#மகாபெரியவா ஒருமுறை திருவாடனை என்னும் ஊரிலிருந்து பக்தர்கள் கூட்டம் பெரியவாளைத் தரிசிக்க வந்தது. பெரியவா அன்று காஷ்ட மௌனம் இருந்தார். அதாவது, ஒரு சிறு சப்தம் கூட எழுப்பாமல், முழுமையான மௌனத்தில் இருப்பார். வருடத்தில் ஒருநாள் அவர் இப்படி காஷ்ட மௌனம் இருப்பது வழக்கம். முப்பது
வருடங்களுக்கும் மேலாக அவர் கடைப்பிடித்து வந்த வழக்கம் இது. ஒரு முறை அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி வந்த சமயத்தில்கூடப் பெரியவா தம் மௌன விரதத்தை விட்டுக் கொடுக்கவில்லை. திருவாடனையிலிருந்து வந்திருந்த பக்தர் கூட்டத்தில் சங்கரன் என்பவரும் இருந்தார். அவர் பிரிட்டிஷ்
ஆட்சியின்போது தேச விடுதலைக்காகப் போராடி, ஆங்கிலேயர்களிடம் தடியடி பட்டு, இரு கண் பார்வையையும் இழந்தவர்.
மடத்துச் சிப்பந்தி வந்திருந்த பக்தர் ஒவ்வொருவரையும் பெரியவாளுக்கு அறிமுகம் செய்துவைக்க, பெரியவா மௌனமாகவே ஆசி வழங்கிக்கொண்டு இருந்தார். சங்கரன் முறை வந்தபோது, அவரையும்
பெரியவாளுக்கு அறிமுகம் செய்தார் மடத்துச் சிப்பந்தி. சங்கரனை பெரியவாளுக்கு ஏற்கெனவே தெரியும். சங்கரனைப் பார்த்ததும் பெரியவா உரத்த குரலில், “என்ன சங்கரா? எப்படி இருக்கே, சௌக்கியமா? உன் மனைவியும் குழந்தைகளும் நன்னா இருக்காளா? இன்னும்கூட உன்னால முடிஞ்ச வரைக்கும் தேசத்தொண்டு செஞ்சுண்ட
இருக்கே போலிருக்கே?” என்று கேட்டு, ஆசீர்வதித்தார். சங்கரனுக்கு ரொம்ப சந்தோஷம். மடத்து சிப்பந்திகளுக்கும் மற்றவர்களுக்கும் பெரிய ஆச்சரியம், 3௦ வருஷமாகக் கடைப்பிடித்து வரும் மௌன விரதத்தை முறித்து விட்டாரே பெரியவா என்று! எல்லோரும் பிரசாதம் வாங்கிக் கொண்டு அங்கிருந்து அகன்ற பின்
சிப்பந்திகள் தயங்கித் தயங்கிப் பெரியவாளிடம் சென்று, “பெரியவா எதுக்காக மௌன விரதத்தை முறித்து விட்டீர்கள்? எல்லாருக்கும் மௌனமா ஆசி வழங்கினது போலவே இந்தச் சங்கரனுக்கும் ஆசி வழங்கியிருக்கலாமே? இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா?” என்று கேட்டனர். பெரியவா புன்னகைத்தபடியே, “எல்லாரையும் போல
சங்கரனை நடத்தக் கூடாது. இவனுக்குப் பாவம் கண் தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்கணும்னு அவ்வளவு தூரத்திலேர்ந்து வந்திருக்கான். அவனால் என்னைப் பார்க்க முடியாது. நானும் மௌனமா ஆசீர்வாதம் பண்ணினேன்னா, அது அவனுக்குப் போய்ச் சேராது. நான் அவனைப் பார்த்தேனா, ஆசீர்வாதம் பண்ணினேனான்னு
அவனுக்குத் தெரியாது. மனசுக்குக் குறையா இருக்கும். வருத்தப்படுவான். இந்தத் தேசத்துக்காகத் தன் கண்களை தானம் செஞ்சவன் அவன். அவனுக்காக நான் என் ஆசாரத்தை விட்டுக் கொடுத்தேன்னா ஒண்ணும் குடிமுழுகிப் போயிடாது. அதனால எதுவும் குறைஞ்சுடாது. அவனோட தியாகத்துக்கு முன்னாடி என்னோட ஆசாரம் ஒண்ணுமே
இல்லே!” என்றார் நிதானமாக. பெரியவா வெறும் சாஸ்திர சம்பிரதாயங்களை மட்டும் வறட்டுப் பிடிவாதமாகப் பிடித்துக்கொண்டு இருப்பவர் அல்ல. அதற்கும் மேலாக மனிதாபிமானத்தை, மனித நேயத்தையே விரும்பியவர். இந்த விஷயத்தில் மற்றவர்களுக்குத் தாமே ஒரு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார் என்பதற்கு இந்த
நிகழ்ச்சி ஓர் உதாரணம்!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 25
ஸ்ரீரங்கம் #நம்பெருமாள் பெயர் வர காரணம் -
