விவசாய மசோதா விலக்கம் குறித்து ஒரு பெரிய/முக்கிய
இன்றைய பஞ்சாப் ஒரு பெரும் அழிவின் விளிம்பில் உள்ளது. மீண்டும் தீவிரவாதமும், தனிநாடு கோரிக்கையும் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. இன்றைய பஞ்சாப் எந்த நேரமும் வெடித்துச் சிதறக் கூடியதொரு எரிமலையின் உச்சியில் அமர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பிரச்சினையின் அடிநாதமே காங்கிரஸ் கட்சிதான். நேரு எவ்வாறு காஷ்மீரைப் பற்றியெரிய வைத்தாரோ அப்படியே பஞ்சாப், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களைப் பற்றியெரிய, அங்கு தீவிரவாதம் வளர அடித்தளம் இட்டவர் அவரது மகளான இந்திரா காந்தியேதான். சொந்த அரசியல் காரணங்களுக்காக ஊர், பேர் தெரியாமலிருந்த
பிந்தரன்வாலேவை தூக்கிப் பிடித்து, அவன் மூலமாக பஞ்சாபில் தீவிரவாதம் வேரூன்ற விதை, விதைதவரும் இந்திராதான். இறுதியில் வினை விதைத்தவன் அதை அறுவடை செய்வானோ அதனையே இந்திராவும் செய்தார் என்பது வரலாறு. 1960-களில் இன்றைய பஞ்சாப் பகுதி அன்றைய ஹரியானா மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
உண்மையான பஞ்சாப்பின் பெரும்பகுதி தேசப் பிரிவினையின்போது பாகிஸ்தானிடம் சென்றுவிட்டது. இந்திரா காந்தி, பலருடைய எதிர்ப்புகளுக்கும் மத்தியில், ஹரியான மாநிலத்தை இரண்டாகப் பிரித்து பஞ்சாப் மாநிலத்தை உருவாக்கிய நாளில் இருந்து இந்தியாவிற்குச் சனியன் பிடித்தது. அப்படிச் செய்வது மிகப்பெரிய
தவறு என்று வாதாடியவர்களின் வாய்கள் அடைக்கப்பட்டன. பிரிந்த பிறகு தலைநகரான சண்டிகர் யாருக்குச் சொந்தம் என்கிற சர்ச்சை உருவாகி அது இன்றுவரை ஓய்ந்தபாடில்லை. சீக்கியர்கள் பிந்தரன்வாலே தலைமையில் தனிநாடு கேட்டுப் போராட்டம் நடத்திய காலத்தில் பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்கள் பஞ்சாபில்
கொல்லப்பட்டார்கள். சீக்கியர்களும் கொல்லப்பட்டார்கள் என்றாலும் ஹிந்துக்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டார்கள். பஞ்சாபின் உள் கிராமங்களில் ஹிந்துக்கள் வாழ இயலாத சூழ்நிலை உருவாகி பல ஆயிரக்கணக்கானவர்கள் பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள். இன்றைக்கு பஞ்சாபில் ஏறக்குறைய 35 முதல் 40%
ஹிந்துக்கள் இருக்கிறார்கள். பஞ்சாபில், பிந்தரன்வாலேக்கு எதிராக இந்திரா காந்தி ஆபரேஷன் புளூஸ்டார் நடத்திய பிறகு, அவரது சொந்த சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தப் படுகொலையைத் தொடர்ந்து இந்தியாவெங்கும் சீக்கியர்களுக்கு எதிராகக் கலவரங்கள் மூண்டன. அதனை முன்னின்று
நடத்தியவர்கள் காங்கிரஸ்காரர்களான சஜ்ஜன் குமார், ஜெகதீஷ் டைட்லர், கமால் நாத் போன்றவர்கள். தில்லியின் பொது இடங்களில் நின்று கொண்டு கலவரக்காரர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்தவர்கள் இந்தக் காங்கிரஸ்காரர்கள்தான். பல ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்கள் காங்கிரஸ்காரர்களால் கொல்லப்பட்டார்கள்.
