மிகவும் போற்ற தக்க பஞ்ச கன்னியர்களில் ஒருவர் #திரௌபதி. திரௌபதி ஐந்து கணவர்களுடன் வாழ வேண்டும் என்ற ஆசையில் அர்ஜுனனை மணக்கவில்லை. விதிவசத்தால் பஞ்ச பாண்டவர்களுக்கு மனைவியானாள். அதற்குக் காரணம் அவள் முற்பிறவியில் நல்ல கணவன் அமைய தவம் செய்தபோது, இறைவன் அவள் முன் தோன்ற, இறைவனைப்
பார்த்த மகிழ்ச்சியில், ஐந்து முறை நல்ல கணவன் வேண்டும் என்று கேட்க, அவரும் அவ்வரத்தை அளித்துவிட்டார். வரத்தை பெற்ற பிறகு அதிர்ச்சியுற்ற அவளை சமாதானப் படுத்தி இவ்வரத்தினை அடுத்த பிறவியில் அனுபவிக்க அருளினார். அதனால் அவளின் அடுத்த பிறவியில் பஞ்ச பாண்டவர்களுக்கு மனைவியானாள்.
ஒவ்வொருவருடனும் அவள் ஒரு வருடம் வாழ்க்கை நடத்தி பின் அக்னி பிரவேசம் மூலம் நெருப்பில் தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு அடுத்த கணவருடன் சேர்ந்து வாழ்வாள். இல்வாழ்க்கை நன்றாக அமையவேண்டும், நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள், திரௌபதி அம்மன் கோவிலில் தீ மிதி எனப்படும்
பூக்குழியில் இறங்கி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்வதை இன்று கூட பல இடங்களில் நம்மால் பார்க்க முடியும். பஞ்ச பாண்டவர்களின் வனவாசத்தின் போது ஒருமுறை, கிருஷ்ணர் அவர்களை சந்திக்க சென்றிருந்தார். அன்றைய தினம் திரௌபதி பீமனுடன் சேர்ந்து வாழத் தொடங்கும் நாளாக இருந்தது. எப்படி ஒரு
பெண் ஐவரையும் கணவராக ஏற்றுக் கொண்டு குற்ற உணர்ச்சி இல்லாமல் வாழ முடியும் என்ற சந்தேகம் பீமனுக்கு ஏற்கனவே இருந்தது. அன்றைய தினத்தில் சரியாக கிருஷ்ணர் வந்ததால், அவரிடம் இந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள பீமன் எண்ணினான். கிருஷ்ணரை தனிமையில் சந்தித்து, நேற்றுவரை எனக்கு அண்ணியாக, தாய்
ஸ்தானத்தில் இருந்தவரை, எப்படி ஒரு வருஷத்திற்கு நான் மனைவியாக ஏற்க முடியும் என்று கேட்டான். அதற்கு பதிலளித்த கிருஷ்ணரோ, பீமா, நடப்பவை எல்லாம் நம்மை கேட்டு நடப்பதில்லை. ஏற்கனவே இது இப்படி தான் நடக்கும் என்று சொல்லி இருப்பது தான் நடக்கிறது. இதில் நீ வருத்தப்படுவதற்கு எதுவும் இல்லை.
இருந்தாலும் உன் திருப்திக்காக ஒரு விஷயம் சொல்கிறேன் என்றார். இன்று நள்ளிரவு திரௌபதி தனியாக வெளியில் செல்வாள் அல்லவா என்று கேட்டார். அதற்கு பீமனோ, ஆம் ஒரு ஆண்டு முடிந்ததும், நள்ளிரவில் வெளியே சென்றுவிட்டும் பின் சூரிய உதயத்தில் தான் திரும்புவாள் என்று பதிலளித்தான். பின் கிருஷ்ணர்,
பீமனிடம் அப்போது திரௌபதியின் முகம் எப்படி இருக்கும் என்று கேட்டார். அதற்கு அவளது முகத்தில் தேஜஸ் தெரியும் என்றும் அவள் தங்கத்தை போல ஜொலிப்பாள் என்று பதில் கூறினார். பின்னர் அன்றிரவு திரௌபதி வெளியே செல்லும் போது, கிருஷ்ணரும், பீமனும் அவளுக்கு தெரியாமல் பின் தொடர்ந்து சென்றனர்.
