My Authors
Read all threads
#Thread
#தெரிஞ்சிக்கோங்க
#இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு பற்றி எனக்கு புரிதல் இல்லாமல் இருந்தது சிறிது தேடலில் கிடைத்த விஷயத்தை பகிர்கிறேன்

வகுப்புரிமையே இட ஒதுக்கீட்டின் அடிப்படை.

வகுப்புரிமை என்பது என்ன?
ஒவ்வொரு வகுப்பின் மக்கள்தொகைக்கு ஏற்ப கல்வியிலும் அரசாங்கப் பணிகளிலும் தம் சார்புத்துவத்தை பெற்றிருக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு சமூகத்தில் 100 பேர் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அதில்
வகுப்பு A வின் மக்கள்தொகை 20 பேர்.

வகுப்பு B யின் மக்கள் தொகை 30 பேர்.

வகுப்பு C யின் மக்கள் தொகை 50 பேர்.

இச்சமூகத்தில் 10 அரசு அலுவலர்கள் இருந்தால் அதில் 2 அரசு அலுவலர்கள் வகுப்பு A யைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
3 அரசு அலுவலர்கள் வகுப்பு B யைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். 5 அரசு அலுவலர்கள் வகுப்பு C யைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.

இது அந்தந்த வகுப்புகளின் உரிமை. இதுவே சமூக நீதி.
இப்படி அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய இடத்தை அவர்களுக்கு ஒதுக்கி அவர்களின் உரிமையை பாதுகாப்பதுதான் இடஒதுக்கீடு.

ஏன் சாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு?

உலகில் பல நாடுகளில் நிறத்தின் அடிப்படையில் மக்கள் பிரிக்கப்பட்டார்கள் (கருப்பர், வெள்ளையர்). மதத்தின் அடிப்படையிலும்
பிரிக்கப் பட்டார்கள். வெள்ளையர் கருப்பரை ஒடுக்கினர். பெரும்பான்மை மதத்தவர் சிறுபான்மை மதத்தவரை ஒடுக்கினர்.

ஆனால் இந்தியாவில் மக்கள் வர்ணத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு நான்கு படிநிலைகளில் வைக்கப்பட்டார்கள்.
பிராமணன் முதல் படியில் இருந்து கொண்டான் வர்ணப் பாகுபாட்டை உருவாக்கியவதே அவர்கள்தானே.

அதற்கடுத்து சத்திரியனும்,
அதற்கடுத்து வைசியனும்
அதற்கடுத்து சூத்திரனும்
வைக்கப்பட்டனர்.

மேலிருப்பவன் அவனுக்குக் கீழ் இருக்கும் மூன்று நிலை மனிதர்களையும் சுரண்டினான்.
இரண்டாம் அடுக்கிலிருப்பவன் அவனுக்குக் கீழ் இருப்பவர்களை,

அடுத்து அவனுக்குக் கீழ் என படிநிலை அடிப்படையில் மக்கள் ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்டார்கள்.

கல்வி பிராமணனுக்கு உரியது மற்றவர்கள் படிக்கக் கூடாது என்று சாத்திரங்கள் மூலம் வரையறுக்கப்பட்டதால் கல்வியின் மூலமாகக் கிடைக்கும்
அரச பதவிகளிலும் அதிகாரத்திலும் அவர்களே ஆக்கிரமித்திருந்தனர்.

மற்ற வகுப்பினருக்கு இவைகள் அனைத்தும் மறுக்கப்பட்டன. இதுவே சமூக அநீதி. இந்த படிநிலையினை வகுப்பு எனக் கொள்க. வகுப்புக்குள் பின்பு ஆயிரம் சாதிகள் முளைத்தன.
இதை களைவதற்காகவே எந்தெந்த வகுப்பினருக்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்பட்டனவோ அந்த சாதியினரின் சமூக கல்வி நிலையை கண்டறிந்து அந்த வகுப்பு மக்களுக்கென கல்வியிலும் அரச அதிகாரங்களிலும் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
இடஒதுக்கீடு ஏன் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொள்ளக் கூடாது?

வர்ணாசிரம ஒடுக்குமுறை பொருளாதாரக் காரணங்களால் நிகழவில்லை. ஏழையாக இருந்ததால் ஒருவனுக்குக் கல்வி மறுக்கப்படவில்லை.
கீழ்வர்ணத்தவனாக இருந்ததால்தான் கல்வி மறுக்கப்பட்டது. ஒரு பார்ப்பனன் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் அவனுக்குக் கல்வி அளிக்கப்பட்டது.

ஒரு சூத்திரன் பணம் படைத்தவனாக இருந்தாலும் அவனுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. அவன் மீது தீண்டாமை புகுத்தப்பட்டது.
இரண்டாவது ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலைமை நிலையானதல்ல. இன்று பணக்காரனாக இருப்பவன் நாளை ஏழையாகலாம். இன்று பத்து ஏக்கரில் தென்னந்தேப்பு வைத்திருப்பவன் ஒக்கி புயல்போல ஒரு புயல் வந்தால் அவன் ஏழையாகிவிடுவான்.
எனவே எக்காரணம் கொண்டும் பொருளாதாரத்தை இடஒதுக்கீட்டுக்க காரணியாக எடுத்துக் கொள்ள இயலாது.

இட ஒதுக்கீடு என்பது சலுகையா?