பல ஆயிரக்கணக்கான சீக்கியப் பெண்கள் கற்பழிக்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கான சீக்கியர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. ராணுவத்தை அனுப்பி அந்தக் கலவரங்களைத் தடுக்கும்படி பலர் வேண்டுகோள் விடுத்தும் அன்றைக்குப் பிரதமராகப் பதவயேற்றிருந்த ராஜிவ் காந்தி அதனைச் செய்யவில்லை. மூன்று நாட்கள் வரை
கலவரம் நடப்பதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தார். அதற்கும் மேலாக, "ஒரு பெரும் மரம் விழுகையில் அருகிலிருப்பவற்றிற்கு பாதிப்பு ஏற்படுவது சகஜம்தான்" எனக் கேலியாகச் சொன்னார் ராஜிவ். தில்லியில் அந்தப் படுகொலையிலிருந்து பல சீக்கியர்களைக் காப்பாற்றுவதில் முன் நின்றது ஹிந்து இயக்கமான
#RSS தான். அன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். சீக்கியர்களுக்குப் பாதுகாப்பாக நின்றிருக்காமல் இருந்திருந்தால் இந்தப் படுகொலைகளின் எண்ணிக்கை பலமடங்காகியிருக்கும் எனச் சொன்னவர் பிரபல எழுத்தாளர் #குஷ்வந்த்சிங். ஆனால் இந்தக் கலவரத்தை நடத்தியவர்கள் காங்கிரஸ்காரர்கள் என்பதனைத் தந்திரமாக மறைத்து
ஹிந்துக்களே இந்தப் படுகொலைகளைச் செய்தார்கள் எனப் பிரச்சாரம் செய்தது சாங்கிரஸ். இன்றைக்கு இருப்பதனைப் போல இணையம் இல்லாத காலத்தில் நடந்த இந்தப் பிரச்சாரம் மிக எளிதாக சாமானிய சீக்கியனை எட்டியது. பா.ஜ.க. போன்ற கட்சிகள் அன்றைக்குக் களத்தில் இல்லை. இது ஹிந்துக்கள் மற்றும்
சீக்கியர்களிடையே பிளவினை ஏற்படுத்தியது என்றாலும் நிலைமை கைமீறிப் போய்விடவில்லை. வழக்கம் போல காங்கிரஸ் கட்சி சீக்கியர்களுக்கு பணத்தை அள்ளி வீசியது. பல தொழில்களும், விவசாய தரகில் கொள்ளையடிக்கும் வழிகளும் அவர்களுக்குத் திறந்துவிடப்பட்டன. இன்றைய லூதியானா போன்ற பகுதிகள் தொழிற்சாலை
நகரங்களாக பெருமளவில் வளர்ந்தன. சீக்கியர்கள் பெரும் பணக்காரர்களானார்கள். அப்பாவி ஏழை ஹிந்து விவசாயியின் முதுகில் உட்கார்ந்து அவன் ரத்தத்தை உறிஞ்சிக் கொழுத்தார்கள் சீக்கிய இடைத்தரகர்கள். இதன் காரணமாக பஞ்சாபில் தீவிரவாத தாக்கம் பெருமளவுக்குக் குறைந்தது. பஞ்சாபியர்களின் வெளிநாட்டு