வைகாசி 17, வைஷ்ணவர்களின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு நாள். அரங்கன் 48 ஆண்டுகள் வனவாசம் சென்று திரும்பி வந்த நாள்! இஸ்லாமிய ஆட்சி இந்தியாவில் ஏற்பட்ட போது, 12 ஆம் நூற்றாண்டில் இந்துகளின் கோவில்களும் கோவில் சொத்துக்களும் அவர்களால் பெருமளவு ImageImageImage
சூறையாடப்பட்டன. மதுரை, ஸ்ரீரங்கம் என பிரசித்தி பெற்ற பல கோவில்கள் தாக்கப்பட்டு அங்கிருந்த விக்ரகங்கள் மற்றும் பெரும் செல்வங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. 1310 ஆம் ஆண்டு படையெடுப்பின் போது, திருவரங்கத்தின் உற்சவர் அழகிய மணவாளன் கவர்ந்து செல்லப்பட்டார். உள்ளூர் பெருமக்கள், கரம்பனூர் Image
பின்சென்றவல்லி மற்றும் அரையர்கள் ஆகியோர் 8 ஆண்டுகள் முயற்சிகள் பல செய்து டெல்லி வரை சென்று அழகிய மணவாளனை மீட்டு வந்தனர் ஆனால், 1323 ஆம் ஆண்டு இஸ்லாமிய படையெடுப்பின் போது, பிள்ளை லோகாச்சாரியார் என்கிற வைணவப் பெரியவர் மூலவர் ரங்கநாதரையும், ரங்கநாயகியையும் சுவர் எழுப்பி மறைத்து
Read 17 tweets
Mar 25
ஏன் #நாலு #நான்கு என்கிற எண்ணிக்கை/சொல் விசேஷம்?
நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க.
நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல.
நாலு காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல.
நாலு ஊரு சுற்றினாதான் உலகம் புரியும்.
அவரு நாலும் தெரிஞ்சவரு, நாலும் புரிஞ்சவரு.
நாலு வார்த்த நறுக்குன்னு Image
கேக்கணும்.
நாலு பேருக்கு நன்றி.
இப்படி நாலுக்கு ஏக மரியாதை! இந்த நாலு வேறு எங்கெல்லாம் வருகிறது என்று பார்ப்போம்.
சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில் பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாலு நாற்பது மற்றும் எட்டுத் தொகையில் நானூறு, பிரபந்தத்தில் நாலாயிரம் என 4 வரும். Image
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்” ஔவையாரின் நால்வழி நீதி நூலில் கடவுள் வாழ்த்து பாடல்.
நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, அக நானூறு, புற நானூறு, நாலாயிர திவ்ய பிரபந்தம்!
தவிர சொலவடை, நாலும் இரண்டும் சொல்லுக்கு ImageImageImageImage
Read 11 tweets
Mar 25
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் காஞ்சி மாவட்டத்தில் உள்ள அய்யங்கார்குளம் என்ற ஊரில் தான் இந்த அதிசய கோவிலுள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு செல்லும் வழியில் காஞ்சியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் இருக்கிறது கலவை கிராமம். இங்குதான் #சஞ்சீவிராயர்_ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்து ImageImage
உள்ளது. முன்புறத்தில் நெடிதுயர்ந்த தூண்களுடன் காட்சி தரும் இந்தக் கோவில் உள்ளது. சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துக் கொண்டு ஆஞ்சநேயர் பறக்கும்போது மலையை ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாற்றினாராம். அப்போது மலையிலிருந்து ஒரு சிறு பாகம் கீழே விழ, அந்த இடத்தில் சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் ImageImage
கோயில் உருவானதாக நம்பிக்கை. 1585-1614ல் விஜயநகரை ஆண்ட வேங்கடபதி என்ற மன்னனின் அமைச்சராகப் பணி புரிந்தவர் ஸ்ரீலட்சுமி குமாரதேசிகன். அவர் ஒரு முறை ஸ்தல யாத்திரை வந்தபோது இந்த இடத்தில் தங்கினார். அப்போது அவருடைய கனவில் ஆஞ்சநேயர் வந்து அருள்பாலித்தார். எனவே அவர் இக்கோயிலை கட்டினார்.
