இழந்த நிலத்தை மீட்பதற்கான பரிகாரத் தலமான பூதத்தாழ்வார் அவதரித்த மகாபலிபுர ஸ்தல சயன பெருமாள் கோவில் வரலாறு:

108 வைணவ திவ்ய தேசங்களில் 63-வது தலமாகக் கொண்டாடப்படுவது மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தல சயனப் பெருமாள் கோவில். இங்குதான் பூதத்தாழ்வாரின் திரு அவதாரம் நிகழ்ந்தது. Image
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இக்கோயிலை எடுத்துக் கட்டினான் என்று வரலாறு கூறுகிறது.

பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பல கோயில்களை கடல் கொண்டது.

கடற்கரையைத் தாண்டி ஊருக்குள் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் இன்றும் Image
பெருமாள் சயனித்த திருக்கோலத்தில் காட்சி அளித்து, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீ தேவியும் பூதேவியும்

நான்கு கரங்களுடன் உள்ள மூலவர் பெருமாளின் வலக்கை, பூமியைத் தொட்டு இருக்க சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார் பெருமாள். Image
உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இணைந்து இருக்கிறார்.

இத்தல ஸ்தல சயனப் பெருமாள் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார்.

இவரை வியாழக்கிழமைகளில் வழிபட குருவருளும், திருவருளும் கிட்டும். கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கலாம். Image
குருவாக அருள்வார் இந்த ஸ்தல சயனன்.

மேலும் கருவறையில் மூலவரின் பாதத்தின் அருகில் புண்டரீக மகரிஷி பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளார்.

இத்தல உற்சவர் திருநாமம் ‘உலகுய்ய நின்றான்’ என்பதாகும். இந்தக் கோவிலை எழுப்பிய மன்னன் பாராங்குசன், Image
பாம்பு புற்றினுள் மறைந்திருந்த இந்த உற்சவரைக் கோவிலில் எழுந்தருள்வித்தான்.

கலிகாலத்தில் நம்மை எல்லாம் காத்து இந்தப் புவியை உய்விக்க வந்தவர் இந்த பெருமாள். இந்த உற்சவரின் கையில் புண்டரீகரின் தாமரை மலர் மொட்டு உள்ளது. அதனை உற்சவர், மூலவரின் பாதங்களில் சேர்ப்பிப்பதாக ஐதீகம். Image
உற்சவப்பெருமாள் கையில் தாமரை மலருடன் நிற்கும் ஒரே திருத்தலம் .

மாமல்லையில் பெருமாளின் கெளமோதகி என்ற கதாயுதத்தின் அம்சமான பூதத்தாழ்வார் அவதரித்தார்.

அவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு Image
ஆழ்வார்களுள் முதல் ஆழ்வார்கள் எனக் குறிப்பிடப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராகப் போற்றப்பட்டவர்.

இவர் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் உள்ள இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார். இதில் பெருமாளைப் போற்றும் நூறு வெண்பாக்கள் உள்ளன. Image
பூ என்ற வேர்ச் சொல்லைக் கொண்டு அமைந்தது பூதம் என்ற சொல். இதற்குச் சத்து – அறிவு என்று பொருள்.

பெருமாளின் திருக்குணங்களை அனுபவித்தே இந்தச் சத்து எனும் பூதத்தைப் பெற்றதால், இந்த ஆழ்வார் பூதத்தாழ்வார் என ஆனார். Image
கல்கி அவதார காட்சி...