மோகத்தை உபயோகப்படுத்த நினைத்த மேற்கத்திய நாடுகள் கிறிஸ்தவ பாதிரிகளை அங்கு கொண்டுபோய் இறக்கினார்கள். இன்றைக்கு பஞ்சாபின் ஏறக்குறைய 20% சீக்கியர்கள் மதம்மாறிய கிறிஸ்தவர்களே. இன்னொருபுறம் பாகிஸ்தானில் இருந்து போதை பொருட்கள் பஞ்சாபுக்குள் கடத்திவரப்பட்டு, பஞ்சாபிய இளைஞர்களை போதை
பொருட்களுக்கு அடிமைகளாக்கினார்கள். தீவிரவாத எண்ணங்கள் மீண்டும் பாகிஸ்தானினால் தூண்டி விடப்பட்டது. இருபுறமும் ஒரே மொழி பேசுபவர்கள் இருப்பதால் இது மிக எளிதாக செய்யப்படுகிற ஒன்றுதான். தேசப் பிரிவினையின் போது முஸ்லிம்களின் கையால் தங்களின் முன்னோர்கள் அடைந்த துயரங்கள் அனைத்தையும்
இன்றைய பஞ்சாபி இளைஞர்கள் மறந்துவிட்டார்கள் அல்லது அதனை அவர்கள் அறியாமலிருக்கச் செய்யப் பட்டிருக்கிறார்கள். தினமும் ட்ரோன்கள் மூலமாக போதைமருந்துகளும், துப்பாக்கிகளும் இன்னபிற ஆயுதங்களும் பஞ்சாபில் வந்து இறங்கிக் கொண்டே இருக்கின்றன. அதற்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள்
முழுமையான வெற்றி பெறவில்லை. ஏனென்றால் உள்ளூர் போலிஸ்காரர்களின் ஒத்துழைப்பு அதற்குக் கிடைப்பதில்லை. இதனைக் கொண்டு சமிபத்தில் எல்லைப்பாதுகாப்புப் படையின் நடவடிக்கை 50 கிலோமீட்டர் சுற்றளவிற்கு விரிவுபடுத்தப் பட்டிருக்கிறது எனினும் முழுமையாக இதனைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய அமெரிக்கப்படைகள் வேண்டுமென்றே பல நவீன ஆயுதங்களை விட்டுவிட்டுச் சென்றார்கள். அதனைக் கைப்பற்றிய பாகிஸ்தான் அந்த ஆயுதங்களை இந்திய பஞ்சாபுக்குள் அனுப்பிக் கொண்டே இருக்கிறது. அதற்கும் மேலாக போதை மருந்து கடத்தலுக்கு எதிராக இந்திய அரசு செய்யும் காரியங்கள்
எல்லைக்கு இருபுறமும் பலரைக் கோபமுறச் செய்திருக்கிறது. எனவே சந்தர்ப்பம் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏராளமான ஆயுதமும், வெடிமருந்துகளும் இந்திய பஞ்சாபுக்குள் ஏற்கனவே நுழைந்துவிட்டதாக எல்லா உளவு அமைப்புகளும் மத்திய அரசினை எச்சரிக்கை செய்திருக்கின்றன. சீனாவும் சந்தர்ப்பம்
பார்த்துக் காத்திருக்கிறது. பாகிஸ்தான் துணையுடன் இந்திய பஞ்சாபில் பேயாட்டம் போட அவர்கள் காத்திருக்கிறார்கள். சீனாவிடம் இல்லாத பணமில்லை. விவசாயிகள் போராட்டத்தின் பின்னனியில் பாகிஸ்தானும், சீனாவும், பணக்கார சீக்கியர்களும் கூட்டுச் சேர்ந்து கலவரம் செய்தது அனைவருக்கும் தெரிந்ததே!
