#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஹோட்டல் உரிமையாளர் மாணிக்கம் சாதம் பரிமாறுவதற்காக குனிந்த போது பெரியவர் சின்னையன் மதிய உணவுக்கு எவ்வளவு பணம் என கேட்டார். உரிமையாளர் மாணிக்கம் மீன் குழம்புடன் 50 மீன் இல்லாமல் 20 ரூபாய் என்றார். கிழிந்த சட்டையை பாக்கெட்டில் இருந்து, கசங்கிய 10 ரூபாய் தாளை
எடுத்து உரிமையாளரை நோக்கி நீட்டினார் 65 வயது பெரியவர் சின்னையன். இதுவே என் கையில் உள்ளது. இதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடுங்க. வெறும் சாதமானாலும் பரவாயில்லை. எனக்கு மிகுந்த பசி. நேற்று முதல் எதுவும் சாப்பிடவில்லை என்று சொல்லத் தயங்கியபடியே அவர் தொண்டை நடுங்கியது. ஹோட்டல்
உரிமையாளர் மாணிக்கம் மீன் குழம்போடு, அனைத்தையும் அவருக்கு பரிமாறினார். பெரியவர் சின்னையன் கண்களில் இருந்து கண்ணீர் மெலிதாக கசிந்தன. நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? பொறுமையாக சாப்பிடுங்கள் அய்யா. அந்த வார்த்தையைக் கேட்டவரைப் பார்த்து கண்களை மூடிக் கொண்டு சொன்னார், எனது கடந்த கால
வாழ்க்கையை நினைத்து கண்ணீர் வடிக்கிறேன். எனக்கு மூன்று குழந்தைகள். இரண்டு ஆண் ஒரு பெண். மூவருமே நல்ல வேலையில் இருக்கிறார்கள். நான் குவித்த ஒவ்வொரு பைசாவையும் அவர்களின் உயர்வுக்காக செலவழித்தேன். அதற்காக என் இளமையையும் 28 ஆண்டு கால வாழ்க்கையை இழந்து புலம் பெயர்ந்தேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக என் மனைவி என்னைத் முதுமையில் தனியே விட்டுவிட்டு மேலே போய் விட்டாள். சொத்து பிரிவினை செய்ய ஆரம்பித்ததில் இருந்து என் மகன்கள், மகள்கள் என்னைத் தள்ளி ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள். நான் அவர்களுக்குச் சுமையானதை மெல்ல மெல்ல உணர ஆரம்பித்தேன். என் வயதிற்காகவாவது
எனக்கு மதிப்பு கொடுத்திருக்கலாம். அவர்கள் அனைவரும் சாப்பிட்ட பிறகுதான் இரவு உணவிற்கு செல்வேன். அப்படியும் அப்போதும் திட்டுவதும் கூச்சலிடுவதும் தவறவில்லை. சாப்பாடு கண்ணீரும் உப்பும் கலந்திருந்தது. பார்த்தால் அம்மா அப்பா அடித்து விடுவார்களோ என்ற பயத்தில் பேரக் குழந்தைகள் என்னிடம்
பேசுவதே இல்லை. இரவும் பகலும் வியர்வை சிந்தி தொடர்ந்து தூங்காமல் உழைத்து, வயிற்றுக்கு சாப்பிடாமல். அவளும் நானும் சேர்த்த பணத்தில் வாங்கிய செங்கல்லால் கட்டப்பட்ட இந்த வீடு. ஆனால் நான் என்ன செய்வது? மருமகளின் தங்கத்தை திருடி விட்டதாக சாக்குப் போக்கில் திருடனாக முத்திரை குத்தப்
பட்டேன். மகன் கோபமடைந்தான், நல்ல வேளை கை நீட்ட வில்லை. அந்த பாவத்தை அவன் செய்யவில்லை. அது என் அதிர்ஷ்டம். அங்கேயே நான் இருந்து இருந்தால் நிகழ்ந்து இருந்தாலும் இருக்கலாம்.
