#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது. சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தாள். காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாக இருக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா என்று
கேட்டார். அந்த கிராமத்துப் பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றாள். உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார். உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்.
ஒருவர் சந்திரன், ஒருவர் சூரியன்.
இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள். சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர். உடனே அந்தப் பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான். ஒன்று செல்வம், இரண்டு இளமை. இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள்
சற்று எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார். உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான் ஒன்று பூமி, எவ்வளவு மிதித்தாலும், எவர் மிதித்தாலும் தாங்கும். மற்றொன்று மரம். யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக் கொண்டு காய்களைக் கொடுக்கும் என்றாள். சற்று கோபமடைந்த காளிதாசர் நான் ஒரு
பிடிவாதக்காரன் என்றார். அதற்கும் அந்த பெண் உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான். ஒன்று முடி, மற்றொன்று நகம். இரண்டும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும்
பிடிவாதமாக வளரும் என்றாள் சிரித்தபடி. தாகம் அதிகரிக்கவே நான் ஒரு முட்டாள் என்று தன்னை கூறிக்கொண்டார். உடனே அந்த
பெண், உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான். ஒருவன் நாட்டை ஆளத்தெரியாத அரசன், மற்றவன் அவனுக்குத் துதிபாடும் அமைச்சன் என்றாள். காளிதாசர் செய்வதறியாது, அந்த பெண்ணின் காலில் விழுந்தார். உடனே அந்த பெண், மகனே எழுந்திரு என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாசர் மலைத்துப்போனார்! சாட்சாத் சரஸ்வதி
தேவியே அவர் முன் நின்றாள்! காளிதாசர் கைகூப்பி வணங்கியதும், தேவி தாசரைப் பார்த்து, காளிதாசா, எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கின்றானோ, அவனே மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான். நீ மனிதனாகவே இரு
என்று கூறி தண்ணீர் குடத்தை காளிதாசர் கையில் கொடுத்து மறைந்தாள். இது போலத் தான்
குழந்தைகள் எதிர் காலத்தில் பணம் சம்பாதிக்கவும், வசதியாக வாழவும் பெற்றோர்கள் கற்றுக் கொடுக்கிறார்களே தவிர, மனிதனாக, தாய், தந்தை, மனைவி, மக்கள், உற்றார் உறவினருக்கு, நம் தாய் நாட்டிற்கு, நமக்கு உணவு தரும் பூமிக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத் தர மறந்து போகிறார்கள்.
பெற்றோரை தாய்நாட்டை, உறவுகளை பிரிந்து, ஏசி அறையே உலகம், கைபேசியே உறவு, பணம் சம்பாதிப்பதே வாழ்க்கையென வாழ்க்கையை இயந்திர மயமாக்கி மனித நேயமில்லா வாழ்க்கை வாழக் கூடாது! நீ நீயாகவே மனிதனாகவே இரு. மனிதநேயம் மலர மகிழ்வித்து மகிழ்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

13 Jan
பூரி ஜெகந்நாதர்
ஜரா என்ற வேடன் எய்த அம்பு பட்டு கிருஷ்ணர் மரணத்தை தழுவினார், பின்னர் அவரது உடல் ஒரு பெரிய மரக்கட்டை போல ஆனது. புரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் எனும் அரசனின் கனவில் கிருஷ்ணன் கூறியவாறு, புரி கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு சிலையை செதுக்குமாறு பெருமாள் Image
கூறினார். ஒரு அந்த பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்தது. அரசன் அந்த மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யும்படி கூறினார். தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது. அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு Image
முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார். அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலைசெய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது என்றும் கூறினார். அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை
Read 15 tweets
13 Jan
#சொர்க்கவாசல் #வைகுண்ட_ஏகாதசி
விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினர். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப் படுத்தினார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்க முடியாமல் திணறினர் தேவர்கள். அதனால் மஹாவிஷ்ணுவின் Image
சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணுபகவான் ஒருவரே அடக்க முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட, பெருமாள் மது, கைடபருடன் போர் செய்தார். ஸ்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள். பகவானே தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால் Image