இல்லை.
மேலே கூறியபடி மக்கள்தொகையின் அடிப்படையிலேயே இடங்கள் ஒதுக்கப்படுகிறது. எனவே அந்தந்த வகுப்புக்கு உரிய இடங்கள் மட்டுமே அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இது சலுகை அல்ல. அவர்களின் உரிமை.

இடஒதுக்கீடு வழங்குவது ஏழ்மையை அகற்றவா?

இல்லை.
நாடு விடுதலை அடைந்து 1952 ல் போடப்பட்ட சமூக மேம்பாட்டுத் திட்டம் முதல் தற்போது செயல்பாட்டில் இருக்கும்(!) ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் வரை வறுமை ஒழிப்புக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் ஏராளமான திட்டங்களை மத்திய அரசும் மாநில அரசுகளும் ஏற்படுத்தியுள்ளன.
இவைதான் ஏழ்மையை ஒழிப்பதற்கான திட்டங்கள்.

இடஒதுக்கீட்டின் நோக்கம் அதிகார சார்புத்துவம்தானே ஒழிய வறுமை ஒழிப்பு அல்ல.

இதனால்தான் உயர்சாதியினருக்கு தரப்பட்டிருக்கும் 10% EWS இட ஒதுக்கீடு முறைகேடானது என்று கூறுகிறோம்.
அரசாங்கப் பதவிகளில் ஏற்னவே இருக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டையே முறையாக பின்பற்றப்படவில்லை.

இந்த உயர் வகுப்பினரின் விகிதம் மற்ற வகுப்பினரைக் காட்டிலும் பன்மடங்கு உள்ளது. இந்தியாவின் உயர் பதவிகள் அனைத்தும் இவர்கள் வசமே உள்ளன.
இவர்களுக்கு படிக்க வசிதியில்லை யென்றால் கல்வி உதவித் தொகைகள் தரலாம், கல்விக் கடன்கள் வழங்கலாம். தொழில் தொடங்க முத்ரா போன்ற கடன்கள் தரலாம். ஆனால் இட ஒதுக்கீடு வழங்குவது சமூக அநீதி.

இடஒதுக்கீட்டால் திறமையானவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுகிறதா?

இல்லை.
இது உயர்சாதியினர் மட்டுமே திறமையானவர்கள் என்ற போலியான பிம்பத்திலிருந்து எழும் கேள்வி. உண்மையில் இட ஒதுக்கீட்டால் பல்வேறு வகுப்புகளில் இருக்கும் திறமையானவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.
இங்கு தன் வாய்ப்பை இழப்பதாகக் கருதும் ஒருவர் அதே வகுப்பைச் சார்ந்த அவரைவிட திறமையானவரிடம்தான் இழந்திருக்கிறார். இதற்கும் அவரைவிட விட பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருப்பவருக்கும் தொடர்பில்லை.

எவ்வளவு நாட்களுக்கு இட ஒதுக்கீடு தொடர வேண்டும்?
இந்தியாவில் எந்த வகுப்பினருக்கும் உரிமைகள் மறுக்கப்படாதவரை தொடர வேண்டும்.

அனைத்து வகுப்பினரும் தங்களுக்கான அதிகார சார்புத்துவத்தை பெறும்வரையில் தொடர வேண்டும்.

இந்தியாவில் உயர் பதவிகள் குறிப்பிட்ட வகுப்பினரிடம் சிக்கிக் கொண்டிருப்பது களையப்படும் வரை தொடர வேண்டும்.
இது என்னுடைய கருத்து
ஒருவேளை இடஒதுக்கீட்டை நீக்கி விட்டால் என்ன ஆகும்?

திறமையின் அடிப்படையில் ஒரே சமூகத்தை சேர்ந்த அந்த 100 பேரில் 30 பேர் ஒரே துறையில் இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம்.இப்போது அடுத்து வேலைக்கு எடுக்க போகும் 70 பேரை திறமையின் அடிப்படையில் எடுக்க விடுவார்களா?
தன் சமுதாயத்தை சேர்ந்தவன் வேலைக்கு சேர்ந்தால் தங்களுக்கு உபயோகமா இருக்கும், சொல்வதை செய்வான், என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று தானே தோன்றும்.சிபாரிசு செய்து தனக்கு தெரிந்த அல்லது அதிக பணம் கொடுத்த ஆட்களை மட்டுமே பணியில் அமர்த்த நினைப்பான்.
இங்கே திறமையின் அடிப்படையில் வேலை என்பது எடுபடாது

இடஒதுக்கீடு இருக்கும் போதே லட்சங்களில் பணம் கட்டிதான் வேலையை உறுதி செய்ய முடிகிறது, மெஜாரிட்டியான சமுதாயம் உள்ளே நுழைந்து விட்டதென்றால் அவர்களுக்கு கீழே இருக்கும் சமுதாயத்தை மதிப்பார்களா?
கேட்கும் உதவியை செய்து கொடுப்பார்களா? அவர்களின் உரிமை மறுக்கப்படாமல் இருக்குமா? என்பது சந்தேகமே.

உண்மையில் இடஒதுக்கீட்டை நீக்கினால் திறமையின் அடிப்படையில் வேலை கொடுக்கப்படுமா?
இவ்ளோதான் நான் தெரிந்து கொண்டது... தவறுகள் இருப்பின் கூறலாம் தெரிந்து கொள்கிறேன்🙏

#END
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with 🔥தோர்™🔥

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!