#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம்’ 'ராம்' என்றே உட்சென்றும், வெளியேறுதலும் வேண்டும். நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் தண்டனையை ஏற்பதும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு
அடியும் ராம் ராம் என்றே நடக்க வேண்டும். எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் ‘ராம நாம ஜெபமே.’ ராம நாம ஜெபத்திற்கு குரு கிடைக்கவேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்லவேண்டியது 'ராம நாமம்.' ராம நாம ஜெபத்தில் நாம் இருந்தால் நமது கர்ம
வினைப்படி ஏதேனும் துக்கமோ அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும். எந்த இடத்திலும், எந்த நிலையிலும் 'ராம நாமத்தைச் சொல்லலாம். எங்கும் உணவு உண்ணுமுன் 'ராம நாமா' சொல்லலாம். இறைவனும் அவனது நாமாவும் ஒன்றே! ராம நாமத்தை எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால்
ராம நாமத்தைச் சொல்ல மனம் மட்டும் போதும். இதைதான் "நா உண்டு, நாமா உண்டு" என்றனர் பெரியோர்கள். ஒரு வீட்டில் உள்ள பெண் ராம நாமத்தைச் சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். அந்த வீட்டினில்
தெய்வீகம் நிறைந்துவிடும். அதுவே கோவிலாகும். எல்லாவித சாஸ்திர அறிவும் ராம நாமாவில் அடங்கும். எல்லாவித நோய்களுக்கும் 'ராம நாமம்’ சிறந்த மருந்து. துன்பங்களுக்கும் அதுவே முடிவு. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அதை ராம நாம ஜெபத்தால் பெற முடியும். ராம நாமாவினால் வினைகள் எரிந்து, எரிந்து
நோய்கள் குறையும். சஞ்சிதம், ஆகாமியம் கருகி ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கபடும். நமது பயணத்தில் பஸ்சிலோ, காரிலோ, ரயிலிலோ, பைக்கிலோ செல்லும் போதும் 'ராம நாமா' சொல்லலாம். அதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும். காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை வழிபாட்டின் போது (சப்தரிஷி பூஜையின்
போது) ஒவ்வொரு நாளும், வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்கிறார்கள். ராம நாமத்தை உரக்க சொல்லுங்கள். காற்றில் ராம நாம அதிர்வு பரவி, நம்மை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்கு உள்ளும் அந்த தூய அதிர்வு ஊடுருவி
தூய்மை மற்றும் அமைதியை கேட்பவருக்கும் தரும். சுற்றியுள்ள மரம், செடி, கொடிகள், பறவைகள், விலங்குகள் எல்லாம் 'ராம நாமத்தைக்’ கேட்டு கேட்டு அவைகளும் மிக உயர்ந்த பிறவிகளை பெறும். ராம நாமவை சொல்லும் பொழுது ஏற்படும் தூய அதிர்வானது காற்றில் பதிந்துள்ள மனிதர்களின் தீய எண்ணங்களால் ஏற்பட்ட
தீய அதிர்வுகளை, தீய சக்திகளை நோய்க் கிருமிகளை அழித்துவிடும். ராம நாம அதிர்வு சாந்தம், பொறுமை, பணிவு, உண்மை, தூய்மைக்கு காரணமான ராமரின் குணங்களை ஏற்படுத்தும்.('யத் பாவோ தத் பவதி'--எதை நினைக்கிறாயோ அதுவே ஆகிறாய்!) ராம நாமத்தைச் சொல்ல சொல்ல நாம் பரப்ரம்மமே ஆகிவிடுகிறோம். அகில
உலகையும் வியாபித்து காக்கும் விந்தை மிக்கதோர் நுண்ணிய சக்தியே ராம். அதுவே உருவம் கொண்டபோது தசரத ராமனாக, சீதாராமானாக, ரகுராமனாக, கோதண்ட ராமனாக பெயருடன் ( நாம ரூபமாக ) வந்தது.
#ஜெய்ஶ்ரீராம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 14
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
தாய், தந்தை, மகள் மூவருமே ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பக்தர்கள். குருவை வணங்குவதில் பணக்காரராக இருந்தாலும் வறுமையில் வாழ்ந்து வந்தனர். பெண் நல்ல அழகானவள் மட்டுமல்ல நல்ல குணமும் கொண்டவள். நன்றாக அவள் படித்தாலும் மேற்கொண்டு அவள் தந்தையால் படிக்க வைக்க முடியவில்லை. Image
பெண் பருவ வயது வந்ததும் தீவிரமாய் வரன் பார்க்க தொடங்கினர். நல்ல வரன் குருவின் அருளால் இனிதாய் அமைந்தது. பிள்ளை வீட்டாரும் வரதட்சினை எதுவும் வேண்டாம் என்றும் உங்களுக்கு எங்கு விருப்பமோ அங்கு திருமணத்தை நடத்துங்கள் என கூறி விட்டனர்.
