#மகாபெரியவா மகா பெரியவா காஞ்சி மடத்தில் அருளொளி துலங்க அமர்ந்திருந்தார். அப்போது ஓர் அடியவர் பெரியவாளிடம் உரிமையோடு கேட்டார். "சுவாமி வெளிநாட்டைச் சேர்ந்தவரான #பால்பிரண்டனுக்கு அவர் தங்கியிருந்த உணவகத்தில் நள்ளிரவில் காற்று வெளியில் தோன்றி நீங்கள் காட்சி கொடுத்தீர்களாமே! அது
பெரியவாளின் நிஜமான தோற்றம் தான், என் மனப் பிரமையல்ல என்று அவர் தன் புத்தகத்தில் அந்த சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறார். அப்படியானால் இங்கிருந்து கொண்டே இன்னோர் இடத்தில் உங்களால் தோன்ற முடியுமா?”
இந்தக் கேள்விக்குப் பெரியவா என்ன பதில் சொல்லப் போகிறார் என்று எல்லாரும் ஆவலோடு
காத்திருந்தனர். அந்த பதில் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன், அந்தக் கேள்வியின் பின்னணியைத் தெரிந்து கொள்வோம். கே.எஸ். வெங்கடரமணி ஓர் எழுத்தாளர். ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எழுதியவர். முருகன் அல்லது உழவன், கந்தன் ஒரு தேச பக்தன் போன்ற நாவல்களால் தமிழ் இலக்கியத்தை
அலங்கரித்தவர். ரவீந்திரநாத் தாகூருக்கு அவரிடம் மதிப்புண்டு. காஞ்சிப் பெரியவரிடம் அவருக்கு விசேஷ மரியாதை இருந்தது.
பால்பிரண்டன் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பத்திரிகையாளர். தத்துவ ஞானி. பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்த யாத்ரீகர். 1898 அக்டோபர் 21ல் பிறந்து, 1981 ஜூலை 27ல் மறைந்தவர்
இரண்டாம் உலக யுத்தத்தின் போது அவர் தம் நாட்களை இந்தியாவில் தான் கழித்தார். மைசூரு மகாராஜா ஸ்ரீகிருஷ்ண ராஜா அவரைத் தம் விருந்தினராகத் தங்கவைத்துக் கொண்டார். பால் பிரண்டன் தமது "தி க்வெஸ்ட் ஆப் தி ஓவர்செல்ப்" என்ற நூலை மகாராஜாவுக்குத் தான் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
பிரண்டனுக்கு
மிக உயர்ந்த ஆன்மிக நாட்டம் இருந்தது. அவரது ஆன்மிக நாட்டம் மதங்கடந்து எல்லா மதச் சான்றோர்களையும் போற்றுவது. முக்கியமாக இந்து மதத் துறவியரின் ஆன்மிக வெள்ளத்தில் அவர் திளைத்து வந்தார். இந்து மதத்தின் #சனாதனதர்மம் எத்தகைய அபூர்வமான ஆன்மிக நெறி என்பதை அறிந்து, நம் மதத்தின்பால் அளவற்ற
மதிப்பும் ஈடுபாடும் கொண்டார்.
காஞ்சிப் பெரியவரைப் பற்றி அவர் கேள்விப்பட்ட விஷயங்கள் அவரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர் மனத்தில் தோற்றுவித்தன. முன்னரே தமக்கு நன்கு தெரிந்த எழுத்தாளர் கே.எஸ். வெங்கடரமணியை இதன் பொருட்டு அணுகினார். பால்பிரண்டனின் ஆன்மிக தாகத்தை
உணர்ந்திருந்த வெங்கடரமணி, அவரைப் பெரியவாளிடம் அழைத்துச் செல்ல மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார். 1931, ஜனவரியில் ஒருநாள் பெரியவா செங்கல்பட்டில் முகாமிட்டிருந்த காலம். பால் பிரண்டனுடன் சென்னையிலிருந்து செங்கல்பட்டு சென்றார் கே.எஸ். வெங்கடரமணி. பெரியவாளிடம் பால்பிரண்டனது ஆன்மிக
வேட்கையை எடுத்துச் சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தார்.
