#மகாசிவராத்திரி அன்று குமரியில் #சிவாயலய_ஓட்டம் என்று ஒன்று நடைபெறுகிறது. இதைப் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன், பகிர்கிறேன். பல புண்ணிய கோயில்களைக் கொண்ட குமரி மாவட்டத்தில் மாசி மாதம் மஹாசிவராத்திரி அன்று நடைபெறும் சிவாலய ஓட்டம் எனும் வழிபாடு சிறப்பு மிக்க ஒன்றாகும்.
சிவராத்திரியின் முதல்நாள் ஆயிரக் கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, விளவங்கோடு, கல்குளம் வட்டங்களில் அமைந்துள்ள திக்குறிச்சி, முஞ்சிறை திருமலை, திருநந்திக்கரை, திற்பரப்பு, பொன்மனை, கல்குளம், பன்னிப்பாகம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிகோடு, திருநட்டாலம்
ஆகிய 12 இடங்களில் அமைந்துள்ள சிவாலயங்களை (110 கிலோமீட்டர் தூரம்) பக்தர்கள் ஓட்டம் கலந்த நடையுடன் சென்று தரிசிப்பது சிவாலய ஓட்டத்தின் சிறப்பு. சைவ,வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி இந்த சிவாலய ஓட்டம் நடத்தப்படுவது மேலும் இவ்வழிபட்டுக்குச் சிறப்பைத் தருகிறது. இந்த ஓட்டத்தில் பங்குபெறும்
பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசியன்று மாலையணிந்து, வேக வைக்காத உணவு வகைகளை உண்டு, சிவராத்திரி தினம் வரை விரதம் மேற்கொள்கின்றனர். மஹா சிவராத்திரியை ஒட்டி இந்த 12 ஆலயங்களையும் ஒரே நாளில் ஓடியே சென்று தரிசனம் செய்யும் இந்த வழிபாட்டு முறை கடந்த 200 ஆண்டுகளாக குமரிமாவட்டத்தில் நடந்து
வருகிறது. இச்சடங்கில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளன. சிவ வழிபாடாக இருந்தாலும் ஓடுபவர்கள் கோவிந்தா கோபாலா என்று கூவிக்கொண்டுதான் ஓட வேண்டும். அவர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்து கையில் ஒரு விசிறி வைத்திருக்க வேண்டும். கோயில்களில் கும்பிடுவதற்குப் பதிலாக இறைவனை நோக்கி விசிறியால் வீச
வேண்டும். சிவாலய ஓட்டம் செல்லும் பக்தர்களுக்கு அரசு சார்பில் டோக்கன் வழங்கப்பட்டு, பொன்மனை சிவன் கோயிலிலும், சிவாலய ஓட்டம் நிறைவுபெறும் திருநட்டாலம் கோயிலிலும் தலா ஒரு இளநீர் மற்றும் பழம் வழங்கும் நடைமுறை இருந்தது. இந்த உத்தரவு 1939 பிப்ரவரி 14-ம் தேதி திருவிதாங்கூர் சமஸ்தான
அரசிதழில் வெளியிடப்பட்டதாகும். கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த பிறகு அந்த நடைமுறை பின்பற்றுவதை மறந்துவிட்டது தமிழக அரசு.(🙁)
சிவாலய ஓட்டம் முஞ்சிறையில் ஆரம்பிக்கும். திருநட்டாலத்தில் முடியும். முஞ்சிறை பெரிய கோயில் ஒரு சிறு குன்றின்மீது உள்ளது. படி ஏறி கோயிலுக்குச்
செல்ல வேண்டும். குமரிமாவட்டத்தில் சிவனும் விஷ்ணுவும் ஒரே கோயிலுக்குள் இருப்பது இங்கு மட்டும் தான். திருநட்டாலத்தில் சங்கரநாராயணர் கோயில் என்று பெயர் இருந்தாலும் ஒரு பெரிய தெப்பக்குளத்தின் இருபக்கமாக இரண்டு கோயில்களாகவே சிவனும் விஷ்ணுவும் உள்ளனர். சிவாலய பக்தர்கள் கடைசியில் விஷ்ணு
கோயிலில்தான் ஓட்டத்தை முடிக்க வேண்டும். இந்த முறை சைவ வைணவ ஒற்றுமையை நாடெங்கும் உருவாக்கிய நாயக்கர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட சடங்காக இது இருந்திருக்கலாம். இந்த சிவாலய ஓட்டத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கையில் ஓலை விசிறியுடனும் ஒரு சிறிய பண முடிச்சுடனும்
ஓடுகின்றனர். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் ஒருவரையொருவர் ஐயப்பா என்று அழைப்பதைப் போல், இவர்கள் தங்களுக்குள் கோவிந்தா என்றே அழைத்துக் கொள்வார்கள். சிவாலய ஓட்டம் ஆரம்பித்த புராண வரலாறு:
பாதி மனித உருவமும் பாதி புலி உருவமும் கொண்டது புருஷாமிருகம் மிகச் சிறந்த சிவபக்தர். சிவனைத்
தவிர வேறு தெய்வத்தை ஏற்கமாட்டார். விஷ்ணுவின் நாமத்தை கூறினாலே இவருக்குப் பிடிக்காது. புருஷாமிருகத்துக்கு ஹரியும் ஹரனும் ஒன்றே என்பதை உணர்த்த விரும்பிய கிருஷ்ணர், பீமனை அழைத்தார். குருக்ஷேத்திர போரில் வெற்றி பெற புருஷாமிருகத்தின் உதவி தேவை என்று கூறியவர், பீமனிடம் 12
