியுமோ?" என்று கேட்டார்.
"ஏதோ படிச்சிருக்கேன் பெரியவா!" கைகட்டி வாய் பொத்தி பவ்யமாக Image
சொன்னார்.
"அதுல இருந்து உன்னண்டை ஒரு கேள்வி கேட்கலாமோ?"
"பெரியவா மன்னிக்கணும் எனக்கு புராணத்துல பாண்டித்தியமெல்லாம் இல்லை. ஏதோ படிச்சிருக்கேன் அதனால்... இழுத்தார் அவர்.
"ஒரே ஒரு சின்னக்கேள்வி பரமேஸ்வரனோட ஸ்வரூபம் எப்படி இருக்கும்னு தெரியுமோ? அதைச் சொன்னா போதும்."
"மகேஸ்வரனோட
வடிவங்கள்ல மூணு பிரிவு இருக்குன்னு புராணம் சொல்றது. ரூபம், அரூபம், ரூபா ரூபம்னு" தயங்கித் தயங்கி சொன்னவரை தடுத்தார் பெரியவா.
"அவ்வளவு டீப்பா எல்லாம் போக வேண்டாம் அவரோட ரூபத்துல என்னவெல்லாம் இருக்கும்? இதெல்லாம் நீ பார்த்த சித்திரங்களை நினைவுபடுத்திண்டு சொன்னாலே போதும்!" மென்மையாக
Read 11 tweets
19 Oct
#உஜ்ஜயினி மஹாகாளியின் அருள் பெற்ற யசோதர்மன் விக்ரமாதித்தியனின் அவையில் நவரத்தினங்களில் ஒருவராக விளங்கினார் #வராஹமிஹிரர் வானியலாளர், கணித மற்றும் ஜோதிட மேதையான இவர் மால்வாவிற்கு அருகிலுள்ள அவந்திப் பகுதியில் பிறந்தவர். இவர் தந்தை ஆதித்தியதாசரும் ஒரு வானியலாளர். சூரியனை வழிபட்டு Image
வந்த தந்தையிடமிருந்து ஜோதிடத்தை நன்கு கற்றுணர்ந்தார். மன்னனுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அரசன் வராஹமிஹிரரை அழைத்து ராஜகுமாரனின் ஜாதகத்தைக் கணித்துப் பலன்களைக் கூறுமாறு வேண்டினான். மிகக் கவனமாக ஜாதகத்தைக் கணித்து அவர், இந்த ராஜகுமாரனுக்கு அற்ப ஆயுளே உள்ளது, இவனது பதினெட்டாம்
வயதில் ஒரு பன்றியால் மரணம் ஏற்படும். அதை யாராலும் தடுக்க முடியாது என்று வருத்தத்துடன் கூறி அவன் இறக்கவிருக்கும் நாள் மற்றும் மாலை நேரத்தில் எந்த மணியில் அது சம்பவிக்கும் என்பதையும் குறிப்பிட்டுக் கூறினார். அரசன் திடுக்கிட்டான். தனது அருமை மந்திரி பட்டியை அழைத்து ஆலோசித்தான்.
Read 16 tweets
19 Oct
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆறு வயது சிறுவன் சரவணன் தன் நான்கு வயது தங்கை சுமதியை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தன் தங்கை சுமதியை பார்த்து, எந்த பொம்மை வேண்டும் என்றான். அவள் கூறிய பொம்மையை எடுத்து Image
அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் சரவணன் கடையின் முதலாளியை பார்த்து அந்த பொம்மை என்ன விலை என்று கேட்டான். அதற்கு சிரித்துக்கொண்டே அந்த முதலாளி சுந்தரம், உன்னிடம் எவ்வளவு உள்ளது என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேர்த்து வைத்து இருந்த கடல்
சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான். அய்யா இது போதுமா என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கடைக்கார முதலாளி அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே எனக்கு நான்கு சிப்பிகள் போதும் என்று மீதியை கொடுத்தார். சிறுவன் சரவணன் மகிழ்ச்சியுடன் மீதி உள்ள சிப்பிகளுடன் தன்
Read 9 tweets
18 Oct
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கழுதையொன்று புலியிடம் புல்லின் நிறம் நீலம் என்று கூறியது. புலியோ கோபமடைந்து இல்லை புல்லின் நிறம் பச்சை என்று கூறியது. விவாதம் சூடு பிடித்து இருவரும் வழக்கை நடுவர் மன்றத்திற்கு சமர்ப்பிக்க முடிவு செய்தனர். எனவே அவர்கள் காட்டின் ராஜா சிங்கத்தின் முன் சென்றனர். Image
சிங்கம் தனது சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட கழுதை, அரசே, புல் நீலநிறமானது என்பது தானே உண்மை என்று கேட்டது. சிங்கமோ, உண்மை புல் நீல நிறமானது என பதிலளித்தது. கழுதை தொடர்ந்தது. புலி என்னுடன் உடன்படவில்லை முரண்படுகிறது அரசே, என்னை எரிச்சலூட்டுகிறது, தயவு செய்து அவரை
தண்டியுங்கள் என்றும் கூறியது. அப்போது அரசர், புலியாகிய நீங்கள் இன்றிலிருந்து இரண்டு வருடங்களுக்கு யாருடனும் பேசவேக் கூடாது. மௌனமாகவே இருக்க வேண்டும். இதுதான்
உங்களுக்குரிய தண்டனை என்று
அறிவித்தது. கழுதை மகிழ்ச்சியுடன் குதித்து புல் நீலநிறமானது புல்
நீல நிறமானது என்று கூறிக்
Read 9 tweets
9 Oct
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் சிரவணன் எனும் அரசரிடம் பத்து காட்டு நாய்கள் இருந்தன. தவறு செய்த தனது ஊழியர்களை அந்த காட்டுநாய்களுக்கு இரையாக்குவார். ஒருநாள் வேலைக்காரர்களில் ஒருவரான வேல்முருகன் தவறான ஒரு கருத்தை சொன்னார். அரசருக்கு கோபம் வந்துவிட்டது. இவனை நாய்களுக்கு தூக்கி எறியுங்கள் என
கட்டளையிட்டார் அரசர் சிரவணன். வேலைக்காரன் வேல்முருகன் கெஞ்சினான். அரசே நான் உங்களுக்கு பத்து வருடங்களாக சேவை செய்தேன். நீங்கள் இப்படி ஒரு தண்டனையை எனக்குத் தரலாமா? தயவுசெய்து என்னை அந்த நாய்களுக்கு தூக்கி எறிவதற்கு முன் பத்து நாட்கள் அவகாசம் தாருங்கள் என்றான். ராஜா சிரவணன் ஒப்புக
கொண்டார். அந்த பத்து நாட்களில் வேலைக்காரன் வேல்முருகன் நாய்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலரிடம் சென்று, அடுத்த பத்து நாட்களுக்கும் தான் அந்த நாய்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறினான். காவலர் குழப்பமடைந்தார் ஆனாலும் ஒப்புக்கொண்டார். வேலைக்கார வேல்முருகன் அந்த நாய்களுக்கு
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(