My Authors
Read all threads
#Thread
#தெரிஞ்சிக்கோங்க

நிக்கோலஸ் காேபர்நிக்கஸ், ஜியார்டானோ புரூனோ, கலிலியோ கலிலி.

மத நம்பிக்கையால் வரலாற்றில் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட இம்மூன்று அறிவியலாளர்களுக்கும் இழைக்கப்பட்ட துரோகங்கள் அன்றைய காலகட்ட மக்கள் செய்த மிகப்பெரிய வரலாற்று பிழை என்றே சொல்லலாம்.
இவர்களின் மூவரின் அறிவியல் கருத்தையும் அன்றய மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் பல நூற்றாண்டுகள் கழித்தே ஏற்றுக்காெண்டனர். மேலும் இம்மூவரையும் தவறாக புரிந்து கொண்டு அவர்களை சித்திரவதையும் செய்தனர்.
சுமார் கி.பி 1500, 1600 காலகட்டங்களில் ஐரோப்பிய கண்டம் முழுவதும் கிறிஸ்துவ கதாேலிக திருச்சபையின் ஆதிக்கத்தின் பிடியில் பல நூற்றாண்டுகளாய் இருந்தது.

மனித குலத்திற்கு பகுத்தறிவு அளித்து அறிவு புரட்சி செய்த பல மகத்தான விஞ்ஞானிகள் ஒடுக்கப்பட்ட காலம் அது.
அந்த காலத்தில் வாழ்ந்த கோபர்நிக்கஸ், புருனோ, கலிலியோ போன்ற பல விஞ்ஞானிகளை மத நம்பிக்கையின் பேரில் தவறாக சித்தரிக்கப்பட்டு சித்தரவதை செய்துள்ளனர்.

அதில் ஒருவரான புருனோவை ராேம் நகர சந்தையின் நடு வீதியில் உயிருடன் தீ இட்டு எரித்து காென்றுள்ளனர்.
எதற்காக இவற்கள் மூவரும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர் என்பதை காண்போம் வாருங்கள்.

நாம் வாழ்கின்ற பூமி ஒரு காேள வடிவம், இது தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றிவருகிறது என்று நம் எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
ஆனால் ஏறத்தாழ 18 நூற்றாண்டுகளாக (1800 வருடங்கள்) பூமி தட்டையானது என்றும் பூமி நகராமல் ஒரே இடத்தில் நிலையாக உள்ளது என்றும் பூமியை சுற்றி தான் மற்ற கிரகங்களும், சூரியனும் சுற்றி வருகிறது என்ற தாலமி என்ற அறிவியலாளரின் தவறானதொரு புவிமையக் கோட்பாட்டை தான்
அன்றைய மக்கள் நம்பிக் கொண்டு இருந்தனர்.

இதற்கு ராேமன் கத்தாேலிக்க திருச்சபையின் மத நம்பிக்கையும் ஒரு மிகப்பெரிய காரணம்.

கிரேக்க விஞ்ஞானியான தாலமி கி.பி 2ஆம் நூற்றாண்டில் புவி மையக் கோட்பாட்டை விளக்கினார்.ஆனால் அப்பொழுதே பித்தாகரஸ் மற்றும் அரிஸ்டாட்டில் போன்றோர் பூமி
பூமி உருண்டையானது என்றும் பூமி தான் சூரியனை சுற்றுகிறது என கூறினர். ஆனால் அவர்களால் இக்கூற்றை நிருபிக்க முடியவில்லை.

பிறகு கி.பி 1473 ல் இத்தாலியில் பிறந்த கோப்பர்நிக்கஸ் புவி மையக் கோட்பாட்டை ஏற்காமல் சுயமாகவே கோள்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினார்.
கிறிஸ்துவ மதப்போதகராக பணியாற்றிக் கொண்டே 20 ஆண்டுகளாக உருப்பெருக்கி மூலம் கோள்கள் இருக்கும் இடத்தினை குறித்து வைத்து கொண்டு, பூமி மையமாக இருந்தால்,அதனை மற்ற கோள்கள் வட்ட பாதையில் சுற்றி வந்தால் மீண்டும் இருந்த இடத்திற்கே வரவேண்டுமே!
ஏன் மற்ற கோள்கள் வரவில்லை? என சிந்தித்தார் பிறகு பூமி தான் நகர்கிறது என்ற முடிவுக்கு வந்தார்.

பிறகு On the revaluation of the heavenly bodies என்ற தன்னுடய நூலில் பூமி தான் சூரியனை சுற்றுகிறது என்று முதன் முதலில் இவர் ஆதாரத்துடன் பதிவிட்டு வெளியிட்டார். ஆனால் அது இலத்தின்
மாெழியில் இருந்ததால் அப்போது இருந்த மக்களால் அக்கருத்தை சரியாக புரிந்து காெள்ள முடியவில்லை. அந்நூலில் உள்ள கருத்துகளை கிறிஸ்துவ மத நம்பிக்கைகளுக்கு எதிராக உள்ளது என மதவாதிகளால் உணரப்பட்ட உடன் நூல் வெளிவந்து 73 ஆண்டுகள் கழித்து ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் தடைசெய்யப்பட்டது.
பிறகு கி.பி 1548ல் பிறந்த இத்தாலிய விஞ்ஞானியான புருனோ என்பவர் கோப்பர்நிக்கஸ் கருத்தையே தைரியமாக முன்வைத்தார்.