பெரியவா அந்த வெளிதேச மனிதரைக் கனிவோடு பார்த்தார். ஆன்மிகத்திற்கு எல்லையே கிடையாது என்கிற போது, தேச, மத வேறுபாடு எங்கே வந்தது! அவரவரும் அவரவர்மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டு நிம்மதி காண வேண்டும் என்பதே பெரியவ உபதேசம்! காஞ்சி
மடத்தின் அருகேயுள்ள மசூதியிலிருந்து மாலை நேரம் தொழுகை ஒலி கேட்கும் போது, அது இறைவனைத் தனக்கு நினைவு படுத்துவதாகவும் எனவே அந்த ஒலியைத் தடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்திய மெய்ஞ்ஞானி அல்லவா அவர்! பெரியவாளின் அருட்பார்வை பால்பிரண்டனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அந்தத் தெய்வீக
மனிதரின் சந்நிதியில் பெரும் சாந்தியை உணர்ந்தது அவர் உள்ளம். இவரையே தம் குருவாக வரித்தால் என்ன இவரிடமிருந்து ஏதும் உபதேசம் பெற்றால் என்ன என்று எண்ணியது. பால்பிரண்டன் எதையும் வாய்விட்டுச் சொல்ல வேண்டியது அவசியமா? எதையாவது நினைத்தாலே போதுமே! தன் முன் உள்ள மனிதர்களின் மனதைப் புத்தகம்
படிப்பது போல படித்து விடும் ஆற்றல் கொண்ட பெரியவா பால்பிரண்டனை அன்போடு பார்த்து, "அன்பனே! உனக்கு ஒரு குரு வேண்டும் அவ்வளவு தானே? நீ உபதேசம் பெற விரும்புகிறாய் அல்லவா? நான் இங்கே ஒரு மடத்தைச் சார்ந்திருக்கிறேன். இந்த மடத்தின் மடாதிபதியாய் இருக்கிறேன். இந்த மடத்திற்கென்று சில கட்டு
பாடுகளுண்டு. அவற்றை நான் மீற முடியாது. உனக்கு உபதேசம் செய்யக் கூடிய ஆன்மிகவாதி திருவண்ணாமலையில் உள்ளார். #ரமணமகரிஷி என்பது அவரது நாமம். நீ வெளிதேசம் திரும்புவதற்கு முன் கட்டாயம் அவரைச் சென்று சந்திப்பாய். உன் வாழ்க்கை மேலும் சிறப்படையும்”
வலக்கரம் உயர்த்தி ஆசீர்வதித்தார் பெரியவா.
பால்பிரண்டனின் விழிகள் பக்திக் கண்ணீரால் பனித்தன. சென்னை திரும்பினார். அவரது நெஞ்சில் பெரியவாளின் திருமுகமே நிறைந்திருந்தது. தாம் தங்கிய உணவகத்தில் தம் அறையில் இரவு படுத்து உறங்கினார். அவருக்கு ரமணரைத் தரிசிக்க நேரமில்லை. மறு நாளே விமானத்தில் சுவிட்சர்லாந்து போக வேண்டியிருந்தது.
இன்னொரு முறைதான் அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்து உறங்கப் போனார். ஆழ்ந்து உறங்கியபோது திடீரென யாரோ அவரைத் தட்டி அழைத்தது போல் இருந்தது. திகைப்போடு கண் திறந்து பார்த்தார். அவர் தங்கியிருந்த அறைக்கதவு உள்ளே தாழ் போட்டுப் பூட்டித்தான் இருந்தது. ஆனால், அறைக்கு உள்ளே கம்பீரமாக
நின்று கொண்டிருந்தார் பெரியவா. எப்படி அறைக்குள் வந்தார் அவர்? அவரைச் சுற்றிப் புனிதமான பொன்னொளி பரவியிருந்தது. மீண்டும் அதே கனிவான அருள் பார்வை. இது நிஜமா பொய்த் தோற்றமா! பால் பிரண்டன் தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டார். நிஜம் தான். எள்ளளவும் பொய்யில்லை. அவர் தன்னைத் தானே
கிள்ளிக் கொள்வதைப் பார்த்து பெரியவா முகத்தில் மெல்லிய குறும்பு கலந்த புன்முறுவல். பெரியவா கனிவோடு தேனினும் இனிய மதுரக் குரலில் சொல்லலானார்,
"அன்பனே! ரமண மகரிஷியைச் சென்று சந்திக்க மறக்காதே. பயணத்தைத் தள்ளிப் போடு. ரமணரை நீ தரிசிப்பது மிக முக்கியம். அந்தச் சந்திப்பு உன் வாழ்வின்
திசையை மாற்றும்” சொல்லிவிட்டுப் பெரியவா காற்றில் கலந்து மறைந்து போனார்! இது கனவல்ல, நூறு சதவீத நிஜம் என்றுணர்ந்த பிரண்டனின் விழிகளில் கண்ணீர் வழிந்தது. பிறகு, பிரண்டன் ரமணரைச் சென்று பார்த்தார் என்பது அவரது வரலாறு. இந்த சம்பவத்தைத் தான் தன் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்
பால்பிரண்டன். பெரியவாளைக் கேள்வி கேட்ட அன்பர் இந்த சம்பவத்தைப் பற்றித் தான் கேட்டார். கேள்வி கேட்டவரையே, பரிவோடு சற்று நேரம் பார்த்த பெரியவா பிறகு ஒரு முறுவலுடன் சொன்னார்,
"அதனால் தான் நான் எப்போதும் சொல்கிறேன். தூங்குவதற்கு முன் நல்ல நினைவுகளையே நினைத்துக் கொண்டு தூங்க வேண்டும்”