Read 13 tweets
Mar 24
தமிழுலகின் மிகப் பிரபலமான பின்னணி இசை, மெல்லிசைப் பாடகர் திரு #டிஎம்சௌந்தரராஜன் #TMS பிறந்த நாள் மார்ச் 24 1922. இன்று அவரின் நூறாவது பிறந்த நாள். இசைத் துறையில், கோலிவுட்டில் அவரை பாராட்டும் கொண்டாட்டம் ஏதும் உள்ளதா? தமிழக அரசு இந்தத் தமிழருக்கு (பிறந்தது மதுரை, சௌராஷ்டிரர் ImageImageImageImage
என்றாலும் தமிழ் அவருக்குத் தாய் மொழி போலத் தான்.) விழா எடுக்க வேண்டும். மதுரை வரதராஜப் பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார். இவர் கர்நாடக இசையை முறையாக பயின்றவர். கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் ராதே
என்னை விட்டுப் போகாதேடி தான் இவரின் திரையுலக முதல் பாடல். நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி கால அடையாளம். சினிமாவில் வாய்ப்புத் தேடும் பொருட்டு கோயம்புத்தூர் வருவதற்கு முன் இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு விட்டு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப்
Read 13 tweets
Mar 24
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் தியாகராஜர் தன் வீட்டு திண்ணையில் அமர்ந்து ராம ஜபம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வயதான தம்பதிகள் மற்றும் அவர்களின் ஒரு உதவியாளர் உட்பட மூவர் அங்கு வந்து, நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலிருந்து நடைப்பயணமாய் கோவில்களை தரிசனம் செய்து கொண்டு வருகிறோம். அடுத்து
நாங்கள் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். இன்று இருட்டி விட்டது. ஆகவே இன்றிரவு மட்டும் உங்கள் வீட்டு திண்ணையில் தங்கிவிட்டு காலை பொழுது விடிந்ததும் சென்று விடுகிறோம். தயவு செய்து அனுமதி கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். தியாகராஜர் தன் இரு கரங்களையும் கூப்பி அவர்களை வணங்கி வரவேற்றார்.
இன்று இரவு நீங்கள் இங்கேயே தங்கிக் கொள்ளலாம். இரவு உணவிற்கு ஏற்பாடு செய்கிறேன் இங்கேயே நீங்கள் திருப்தியாக சாப்பிடலாம் என்று சொல்லி அவர்களை அமர வைத்தார். தனது மனைவியை அழைத்து இவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு இவர்கள் சாப்பிடுவதற்கு இரவு உணவை ஏற்பாடு செய்து
Read 13 tweets
Mar 24
#ஐயப்பன் #சபரிமலை மணிகண்டன் மகிஷியை வதம் செய்ததும் மலை போல் சரிந்த அவளது உடல் வளரத் தொடங்கியது. இது இப்படி வளர்ந்து கொண்டே இருந்தால் உலகத்திற்கு கேடு என நினைத்த தேவர்கள், அங்கு கிடந்த பாறைகள் பலவற்றை தூக்கிவந்து அவள் உடல் மேல் வைத்தனர். அத்துடன் அதன் வளர்ச்சி நின்று விட்டது.
இப்பகுதி #கல்லிடுங்குன்று எனப் பெயர் பெற்றது. (அரனால் #சபரிமலை செல்லும் பக்தர்கள் இந்த இடத்தில் கல்வீசி எறிந்து செல்வது வழக்கமாயிற்று.) தேவர்கள் மகிஷியை வதம் செய்த மணிகண்டனை போற்றி வணங்கினர். இந்திரன், "தாங்கள் வந்த பணி முடிவுற்றது. இனி இந்த இடம் #காந்தமலை என அழைக்கப்படும்.
இங்கே தேவலோக சிற்பி #விஸ்வகர்மா மூலம் ஒரு மாளிகை எழுப்பி #பொன்னம்பலம் என அதற்கு பெயரிடுகிறேன். தாங்கள் இங்கு எழுந்தருளி தங்களை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டுகிறேன்" என கோரிக்கை வைத்தான். அதனை ஏற்ற மணிகண்டன் அவர்களுக்கு #விஸ்வரூபதரிசனம் தந்து விஸ்வகர்மா அமைத்த
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(