அவர்கள் இருவரும் மறைந்திருந்து பார்க்கும் போது, தீ மூட்டிய திரௌபதி, அந்த தீயில் இறங்கினாள். அதிர்ச்சியடைந்த பீமன் அவளை காப்பாற்ற ஓட முயற்சிக்க, கிருஷ்ணர் தடுத்து நிறுத்துகிறார். அங்கே பார் என்று பீமனிடம் சொல்கிறார். தீக்குள் எரிந்தது திரௌபதி இல்லை. அந்த பார்வதி தேவி தன் சுய
உருவில் காட்சி தந்தாள். அந்த அகிலாண்டேஸ்வரியே தீ எனும் போது, தீ எப்படி சுடும்? தீ, நீர், நிலம் என சகலமும் அவள் தானே என்று பீமனுக்கு புரிய வைக்கிறார் கிருஷ்ணன். தொடர்ந்து பேசிய கிருஷ்ணர், பீமா “நீங்கள் ஐந்து பேரும் பஞ்ச பூதங்கள் என்றால் உங்களை ஆளும் மகா சக்தி திரௌபதி. நீங்கள்
ஐம்புலன்கள் என்றால், உங்களின் ஜீவ ஆத்மா தான் திரௌபதி என்று கூறினார். திரௌபதியை விட கன்னியோ, பத்தினியோ இந்த உலகத்தில் யாரும் இல்லை. இதன் உள்ளே உள்ள தத்துவத்தை உணர்ந்தவர்கள் என்னையே உணர்ந்தவர்கள் ஆவர்” என்றார் கிருஷ்ணர்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 24
தமிழுலகின் மிகப் பிரபலமான பின்னணி இசை, மெல்லிசைப் பாடகர் திரு #டிஎம்சௌந்தரராஜன் #TMS பிறந்த நாள் மார்ச் 24 1922. இன்று அவரின் நூறாவது பிறந்த நாள். இசைத் துறையில், கோலிவுட்டில் அவரை பாராட்டும் கொண்டாட்டம் ஏதும் உள்ளதா? தமிழக அரசு இந்தத் தமிழருக்கு (பிறந்தது மதுரை, சௌராஷ்டிரர் ImageImageImageImage
என்றாலும் தமிழ் அவருக்குத் தாய் மொழி போலத் தான்.) விழா எடுக்க வேண்டும். மதுரை வரதராஜப் பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார். இவர் கர்நாடக இசையை முறையாக பயின்றவர். கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் ராதே
என்னை விட்டுப் போகாதேடி தான் இவரின் திரையுலக முதல் பாடல். நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி கால அடையாளம். சினிமாவில் வாய்ப்புத் தேடும் பொருட்டு கோயம்புத்தூர் வருவதற்கு முன் இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு விட்டு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப்
Read 13 tweets
Mar 24
#மகாபெரியவா ஒருமுறை திருவாடனை என்னும் ஊரிலிருந்து பக்தர்கள் கூட்டம் பெரியவாளைத் தரிசிக்க வந்தது. பெரியவா அன்று காஷ்ட மௌனம் இருந்தார். அதாவது, ஒரு சிறு சப்தம் கூட எழுப்பாமல், முழுமையான மௌனத்தில் இருப்பார். வருடத்தில் ஒருநாள் அவர் இப்படி காஷ்ட மௌனம் இருப்பது வழக்கம். முப்பது Image
வருடங்களுக்கும் மேலாக அவர் கடைப்பிடித்து வந்த வழக்கம் இது. ஒரு முறை அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி வந்த சமயத்தில்கூடப் பெரியவா தம் மௌன விரதத்தை விட்டுக் கொடுக்கவில்லை. திருவாடனையிலிருந்து வந்திருந்த பக்தர் கூட்டத்தில் சங்கரன் என்பவரும் இருந்தார். அவர் பிரிட்டிஷ்
ஆட்சியின்போது தேச விடுதலைக்காகப் போராடி, ஆங்கிலேயர்களிடம் தடியடி பட்டு, இரு கண் பார்வையையும் இழந்தவர்.
மடத்துச் சிப்பந்தி வந்திருந்த பக்தர் ஒவ்வொருவரையும் பெரியவாளுக்கு அறிமுகம் செய்துவைக்க, பெரியவா மௌனமாகவே ஆசி வழங்கிக்கொண்டு இருந்தார். சங்கரன் முறை வந்தபோது, அவரையும்
Read 10 tweets
Mar 24
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் தியாகராஜர் தன் வீட்டு திண்ணையில் அமர்ந்து ராம ஜபம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வயதான தம்பதிகள் மற்றும் அவர்களின் ஒரு உதவியாளர் உட்பட மூவர் அங்கு வந்து, நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலிருந்து நடைப்பயணமாய் கோவில்களை தரிசனம் செய்து கொண்டு வருகிறோம். அடுத்து Image
நாங்கள் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். இன்று இருட்டி விட்டது. ஆகவே இன்றிரவு மட்டும் உங்கள் வீட்டு திண்ணையில் தங்கிவிட்டு காலை பொழுது விடிந்ததும் சென்று விடுகிறோம். தயவு செய்து அனுமதி கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். தியாகராஜர் தன் இரு கரங்களையும் கூப்பி அவர்களை வணங்கி வரவேற்றார்.