சாப்பாட்டின் நடுவில் எழுந்தார் பெரியவர் சின்னையன். உரிமையாளர் மாணிக்கம் முன் 10 ரூபாயை நீட்டினார். ஓனர்,
ஐயா வேண்டாம் பையில் வையுங்கள். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு உணவு வேண்டி வரலாம். நீங்கள் எப்போதும் மதிய உணவு சாப்பிடலாம். அப்படியே அந்த மனிதர் 10 ரூபாயை அங்கேயே வைத்துவிட்டு உங்கள் உதவிக்கு மிக்க மகிழ்ச்சி, சுயமரியாதை என்னை விட்டு விலகாது. வருகிறேன் என்று சொல்லி ஒரு சிறு
மூட்டையை எடுத்துக்கொண்டு தெரியாத இடம் நோக்கி மெல்ல கிளம்பினானர். பழுத்த சருகு போன்ற பெரியவர்களை பூவில் வைத்து கண் போல் காக்க வேண்டும். நமக்கும் இப்படி ஒரு நாள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வரும். நம்மை சுற்றியவர்கள், தேடிய பொருள்கள் விலகி கொண்டே இருக்கும். என்றும் நம்மை
விட்டு விலகாத ஒருவனான பரந்தமானை நம்முள் உணர்ந்து அவன் திருநாமம் சொல்லி கொண்டே பழுத்த சருகு போன்று முடியும் ஒவ்வொரு நாளையும் பயன் உள்ளதாக ஆக்குவோம். இதுவே கீதையின் சாரம். என்னுடைய பொருள் என்பது அடுத்த நாள் வேறொருவர் ஆகிறது.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

5 Nov
A Comprehensive summary of all the authentic Sankara Vijayas has been presented in a tamil discourse by Smt. Sindhuja Chandramouli with the blessings of Jagadguru Sri Sankara Vijayendra Saraswati Swamigal. List of authentic significant event from Sri
Acharyal’s Punya charitram:
1) Birth of Sri Adi Acharyal to the divine couple Aryamba-Shivaguru
2) Acharyal praying for Swarnavrushti using Kanakadhara Stothram
3) His initiation into Sanyasa from Sri Govinda Bhagavatpadacharya on the banks of River Narmada
4) Lord Parameshvara’s
test for Sri Adi Acharyal in Kashi
5) His grace towards His Sishya Sri Padmapadacharya
6) His debate with Sri Veda Vyasa on His Brahma Sutra Bhashyam & with Mandana Mishra followed by initiating Him with appellation of Sri Sureshwaracharya
7) Receiving the five spathika lingams
Read 4 tweets
5 Nov
அதிகம் பகிரப்பட வேண்டிய பதிவு. Please RT and share.
#ஜெய்பீம் படம் பார்த்தேன். பிரமாதமான மேக்கிங். விழுப்புரம் மாவட்டத்தின் பேச்சு வழக்கை எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் உதவியுடன் தத்ரூபமாக காட்ட முயற்சி செய்திருக்கிறீர்கள். வட தமிழக பேச்சு வழக்கை வெள்ளித் திரையில் காட்டி
இருப்பதற்கு மிக்க நன்றி. எங்கள் இருளர் சமுதாய சொந்தங்களின் வாழ்வியலையும் அழகாக காட்டி இருந்தீர்கள். அதற்காகவும் நன்றி. இப்படத்தின் மூலம் சம்பாதித்த பல கோடியில் ஒரு கோடியை எங்கள் சமுதாயத்திற்கு வழங்கி இருக்கிறீர்கள். (இதை கணக்கு காட்டி வருமான வரியை குறைத்து செலுத்தலாம் என்பது
தனிக்கதை). இருந்தாலும் எங்கள் சமுதாயத்திற்கு உதவியதற்கு நன்றி. சரி விஷயத்திற்கு வருகிறேன். உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான திரைப்படம் என்பதால் வழக்கறிஞர் சந்துரு, பாதிக்கப்பட்ட அப்பாவி ராஜிகண்ணு என கதா பாத்திரங்களின் பெயர்களை அப்படியே நிஜ பெயரிலேயே காட்சிப் படுத்தி இருக்கிறீர்கள்
Read 13 tweets
5 Nov
Some clarity on how this Govt Works. Impatient people think nothing is Happening. Do you have any idea why this kisan andolan has suddenly fizzled out? It is a common knowledge that all along this andolan has been funded by people inimical to india's growing clout internationally
This was funded mainly by overseas indians and khalistanis. Two prominent being Darshal pal singh Dhaliwal of US and Amrikpal singh of Spain. It is said that the Turnover of Darshan pal is higher than even Punjab's budget. He owns more than 100 gas stations in US DPS landed in
