குரு பகவானின் அருள் நிறைந்த #சதாசிவமூர்த்தி திருக்கோயில்
புளியரை....

இறைவன் : தட்சிணாமூர்த்தி
இறைவி : சிவகாமி
தல விருட்சம் : புளியமரம்

🙏🇮🇳1
ஜோதிடத்தில் ஒன்பது கோள்களும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அவரவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. எல்லா கோள்களும் நன்மை செய்வதுமில்லை, எல்லா கோள்களும் தீமை செய்வதுமில்லை. ஒன்பது கோள்களில் பூரண சுபராக வணங்கப்படுபவர் குரு பகவான் ஆவார். 🙏🇮🇳2
குருபகவானின் அருட்கடாட்சம் அதிகமாக இருக்கக்கூடிய அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயிலை தரிசிப்போம்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக தட்சிணாமூர்த்தி சன்னதி சிவாலயத்தின் தெற்கு பிரகாரத்தில் தெற்கு நோக்கி இருக்கும். 🙏🇮🇳3
ஆனால், இத்தலத்தில் மூலவருக்கும், வாசலில் உள்ள நந்திக்கும் நடுவே உள்ளது. புளிய மரத்தின் அடியில் சிவன் அருட்காட்சி தந்ததால், புளியரை என்றழைக்கப்படும் இவ்வூர், சிறிய சிருங்கேரி என்ற சிறப்பு பெயருடனும் அழைக்கப்படுகிறது.

🙏🇮🇳4
தல புராணம்..

ஒரு காலத்தில் தில்லை சிதம்பரம் கோயிலுக்கு அவைதீக மதத்தினரால் தீங்கு வந்தது. தில்லை தீட்சிதர் மூலவரை அவைதீகர் திருடிச் செல்வரோ என அஞ்சினர். 🙏🇮🇳5
அதனால் கருவறை படிமத்தை எடுத்துக் கொண்டு தென்திசை நோக்கி வந்தனர். அவர்கள் பொதிகைமலையைக் கடந்து சேரநாட்டு எல்லைக் காட்டுக்கு வந்தனர்.

🙏🇮🇳6
அந்த காடு மூங்கில் மரங்களும் புளியமரங்களும் நிறைந்ததாக இருந்தது. பகலிலும் இருள் சூழ்ந்த அந்தக் காட்டில் நடராஜரின் படிமத்தை மறைத்து வைக்க விரும்பினர்.

🙏🇮🇳7
அந்த மரம் இருந்த பகுதி தனியார் ஒருவருக்கு சொந்தமானது. அவர் புளிய மரத்திலிருந்த படிமத்தைக் கண்டு மகிழ்ந்து அப்படியே வைத்து வழிபட்டார். ஆண்டுகள் பல உருண்டோடிச் சென்றன. 🙏🇮🇳9
தில்லையில் சமயப் பகை நீங்கியது. தீட்சிதர்கள் மூலவரைத் தேடி தென்திசை வந்தனர். மூலவரை வைத்த இடம் அவர்களுக்கு மறந்து விட்டது, வைத்த இடம் தெரியவில்லை. அந்த தீட்சிதர்கள் மனம் வருந்தி கண்ணீர் மல்க தில்லை நோக்கி கைகூப்பி நடராஜரை தொழுதனர்.

🙏🇮🇳10
அந்த சமயத்தில் ஒரு அசரீரி ஒலித்தது. சாரை சாரையாய் எறும்பு செல்லும் வழி செல்லுங்கள் என கேட்டது. தீட்சிதர்களும் அவ்வாறே சென்றனர். தங்களின் நாயகன் மரப் பொந்தில் வழிபடுகோலமாய் இருப்பதைக் கண்டனர். கண்ணீர் மல்க அந்த மூர்த்தியை எடுத்துச் சென்றனர்.

🙏🇮🇳11
சில நாட்கள் கழிந்தன. அந்த புளியமரத் தோட்டத்தின் உரிமையாளர் வந்தார் தான் வழிபட்ட நடராஜரைக் காணாமல் திகைத்தார், அழுதார், தான் கண்டதை ரகசியமாய் வைத்ததால் இப்படி ஆனதோ என நெகிழ்ந்தார்.

