ஒருமுறை பிரம்மலோகத்தில், நாரதர் உரையாடிக் கொண்டிருந்த போது, ஒரு கேள்வி எழுந்தது. மூவுலகிலும் நைஷ்டிக பிரம்மசாரி யார் என்பதே அந்தக் கேள்வி! சந்தேகமென்ன, நீதான் நாரதா என்று பிரம்மா சொல்வார் என நாரதர் நினைத்தார். ஆனால், பிரம்மாவின் பதில் நாரதருக்கு அதிர்ச்சியைத் தந்தது. பூவுலகில்
மானிடனாக அவதரித்து, லீலைகள் பல புரிந்து கொண்டிருக்கும் ஸ்ரீகிருஷ்ணன் தான் நைஷ்டிக பிரம்மசாரி என்றார் ஸ்ரீபிரம்மா. சதா சர்வ காலமும் கோபியருடன் ஆடிப்பாடி ராசலீலைகள் புரியும் ஸ்ரீகிருஷ்ணனா நைஷ்டிக பிரம்மசாரி என்று நினைத்தபடி உரக்கச் சிரித்தார் நாரதர்.
சந்தேகம் எனில் தினமும் உணவேதும்
அருந்தாமல், நித்திய உபாசனை புரியும் தபஸ்வி துர்வாசரைக் கேட்டுப் பார், காரணங்கள் தெரியும் என்றார் பிரம்மா. நாரதருக்கு மேலும் சிரிப்பு வந்தது. பசியே பொறுக்க முடியாதவர் துர்வாசர். ஒரு நாளைக்கு பல வேளை சாப்பிட்டு அளவுக்கு மீறிய போஜனத்தால், கோபம் உண்டாகி சாபமிடுபவர். அவரைப் போய்த்
தாங்கள் நித்தியமும் விரதமிருக்கும் உபவாசி என்று கூறுகிறீர்களே! இது முதலில் கூறியதைவிட வேடிக்கையாக இருக்கிறதே என்றார் நாரதர். உண்மை எதுவென்று நீயே நேரில் சென்று தெரிந்து கொள். நித்திய உபவாசி யார் எனறு ஸ்ரீகிருஷ்ணரிடமே கேள். யார் என்பதைக் காரண காரியங்களுடன் அழகுற விளக்குவார் அவர்.
அதே போல நித்திய பிரம்மசாரி குறித்த கேள்வியை துர்வாசரிடம் கேள். கிருஷ்ணர்தான் நித்திய பிரம்மசாரி என்பதை ஆதாரத்துடன் தெளிவுற விளக்குவார். நீ தெரிந்து கொண்ட உண்மைகளை உன் மூலம் உலகத்தவர் தெரிந்து கொள்வார்கள் என்றார் பிரம்மா. தெளிவு பெறப் புறப்பட்ட நாரதர், முதலில் பிருந்தாவனம் வந்தார்
ஸ்ரீகிருஷ்ணரைச் சந்தித்து, தனியாகப் பேச வேண்டும் என்று பிருந்தாவனம் வந்த நாரதருக்கு ஒரே குழப்பம். எந்த வீட்டில் இருப்பது உண்மையான கிருஷ்ணன் என்பதே தெரியாதபடி, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கிருஷ்ணனாக, ஒவ்வொரு கோபிக்கும் ஒரு தோழனாக கிருஷ்ணன் வியாபித்திருந்தான்! திகைப்பும் களைப்பும் மேலிட
ஒரு மரத்தடிக்கு வந்த நாரதர், விடியும் வரை அங்கேயே காத்திருந்தார். தான் வந்திருப்பது கிருஷ்ணனுக்குத் தெரியாமலா போகப் போகிறது! அவராக வரட்டும் என்று நினைத்தபோது, அங்கே கண்ணன் பிரத்யட்சமானான். ஆனால், கிருஷ்ணனின் முகத்தில் கொஞ்சம் வேதனை தென்பட்டது. ஸ்வாமி, தங்களைக் காணவே வந்தேன்.