எல்லாம் குருராயர் அருள்தான் என நினைத்திருந்த
சமயத்தில் அவர்களின் அடுத்த வார்த்தை பெரிய பாறையையே தலையில் தூக்கி வைத்ததை போல உணர்ந்தனர். திருமணத்திற்கு வருபவர்களை நன்றாக உபசரிக்க வேண்டும். அவர்கள் வயிராற உணவு அருந்த வேண்டும் என தெரிவித்தனர். இவர்களும் சரி என்ற உடன் தேதி குறிக்கப் பட்டது. தந்தைக்கோ தன்னுடைய வறுமையிலும் பெண்ணை
Read 15 tweets
Mar 14
#மகாபெரியவா
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தொகுதவர்-கோதண்டராம சர்மா
சாத்தனூர் கிருஷ்ணமூர்த்தி அய்யர் என்பவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன், முதன் முதலாகப் பெரியவா தரிசனத்துக்கு வந்தார். என்ன தோன்றிற்றோ அவருக்கு, பெரியவாளிடம் ஒரு விசித்தரமான வேண்டுகோளை விண்ணப்பித்துக் கொண்டார். Image
"நான் கடைசி மூச்சு விட்டதும், பெரியவாள் 'கங்கா ஜலமும், துளசிதளமும்' பிரசாதமாக கொடுத்தனுப்பி அந்தச் சரீரத்தையும் ஆத்மாவையும் சுத்தப்படுத்தி, நல்ல கதி கிடைக்க அனுக்ரஹம் செய்யணும்”
இந்தப் பிரார்த்தனையைப் பெரியவாளைத் தவிர வேறு யாரும் கேட்கவில்லை. சாத்தனூர் அய்யரும் மற்றவர்களிடம்
சொன்னதில்லை. மஹாராஷ்டிர மாநிலம் சதாராவில் ஸ்ரீ மடம் முகாம் செய்திருந்தபோது, தொலை பேசியில் செய்தி வந்தது. சாத்தனூர் கிருஷ்ணமூர்த்தி அய்யர் சற்றுமுன் சிவலோகப் பிராப்தி அடைந்தார். உரிய சந்தர்ப்பத்தில் பெரியவாளிடம் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. பெரியவா ஒரு நிமிஷம் மௌனமாக
Read 6 tweets
Mar 14
Via WA
எங்கள் பெயர் #காங்கிரஸ் #congress

நாங்கள் இஸ்லாமிய வம்சா வழியைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளியில் தெரியாமல் மறைத்து ராஜதந்திரமாக இந்தியாவை ஆண்டு வந்தோம்.

நாங்கள் இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கு எமதர்மன். சுதந்திரப் போரில் 21 லட்சம் இந்துக்கள் நாடெங்கிலும் குறிப்பாக அதிக Image
எண்ணிக்கையில் சுதந்திரத்திற்கு முன் நவகாளி வங்கத்திலும், சுதந்திரத்திற்கு பின் பாகிஸ்தானிலும், சுதந்திரப்போர் நடைபெற்ற போதும் கொல்லப்பட்டனர். அதற்கு நாங்களே முழுக்க முழுக்க காரணம். இந்துக்களை கொல்ல எங்களது மறைமுக ஆதரவு எப்போதும் உண்டு.

