#திருவள்ளுவர்தினம் 13-14ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட மயிலை திருவள்ளுவர் கோவிலில் ஆரம்பம் முதல் வைகாசி-அனுஷ தினத்தன்றுதான் திருவள்ளுவர் அவதாரதினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில்தான் திருவள்ளுவர் திருநாட்கழகத்தினர் அதே தினத்தன்று 18 மே-1935) மாநாட்டை ஏற்பாடு செய்தனர்
மறைமலை அடிகளும் அதே வைகாசி அனுஷ தினத்தைத்தான் தன்னுடைய ஆராய்ச்சி முடிவாக அம்மாநாட்டில் அறிவித்தார். அம்மாநாட்டின் முக்கிய நோக்கமே திருவள்ளுவர் பிறந்த தினத்தை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் ஒரே தினத்தில் கொண்டாட வேண்டும் என்பதும் அத்தினத்தில் ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்
என்பதும்தான். அம்மாநாட்டில் பங்கு பெற்ற நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்களும் ஒரே மனதாக வைகாசி அனுஷமே திருவள்ளுவர் அவதார தினம் என்று முடிவு செய்தனர். ஆனால் கருணாநிதி பொய்யாக அந்த மாநாட்டில், அதுவும் பொய்யாக நடக்கவே நடக்காத தேதியில் -1921-ல் மறைமலை அடிகள் தலைமையில் பச்சையப்பன்
கல்லூரியில் நடக்காத ஒரு மாநாட்டை நடந்ததாகவும், நிறைவேற்றப்படாத தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டதாகவும் சொல்லி சித்திரையில் வரும் வருட பிறப்பை தை ஒன்றுக்கு மாற்றி, கூடவே திருவள்ளுவர் தினத்தையும் முதலில் தை 1 பிறகு அவர் இஷ்டத்துக்கு தை 2 க்கு மாற்றி பாவம் சேர்த்துக் கொண்டார். இந்த
திருவள்ளுவர் தினத்தில் இருந்தாவது எங்கு திருவள்ளுவர் படம் இருந்தாலும் கருணாநிதி மாற்றி அமைத்த நீறில்லா நெற்றியுடன் இருக்கும் புகைப்படம் இல்லாமல் அவர் இந்து என்பதற்கு ஆதாரமான திருநீறுடன் இருக்கும் படத்தை பதிவிட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்வோம். வான் பொய்த்தாலும் வள்ளுவரின்
குறள் பொய்க்காது. ஒன்றரை அடியில் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு அவர் அவதரித்த சென்னை மயிலாப்பூரில் கோவில் உள்ளது. சமஸ்கிருத கல்லூரிக்குப் பின்புறம் உள்பகுதியில் சிறிய அளவில் அமைந்துள்ளது. அங்கு வள்ளுவர் வாசுகி தம்பதியருக்கு தனித்தனி சன்னதியும் வள்ளுவர் தோன்றிய இலுப்பை
மரத்தின் தண்டுப் பகுதியும் உள்ளன. வாழ்வியலுக்கு தேவையான அறத்துப் பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் என 133 அதிகாரங்களில் 1330 திருக்குறள்களை எழுதியுள்ள திருவள்ளுவரை நினைவு கூறுவோம். சங்க காலம் தொட்டே சம்ஸ்கிருதமும்
தமிழும் ‘கொண்டு கொடுத்து’ உறவைச் செழுமைப் பயன்படுத்திக் கொண்ட மொழிகள்.
காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு, பகை இன்றி தமிழ்ப் புலவர்களும் சம்ஸ்கிருத பண்டிதர்களும் தேவையான இடங்களில் நல்ல பதங்களை தங்கள் கவிதைகளிலும் காவியங்களிலும் நயம் படக் கையாண்டு வந்தனர். இதற்கு எடுத்துக்காட்டாக வள்ளுவர்
தம் திருக்குறளில் கையாண்ட வடமொழிச் சொற்களை உடைய சில குரல்கள் மட்டும் கீழே
குறள் 1
அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
குறள் 9
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை
குறள் 18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
குறள்19
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்
குறள் 29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது
குறள் 43
தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானொன்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
குறள் 60
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு
இவற்றில் வரும் சமஸ்கிருத சொற்களின் பட்டியல்-ஆதி, பகவன், குணம், பூசனை, தானம், தவம், குணம், கணம், தெய்வம், மங்கலம், காலம் ஆகியவை சில. திருக்குறளைப் பயின்று சரியான குறள் விளக்கத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்போம். திருவள்ளுவர் இந்து, அவர் வேற்று மதத்தவர் என்ற பொய்யை உடைப்போம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

13 Jan
கோவை திமுக ஹோட்டல் நடத்துநரின் வாட்ஸ் ஆப் பதிவின் சுருக்கம். #திருட்டு_திமுக

சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம் மலிவு விலை சமூக உணவகத்தை ஆரம்பித்து மற்ற ஹோட்டல்கள் உணவை விட தரமான உணவை அவர்கள் விற்கும் விலையில் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு கொடுக்க ஆரம்பித்தவுடன் பல ஹோட்டல்கள் அதனால்
பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட இவரும் அவரை சந்தித்து இது எப்படி முடிகிறது என்று கேட்டபோது அவர் சொன்னது, பெரிய முதலீடு செய்து ஆடம்பரமாக கடையை கட்டவில்லை, குறைந்த முதலீடு அதிக வியாபாரம், இரண்டாவது அனைத்து பொருட்களையும் விவசாயிகளிடமே நேரடியாக வாங்குவதால் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு
கொடுக்கமுடிகிறது என்று கூறியிருக்கிறார்.
சில நாட்களில் அந்த ஏரியா திமுக செயலர் அப்பகுதி அனைத்து ஹோட்டல்காரர்களையும் திரட்டி சுப்பிரமணியம் அவர்களை சந்திக்க அழைத்து சென்று விலையை ஏற்ற வேண்டும் என்று அவர்கள் முன்னிலையில் மிரட்டியிருக்கிறார். அசராத சுப்ரமணியம் இன்னும் விலையை
Read 16 tweets
12 Jan
#Pongal #MakaraSankaranthi #பொங்கல் #அர்த்தமுள்ளஇந்துமதம்
இன்று தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் மகரசங்கராந்தி என்று பாரதம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது! இது அறுவடை திருநாளாகும்! விவசாயத்திற்கு உதவியாக உள்ள ஏர், சூரியன், பசு காளைகளுக்கு நன்றி கூறும் விழா! சுருக்கமாக
முல்லை நில மக்களது விழாவாகும்! முல்லை நிலத் தெய்வம் கிருஷ்ணர் கையில் ஏரை உடைய அவரது அண்ணன் விவசாய தெய்வம் பலராமர். எனவே இது கிருஷ்ணர் பலராமன் விழாவாகும்! பொங்கலுக்கு முதல்நாள் போகி -பலராமனை 'புஜங்கம புரஸ்ஸர போகி' எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய
மன்னனின் தளவாய்புரச் செப்பேடு குறிப்பிடுகிறது எனவே போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே! போகி இந்திர விழாவா? இல்லை. போகி பலராமன் விழாவே! இந்திரவிழா சித்திரை மாதம் நடந்தது என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது! பூம்புகாரில் இந்திர விழாவின்போது
"சித்திரைச்
Read 14 tweets
25 Dec 20
#BhagavadGitaDay வைகுண்ட ஏகாதசி அன்று தான் பகவத் கீதை பிறந்த நாளும் கொண்டாடப் படுகிறது. பகவத் கீதை என்றால் கடவுளின் பாடல்கள். பகவத் கீதை பிறந்ததற்கு அடிப்படையாக அமைந்தது மகாபாரதப் போர். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் போர் தொடங்கியபோது வில் ஏந்திய அர்ச்சுனன் தனக்கு எதிராக
நிற்கும் பீஷ்மர், விதுரன், துரோணர், கிருபர் உள்ளிட்ட பங்காளிகள், உறவினர்கள், நண்பர்கள், குருமார்கள் என அனைவருமே தெரிந்தவர்களாக இருந்ததால் அவர்களை எதிர்த்து போர் புரிய அவனுக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. சொந்த உறவுகளையும் நண்பர்களையும் எதிர்த்து எப்படி வில் எய்வது என்று யோசித்தான்
அவன் மனம் சோர்ந்து போனது. போரை விட்டு விலகி விடலாம் என்று நினைத்தான். அப்போது அவனுக்குத் தேரோட்டியாக இருந்த கிருஷ்ண பரமாத்மா நிறைய உபதேசங்களை செய்தார். அவன் மனக் கிலேசத்தைப் போக்கினார். தர்மத்துக்காக போர் புரியும்போது உறவு முறைகளை பார்க்கக் கூடாது என்று அறிவுறுத்தினார். அந்த
Read 9 tweets
24 Dec 20
அன்றைய தினம் பற்றி பஞ்சாங்கம் படிப்பதையும் கேட்பதையும் பார்த்திருக்கிறேன். இதை தினமும் படிப்பதனாலோ கேட்பதனாலோ என்ன பயன் என்று யோசித்ததுண்டு. #TIL யார் தினமும் பஞ்சாங்கம் படிக்கின்றனரோ அல்லது கேட்டறிய ஆசைக்கொண்டு கேட்டு அறிகின்றனரோ அவர்களுக்கு அக்னிஷ்டோம யாகம் செய்தபலன் மற்றும்
தினமும் கங்கையில் குளித்த பலன் கிடைக்கும். தானே பஞ்சாங்கம் பார்த்துக்கொள்ள வேண்டும். அல்லது உரியவர்கள் மூலமாக கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.