தாங்கள் வழக்கம்போல மகிழ்ச்சியாக இல்லாமல் ஏதோ நோய்வாய்ப்பட்டது போல, களைத்து வேதனையுடன் காணப்படுகிறீர்களே, காரணம் என்ன என்று கேட்டார் நாரதர். ‘இன்று துர்வாச மகரிஷி அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு விட்டார். அதனால் எனக்கு வயிற்று வலி’ என்றான் ஸ்ரீகிருஷ்ணன். நாரதருக்கு குழப்பம் மேலும்
அதிகமானது. துர்வாசர் அதிகம் சாப்பிட்டால் கிருஷ்ணனுக்கு வயிற்று வலி வருவானேன்? நாரதரின் குழப்பத்தைப் புரிந்துகொண்டு, பரந்தாமன் பதில் தந்தான். ‘நாரதா, துர்வாசர் எது சாப்பிட்டாலும் தனக்கெனச் சாப்பிடமாட்டார். சாப்பிடும் முன்பும், சாப்பிட்ட பின்பும் அவர் 'ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்’ என்று
மந்திரம் ஜபித்து, தண்ணீர் அருந்திவிடுவார். அவர் நித்திய உபவாசி. அவர் சாப்பிடுகிற அன்னமெல்லாம் என்னையே வந்தடைகின்றன. அவற்றை நானே சாப்பிடுகிறேன். அவர் சுவாசிக்கும் காற்றைக் கூட கிருஷ்ணார்ப்பணமாகவே சுவாசிக்கிறார். அவர் கோபதாபங்களுக்கு அவர் பொறுப்பேற்பதில்லை. அனைத்தையும் எனக்கே
அர்ப்பணம் செய்து விடுகிறார். தனக்கென வாழாது கிருஷ்ணனுக்கே தன்னை அர்ப்பணம் செய்து வாழும் தபஸ்வி அவர்’ என்றார் ஸ்ரீகிருஷ்ணர். எதையும் கிருஷ்ணார்ப்பணம் செய்யும்போது, அது எத்தனை உயர்வாகி விடுகிறது என்பதை நாரதர் புரிந்துகொண்டார். அவருக்கு உண்மை துலங்கியது. ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி விடை
பெற்றார். எதையும் கிருஷ்ணார்ப்பணம் செய்யும் துர்வாசரிடம் கண்ணனைப் பற்றிய தன் அடுத்த கேள்விக்கான பதிலைப் பெறப் புறப்பட்டார். துர்வாச மகரிஷி நாரதரை வரவேற்று, வந்த விஷயம் என்ன என்று கேட்டார். பிரம்ம லோகத்தில் நடந்த சர்ச்சையை விளக்கி, மூவுலகிலும் நைஷ்டிக பிரம்மசாரி யார் என்பதை
தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டார் நாரதர். ‘சந்தேகமின்றி நைஷ்டிக பிரம்மசாரி அந்த ஸ்ரீகிருஷ்ணனேதான்’ என்றார் துர்வாசர். அதற்கு விளக்கம் கேட்டார் நாரதர். 'நாரதா, பெண்களே இல்லாத இடத்தில் இருந்து கொண்டு, அல்லது பெண்கள் தன்னை அணுகுவதைத் தவிர்த்துக் கொண்டு, வாழ்பவன் நைஷ்டிக பிரம்மசாரி அல்ல
பெண்கள் மத்தியிலே வாழ்ந்து கொண்டு அவர்களிடம் எந்தவித ஈடுபாடும் கொள்ளாமல் இருக்கிறவனே உண்மையில் வைராக்கிய பிரம்மசாரி. பதினாயிரம் கோபியருடன் ஆடிப்பாடி ராஸலீலை புரியும் கண்ணன், அவர்கள் ஒருவரிடமும் ஈடுபாடு கொள்ளாமல், பற்றற்ற நிலையில் பரப்பிரம்மமாகவே இருக்கிறான். அவன் அன்பும் அருளும்
அனைவருக்குமே சொந்தம். பிருந்தாவனத்துப் பசுக்களும், கோபிகையரும் அவன் கண்களுக்கு ஒன்றுதான். அவன் அன்புக்கும் அருளுக்கும் ஆண் - பெண் என்ற பேதமில்லை. அவனை மற்றவர்கள் பிள்ளையாய், தந்தையாய், தாயாய், நண்பனாய், காதலனாய், குருவாய், தெய்வமாய் பாவிப்பது அவரவர்கள் மகிழ்ச்சிக்காகவே! அவன்