🙏🇮🇳12
இச்சமயத்தில் அவர் நின்ற இடத்தில் பூமி அசைந்தது. அதிலிருந்து சுயம்புலிங்கம் தோன்றியது. அவர் பரவசமானார். 🙏🇮🇳13
இச் செய்தி எங்கும் பரவியது. அப்போது அப்பகுதியை ஆண்ட அச்சன்கோயில் அரசனும் அறிந்தார். அவரது கனவில் சிவபெருமான் தோன்றி அங்கே கோயில் கட்டப் பணித்தார். அரசரும் அங்கு ஒரு சிறிய கோயில் கட்டினார்.

🙏🇮🇳14
புளியரை ஆன வரலாறு..

தல புராணத்தில் கண்டவாறு இன்னொரு வரலாறும் வழங்கப்படுகிறது. கேரளம் கொட்டாரக்கரை அரசனுக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தது. அரசர் சிவனை வேண்டினார். 🙏🇮🇳15
சிவபெருமான் கனவில் தோன்றி புளியறை காட்டில் தான் சுயம்புவாக தட்சிணாமூர்த்தியாக இருப்பதைக் கூறி கோயில் கட்டுவதற்கு கட்டளையிட்டார். அரசரும் ஆண்டவரின் கட்டளைக்கிணங்க அப்படியே செய்தார். புளியமரத்தின் அடியில் தோன்றியதால் புளியறை ஆனது.🙏🇮🇳16
திருக்கோயில் அமைப்பு..

சிவனுக்கும் அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு சன்னதிகளுக்கும் இடையே திருக்கல்யாண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சிவன் வடக்குபுறமும் அம்பாள் தெற்குபுறமும் நின்று அருள் பாலிக்கின்றனர்..

🙏🇮🇳17
சிவன் சன்னதிக்கு முன்புறம் தட்சிணாமூர்த்தி சன்னதி அமைந்துள்ளது. சிவனையும் தட்சிணாமூர்த்தியையும் ஒன்றாக தரிசிக்கலாம்.

🙏🇮🇳18
தோஷம் நீங்கும்..

சிவாலயமாக இருந்தாலும் தெட்சிணாமூர்த்திக்கே மதிப்பு. குருபரிகார ஸ்தலமாக திகழும் இங்கு வியாழக் கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் மிகவும் அதிகளவில் உள்ளது.

🙏🇮🇳19
சதாசிவமூர்த்திக்கு வலப்புறம் அருள்பாலிக்கும் அம்பாள் சிதம்பரத்திலிருந்து கொண்டு வரப்பட்டமையால் சிவகாமி அம்பாள் என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறாள்.

🙏🇮🇳20
கோயிலுக்குள் நுழைய 27 படிக்கட்டுகள் அமைக்கப் பட்டுள்ளன. இவை 27 நட்சத்திரங்களாக கருதப் படுகின்றன. ஜாதகதோஷம் உள்ளவர்கள் இந்தப் படிகளில் ஏறிச் சென்று, சிவனை பூஜித்தால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. 🙏🇮🇳21
அனைத்து நட்சத்திரக்காரர்களும், குருவாரமாகிய வியாழக்கிழமைகளில் இங்கு வந்து படிபூஜை செய்து, ஸ்வாமி, அம்பாள் மற்றும் ஸ்ரீ யோக தட்சிணாமூர்த்தியை மனமுருகி வழிபட்டால், சகல பாக்கியங்களும் கிடைக்கும்...

🙏🇮🇳22
அமைவிடம்..

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் செங்கோட்டையிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவிலும்,

🙏🇮🇳23
குற்றலத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலும் திருநெல்வேலியிலிருந்து சுமார் அறுபத்தி ஏழு கிலோமீட்டர் தொலைவிலும் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. 