Delhi directly from Chicago on 24/25th October. He was interrogated at the airport and was sent back by the same flight. He is PIO, meaning holds permanent visas for india visit. But now this stands cancelled. Cannot come to india in future. Same is the case with Amrik. He
Read 5 tweets
5 Nov
கந்த ஸஷ்டி விரதம் பற்றிய பதிவு: தேவர்களுக்குப் பெருந்துன்பத்தை விளைத்த சூரபத்மனையும், அவனது அசுரர் கூட்டத்தையும் அழிக்கச் சிவபெருமான் முருகப் பெருமானைத் தோற்றுவித்து அவருக்கு உருத்திரர்களின் அம்சமான பதினோரு படைக் கலங்களையும் அளித்தார். பின்னர் பராசக்தி தனது சக்தி அம்சத்திலிருந்து
வேலாயுதத்தைத் தோற்றுவித்து முருகப்பெருமானுக்கு அளித்தார். அன்னை பராசக்தியிடம் முருகன் வேலாயுதத்தைப் பெற்ற நிகழ்வை முருகன் ஆலயங்களில் ஐதீக விழாவாக நடத்துகின்றனர். சூரசம்ஹார விழாவின் அங்கமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு சக்தியிடம் வேல் வாங்கும் விழா என்று பெயர். பெரிய சிவாலயங்களில்
சிறப்புமிக்க முருகன் ஆலயங்களில் சில அம்மன் கோயில்களிலும் கந்தர் சஷ்டியினை ஒட்டி நடத்தப்படும் பெருவிழா சூரசம்ஹார பெருவிழாவாகும். இது தீபாவளிக்கு மறுநாளான பிரதமையில் தொடங்கி சஷ்டியில் நிறைவு பெறும். இதவே கந்தர் சஷ்டி விரதம். பிரதமையில் தொடங்கி முருகனுக்கு இந்த ஆறு நாட்களிலும் காலை,
Read 16 tweets
4 Nov
#HappyDeepavali #ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் விதமாக தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது நரகாசுர சதுர்தசி என்பார்கள். நம் பண்டிகைகளில் தீபத்திற்கு முக்கியத்துவம் உண்டு. தீபம் இல்லாத வழிபாடே இல்லை எனலாம். அதிலும் குறிப்பாக Image
தீபாவளி அன்று வரிசையாய் விளக்கேற்றி வைக்கும் போது, புற இருள் மட்டுமின்றி, அக இருளும் அழிந்து போகும். இதற்கு காரணம் தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து வருகின்றனர் என்ற நம் ஐதீகமே. தசாவதாரத்தில் ஒன்றான வராக அவதாரத்தை மஹாவிஷ்ணுக்கும்,
பூமாதேவிக்கும் மகனாக
பிறந்தவன் நரகாசுரன். முதலில் மிக நல்லவனாகத் தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான். அவன் வளர வளர தன்னுடைய அசுர குணதிற்கே உரித்தான அம்சத்துடன் எல்லோரையும் துன்புறுத்தலானான். தவத்தில் சிறந்த மகரிஷிகள், குருமார்கள் போன்றவர்களை இகழவும் செய்தான். ஈரேழு லோகங்களை
Read 10 tweets
3 Nov
கஷ்டப்படுகிறோம். அதற்கு நிவர்த்தி செய்ய பரிகாரம் செய்கிறோம். ஆனாலும் துன்பப் படுகிறோமே என்று நினைப்பவர்களுக்கு-பரிகாரம் என்பது என்ன என்பதை விளக்கும் கதை இது. ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார். மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது. அப்போது தூரத்தில் தெரிந்த
ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது. மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால் ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி, வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கி பணத்தை செலுத்தினார். அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து ஐயோ அம்மா என்ற குரல்
கேட்டது. யாரையோ தவறுதலாக கொன்றுவிட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தார். அங்கு பதினாறு வயதையொத்த சிறுவன் ஒருவன் இவரின் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான். இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்துவிட்டதே என்று பதைபதைத்த அரசன் உடனே காவலாளிகளை கூப்பிட்டு, இவன் பெற்றோர் அருகே தான்
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(