இன்று இரவு நீங்கள் இங்கேயே தங்கிக் கொள்ளலாம். இரவு உணவிற்கு ஏற்பாடு செய்கிறேன் இங்கேயே நீங்கள் திருப்தியாக சாப்பிடலாம் என்று சொல்லி அவர்களை அமர வைத்தார். தனது மனைவியை அழைத்து இவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு இவர்கள் சாப்பிடுவதற்கு இரவு உணவை ஏற்பாடு செய்து
Read 13 tweets
Mar 24
#ஐயப்பன் #சபரிமலை மணிகண்டன் மகிஷியை வதம் செய்ததும் மலை போல் சரிந்த அவளது உடல் வளரத் தொடங்கியது. இது இப்படி வளர்ந்து கொண்டே இருந்தால் உலகத்திற்கு கேடு என நினைத்த தேவர்கள், அங்கு கிடந்த பாறைகள் பலவற்றை தூக்கிவந்து அவள் உடல் மேல் வைத்தனர். அத்துடன் அதன் வளர்ச்சி நின்று விட்டது. ImageImage
இப்பகுதி #கல்லிடுங்குன்று எனப் பெயர் பெற்றது. (அரனால் #சபரிமலை செல்லும் பக்தர்கள் இந்த இடத்தில் கல்வீசி எறிந்து செல்வது வழக்கமாயிற்று.) தேவர்கள் மகிஷியை வதம் செய்த மணிகண்டனை போற்றி வணங்கினர். இந்திரன், "தாங்கள் வந்த பணி முடிவுற்றது. இனி இந்த இடம் #காந்தமலை என அழைக்கப்படும். Image
இங்கே தேவலோக சிற்பி #விஸ்வகர்மா மூலம் ஒரு மாளிகை எழுப்பி #பொன்னம்பலம் என அதற்கு பெயரிடுகிறேன். தாங்கள் இங்கு எழுந்தருளி தங்களை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டுகிறேன்" என கோரிக்கை வைத்தான். அதனை ஏற்ற மணிகண்டன் அவர்களுக்கு #விஸ்வரூபதரிசனம் தந்து விஸ்வகர்மா அமைத்த
Read 5 tweets
Mar 23
இராவணன் சிவ பக்தன். நான்கு வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தவன். அவன் சிவபெருமானை நோக்கி தவம் இருந்து பெற்ற வரங்கள் ஏராளம். அசுரப் பெண்ணான மண்டோதரி மாயன் என்னும் தேவ தச்சனின் மகள். அவளும் பெரிய சிவ பக்தை. இராமன் அவதார புருஷன், மகாவிஷ்ணு தான் பூமியில் ராமனாக அவதரித்து Image
இருக்கிறான் என்று முதன் முதலில் உணர்ந்தவள் அவளே. சீதையை கொண்டு ராமனிடம் விட்டுவிட்டாலே அவனை இராமன் மன்னித்து விடுவான் என்று புத்திமதி கூறியவள். ஆக, எல்லா அசுரர்களும், இராக்கதர்களும் சிவனையும், பிரம்மாவையும், விஷ்ணுவையும் பிரார்த்தித்து வரம் வாங்கியது அவர்களும் இந்துகளே என்பதை
விளக்குகிறது. ஆனால் சக்தியைத் தீய வழியில் பயன்படுத்தியவர்கள் என்பதை காட்டுகின்றன. ‘அசுரர்களும் இராக்கதர்களும் திராவிடர்கள்’ என பொய் பிரச்சாரம் செய்யும் பொந்தெலிகளுக்கும் அறிவிலிகளுக்கும் இதை எடுத்துச் சொல்லுங்கள். ஆரிய-திராவிட இனவாதம் பேசும் விஷமிகளுக்கு இந்தப் பதிவை பகிருங்கள்.
Read 4 tweets
Mar 23
#MahaPeriyava
A Vaishnavite lady had come for darshan. She prostrated to Sri Maha Periyava according to her tradition and stood in front of Him. One could detect yearning, anxiety, expectation and faith, all in her eyes. Her family was burdened with problems. Sickness and Image
disease, a daughter who had been married for seven or eight years had not been blessed with children, another daughter now going past the marriageable age, a good match could not be found, a son who did not apply himself to study seriously, monetary difficulties and so much more.
She had gone to a Nambudiri in Kerala and sought his advice through astrology and learnt that it was because of disregard of her ancestors, pitru dosha. The rituals for the ancestors had not been done properly. So she was advised to go to Rameswaram, She was a Vaishnavite and her
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(