#வாழ்க_பாரதம் 🇮🇳🙏
#வளர்க_பாரதம் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

7 Jan
#சமஸ்கிருத_மந்திர_கணக்கு...

தமிழில் "#கணக்கதிகாரம்"

நீங்கள் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வதற்கு முன்பு உங்கள் கைகளில் 2 உத்தரணி நீர் விட்டு கை சுத்தம் செய்ய சொல்லி நீரை கீழே விட்டுவிட்டு சங்கல்ப மந்திரம் சொல்வதன் கணித அறிவை அதன் அருமையை புரிந்து கொள்வது என்பது,
இந்த மானிட ஜென்மத்தின் சிறப்பை தெரிந்துகொள்வதற்கு சமம்...

சங்கல்ப மந்திரத்தின் கணக்கு தெரியாமல் அந்த மந்திரத்தை சொல்லுவதால் எந்தப்பயனும் இல்லை.! ஆகவே சங்கல்ப மந்திரத்தின் சாரஹம்சத்தை தெரிந்துகொள்ளலாம்...
கோவிலில் அர்ச்சனை செய்யும்போதோ அல்லது ஒரு சாஸ்திர சம்பிரதாய நிகழ்ச்சிகளாக  திருமணம் மற்றும் பூஜை, திதி, சிரார்த்தம், தர்ப்பணம் போன்றவைகளை செய்யும்போதோ, முதலில் "ஸங்கல்பம்" செய்கிறோம்.
Read 29 tweets
7 Jan
பலமுறை படித்தாலும் சளைக்காத #உண்மைகள்

பார்த்தீர்களா சீனாவில்... என்ன பிரம்மாண்டமான தொழில் வளர்ச்சி! 

பார்த்தீர்களா சீனாவில் எவ்வளவு அகலமான சாலைகள்! 

பார்... பார்... சீனாவைப் பார் அதிவேக புல்லட் ரயில்! 

சீனாவின் ஏற்றுமதியைக் கண்டு அமெரிக்காவே அலறுகிறான்!...
போதும் நிறுத்துங்கய்யா முற்போக்கு 'அறிவுஜீவி' அப்ரசண்டிகளா! 

"சீனா விலகும் திரை"- பல்லவி ஜோஷி (கிழக்கு பதிப்பகம்) கிடைத்தால் படிச்சுப் பாருங்க!
பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் நடந்தபோது எத்தனை ரிங் ரோடுகள் அமைக்கப்பட்டன, எத்தனை சிறிய ரோட்டோரம் காய்கறி விற்கும் கிழவிகள் உட்பட அப்புறப்படுத்தப் பட்டனர் என்பதைக் கூறி இருப்பார்! 

பல்லவி ஜோஷி RSS அல்ல - அவரும் ஒரு 'லிபரல்' தான்!
Read 15 tweets
7 Jan
*#ஆகாச_மாரியம்மன்.திருநறையூர் ( தஞ்சாவூர் )*

தலவிருட்சம் : வேம்பு மரம்.

தலச்சிறப்பு : சமயபுர மாரியம்மன் இவ்வூருக்கு வைகாசி அமாவாசையை அடுத்து வரும்  புதன்கிழமை முதல் 10 நாட்களுக்கு எழுந்தருளுவதாக ஐதீகம். 

மற்ற தினங்களில் ஜோதி வடிவில்  அம்பாளை வழிபடுகிறார்கள். 

🙏🇮🇳1 Image
இங்கே அம்மனுக்கு என தனியாக சிற்பமோ, விக்கிரஹமோ,  பஞ்சலோகச் சிலையோ கிடையாது.

தல வரலாறு : அறுநூறு ஆண்டுகள் முன்னர் வளையல் வியாபாரியான ஒரு மாரியம்மன் பக்தன்  வருடா வருடம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். 

🙏🇮🇳2
ஒரு  சமயம் அவனால் சமயபுரம் வரை செல்ல முடியவில்லை.

மனம் வருந்திய அவன் அம்மனைப்  பார்க்க முடியவில்லையே என வருந்த அவனுக்காக ஆகாய மார்க்கமாய் அம்பிகை சமயபுரத்தில்  இருந்து கிளம்பி இங்கே வந்து காட்சி கொடுத்ததாகவும், 🙏🇮🇳3
Read 10 tweets
6 Jan
#ராமநாம_ஜெபமகிமை...! 