இந்த நிலையில் பஞ்சாபில் தேர்தல் வருகிறது. தேசவிரோத சக்திகளின் முக்கியமான அமைப்பு கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிதான். #கேஜ்ரிவால் ஒரு #காலிஸ்தான் ஆதரவாளர். பல்லாயிரம் கோடிகளை இந்தத் தேர்தலில் கொட்டிக் கொடுத்து பஞ்சாபில் #ஆம்ஆத்மி கட்சியை எப்பாடுபட்டேனும் வெற்றிபெற வைக்க பாகிஸ்தான்,
சீன, காலிஸ்தானிய, போதைமருந்து கடத்தல் கும்பல்கள், கிறிஸ்தவ எவாஞ்சலிஸ்ட்டுகள் கோஷ்டிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே ஆயுதங்கள் தயாரக இருக்கின்றன. எனவே பஞ்சாப் தேர்தல் இரத்தக்களறியாக மாறுவதற்கான அத்தனை முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. சென்ற தேர்தலில் ஆம் ஆத்மி நிச்சயமாக
வெற்றிபெறும் சூழ்நிலை இருந்தது. #பாஜக மறைமுகமாக காங்கிரஸ் கட்சியை ஆதரித்தது. ஹிந்துக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப்போட அறிவுறுத்தப் பட்டார்கள். பிரிவினைவாதியான கேஜ்ரிவாலிடம் ஆட்சியை ஒப்படைப்பதனைவிட அம்ரீந்தர் சிங் தேசப்பற்றுள்ளவர் என்கிற காரணத்தால் பஞ்சாப் ஹிந்துக்கள்
அம்ரீந்தருக்கு ஓட்டுப்போடார்கள். ஆனால் இந்தமுறை இன்னும் சிக்கலான நிலைமை உருவாகியுள்ளது. பா.ஜ.க. மற்றும் அகாலிதள் கூட்டணி இன்றைக்கு இல்லை. விவசாய மசோதாவை எதிர்த்து அகாலிதள், பா.ஜ.க. கூட்டணியை விட்டு விலகிவிட்டது. அம்ரீந்தர் சிங் தனிக்கட்சி ஆரம்பித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின்
மீது அதிருப்தி இருப்பதால் அது மீண்டும் வெல்ல சாத்தியம் இல்லை. மறைமுகமாக கேஜ்ரிவாலுடன் கூட்டணி வைக்கவும் தேசவிரோத காங்கிரஸ் தயங்காது. ஏற்கனவே விவசாய மசோதாவினைக் கொண்டுவந்த பா.ஜ.க. ஒரு சீக்கிய விரோத ஹிந்துக் கட்சி என்கிற எண்ணம் பஞ்சாபிய சீக்கியர்களிடையே விதைக்கப்பட்டிருக்கிறது.
இப்படியான இடியாப்பச் சிக்கலில் கேஜ்ரிவாலின் கட்சி மிக எளிதாக பஞ்சாபில் ஆட்சியமைக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அப்படி நடந்தால் பஞ்சாப் மீண்டுமொரு கலவர பூமியாக மாறும். அதனை பாகிஸ்தானும், சீனாவும் வெற்றிகரமாகச் செய்யும். அதற்கு ஆம் ஆத்மி கட்சி துணைபோகும்.
மோடி என்றைக்குமே தன்
நலனைவிடவும், தேசத்தின் நலனை முன்னிறுத்துகிற பிடிவாதக்காரர். இந்த விவசாய மசோதா விலக்கல் தேச நன்மையை அடிப்படையாகக் கொண்டது. அதனால் அவருக்கு நஷ்டங்கள் வரும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அவரது இந்த நடவடிக்கையால் விவசாயிகள் பாதிக்கப்படலாம். அதனை வேறு வழிகளில் அவர் சரி செய்து
விடுவார். ஆனால் நிச்சயமாக பஞ்சாபில் ரத்த ஆறு மீண்டும் ஓடுவதனை அவர் விரும்பவே மாட்டார். புரிந்துணர்வுள்ள தேசபக்தர்கள் அவருடன் துணை நிற்பார்களாக.