எங்களுக்கு நீங்கள்தான் கருணை காட்ட வேண்டும் என்று பணிவாக கூறி வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றார்கள் இந்த அசுர சகோதரர்கள். தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று எண்ணி அசுரர்களாக இருந்தாலும் நல்ல மனதுடன் பெருமாளிடம் வேண்டினர். எம்பெருமானே,
Read 7 tweets
13 Jan
Alternate method to compute hypotenuse to Pythagoras theorem: The Tamilian land, centuries before the dawn of the common era had built dams and dikes, palaces and great cities during the Sangam era. The great turrets in temples and great highways cannot be built without any
knowledge about Pythagoras theorem. To find the hypotenuse of a right-angle triangle independent of the Pythagoras theorem, which enunciate that sum of the square of both sides of the right angle will be equal to the square of the hypotenuse, of the triangle has been known by our
ancestors. It is not a simple task to find the square of a number, but finding the square root of a number is a herculean task. There is no simple formula to find the square root of a number. An ancient Tamil mathematician/poet #Pothayanar, who had lived 800 years before the
Read 12 tweets
12 Jan
#மகான்கள் பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் என்று ஒரு மகான் இருந்தார். அவர் இளமையில் வேத அத்யயனம் முடித்தப் பின்னர், குடும்பத்தில் கடன் இருந்ததால் பணம் சம்பாதிக்க ஏதாவது ஒரு வித்தை கற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். அந்தக் காலத்தில், சேங்காலிபுரம் முத்தண்ணாவல் என்ற ஒரு
மகான் இருந்தார். பின்னாளில் அவர் சன்னியாசம் வாங்கிக் கொண்டு சித்தி அடைந்தார். அவரை சந்தித்து நமஸ்காரம் செய்து, கிருஷ்ண சாஸ்திரிகள் அமர்ந்த போது, அங்கு ‘ரகு வம்சம்’ பாடம் நடந்து கொண்டிருந்தது. அதில் ரகு மஹாராஜா ‘விஸ்வஜித்’ என்ற ஒரு யாகம் செய்து, அதில் வந்த எல்லா திரவியத்தையும்
தானம் செய்துவிட்டார் என்றும் அந்த நேரத்தில் ஒரு யாசகன் வந்த போது கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை என்கிற கட்டம் வந்ததாம். இதைக் கேட்ட கிருஷ்ண சாஸ்திரிகள், நான் கிளம்புகிறேன். நான் உங்களிடம் ஏதாவது கற்றுக்கொண்டு பணம் சம்பாதிக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் வந்தேன். ஆனா இது மாதிரி ஒரு
Read 21 tweets
11 Jan
ஒருமுறை பிரம்மலோகத்தில், நாரதர் உரையாடிக் கொண்டிருந்த போது, ஒரு கேள்வி எழுந்தது. மூவுலகிலும் நைஷ்டிக பிரம்மசாரி யார் என்பதே அந்தக் கேள்வி! சந்தேகமென்ன, நீதான் நாரதா என்று பிரம்மா சொல்வார் என நாரதர் நினைத்தார். ஆனால், பிரம்மாவின் பதில் நாரதருக்கு அதிர்ச்சியைத் தந்தது. பூவுலகில்
மானிடனாக அவதரித்து, லீலைகள் பல புரிந்து கொண்டிருக்கும் ஸ்ரீகிருஷ்ணன் தான் நைஷ்டிக பிரம்மசாரி என்றார் ஸ்ரீபிரம்மா. சதா சர்வ காலமும் கோபியருடன் ஆடிப்பாடி ராசலீலைகள் புரியும் ஸ்ரீகிருஷ்ணனா நைஷ்டிக பிரம்மசாரி என்று நினைத்தபடி உரக்கச் சிரித்தார் நாரதர்.
சந்தேகம் எனில் தினமும் உணவேதும்
அருந்தாமல், நித்திய உபாசனை புரியும் தபஸ்வி துர்வாசரைக் கேட்டுப் பார், காரணங்கள் தெரியும் என்றார் பிரம்மா. நாரதருக்கு மேலும் சிரிப்பு வந்தது. பசியே பொறுக்க முடியாதவர் துர்வாசர். ஒரு நாளைக்கு பல வேளை சாப்பிட்டு அளவுக்கு மீறிய போஜனத்தால், கோபம் உண்டாகி சாபமிடுபவர். அவரைப் போய்த்
Read 21 tweets
10 Jan
One day #MahaPeriyava described #MandukyaUpanishad the one among the 108 Upanishads. The root of Mandukya is sometimes considered as Manduka in Sanskrit meaning frog. The version of many pundits is that since this Upanishad does not directly tell the meaning and it jumps here and
there and tells the meaning it is called as Manduga Upanishad but Mahaperiyava has a different view. The frog is in the habit of jumping from the first step to the fourth step. Having this in mind Sri Maha periyava says that the word Om is divided into four parts. Three parts are
in the form of sounds and one is without sound. The parts of sounds are A karam, Oo karam, M karam so A, Oo and M are together Om. The fourth position is ‘Thuriyam’. Atma is Brahma and is divided into four parts. When Atma is attached to physical body it is called as Vishvan. It
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(