மத ரீதியாக பாகிஸ்தான் பங்ளாதேஷ் என இரண்டாக Image
பிளந்த பிறகு நாங்கள் பித்தலாட்டம் செய்து மூன்றரை கோடி முஸ்லிம்கள் இந்தியாலேயே தங்க வைத்து இந்துக்களுக்கு தீராத தலைவலியை கொடுக்க காரணமான கட்சி எங்கள் காங்கிரஸ் கட்சி. அது போக பிளந்த இரண்டு நாடும் தங்களை முஸ்லிம் நாடுகள் என பிரகடனப்படுத்தியும் கூட இந்துகளுக்குத் துரோகம் இழைக்கவே Image
Read 19 tweets
Mar 13
பூமாதாவே கோமாதாவாக உருக்கொண்டதும் உண்டு. த்வாபரயுகம் முடிகிற நிலைக்கு வந்து, கலியுகம் ஆரம்பிப்பதற்கு முந்தைய ஸமயம். லோகத்திலே துஷ்ட அரசர்களின் ரூபத்தில் அஸுர சக்திகள் தலையோங்கிய அப்போது பூமாதேவியால் அந்தப் பாப பாரத்தைத் தாங்க முடியவில்லை. அப்போது பூமாதேவியும், அவளுடைய சார்பிலே
பிரம்மாவும் மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டு பிரார்த்தித்துக் கொண்டதன் மேல்தான் பகவான் க்ருஷ்ணாவதாரம் பண்ணினார். அந்த ஸமயத்திலே தன்னுடைய முறையீடு பகவானுடைய மனஸைத் தொட்டு இறக்கி அவரை ரக்ஷணத்துக்கு வரும்படிப் பண்ண வேண்டுமானால் தான் அவருடைய பத்னியான பூமாதேவி ரூபத்திலில்லாமல் அதைவிட
ப்ரியத்துக்கும் பரிவுக்கும் உரிய தாயான கோமாதா ரூபத்தில் இருந்தால்தான் முடியும் என்பதால் பூமாதாவே கோமாதாவாக உருவம் எடுத்துக்கொண்டுதான் போனாள் என்று புராணக்கதை இருக்கிறது. அதற்கேற்கத்தான் பகவான் கோபாலனாகப் பிறந்து, அந்த அவதாரத்தில் கோக்களோடு அத்யந்தமாக உறவாடினார். – ஜகத்குரு ஸ்ரீ
Read 4 tweets
Mar 13
ஒரு ஏழை பிராமணன் கங்கைக்கரையில் மனைவியோடு வசித்து வருபவன் தினமும் #கீதை பாராயணம் செய்து விட்டு உஞ்சவிருத்தி செல்வான். கிடைத்ததை மனைவியிடம் கொடுத்து, அன்றைய உணவை கிருஷ்ணனுக்கு நைவேத்யம் பண்ணி விட்டு இருவரும் சாப்பிடுவது வழக்கம். வழக்கம் போல் அன்று கீதையைப் பாராயணம் செய்யும்
போது ஒன்பதாம் அத்தியாயத்தில் ''யோக க்ஷேமம் வஹாம்யஹம்”என்ற இடம் வந்தது. திடீரென்று அவனுக்கு ஒரு சந்தேகம். இந்த உலகத்தில் கோடானு கோடி பேர் உள்ளனர். அவ்வளவு பேரையும் கிருஷ்ணன் எப்படி நான் ரக்ஷிக்கிறேன் என்று சொல்கிறான். தானே ஒவ்வொருவரின் கஷ்டத்தையும் அறிந்து நேரில் சென்று போக்குவது
என்பது முடிகிற காரியமா? திரும்பி திரும்பி படித்தும் அவனுக்கு இது விளங்கவில்லை. இதை எப்படியாவது புரிந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து சிகப்பு வர்ணத்தில் ஒரு X குறியை அந்த அத்தியாயத்தின் ஸ்லோகத்தின் மேல் போட்டான். சொம்பை, ஜால்ராவை எடுத்துக் கொண்டு வழக்கம் போல் உஞ்சவிருத்திக்கு
Read 17 tweets
Mar 12
#விபூதி_உருவானது_எப்படி
பர்னநாதன் என்பவன் உணவையும் தண்ணீரையும் மறந்தவனாக சிவனை நினைத்து கடும் தவம் புரிந்தான். ஒருநாள் அவனுக்கு கடுமையான பசி எடுத்தது. தவம் கலைந்தது. கண்ணைத் திறந்தான். அப்போது அவனை சுற்றி சிங்கங்களும் புலிகளும் பறவைகளும் என பல வன உயிரினங்கள் யாவும் காவலுக்கு
இருந்தன. பசியால் முகம் வாடி இருந்தவனைக் கண்ட பறவைகள் பழங்களைப் பறித்து பர்னநாதன் முன் வைத்தன. இது ஈனின் கருனையே என்று மகிழ்ந்து பசி தீர கனிகளை சாப்பிட்டு முடித்து மீண்டும் தவத்தை தொடர்ந்தான். இப்படியே பல வருடங்கள் கடந்தோடியது. தவத்தை முடித்து கொண்டு சிவ வழிபாட்டை தொடங்கினான். ஒரு
நாள் தர்ப்பை புல்லை அறுக்கும் போது அவன் கையில் கத்திபட்டு இரத்தம் கொட்டியது. ஆனால் அவனுக்கோ எந்த பதற்றமும் இல்லை. குழந்தைக்கு ஆபத்து என்றால் தாய் பதறுவதை போல பதறியது ஈசன் தான். சிவபெருமான் வேடன் உருவில் தோன்றி பர்னநாதன் கையை பிடித்து பார்த்தார். என்ன ஆச்சரியம்! இரத்தம் சொட்டிய
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(