(மிக நீண்ட கட்டுரைதான். ஆனால் அவசியமானது)
@threadreaderapp please compile
பதிவு*

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

22 Nov
ஸ்ரீராமன் காட்டிற்கு வனவாசம் செல்ல கங்கைக் கடந்து அக்கரை செல்ல வேண்டும். அப்போதுதான் முதன் முதலாக குகன் ஸ்ரீராமனைப் பார்க்கிறார். ஶ்ரீராமனைப் பற்றி சகல விஷயங்களும் அவருக்குத் தெரியும். நாட்டைத் துறந்து தன் முன் நிற்கும் மரவுரி தரித்த ஸ்ரீராமனைக் காணமுடியாமல், கண்களில் குகனுக்குக் Image
கண்ணீர்த்திரை. என்னால் உனக்கு என்ன உதவி ஆகவேண்டும் ஸ்ரீராமா என பக்தியோடு கேட்டார். "கங்கையைக் கடந்து அக்கரை செல்லவேண்டும் குஹா" எனக் கூறினார் ஶ்ரீராமர். அப்போது ஒரு படகு யாரையோ இறக்கி விட்டுவிட்டு புறப்படத் தயாராக இருந்தது.அந்த படகோட்டியின் பெயர் கேவத். குகன் அவனை அணுகி, கேவத் உன
படகை இங்கே கொண்டுவா என்றான். கேவத், இதோ நிற்கிறார்களே, இது யார் தெரியுமா? அயோத்தி மஹாராஜா ஸ்ரீராமர், அது சீதாதேவி, அவர் மனைவி, அது லக்ஷ்மணன் அவருடைய சகோதரன். இவர்களை அக்கரை கொண்டு சேர் என்றான். கேவத் ஸ்ரீராம லக்ஷ்மணர்களை, சீதாவை வணங்கினான். அவன் தினமும் காலையில் எழும்போதும்,
Read 11 tweets
22 Nov
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் குரு வையாபுரி தன்‌ சீடர்கள்‌ சிலருடன்‌ பேசியபடி, ஆற்றின்‌ கரையோரம்‌ நடந்து சென்று கொண்டிருந்தார்‌. திடீரென அவர் கால்‌ வழுக்கி, நிலை தடுமாறிஆற்றில்‌ விழப்போனார்‌. அப்போது அருகிலிருந்த சீடன் குமரன் ‌சட்‌டென்று குருவின்‌ கையைப்‌ பிடித்து இழுத்து அவரை ஆற்றில்‌ Image
விழாமல்‌ காப்பாற்றினான்‌. அவன்‌ அவரைக்‌ காப்பாற்றாமல்‌ இருந்திருந்தால்‌ ஆற்றில்‌ விழுந்து, அவர்‌ பெருக்கெடுத்து ஓடும்‌ வெள்ளத்தால்‌ அடித்துச்‌ செல்லப் பட்டிருப்பார்‌. குருவும்‌ மற்ற சீடர்களும்‌ காப்பாற்றிய சீடன் குமரனுக்கு நன்றி தெரிவித்தனர்‌. இதனால்‌ அந்த சீடனுக்குத்‌ தற்பெருமை
அதிகமாகி விட்டது. பார்ப்பவர்களிடம் எல்லாம்‌, ஆற்றில்‌ விழ இருந்த குருவை நான்தான்‌ காப்பாற்றினேன்‌. இல்லா விட்டால்‌, இந்நேரம்‌ குரு ஆற்றில்‌ அடித்துச்‌ செல்லப்பட்டு இறந்திருப்பார்‌ என்று கூறத்‌
தொடங்கினான்‌. இந்த விஷயம்‌ குருவின்‌ காதுக்கு எட்டியது. ஆனாலும்‌ பொறுமையைக்‌ கடைப்
Read 10 tweets
21 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு கருவுற்ற மான் பேறு காலம் நெருங்கியதும் ஆற்றினருகே ஓர் அடர்ந்த புல் வெளியில் பிள்ளை பெற இடத்தை தேர்ந்தெடுத்தது. அப்போது கருமேகங்கள் சூழ்ந்தன. பலத்த மழைக்காக ஆயத்தங்களான இடியும் மின்னலும் தோன்றின. மான் தன் இடப்பக்கம் பார்த்தது. அங்கே ஒரு வேடன் மானை நோக்கி
அம்பை ஏய குறி பார்த்து நின்று கொண்டிருந்தான். மானின் வலப்பக்கமோ பசியுடன் ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒரு நிறைமாத கர்ப்பிணி மான் இந்நிலையில் என்ன செய்யும்? அதற்கு பிரசவ வலியும் வந்து விட்டது. இத்ற்கிடையில் காட்டு தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இத்தனை ஆபத்துகள் நிறைந்த
நிலையிலும் மான் தன் கவனம் முழுதும் தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது. மற்ற சூழல் அதன் கண்களுக்குத் தெரியவில்லை. தான் நல்ல முறையில் பிரசவிக்க வேண்டும் என்பது மட்டுமே அதன் நினைவில் இருந்தது. அப்போது நடந்த ஆச்சர்யங்களை பாருங்கள்! மின்னல் தாக்கியதால் வேடன் கண் பார்வை இழந்தான். தவறி
Read 7 tweets
20 Nov
Sri Maha Periyava is none other than God Himself in human form🙏🏻
There was a village named Nerunjippettai near Mettur. Sri Maha Periyava visited this place in the year 1928. The village chief Sri Sundaram Reddiar and the then MLA Sri Gurumurthy and several elders of the village
we’re big devotees of Maha Periyavaa and were overjoyed by His visit. One day the village folk and devotees were sitting around Periyava and chanting ‘Jaya Jaya Sankara! Hara Hara Sankara!’, and there came the chanting of ‘Govinda…Govinda’ from a distance. Hearing this,
enquired, “Where does this Govinda chanting come from?”
