#திருக்கடையூரில் தன் மீதே பாசக் கயிற்றை வீசிய எமனைத் தன் காலால் உதைத்தார் சிவனார். இது புராணம். காலம் தவறாமல் தன் கடமையைச் செய்ய வந்த காலதேவனைக் காலால் உதைக்கலாமா? தன்னை ஒரு பக்தன் வழிபட்டுவிட்டான் என்பதற்காக, நீதி வழங்க வந்த நீதி தேவனையே தண்டிக்கலாமா? அப்படியானால், ஆயுள்
முடியும் போது அனைவருமே அந்த சிவனை ஆலிங்கனம் செய்து கொண்டு, எமனிடமிருந்து தப்பிவிட மாட்டார்களா? இவையெல்லாம் நியாயமான கேள்விகள்தான்! இவற்றுக்குப் பதில் காண முயலும் போது, புதிய உண்மைகள் வெளிப்படுகின்றன. எமதர்மன் சர்வேஸ்வரனான சிவனை தினமும் உபாஸிப்பவன். தேவர்கள், மானிடர்கள்,
நல்லவர்கள், கெட்டவர்கள், தெய்வத்தை நம்புகிறவர்கள், நம்பாதவர்கள் என்ற பாகுபாடின்றி, அவரவரின் கர்மவினைகளுக்கேற்ப, காலமறிந்து நீதி வழங்கும் பொறுப்பு அவனுக்கு உண்டு. எல்லோரும் இறைவனின் திருவடிகளைச் சிரத்தில் ஏற்க விரும்பினார்கள் என்றால், உணர்ச்சிகளுக்கும் ஆசாபாசங்களுக்கும் இடம்
கொடுக்காமல், சத்தியத்தின் பிரதிநிதியாக நீதி பரிபாலனம் செய்ய, ஈஸ்வரனின் திருவடிகள் தன் இதயத்திலேயே பதியவேண்டும் என, தினமும் ருத்திர தேவனைப் பிரார்த்தித்தான் எமதர்மன். அந்தப் பிரார்த்தனை நிறைவேற, மார்க்கண்டேயன் ஒரு கருவியானான். எமன் பாசக் கயிற்றை மார்க்கண்டேயன் மீதுதான் வீசினான்.
அதே நொடியில் மார்க்கண்டேயன் இறைவனின் திருமேனியைத் தழுவிவிட்டான். பாசக்கயிறு இறைவனையும் பிணைத்துவிட்டது. எல்லாமே ஈஸ்வரனின் சங்கல்பப் படிதான் நடந்தது. மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை முதலிலேயே தழுவிக் கொண்டிருந்தால், நிச்சயமாக எமதர்மன் தன் பாசக் கயிற்றை தான் வணங்கும் தெய்வத்தின் மீது
வீசத் துணிந்திருக்கமாட்டான்.
மார்க்கண்டேயன் மீது வீசிய பாசக்கயிறு தன் மீது விழும்படி செய்து, இருவருக்கும் தரிசனம் தந்து, தன் திருவடியை எமதர்மனின் இதயத்திலேயே வைத்து, எமதர்மனின் பிரார்த்தனையை பூர்த்தி செய்தான் இறைவன். ஆனால் அந்தத் திருவடி அம்பிகையின் அம்சமாக அமைந்தது எமதர்மன்
செய்த பாக்யம். சிவபெருமான் உமையருபாகன் அல்லவா! அவன் பார்வதியைப் பாதி உடலாகக் கொண்ட அர்த்தநாரீஸ்வரன். அவனது திருமேனியில் இடதுபுறம் அன்னை உமாதேவியின் அம்சம். மார்க்கண்டேயன் மீதும் தன் மீதும் பாசக் கயிற்றை வீசிய எமனைத் தனது இடது காலால்தான் உதைத்தான் ஈசன். கடமையைச் செய்த காலதேவனை
சிவபெருமான் தன் காலால் உதைக்கவில்லை. மாறாக, தர்மம் தவறாமல் தன் கடமைகளை அவன் தொடர்ந்து செய்ய, அன்னை சக்தியின் அருள் அவனுக்குக் கிடைப்பதற்காக, அன்னையின் பாதமே தர்மதேவனின் இதயத்தைத் தொட்டு, அவனை வைராக்கியம் உள்ளவனாகச் செய்தது. அதற்கு இறைவன் ஒரு வாய்ப்பளித்தான். இது திருக்கடவூர் ஸ்தல
புராணக் கதை. கடமையைச் செய்யும்போது, கடவுளென்றும் பாராமல் நீதி தருகிறவன் எமதர்மன். அவன் வெறும் மரண தேவன் அல்ல. உயிர்களை மனிதக் கூட்டிலிருந்து விடுதலை செய்யும் தர்மதேவன். சிவசக்தியின் சங்கல்பத்தின்படி, அவன் உயிர்களைக் கவருகிறான். அவன் நெருங்கும் வேளையிலும்கூட, சிவசக்தியின் அருள்
இருந்தால், ஆரோக்கியமும் ஆயுளும் நீடிக்கும் என்பதே இப் புராணக் கதை சொல்லும் தத்துவம்.