திருமாலின் கதாயுத அம்சமான பூதத்தாழ்வார் கி.பி. 7–ம் நூற்றாண்டில் ஐப்பசி வளர்பிறை நவமியில், அவிட்டம் நட்சத்திரத்தில் கோவில் முன்பு உள்ள பூந்தோட்டத்தில் குருக்கத்தி மலரில் அவதரித்தார். Image
பூதத்தாழ்வார் தனது பாசுரத்தில் இத்தலத்தில் பெருமாள் விரும்பி உறைவதாகக் குறிப்பிடுகிறார். பூதத்தாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

கலியுகத்தின் முடிவில்தான் மேற்கொள்ளப்போகும், கல்கி அவதாரத்தை இந்த ஸ்தல சயனப் பெருமாள் முன்னதாகவே Image
திருமங்கையாழ்வாருக்குக் காட்ட ஆழ்வாரும் ஞானக் கண்ணால் கண்டு, ‘கடும்பரிமேல் கல்கியை நான் கண்டு கொண்டேன், கடிபொழில் சூழ் கடல்மல்லைத் தல சயனத்தே’ என்று தனது பாசுரத்தில் அருளியிருக்கிறார். இதன் மூலம் ஸ்தல சயனப்பெருமாளே கல்கி அவதாரம் எடுக்கப்போகிறார் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பூமி பிராட்டியை கடலின் அடியில் சென்று அழுத்திய அசுரணை, வராஹ அவதாரம் எடுத்து மீட்டருளினான் பகவான். வராஹமூர்த்தியால் மீட்கப்பட்ட பூமிப்பிராட்டி, நிலமங்கை என்ற பெயருடன் இங்கே எழுந்தருளியிருப்பது கூடுதல் சிறப்பு!
இவர்களோடு, பூமிப் பிராட்டியை தன் வலப்புறம் தாங்கி ‘திருவல எந்தை’யாக, ஞானப் பிரானான வராஹ மூர்த்தியும் இங்கே எழுந்தருளியிருக்கிறார்.

கலிகாலத்தில் நமக்கு வரும் கேடுகளைக் களைய இந்தப் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானது.

இத்திருக்கோயிலுக்குப் பிள்ளைலோகம் ஜீயரின்
அருளாசி பெற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
கலிகாலத்தில் நமக்கு வரும் கேடுகளைக் களைய இந்தப் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானது.

இத்தலத்தில் தனிச் சன்னிதியில் பெருமாளின் இருபுறமும், நிலமங்கைத் தாயாரும், ஆண்டாளும் அருள் பாலிக்கிறார்கள். கோவில் வெளிச்சுற்றில் ஆஞ்சநேயர்,
ராமர், பூதத்தாழ்வார், கருடன், ஆழ்வார்கள் மற்றும் லட்சுமி நரசிம்மருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

நிலமங்கைத் தாயார்
லட்சுமி நரசிம்மரின் சன்னிதியின் எதிரில் உள்ள சுவரில் லட்சுமி நரசிம்மரின் ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்’ பதிக்கப்பட்டுள்ளது.
சுவாமி நட்சத்திர தினங்கள், பிரதோஷ காலங்கள், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்திசாயும் மாலை வேளையில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் படைத்து, நெய் தீபமேற்றி ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்’ பாராயணம் செய்து வழிபட்டால் எத்தகைய கடன் தொல்லையானாலும் உடனே அகன்று விடும். வறுமை அகலும்.
இத்திருக்கோயிலைச் சேர்ந்தது புண்டரீக புஷ்கரணி.

அரசன் மல்லேஸ்வரன் நாள்தோறும் சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி வந்தான். இதனால் அவன் ஆட்சியை மக்கள் போற்றி வந்தனர்.

மன்னனிடம் ஒரு கட்டத்தில் இந்த அன்னதானத்தைத் தொடர்ந்து செய்யப் பொருளில்லை.
அதனால் அன்னதானம் செய்வதை நிறுத்திவிட்டான். இதனால் மக்கள் பசி பட்டினியில் வாடினர். மன்னனையும் வசைபாடினர்.