ருத்ராட்சங்களைக் கொடுத்து புருஷாமிருகத்திடம் செல்லுமாறும், அப்படி செல்லும்போது தன்னுடைய கோவிந்த நாமத்தை உச்சரிக்கும்படியும் கூறினார். கோவிந்த நாமத்தை உச்சரிப்பதை விரும்பாத புருஷாமிருகம் பீமனைத் துரத்த வரும்போது ஒரு ருத்ராட்சத்தைப் போடும்படியும் கூறினார். பீமனும் கோவிந்த நாமத்தை
உச்சரித்தபடி புருஷாமிருகத்திடம் நெருங்கினான். அது பீமனைத் துரத்த, பீமன் ஒரு ருத்ராட்சத்தை கீழே போட, அது சிவலிங்கமாக மாறியது. புருஷாமிருகம் சிவலிங்கத்தைக் கண்டதும் சிவபூஜையில் ஈடுபட்டது. பிறகு கோவிந்த நாமம் சொன்ன பீமனைத் துரத்தியது. இப்படியாக பீமன் ருத்ராட்சம் போட்ட ஒவ்வோர்
இடத்திலும் ஒரு சிவலிங்கம் தோன்றியது. முதலில் சிவலிங்கம் தோன்றிய இடம் திருமலை. 12-வது ருத்ராட்சம் விழுந்த இடம் நட்டாலம். அங்குதான் சிவன் ஹரியும் ஹரனும் இணைந்த சங்கரநாராயணராக புருஷாமிருகத்துக்கு தரிசனம் தந்து சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்று புருஷாமிருகத்துக்கு மட்டுமல்ல, உலகுக்கே
உணர்த்தினர். புருஷாமிருகத்தின் உதவியும் குருக்ஷேத்திர யுத்தத்திற்குக் கிடைத்தது.
ஓம் நமசிவாய
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 3
Experiences with #MahaPeriyava
It was an evening around 6 pm. Sri Maha Periyava was seated peacefully in a corner of the SriMatham at Kanchi and four or five people were standing beside Him. An old lady, who must have been above sixty, came there. Her head was shaved, and a Image
portion of her white saree covered it. I was also witness to the scene there. The then Government of Tamil Nadu had announced a scheme of granting financial assistance to senior citizens and it had just begun to be implemented. Maha Periyava was conversing with the devotees who
had come there for darshan. It was clear that the old lady was anxious to say something. She was an old resident of the SriMatham. “A petition to Swamigal” the old lady began. “Do you also have problems?” asked Swamigal. Feeling encouraged, the lady said, “Well, It‘s nothing
Read 9 tweets
Mar 3
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் திருவரங்கத்தில்
வடக்கு உத்திர வீதியில் வாழ்ந்த வையாபுரி என்பவர், வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கத் தெற்கு உத்திர வீதிக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் வீதிகளைச் சுற்றித் தெற்கு உத்திர வீதிக்குச் செல்வது சிரமமாக இருக்கும் என்பதால்,
திருவரங்கநாதன் Image
கோயில் வடக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து தெற்கு வாசல் வழியாக வெளியே வந்து தெற்கு உத்திர வீதியில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தார். இவ்வாறே வடக்கு வாசல் வழியாகத் திருக்கோயிலுக்குள் நுழைந்து தெற்கு வாசல் வழியாக வெளியே வந்து தெற்கு உத்திர வீதியில் காய்கறிகளை வாங்கிக
கொண்டார். வடக்கு வாசலை நெருங்கும் சமயம் இடப் புறத்தில் உள்ள ஸ்ரீரங்கநாயகித் தாயாரின் சந்நதியைக் கண்டார். அவர் இறைவனையோ இறைவியையோ வழிபடுவதற்காகக் கோயிலுக்கு வரவில்லை, வீதிகளைச் சுற்றிச் சென்றால் சிரமமாக இருக்கும் என்ற ஒரே காரணத்தால் தான் கோயிலுக்குள் நுழைந்தார். இருந்தாலும்
Read 11 tweets
Mar 2
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் தணிகாசலம் பிரபல பேச்சாளர், சிறந்த ஸ்ரீகிருஷ்ண பக்தர். எங்கும் கிருஷ்ணன், எதிலும் கிருஷ்ணன், பேச்சிலும் கிருஷ்ணன். மூச்சிலும் கிருஷ்ணன். கருத்தரங்கு ஓன்றில் பேச வந்தார். ஒரு தங்க மோதிரமொன்றை தூக்கி பிடித்து சபையோருக்குக் காட்டினார்.