தண்ணீரில் உள்ள தாமரை இலை. அது தண்ணீரில் இருந்தாலும், தண்ணீர் அதில் ஒட்டுவதில்லை. அது போலவே அவன் பற்றற்ற பரம்பொருள். பதினாயிரம் பெண்கள் நடுவே நெருக்கமாக வாழ்ந்து, அவர்கள் பாசத்துக்கும் நேசத்துக்கும் ஆளான போதும், மனதாலும் வாக்காலும், காயத்தாலும் (உடல்) இச்சையின்றி வாழும் அவனே
நைஷ்டிக பிரம்மசாரி’ என்றார் துர்வாசர். 'நாரதா, உனக்கு இன்னுமொரு உண்மை யையும் விளக்குகிறேன். திரேதாயுகத்தில் பகவான் ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீராமனாக அவதரித்த போது, தந்தை சொல் காக்க வனவாசத்தை மேற்கொண்டான். வனவாசத்தில் ஆயிரக்கணக்கான மகரிஷிகளும் தபஸ்விகளும் ஸ்ரீராமன் தங்களுடனே தங்கி வாழ
வேண்டும் என விரும்பினர். ஆனால் ஸ்ரீராமன் ஓர் இடத்திலும் தங்காமல், வனத்தில் திரிந்து கொண்டிருந்தான். அப்போது தபஸ்விகளும் முனிவர்களும் பகவானின் பிரேமைக்காகவும் ஆலிங்கனத்துக்காகவும் ஏங்கித் தவித்தனர். அவர்களுடைய தவத்தையும், கோரிக்கையையும் நிறைவேற்றவே அடுத்த யுகத்தில், அவர்களை
பிருந்தாவனத்தில் கோபிகளாக்கி, ஸ்ரீகிருஷ்ணன் தன் அன்பாலும் பிரேமையாலும் ஆட்கொண்டிருக்கிறான். அவனைப் பொறுத்தவரையில் கோபியர் எல்லாம் அவனுடைய பக்தர்கள். அவனுடைய அன்பு பவித்திரமானது. அதில் காமத்துக்கு இடம் இல்லை. எனவே அவனே நைஷ்டிக பிரம்மசாரி' என விளக்கம் அளித்தார் துர்வாசர். ஆண், பெண்
என்ற சரீர பேதத்தை மறந்து பார்க்கும்போதுதான் ஸ்ரீகிருஷ்ணரை நாம் புரிந்து கொள்ள முடியும். அவன் ஜீவாத்மாக்களை உய்விக்க வந்த பரமாத்மா என்பதை நாரதர் புரிந்து கொண்டார். நாரதர் துர்வாசருக்கு நன்றி சொன்னார். அப்போதும் 'கிருஷ்ணார்ப்பணம்’ என்றார் துர்வாசர். இரண்டு கேள்விகளுக்கும் பதில்
கிடைத்த மகிழ்ச்சியில் நாராயண நாமத்தை பாடிக் கொண்டே பிரம்மலோகம் சென்ற நாரதர் தன் தந்தை பிரம்மதேவரை சந்தித்து, இந்த அரிய சந்தர்ப்பத்தை தனக்கு உருவாக்கிக் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்தார்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

10 Jan
One day #MahaPeriyava described #MandukyaUpanishad the one among the 108 Upanishads. The root of Mandukya is sometimes considered as Manduka in Sanskrit meaning frog. The version of many pundits is that since this Upanishad does not directly tell the meaning and it jumps here and
there and tells the meaning it is called as Manduga Upanishad but Mahaperiyava has a different view. The frog is in the habit of jumping from the first step to the fourth step. Having this in mind Sri Maha periyava says that the word Om is divided into four parts. Three parts are