சொல்லி விட்டுப் பெரியவா எழுந்து மடத்திற்குள் போய்விட்டார். அந்த பதில் மூலம் எல்லார் மனதிற்குள்ளும் போய்விட்டார். அவரது பதிலைக் கேட்ட சிலர், கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். சிலர் கீழே விழுந்து நமஸ்கரித்தார்கள். தான் செய்த அற்புதத்தைக் கூடத் தானே ஒப்புக் கொள்ள மறுத்தவர் போல
புறந்தள்ளும் அவரது முற்றும் துறந்த துறவு நிலை கண்டு கேள்வி கேட்டவரின் கன்னங்களில் பக்திக் கண்ணீர் வழியத் தொடங்கியது.
மகாபெரியவா சரணம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Oct 25
#நெற்றியில்_விபூதி_அணிவதின்_மகிமை
#துர்வாசர் தன் காலை வேளை அனுஷ்டானங்களை முடித்து, சிவனை தியானித்து நெற்றியில் திருநீறு அணிந்து பித்ரு லோகம் புறப்பட்டார். அவர் செல்லும் வழியில் பெரிய கிணறு ஒன்று தென்பட்டது. இவ்வளவு பெரிய கிணறை நாம் பார்த்ததே இல்லையே என்கிற சிந்தனையுடன் அதனுள் ஒரு Image
ஒரு கணம் கண்களைச் சுருக்கி எட்டிப் பார்த்து விட்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்தார். அந்தப் பெரிய கிணற்றினுள் பூலோகத்தில் பாவம் செய்த பலரும் அங்கே வதைபட்டுக்
கொண்டிருந்தார்கள். சொல்ல
முடியாத துயரத்தை அனுபவித்துக்
கொண்டிருந்தார்கள். துர்வாச முனிவர் குனிந்து அங்கே பார்த்து விட்டு
நகர்ந்த மறுகணமே திடீரென்று அங்கே நிலைமை தலைகீழாக மாறியது. அந்த நரகத்தில் அதிசயம் நடந்தது. பாம்புகளும் தேள்களும்
மலர் மாலைகள் ஆயின. அமில மழையானது ஆனந்தம் தரும் நிஜ மழை ஆனது. சுட்டெரிக்கும் தீ, இதமான தென்றலாக வருடியது. நரகம் முழுக்க சுகந்த நறுமணம் வீசியது. அங்கே இருந்த பாவ
Read 8 tweets
Oct 24
#நரகாசுரன்_யார்
இப்போது உள்ள நேபாளத்துக்கு அருகே உள்ள பிரக்யோதிஷ்பூர் என்ற பூமியின் மன்னனாக இருந்தவன்தான் நரகாசுரன். மக்களுக்கு மட்டும் அல்லாமல் தேவர்களுக்கும் பெரும் மிரட்டலாக, பயங்கர அச்சுறுத்தலாக இருந்தவன் நரகாசுரன். நரகாசுரன், பூதேவியின் மகன். கடும் தவம் இருந்த நரகாசுரன், Image
பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். அதாவது, எனது தாயாரின் கையால்தான் எனக்கு மரணம் நிகழ வேண்டும். வேறு யாரும் என்னை அழிக்க முடியாது என்பதுதான் அந்த வரம். நரகாசுரனின் கடும் தவத்தை மெச்சிய பிரம்மனும், வேறு வழியின்றி அந்த வரம் கொடுக்கிறார். அதன் பிறகு நரகாசுரனின் அட்டகாசம்
அதிகரிக்கிறது. கடவுள்களின் அன்னை என்று கூறப்படும் அதிதியின் காது வளையங்களையே திருடியவன் நரகாசுரன். அது மட்டுமா, பல்வேறு கடவுளர்களின் 16 ஆயிரம் மகள்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன். நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துப் போனதையடுத்து அனைத்து கடவுளரும்
Read 8 tweets
Oct 24
#MahaPeriyava This incident was narrated by Mukkur Srinivasa Varadacharyar Swamigal, the man responsible for Ashtalakshmi Temple in Chennai. This was about 35 years ago. MahaPeriyava was staying in Chennai for a few months, blessing people and giving discourses. He continued his Image
yatra and stayed for a few days in a brick tiles manufacturing factory at Noombal in the Poonamallee high road. I went to have darshan of Paramacharya one evening, accompanied by a Sethji from Calcutta who was a wealthy philanthropist. In the usual way I prostrated to the Sage,
and Sethji did in a similar manner. I joined my palms and stood meekly. Looking at us once and raising his head, Paramacharya asked, "You told me earlier once, was it about this man?" He was matchless in his memory power. I agreed to his words quietly. Let me tell about Sethji.