இது சுத்தமான 24 காரட் Image
தங்கத்தினாலான மோதிரம். இதனை பெற்றுக்கொள்ள விரும்புபவர் யார் என அங்கு குழுமியிருந்தவர்களிடம் கேட்டார். சபையில் கைகள் ஒவ்வொன்றாய் உயரத் தொடங்கின. பின்னர் அவர் மெழுகுவர்த்தி ஒன்றை எரியச் செய்து குறடு ஒன்றின் உதவியுடன் அந்த மோதிரத்தை மெழுகுவர்த்திச் ஜூவாலையில் பிடித்தார். சிறிது
நேரத்தில் புகைக்கரி பட்டு அம்மோதிரம் முற்றிலும் கறுப்பாக மாறியது. இப்போது இதனைப் பெற்றுக் கொள்ள யார் விரும்புகிறீர்கள் எனக் கேட்டார். சபையில் இருந்த அனைவருமே கை உயர்த்தினர். கிருஷ்ண கிருஷ்ணா! நல்லது. நான் செய்வதைக் கொஞ்சம் கவனியுங்கள் என்று கூறிய அவர், அந்த மோதிரத்தைக் கீழே போட்ட
Read 9 tweets
Mar 1
#நந்திதேவர் #சிவராத்திரி எல்லா
சிவன் கோவில் வாசலிலும் நந்தி சிலை இருக்கும். இந்த நந்தி சிலை ஏன் வைக்கப்பட்டிருக்கிறது, இதன் வரலாறு என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம். பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர்
சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார். காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார். அதில் தங்க விகரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது. அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர்
வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான ஓதினார். நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்று கொண்ட நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரியாக ஒலித்தார். நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். நந்திதேவரின்
Read 7 tweets
Mar 1
#Shivratri #special #Shivratri2022 #சிவராத்திரி
MahaSwamigal used to be delighted if any devotee brought Kondrai Poo (Cassia Fistula flowers) when they came to see Him, the reason being it was the favourite flower of Lord Shiva. One day a devotee came to see Him bringing with
him a basket full of that Kondrai Poo. He looked at that basket for one full minute and asked, "What else did you bring in that basket?"
"Only Kondrai Poo".
"No, you have not only brought the flower but also an ornament for Lord Shiva!” He said.
Nobody understood what Swamigal
was referring to. He asked the devotee to take the basket some distance away and to empty its contents in a bamboo plate. Suddenly a snake came out of the basket and slithered away!
Filled with excitement the devotee told Him what had happened. Swamigal smiled at him and said,
Read 4 tweets
Feb 28
#UkraineRussiaWar #விரிவான_பார்வை
1917வரை ரஷ்யா தனிநாடு ஆனால் உக்ரைனின் சில பகுதிகள் அவர்களிடம் இருந்தன. உக்ரைன் 1919ல் சோவியத்துடன் இணைந்தது. ரஷ்ய புரட்சிக்கான அடித்தளம் உக்ரைனில் தான் தொடங்கியது. ஹிட்லர் காலத்துக்கு முன்பே ஜார் மன்னன் அங்கு யூதர்களை நொறுக்கி கொண்டிருந்தான்.
செல்லும் இடமெல்லாம் மன்னர்களால் கொடுமைப் படுத்தப் பட்டதால் யூத இனம் அரசர்களை ஒழிக்க ஒரு சித்தாந்தம் உருவாக்கிற்று. அதுதான் கம்யூனிசம். செர்னோபில் விபத்துக்குப் பின் சோவியத் நொறுங்கி விட உக்ரைன் 1990ல் பிரிந்து தனி நாடாகியது. பல வளங்களை கொண்ட உக்ரைன் பிரிந்தவுடன் ரஷ்யா பெரும்
சிக்கலில் மாட்டியது. ஐரோப்பாவுக்கே உணவை கொடுத்த உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும், அமெரிக்கா கோதுமை அனுப்பும் அளவு பொருளாதாரம் வீழ்ந்தது. அந்த குழப்பமான காலகட்டத்தில் தான் உக்ரைனில் இருந்த சோவியத்கால தொழில்நுட்பம் பலற்றை சீனா தூக்கி சென்றது. பொதுவாக ஐரோப்பாவில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள்
Read 24 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(