in the form of sounds and one is without sound. The parts of sounds are A karam, Oo karam, M karam so A, Oo and M are together Om. The fourth position is ‘Thuriyam’. Atma is Brahma and is divided into four parts. When Atma is attached to physical body it is called as Vishvan. It
Read 7 tweets
10 Jan
#ராம_ராஜ்ஜியம் மக்கள் எல்லோரும் ராமன் பொற்கால ஆட்சியில் பேரானந்தமாக வாழ்ந்தனர். அந்த நேரம் பார்த்து சோதனையாக துர்வாச மாமுனிவர் தன் சீடர்களுடன் ராமனை காண அயோத்தி வந்தார். அயோத்தி மக்கள் மற்றும் அரசவையில் உள்ளோர் யாவரும் கொஞ்சம் பயத்தோடு அவருக்கு வணக்கம் கூறி வரவேற்றனர் காரணம்
துர்வாசர் கோபப்பட்டு சபிப்பதில் வல்லவர். மற்ற முனிவர்கள் எல்லாம் கோபப்பட்டு சபித்தால் தங்கள் தவ சக்தியில் ஒரு பகுதியை இழந்து விடுவர். பின் மீண்டும் அந்த இழந்த சக்தியை பெற பலவருடங்கள் தவம் மேற்கொள்ளவேண்டும். ஆனால் துர்வாச முனிவரோ கோபப்பட்டு சபித்தால் அவர் தவ-சக்தி பலம் பெருகும்.
அதனால் அவர் வெகு எளிதில் கோபப்பட்டு சபித்து விடுவார். சீடர்களுடன் தன் அவைக்கு வந்த துர்வாசமுனிவரை வரவேற்ற ராமன் அவர் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்து ஒரு ஆசனத்தில் அமரவைத்து பாத பூஜை செய்து, மகரிஷியே தாங்கள் வேண்டுவது யாதாகினும் கூறுக அடியேன் செய்ய காத்திருக்கிறேன் என்றான்.
Read 16 tweets
10 Jan
Dhyaana Slokam

Naaraayanaaya nalinaayata lochanaaya
Naamaavaseshita mahaabali vaibhavaaya
Naanaa charaachara vidhaayaka janmadesa
Nabheeputaaya prushaaya namah parasmai

This verse occurs in #BhojaChampu and describes vividly the picture of Sriman Narayana as He appeared to
the Devas. This verse forms part of the Ramayana story composed by King Bhoja and Poet Kalidasa, at a time when King Bhoja was made aware of the fact that he had only ninety more minutes life in this world. This is a beautiful verse and contains rich ideas. The milky white ocean
and the white Adisesha bed provide the necessary relief or background to the scintillating dark-blue body of Narayana. The very fact of His slumber is described as active vigil in the protection of all the worlds and their contents. It is this apparently dormant energy which
Read 16 tweets
9 Jan
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் #மீராபாய் (1498 – 1547) வட இந்திய வைணவ பக்தி உலகில் மறக்கமுடியாத கிருஷ்ண பக்தை மீரா பாய். 1300 பாடல்களுக்கு மேல் பாடிய மீரா ராஜபுத்திர இளவரசியாக தற்போதைய ராஜஸ்தானில் பிறந்தவர். பக்தி நெறியில் தீவிர பற்று கொண்ட இவர் , கிருஷ்ணரின் மீது இயற்றிய பக்திப் பாடல்கள்.