நம: பார்வதி பதயே
ஹரஹர மஹாதேவா🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jan 30
#ராணி_தாராபாய் சத்ரபதி சிவாஜி ஸ்தாபித்த சாம்ராஜ்யத்தில் சத்ரபதி மஹாராஜ்க்கு பின் அரியணையேறிய அவரது அருந்தவப் புதல்வர் சத்ரபதி சம்பாஜி சமாதான பேச்சுவார்த்தை என்ற பெயரில் வஞ்சகமாக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு ராஜதர்மத்தை மீறி அவுரங்கசீப்பால் கண்டதுண்டமாக வெட்டப்பட்டு காக்கைகளுக்கு Image
உணவாகப் போடப்பட்டார். அடுத்து பதவிக்கு வந்த அவரது இளவல் சத்ரபதி ராஜாராம் மஹராஜ் ரத்தபேதியால் அல்பாயுசில் மடிந்தார். அப்போது ராஜ குடும்பத்திலோ அல்லது ராணுவத் தலைவர்கள் மத்தியிலோ நாட்டை ஆண்டு ராணுவத்தை வழி நடத்தக்கூடிய அளவில் யாரும் தென்படவில்லை. நிலைகுலைந்து நின்றது புதிதாக
ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யம். டெல்லி, பீஜப்பூர், பாமினி, கோல்கொண்டா, அஹமத்நகர் சுல்தான்கள் தள்ளாடும் ஹிந்து ராஜ்ஜியத்தை அழிப்பது அவர்கள் கையில் வந்துவிட்டது என்று எக்காளமாக சிரித்தனர்! ராஜாராம் இறந்த 3வது நாள் உடனே சரணடையும்படி மராட்டா தலைவர்களுக்கு சுல்தான்கள் ஆணையிட்டனர். அப்படி
Read 48 tweets
Jan 29
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஸ்ரீரங்கம் போன்றே தொன்மையான தலங்களில் ஒன்று அப்பக்குடத்தான் திருக்கோயில்.
துர்வாச முனிவரின் சாபத்தால் தன்பலம் இழக்கிறான் உபமன்யு என்ற மன்னன். இந்தத்தலத்தில் இலட்சம் பேருக்கு அன்னதானம் அளித்தால் விமோசனம் கிட்டும் என்றறிந்து தானமிடத் தொடங்குகிறான். ஒருநாள் Image
திருமாலே முதிர்ந்த வைணவரின் தோற்றத்தில் இங்குவந்து அன்னம் கேட்கிறார். பரிமாறப்படுகிறது. அன்றைய தினத்துக்கான உணவுமுழுவதையும் முதியவர் உண்டு விடுகிறார். வியந்த மன்னன், இன்னும் என்ன வேண்டும் என்று வினவுகிறான். ஒரு குடம் அப்பம் வேண்டும் என்கிறார். அப்பக் குடத்தைக் கையில் வாங்கியதும் ImageImage
மன்னனின் சாபம் தீர்ந்து பெருமாளின் தரிசனமும் கிடைக்கப் பெற்றான்.
#தலத்தின்_சிறப்புகள்
பஞ்ச ரங்கம் என்று குறிப்பிடப்படும் ஐந்து அரங்கத் தலங்களின் இதுவும் ஒன்று.
1. ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம் (மைசூர்).
2. அப்பால ரங்கம் - திருப்பேர் நகர் (அப்பக்குடத்தான்).
3. மத்தியரங்கம் -
Read 7 tweets
Jan 29
#நரசிம்ம_அவதார_சிறப்பு அதர்வண வேதம் ரொம்ப அழகாக நரசிம்ஹ அவதாரத்தை 'எலக்ட்ரிசிடி' என்கிறது. அது ஒரு கரண்ட். வித்யுத் சக்தி. கரண்டைத் தொட்டோம் என்றால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிடும் நம்மை! நரசிம்ஹருக்கும், அடித்த கை பிடித்த பெருமாள் என்று பெயர். தன்னை அடித்த ஹிரண்யனின் கையை Image
கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டார் எம்பெருமான். மற்றொரு கையால் சிரசை, சிகையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். ஏன் அவ்வாறு கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் என்று கேட்டால், அந்தப் பிடி மூலமாகவே தன் பலத்தைக் காட்டினாராம் பரமாத்மா. இந்த முட்டாள் நம்மோடு சண்டை போடுகிறானே!