Nearby, there is a hill by name ‘Paalamalai’. There is a temple on top of the hill called ‘Sri Siddheswarar Temple’. People who go there for darshan keep chanting the ‘Govinda’ nama while climbing the hill. It is about
Read 17 tweets
19 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஶ்ரீ இராமானுஜரின் சீடர் எம்பார். திருவரங்கத்தின் வீதியில் ஒரு வீட்டிலிருந்து வந்த பெண் குரலிலே இழைந்த கீதம் அவருடைய செவிகளில் பாய்ந்து மறுகணம் சுலோகத்திலே தோய்ந்திருந்த அவருடைய நெஞ்சு பாட்டின் லயத்திலே ஒன்றியது. வாய் சுலோகங்களைச் சொல்வதை விட்டது. அவரது
கால்கள் இசை வந்த திசையில் அந்த வீட்டின் வாயிலில் அவரை நிறுத்தின. தன்னை மறந்தார். தான் ஒரு சன்னியாசி என்பதையும் மறந்தார். தான் யார் வீட்டின் முன்னால் நிற்கிறோம் என்ற சிந்தனையும் இல்லை. கண்களில் நீர் பெருக நின்றார். தான் எவ்வளவு நேரம் நின்றோம் என்பதும் அவருக்குத் தெரியாது. ஆனால்
அந்தத் தெருவில் வந்து போவோருக்கு அது தெரியும். இவருடைய கோலத்தினையும், அந்த வீட்டுக்கு உரியவளையும், அவர் நின்ற நிலையையும் தொடர்புப்படுத்தி சிலர் முகம் சுழித்தனர். சிலர், கருமம் கருமம் இப்படியும் ஒரு வெளிவேஷமோ? என்று கூறிச் சென்றனர். சில வைணவ அடியார்கள் இக்காட்சிக் கண்டு
Read 12 tweets
19 Nov
#கார்த்திகைதீபம் தீபமேற்றி வழிபடுவதைக் காட்டிலும் சிறப்பானதொரு வழிபாடு இல்லை என்கின்றன திருமுறைகள். இறைவன் ஜோதி வடிவானவன். சகல இருளையும் அழித்து வெளிச்சம் அளிப்பவன் அவனே என்பதை உணர்த்தும் திருநாளே திருக்கார்த்திகை நன்னாள்.
63 நாயன்மார்களின் நமிநந்தி அடிகளே 'தொண்டர்க்காணி' என்று
போற்றப்படுகிறார். அதாவது அடியார்களுக்கு இலக்கணமாகத் திகழ்கிறார் என்று பொருள். காரணம் அவர் பெரும் இக்கட்டானச் சூழலிலும் விளக்கிடும் திருப்பணியை நிறுத்தவே இல்லை. திருவாரூர் ஆலயத்தில் விளக்கேற்றும் பணியைச் செய்துவந்த நமிநந்தி அடிகள், விளக்கேற்ற நெய் இல்லாத வேளையில், நெய் யாசகம்
கேட்டு சென்றார். அப்போது எதிரிகள் அவரை கிண்டலும் கேலியும் செய்து, நெய் இல்லாவிட்டால் என்ன, உமது ஈசனின் அருளால் நீரை விட்டு விளக்கு இடலாமே என்று சொன்னார்கள். அதன் படியே கமலாலயத் திருக்குளத்தில் நீர் அள்ளி விடிய விடிய ஆலயம் முழுக்க விளக்கேற்றினார் நமிநந்தி அடிகள்.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(