இதனைக் கண்டு அங்கே வந்த முனிவர்கள், அங்கிருந்த குளத்தைக் காட்டி இதோ இந்தக் குளத்து முதலையாக ஆவாய் என்று மன்னனுக்குச் சாபமிட்டார்கள்.
சாபம் நீங்கிய மல்லேஸ்வரன்

மல்லேஸ்வரன் மீளும் வழி தெரியாமல் குளத்திலேயே முதலையாக இருந்து காலத்தைக் கழித்து வந்தான். அக்குளம் தாமரைக் குளமானதால் ஆயிரம் தாமரை மொட்டுக்கள் பூத்திருந்தன. அக்குளம் நோக்கி வந்தார் புண்டரீக மகரிஷி.
பூக்களைக் கண்டார், புளங்காகிதம் அடைந்தார். அதன் கரையில் நின்று பூக்களைப் பறிப்பது எப்படி என்று ஆலோசித்துக் கொண்டிருந்தார்.

அழகிய அத்தாமரைப் புஷ்பங்களை கண்டதும் பெருமாளுக்கு அளிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டார்.
அப்போது நீருக்கு மேல் மூக்கை நீட்டிக் கொண்டு வந்தது, அந்த சாபம் பெற்ற முதலை. ரிஷியைக் கண்டதும் தன் துயரைச் சொல்லி வருந்தியது. சாப விமோசனம் அளிக்கக் கோரியது.

இம்மன்னன் செய்த குற்றத்தினை ஞான திருஷ்டியில் கண்ட ரிஷியும், ஆயிரம் பேர் பசி பட்டினியால் வாடிய பாவத்தினால்
இந்த சாபத்தைப் பெற்றதால், அது நீங்க இக்குளத்தில் பூத்துள்ள ஆயிரம் தாமரை மலர்களை பறித்துத் தந்தால் அதனை இங்குள்ள பெருமாளுக்குப் பூஜித்து, சாப விமோசனம் பெற்றுத் தருவதாகக் கூறுகிறார்.

மன்னனும் அவ்வாறே செய்ய, புண்டரீக மகரிஷி பெருமாளுக்குப் பூக்களால் பூஜை செய்தார்.
அவரது பூஜையில் மனம் மகிழ்ந்த பெருமாள், வரம் கேட்கக் கோரினார்.

மகரிஷியும் உலக மக்கள் பசி, பட்டினி இன்றி நிம்மதியாக இருக்க வேண்டும் என்றும், மன்னன் சாபம் நீங்க வேண்டும் என்றும் வேண்டினார்.

பெருமாளும் அவ்விதமே அருள்பாலித்தார்.
மன்னனும் தன் ஆட்சிக்கு உட்பட்ட நிலத்தை மீண்டும் பெற்றான்.

இக்குளத்திற்கு மகரிஷியின் பெயரையொட்டி, புண்டரீக புஷ்கரணி என்ற பெயரும் ஏற்பட்டது. இக்குளத்தில்தான் ஆண்டுதோறும் ஸ்தல சயனப் பெருமாளுக்குத் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
மாசி மகம் நாளன்று இத்திருத்தலத் தீர்த்தத்தில் நீராட ராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியம் என்று குறிப்பிடப்படுகின்றது ..

இழந்த நிலத்தை மீட்பதற்கான பரிகாரத்தலமாக இக்கோவில் உள்ளது.
இத்தல ஸ்தல சயனத்தாரையும்,
நிலமங்கைத் தாயாரையும் அர்ச்சித்து வழிபட்டால் வீடு, நிலம் வாங்கும் யோகம் அமையும். பூரம் மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபடுதல் மிகச் சிறப்பு. 🙏🙏🙏 @basurasa1969

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கண்ணன்தேவன்

கண்ணன்தேவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kannanthvan

27 Oct
இந்தியா சமீபத்தில் ருத்ரம் 1 என்ற ஆன்டி ரேடியேஷன் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது..!இந்த ஏவுகணை நம் சுகாய் விமானத்தில் இருந்து செலுத்தப்பட்டது..