இவரைப் பற்றி பெரும்பாலும் யாரும் கேள்விப்பட்டு இருக்க மாட்டீர்கள்.இவரை உலகத்தால் மறக்கப்பட்ட அறிவியலாளர் என்றே கூறலாம்.
இவர் இந்த உலகம் உருண்டையானது, பூமி சுற்றுவதால் தான் இரவு பகல் உண்டாகிறது,சூரியன் தான் மையம்,சூரியனை மையமாக வைத்தே பூமி சுற்றுகிறது என்றும் விண்வெளியில் இரவில் தெரியும் விண்மீன்களை போன்றே சூரியனும் ஒரு விண்மீன் தான். எல்லா விண்மீன்களுக்கும் பூமி போன்ற கோள்கள் உண்டு.
இந்தப் பிரபஞ்சம் ஓர் எல்லையற்றது என்று அன்றே இதுபோன்ற கருத்துக்களை தைரியமாக வெளியிட்டார்.கூடவே இவர் கிறிஸ்தவ கடவுள் மறுப்பு கொள்கையை யும் வெளியிட்டார்..

இக்கருத்திற்காக அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என்ன தெரியுமா ரோம் நகர கிறிஸ்துவ திருச்சபை புருனோவை உயிருடன் பட்டாசு
கொளுத்துவது போல் கொளுத்தி கொண்டாடியது.

புருனோ கிறிஸ்துவ திருச்சபையை எதிர்த்து பிரச்சாரம் செய்ததற்காகவும், அவருடைய அறிவியல் கருத்திற்காகவும் கி.பி 1592 மே 22 ல் கைது செய்யப்பட்டு போப் மூன்றாம் கிளைமண்டிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தான் கூறிய கருத்துகள் தவறு என்றும் அதை பின் வாங்கிக் கொள்ளுமாறு வற்புறுத்தி கேட்டுக் கொள்ளப்பட்டார்.அதை புருனோ மறுக்கவே ரோம் நகரில் ஆறு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்.

கடைசிவரை அவர் தன்னுடைய கருத்துகளிலிருந்து பின்வாங்கவில்லை.
இறுதியாக புருனாேவை மதக் கருத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ததற்காக எரித்து கொள்ளுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அவரை சங்கிலியால் கட்டி தெருவில் இழுத்து வந்து அவருடைய கழுத்தை சுற்றி வெடிமருந்து பொடியைத் தூவினர்.பிறகு அவரை நீண்ட கட்டையில் இயேசுவை போல் அறையப்பட்டு
அவரை சுற்றி குச்சிகளை போட்டனர் இவை அனைத்தும் கம்போர்டைவ் பியூரி என்ற ரோமின் புகழ்பெற்ற சதுக்கத்தில் அனைவரும் பார்க்கும்படி அவரை உயிரோடு தீயிட்டு எரித்தனர்.
இதுபோல் பல இடங்களில் இவர்களது கருத்துக்கள் பூமி மையக் கோட்பாட்டை ஆதரிப்பதால் தான் விஞ்ஞானிகளை கடுமையாக எதிர்த்தனர்.

பிறகு அறிவியல் வளர்ச்சி உச்சத்தை அடைந்த பின்பு இருபதாம் நூற்றாண்டில் மக்களின் அறிவியல் பார்வை விரியத் தொடங்கியது.
விண்வெளிக்கு செயற்கைக் கோள்களை அனுப்பிய பிறகு சூரிய மையக் கோட்பாடு தான் உண்மை என தெரிந்தவுடன் ரோமன் கத்தோலிக்க திருச்சபை தான் செய்தது தவறு என்று உணர்ந்த உடன் எந்த இடத்தில் புருனோவை எரித்தார்களோ அதே இடத்தில் பருனோவுக்கு ஒரு சிலையை வைத்து மரியாதை செய்தனர்.
பிறகு கி.பி 1564 ல் பிறந்த இத்தாலிய விஞ்ஞானியான கலிலியோ கலிலி பற்றி அனைவரும் அறிந்ததே.

இவர்தான் தொலைநோக்கியை கண்டுபிடித்து,பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்றும், சூரிய மையக் கோட்பாடு தான் உண்மை என்றும் மக்களுக்கு தொலைநோக்கியின் மூலம் காண்பித்து நிரூபணப்படுத்தினார்.
அதற்காக அவருக்கு கிடைத்த பரிசு என்னெவென்றால் தன் வாழ்நாள் இறுதிவரையிலும் வீட்டுச் சிறையிலேயே அடைக்கப்பட்டார்.அவருடைய புத்தகங்களும்,கண்டுபிடிப்புகளும் தடை செய்யப்பட்டன.
பிறகு 400 வருடங்கள் கழித்து கலிலியோ கூறியதுதான் சரி என்று தெரிந்த உடன், 1992இல் போப் இரண்டாம் ஜான் பவுல் என்பவர் கலிலியோ கூறியது தான் சரி என்றும்,அவரை அப்படி நடத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று கத்தோலிக்க திருச்சபையின் சார்பாக வருத்தம் தெரிவித்தார். பிறகு
கலிலியோவுக்கு ஒரு சிலையும் வைத்து மரியாதையும் செலுத்தினர்.

ஆனால் அவர்களது மத கருத்துக்களை மட்டும் மாற்றி எழுதவே முடியவில்லை.

#END
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with 🔥தோர்™🔥

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!