Read 29 tweets
Oct 24
#HappyDeepavali #HappyDiwali Once, it so happened that Lord Krishna was standing in front of the mirror adorning himself. He was trying on different crowns on his head and putting on some fine jewelry while his charioteer waited outside with the chariot ready.
His charioteer Image
waited and waited and thought to himself – usually Krishna comes immediately, today he has still not come. So, out of curiosity he went inside to find out if the program was still on because Krishna was very unpredictable, anytime anything could change. So, the charioteer goes
inside and he sees Lord Krishna standing in front of the mirror admiring himself. He politely asked, “My dear Lord, tell me, why are you dressing up so much today. Where are we going?”Lord Krishna said, “I am going to meet Duryodhana.”
The charioteer said, “You are dressing up so
Read 6 tweets
Oct 23
All #Hindu festivities have now become festivals celebrated by atheists, people not following any denomination, above all followed by other religious people! This is the current alarming trend. Let me narrate and reiterate why we celebrate Deepavali/Diwali. This #HinduFestival ImageImage
symbolizes the spiritual "victory of light over darkness, good over evil, and knowledge over ignorance". It is a Festival of Lights as the name suggests. In North India it is associated with Lakshmi, goddess of prosperity and Ganesha, god of wisdom and the remover of obstacles,
with many other regional traditions connecting it to Sita and Rama, Vishnu, Krishna, Durga, Shiva, Kali, Hanuman, Kubera, Yama, Yami, Dhanvantari, or Vishvakarma. It is a celebration of the day Rama returned to his kingdom in Ayodhya with his wife Sita and his brother Lakshmana Image
Read 13 tweets
Oct 23
#நற்சிந்தனை
வழக்கமான பாதையில் அலுவலகத்தில் இருந்து வந்துகொண்டிருந்த வேலுவிற்கு தன் மனைவி பூ வாங்கி வரச் சொன்னது திடீரென ஞாபகத்திற்கு வந்தது. சாலையோரத்தில் பூ விற்றுக் கொண்டு இருக்கும் பூக்காரக் கிழவியைப் பார்த்தார் வேலு. இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அந்த மூதாட்டியிடம் இரண்டு முழம் Image
மல்லிகைப் பூ வாங்கினார். முழம் பதினைந்து ரூபாய். அந்த அம்மாளுக்கு ₹30 கொடுக்க வேண்டும். இவரிடம் சில்லரை இல்லை. ₹100 நோட்டை நீட்டினார். அந்தப் பாட்டியிடமும் ₹70 திருப்பிக் கொடுப்பதற்குச் சில்லரை இல்லை. "நூறு ரூபாயை இன்றைக்கு வைத்துக் கொள்ளுங்கள் பாட்டி. நாளை இதே வழியில்தான்
வருவேன். அப்போது உங்களிடம் மீதி ₹70 வாங்கிக் கொள்கிறேன்" என்றார் வேலு.
"தம்பி நூறு ரூபாயை நீயே வைத்துக் கொள். நாளை இந்தப் பாதையில் வரும் போது முப்பது ரூபாயைத் தா. நீ என்னை நம்புகிற மாதிரி நானும் உன்னை நம்புகிறேன். நான் வயசானவள். திடீரென ஏதோ நேர்ந்து நான் காலமாகி விட்டால் நேரே
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(