விமானத்தில் இந்த ஏவுகணையை எடுத்து சென்று தோராயமாக ரேடியேஷன் உள்ள ஒரு இடத்தில் விட்டு விட்டால் போதும்.. Image
இந்த ஏவுகணை எந்த இடத்தில் இருந்து எதிரியின் ரேடார் கதிர் வீச்சு வருகிறதோ அந்த இடத்தை தானாக சென்று அழித்து விடும்..

இந்த ஏவுகணை மூலம் எதிரியின் தரையில் ரேடார்கள், கட்டுபாட்டு அறைகள் போன்றவற்றை மிக துள்ளியமாக அழிக்க முடியும்..
நவீன போர் முனையின் கண் எனப்படுவது ரேடார்கள் தான்..
அந்த ரேடார்களையே அழித்து விட்டால், பின் எதிரியை குருடாக்கி விட்டு அவனை உதைப்பதை போன்றது..

சீனாவிடமும் இதே போல் Y 91 என்னும் ஆன்டி ரேடியேஷன் ஏவுகணை உள்ளது ஆனால் அதன் தாக்கும் தூரம் 100 கிலோமீட்டருக்குள் தான்..
Read 7 tweets
27 Oct
12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே காய்க்கின்ற கருநெல்லிமரங்கள் அடர்ந்து காணப்பட்டவனப்பகுதியில்,
அமைந்துள்ள பஞ்ச
பாண்டவர்களின் பெருமை பேசும் ஆலயம் பற்றி தெரியுமா?

திருமங்கலம்: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கிராமத்தில் புண்ணியமூர்த்தி பஞ்சபாண்டவர் ஆலயம் உள்ளது. Image
இக்கோயிலில் சிவபெருமான் புண்ணியமூர்த்தியாகவும், இவருடன் மகாபாரத நாயகர்கள் தருமன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் மற்றும் திரவுபதி தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனர்.

இக்கோயிலுக்கான பழங்கதை அற்புதமானது.

வனவாச காலத்தில் தென்னிந்திய பகுதிக்கு வந்த பஞ்சபாண்டவர்கள், Image
முழுவதும் காடாக இருந்த நல்லமரம் பகுதியில் வசித்ததாக கூறப்படுகிறது.

இவ்வூர் காட்டுப்பகுதிக்குள் அக்காலத்தில் ‘சைந்தவர்’ எனும் முனிவர் வாழ்ந்துள்ளார்.

இவ்வனத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே காய்க்கிற நெல்லிக்கனியை அவர் உண்டு, தொடர் தவத்தில் இருந்திருக்கிறார்.
Read 14 tweets
26 Oct
#செஞ்சேரிமலை_என்கிற #தென்சேரிமலை_மந்திரகிரி
#வேலாயுதசுவாமி_திருக்கோயில்

கோவை மாவட்டம், பல்லடத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில்... மேற்கே பதினெட்டு கி.மீ. தூரத்தில் செஞ்சேரி மலை அமைந்துள்ளது.

சுவாமி : மந்திரகிரி வேலாயுத சுவாமி
தீர்த்தம் : ஞான தீர்த்த சுனை. Image
தலவிருட்சம் : கடம்ப மரம்.

"தென்சேரி கிரி"’ என்று பழம்பெயர் கொண்ட இத்திருத்தலமானது முருகக்கடவுள் அருள் புரியும் தலங்களில் முக்கியமானது. ‘மந்திரகிரி’ எனவும் இம்மலைக்கு சிறப்பு பெயர் குறிக்கப்படுகிறது. Image
இங்கு கோயில் கொண்டிருக்கிற ஆறுமுகப்பெருமான் ‘மந்திராசல வேலாயுதமூர்த்தி’யாக விளங்குகிறார். தன்னை நினைப்பவரை காப்பாற்றும் மலை (மந்+திர+கிரி=மந்திரகிரி) என்றும் மூலவரான இறைவனுக்கு மந்திராசல மூர்த்தி என்றும் திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன.
Read 26 tweets
25 Oct
#அருள்மிகு_தோரணமலை_முருகன் #திருக்கோயில்_வரலாறு

#அமைவிடம்

உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தென்காசி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை உள்ளது.