ஒரு ராஜா அவனுடைய மந்திரியோடு காட்டில் வேட்டையாட போனான். 

மந்திரி சிறந்த ராம பக்தன்.

எப்போதும் அவன் ராமநாமம் உச்சரித்துக்கொண்டிருப்பவன்.
ரொம்ப கெட்டிக்கார மதியூகி என்பதால் ராஜாவுக்கு அவனிடம் நிறைய கேள்விகள் கேட்டு பதில் பெறுவதில் இன்பம். 

காட்டில் வேட்டையாட வெகு தூரம் போனதில் ராஜா களைத்து போனான். பசி காதடைத்தது. 

களைப்பு தீர ஒரு மரத்தடியில் இருவரும் அமர்ந்தனர்.
மந்திரி சற்று வயதானவன் கூட. 

கிளம்பு நாம் இருவரும் எங்காவது உணவு தேடுவோம் என்றான் ராஜா.

இல்லை ராஜா நான் வரவில்லை. இங்கேயே இருக்கிறேன் என்றார் மந்திரி.

நீ என்ன செய்வாய் நான் வரும்வரையில்.
Read 11 tweets
6 Jan
வாங்கிய விலையில் பெட்ரோல் விற்க வேண்டும் என்று கேள்வி கேட்கும் நீங்கள் ...

1. பதினான்கு  ரூபாய்க்கு கோதுமை வாங்கி மக்களுக்கு இரண்டு ரூபாய்க்கு ஏன் குடுக்கிறது அரசு என்று கேட்கவில்லையே?

2.  ரூபாய் 50 க்கு கெரஸின் வாங்கி ரூபாய் 15 க்கு ஏன் குடுக்கிறது என்று கேட்கவில்லையே?
3.  ரூபாய் 49 க்கு சீனி வாங்கி ரூபாய் 25 க்கு ஏன் குடுக்கிறது என்று கேட்கவில்லையே?

4.  ரூபாய் 25 க்கு அரிசி  வாங்கி இலவசமாக ஏன் குடுக்கிறது என்று கேட்கவில்லையே?

5. ஆறு கோடி கழிப்பறைகள் இலவசமாக ஏன் கட்டியது என்று கேட்கவில்லையே?
6.  மூன்று கோடி ஏழைகளுக்கு இலவச கேஸ் கனக்ஷன் ஏன் குடுத்தது என்று கேட்கவில்லையே?

ஜெயலலிதா அனைவருக்கும் அம்மா ஆகமுடியும்;

சோனியா தேசத்திற்கே மருமகள் ஆக முடியும் ;

மாயாவதி சகோதரி ஆக முடியும்;

நேரு மாமா ஆக முடியும்

காந்தி தேசப்பிதா ஆக முடியும்.
Read 18 tweets
6 Jan
#ஆரோக்கியம்

1. காலை உணவை உட்கொள்ளாமல் விட்டால் அது உங்கள் வயிற்றை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.

2. தினமும் 10 டம்ளர் தண்ணீர் அருந்தாமல் இருப்பது உங்கள் சிறுநீரகத்தை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
3. இரவு 11 மணி வரை உறங்காமல் இருந்தாலும் சூரிய உதயத்திற்கு முன் எழாமல் இருந்தாலும் அது உங்கள் பித்தப்பையை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.

4. அதிக குளிர்ச்சியான உணவையும், கெட்டுப்போன அல்லது நாட்ப்பட்ட உணவை உண்டால் அது நீங்களே உங்கள் சிறுகுடலை காயப்படுத்துவதற்கு சமம்.
6. அதிக அளவு காரமான மற்றும் பொறித்த உணவு உண்டால் அது நீங்களே உங்கள் பெருங்குடலை காயப்படுத்துவதற்கு சமம்..

6. புகைப்பது மற்றும் அந்த காற்றை சுவாசிப்பது நீங்களே உங்கள் நுரையீரலை காயப்படுத்துவதற்கு சமம்..
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(