இந்த ஒரு பிடியே ம்ருத்யு பிடியாக இருக்கிறதே என்று விழுந்து சரணாகதி பண்ணுகிறானா பார்ப்போம் என்ற எண்ணத்துடன் ஹிரண்யகசிபுவின் சிரஸைப் பிடித்தாராம். சரணாகதி பண்ணினால் இவனை மன்னித்து விட்டு விடுவோம் என்று நினைத்தாராம். பகவான் தான் எத்தனை காருண்ய மூர்த்தி! இவ்வளவு உக்கிரமாகத்
Read 8 tweets
Jan 28
#மந்திராலயம் மாஞ்சாலாவில் குரு #இராகவேந்திரர் தமது பிருந்தாவனத்தை அமைக்க தேர்ந்தெடுத்தற்கான காரணம் பிரகலாதராக இருந்த காலத்தில் இவர் யாகம் செய்த இடம் இது. குரு இராகவேந்திரரிடம் மாமிசத்தைப் படைத்து அவமரியாதை செய்ய நினைத்த, அந்த இடத்தை ஆண்ட நவாபின் படையலை பழங்களும் மலர்களுமாக
மாற்றிய அவரின் மகிமையை உணர்ந்த நவாப் அவரைப் பணிந்து என்ன வேண்டுமென்றாலும் கேட்க வேண்டினான். அப்போது இராகவேந்திரர் இந்த மாஞ்சாலி கிராமத்தைக் கேட்டார்.  நவாப்பும். அந்த பிரதேசம் பாறைகள் நிறைந்த வறண்ட பூமி வேண்டாம், வேறு நல்ல வளமான பகுதியை தருகின்றேன் என்றான். இராகவேந்திரர் அன்மீக
சக்தி மிகுந்த இப்பகுதியே வேண்டுமென கேட்க அதையே தானமாக மனமுவந்து வழங்கி   சாசனம் செய்து குருதேவரை வணங்கி சென்றான். பின்னர் இராகவேந்திரர் மாஞ்சாலியில் வாழ ஆரம்பித்தார், அவரது இஷ்டதெய்வமான வெங்கடரமண சுவாமிக்கு  ஒரு ஆலயமும் எழுப்பினார். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் மாஞ்சாலி கிராமத்திற்கு
Read 14 tweets
Jan 27
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஐயன்மீர் என்ன காரியம் செய்து வீட்டிர்கள் என நடுங்கி விட்டார் ஏழே வயதான குழந்தை பராசரர், ஞானி மார்க்கண்டேயர் கையைப் பிடித்துக் கொண்டு. ஐயன்மீர் இது என்ன விபரீதமான அனுஷ்டானம்? ஏழு கல்ப யுகம் வாழ்ந்த முனிவர் தாங்கள் எங்கே, ஏழே வயதான குழந்தையான நான் எங்கே! என்னை
தாங்கள் வணங்குவதாவது என்றது குழந்தை. அதற்கு மார்க்கண்டேயர் சொன்ன பதில், “ஒருவருடைய வயதை அவர் வாழ்ந்த காலத்தைக் கொண்டு நிர்ணயம் பண்ணக் கூடாது. எதை வைத்து வயதை நிர்ணயிப்பது என்பதற்கு ஒரு உதாரணம் இதோ. விவசாயி ஒருவன் இருக்கிறான். தன்னுடைய நிலத்தைப் பயிரிட்டு, அறுவடை செய்து, நெல்லைக்
கொண்டு வந்து களத்திலே அடித்து அம்பாரமாய் குவித்து வைத்திருக்கிறான். குவித்து வைத்த நெல்லை அவன் அப்படியே அளப்பதில்லை. நெல்லை ஒரு முறத்தில் எடுத்து நீளமாக தூற்றுதல் என ஒரு காரியம். அதவாது இப்படியும் அப்படியும் விசிற வேண்டும். விசிறியதால் தும்பு, தூசி எல்லாம் அகன்று போய் விடும்.
Read 7 tweets
Jan 27
#ஒப்பிலியப்பன்_கோயில்
சோழர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம், 108 திவ்ய தேசங்களில் 13-வது தலமாக திகழ்கிறது. இக்கோயில் தென்திருப்பதி என்று சிறப்பு பெற்ற கோயிலாகும். நம்மாழ்வாருக்கு இந்த ஆலயத்தில், திருவிண்ணகரப்பன் (மூலவர்), பொன்னப்பன் (உற்சவர்), மணியப்பன், என்னப்பன், முத்தப்பன் ஆகிய 5
கோலங்களில் பெருமாள் காட்சி தந்தருளினார். இதில்
முத்தப்பன் சன்னிதி இப்போது இல்லை. உப்பில்லாத நைவேத்தியங்களை ஏற்பதால், ‘உப்பிலியப்பன்’என்றும், ஒப்பில்லாத பெருமை கொண்டவர் என்பதால் ‘ஒப்பிலியப்பன்’ என்றும் இத்தல பெருமாளுக்கு பெயர் வந்தது. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை நம்மாழ்வார்,
பேயாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர். கருவறையில் நின்ற கோலத்தில் உப்பிலியப்பனை தரிசிக்கலாம். அவருக்கு வலதுபுறத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் பூமாதேவியும், இடபுறத்தில் மார்க்கண்டேயரும் காட்சி தருகின்றனர். பாதம் நோக்கியபடி இருக்கும் மூலவரின் வலது கரத்தில்
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(