இந்த மலையின் உச்சியில் இருக்கும் குகைக் கோயிலில் முருகப்பெருமான் கிழக்குநோக்கி வீற்றிருக்கிறார். Image
இறையருள் வீசும் இந்த மலைப்பகுதி ஒரு காலத்தில் பட்டங்கள் வழங்கும் பாடசாலையாக விளங்கியது.

#எப்படி_செல்வது?

தென்காசியிலிருந்து கடையம் செல்லும் வழியில், கடையத்திற்கு சற்றுமுன் மேற்குநோக்கி ஒருவழிப்பாதை வழியாகச் சென்றால் தோரணமலையை அடையலாம். Image
#கோயில்_சிறப்பு :

இந்த குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

இந்த முருகன் திருச்செந்தூர் முருகனை நோக்கிய வண்ணம் இருப்பதால் இவரை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும். Image
Read 10 tweets
21 Oct
#விராலிமலை_ஷண்முகநாதர் #சுப்ரமண்ய_சுவாமி_திருக்கோயில்

திருச்சி - மதுரை வழித்தடத்தில் திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவிலும், புதுக்கோட்டைக்கு வடமேற்காக சுமார் 40 கிலோமீட்டரிலும் விராலிமலையில் அமைந்துள்ள, முருகப்பெருமானின் ஒரு பாடல் பெற்ற தலம்.
*பிற பெயர்கள்:
சொர்ணவிராலியங்கிரி
*மூலவர்:
சண்முகநாதர் (ஆறுமுகம்)
*அம்மன்:
வள்ளி மற்றும் தெய்வானை
*தல மரம்:
காசி வில்வம்
*தீர்த்தம்:
சரவணப் பொய்கை; நாக தீர்த்தம்
*தொன்மை:
1000-2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது
*சிறப்பு:
முருக வாகனமான மயில்கள் நடமாடும் கோயில்
*மாவட்டம்:புதுக்கோட்டை
*வட்டம்:விராலிமலை

தல வரலாறு :

விஜயநகரப் பேரரசரின் வழிவந்த இரண்டாம் தேவராயரின் (கி.பி.1422 -1446) காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவனது அரசியல் தலைவன் அழகிய மணவாளத்தேவன் அருகில் உள்ள கத்தலூர்,
Read 27 tweets
21 Oct
#சிக்கல்களைத்_தீர்ப்பாள்
#சிறுவாச்சூர்_மதுரகாளி_அம்மன்

வடக்கு நோக்கிய காளி என்றால் மிக மிக விசேஷமானவள், ஆவேசமானவளும் கூட. தீமைகளை வேரறுக்கும் உக்கிரமான சக்திகளே வடக்கு நோக்கி வீற்றிருக்கும் என்பது ஆன்மிகம் சொல்லும் ரகசியம்.
அப்படி சுமார் ஈராயிரம் ஆண்டுகளாக ஆவேசத்தோடு எழுந்தருளி நம்மை எல்லாம் காத்துக் கொண்டிருக்கும் மகா சக்தியே சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன்.

மதுரகாளி என்றால் அமிர்த வர்ஷிணியாக வரங்களை அள்ளித் தருபவள், மதுரமாக மனங்களை குளிர்விப்பவள் என்றும் சொல்லலாம்.
ஆனால் இங்கு மதுரையில் இருந்து புறப்பட்டு வந்த காளி என்பதால் இவள் மதுரகாளி என்றானாளாம். ஆம், மதுரையை கடும் கோபம் கொண்டு எரித்த கண்ணகியே இங்கு கோயில் கொண்டு இருக்கிறாள் என்று ஒரு தகவல் இந்த ஊர் மக்களால் கூறப்படுகிறது. மதுரையில் இருந்து நிராதரவாக இங்கு வந்த கண்ணகி ஆவேசம் அடங்கி,
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(