மிகவும் புகழ்பெற்றவை. இவர் செளகரி என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் ஜோத்பூரை ஆண்ட ரத்தன் சிங்கின் மகள் என்ற பெருமை பெற்றவர். வசதிகளுடன் பிறந்த மீரா பாய்க்கு நடனம், பாட்டு என்றால் உயிர். ஆனால் ராஜவம்சம் என்பதால் மற்றவர்கள் முன்னிலையில் பாட்டு பாடுவது தடுக்கப்பட்டது. அவர் தன்னுடைய
சிறுவயதிலேயே கிருஷ்ணனின் மீது தீராத காதல் கொண்டு இருந்தார். அவரை நோக்கி இசைப்பதும் பாட்டு பாடுவதையுமே தன்னுடைய வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார். கிருஷ்ணனை நோக்கி தெய்வீக பாடல் பாடி தன் மனதை அதில் ஈடுபடுத்தினார். ஒரு நாள் ஒரு துறவி மீரா பாயின் தந்தையை காண அவர் வீட்டிற்கு வந்தார்.
Read 12 tweets
8 Jan
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் திரிகாலத்தையும் உணரும் சக்தி கொண்ட தூய்மையான மனம் உடைய காருண்ய சீலர் ஸ்ரீ ஹரி நாம அனந்த வைஷ்ணவர். இவர் எப்பொழுதும் ஹரிநாம சிந்தனையில் வாழ்ந்து வந்தார். இவர் வேம்புரி எனும் கிராமத்தில் தன் சீடர்களுக்கு தாம் கற்ற கல்வியைச் சொல்லிக் கொடுத்து வந்தார். இவரிடம் Image
எண்ணற்ற சீடர்கள் வித்தைப் பயில வந்தனர். அதில் சத்யசீலன் எனும் சீடன் ஆச்சாரியனிடத்தில் மிகுந்த மரியாதையும் பக்தியும் வைத்து பணிவிடையும் செய்து வந்தான். குருவே தெய்வமெனக் கருதினான். குருவுக்கு அந்த சீடன் மேல் அளவு கடந்த அன்பும் பாசமும் இருந்தது. ஒருநாள் அந்த கிராமத்திற்கு மகான்
கபீர்தாஸரின் குருதேவரான ஸ்ரீ ராமானந்தர் வருகை தந்தார். கோவில் மடத்தில் அவரின் சீடர்களுடன் தங்கியிருந்தார். தினம் காலை உஞ்சவருத்தி‌ எடுத்துக் வந்த ஹரி நாம அனந்தரின் சீடன் மடத்தில் தங்கியிருந்து ராமானந்தரின் பாதங்களில் விழுந்து வணங்கினான். பாதம் பணிந்தவனைப் பார்த்து ராமானந்தர்
Read 13 tweets
8 Jan
#சுசீந்திரம் #தாணுமாலய_சுவாமி
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் (தாணு= சிவன், மால்= திருமால், அயன்= பிரம்மா) மும்மூர்த்திகளும் இணைந்து ஒரே வடிவமாக தத்தாதிரேயராக கொன்றை மரத்தடியில் அருள்பாலிக்கின்றனர். அத்திரி மகரிஷியின் மனைவி அனசூயயை சோதிக்க வந்த Image
அவர்களை தன் கற்பின் திறத்தால் குழந்தைகளாக்கி, கொன்றை மரத்தில் தொட்டில் கட்டி ஆட்டினாளாம் அனசூயை. (அத்தரி மகரிஷி, அனுசுயா ஆகியோர் வாழ்ந்த இடம் இதையடுத்து உள்ளது. இவ்வூர் இன்றும் #ஆசிரமம் என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது.) இதனால் தத்தாத்ரேயர் அத்திரி மகரிஷி அனுசுயாவின் புதல்வனாகக்
கருதப்படுகிறார். தத்தாத்ரேயரை வணங்கி அனைத்து நலன்களையும் பெறுவோம்.
#தத்தாத்ரேயர் #ஸ்லோகம்.
மாலகமண்டலு தர கரபத்மயுக்மே
மத்யஸ்த பாணியுகளே டமருத்ரிசூலம்!
அத்யஸ்த ஊர்த்வ கரயோ: சுப சங்கசக்ரே
வந்தே தமத்ரிவரதம் புஜ ஷட்க யுக்தம் ||
மாலையையும், கமண்டலத்தையும் இரு கைகளிலும், உடுக்கை Image
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(