திதியை அறிவதனால் ஐஶ்வர்யங்கள் கிடைக்கும், கிழமையை அறிவதனால் ஆயுசு அதிகரிக்கும், நட்சத்திரத்தை அறிவதனால் பாவம் விலகும், யோகத்தை அறிவதனால்
நோய் நீங்கும், கரணத்தை அறிவதனால் செயல்கள் வெற்றிபெறும். பஞ்சாங்கத்தை தினமும் படிப்பதனால் இந்த பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது. #பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். அவை
1.வாரம் 2.நட்சத்திரம்
Read 5 tweets
23 Dec 20
நம் வீடுகளில் எல்லா சுப காரியங்கள் நடக்கும்போதும் ஆலயங்களிலும் கேட்கும் ஒரு சின்ன சில நிமிஷ ஸமஸ்க்ரித மந்திரம் இது. செவிக்கினிமையான ''மந்த்ர புஷ்பம்''. அதன் பொருளை புரிந்து கொண்டால் அதன் அருமை புரியும். விரும்பி மனப்பாடம் செய்ய தோன்றும். வேதத்தில்
தைத்ரீய அரண்யகம் என்ற பகுதியில் வருகிறது. நீரின்றி அமையாது உலகம். எனவே எங்கும் நீர் வளம் பெருக, வேண்டும் மந்திரம் இது. நீர் ஒன்றே சுபிக்ஷத்தின் அறிகுறி.

யோ பாம் புஷ்பம் வேத’ புஷ்ப’வான் ப்ரஜாவா”ன் பஶுமான் ப’வதி |
சம்த்ரமா வா அபாம் புஷ்பம் |
புஷ்ப’வான் ப்ரஜாவா”ன் பஶுமான் ப’வதி |
ய ஏவம் வேத’ | யோஉபாமயத'னம்
வேத'| ஆய்தனவான் பவதி |
நீர் என்பதே ஒரு புஷ்பம். ஜலபுஷ்பம். இதை புரிந்து கொண்டவனிடம் புஷ்பங்கள் சேருகின்றன. பூக்களாகிய குழந்தைகள்,ஆநிரை , ஆடு முதலிய செல்வங்கள் சேருகின்றன. சந்திரன் என்னும் நிலவு நீரின் குளுமையில் பூவாகிறது. நீரின் ஆதாரம் புரிந்தவன்
Read 10 tweets
22 Dec 20
#நீலகண்டதீக்ஷிதர் இவர் ஒரு மகாவித்வான்! பதினெட்டு வயதுக்குள் எல்லா வேத சாஸ்திரங்களையும் படித்து அனைத்து சில்ப சாஸ்திரங்களையும் பயின்று பெரிய மேதையாக விளங்கினார்! அதனால் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மகாராஜா கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவருக்கு மந்திரியாக இருந்தார். நீலகண்டதீக்ஷிதர்
மந்திரியாக அபாரமான செயல்களை செய்துள்ளார். இன்றும் நாயக்கர்கள் செய்த சேவை நம் தேசத்துக்கும் நம் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கிறது. ஒரு முறை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் தன்னுடைய சிலையும், தன்னுடைய மனைவிமார்கள் சிலையையும் வவைக்க ஆசைப்பட்டார் அரசர். நீலகண்டதீக்ஷிதர் அந்தச்
சிலைகளைச் செய்ய பொறுப்பேற்றுக் கொண்டார். ராணியின் சிலை செய்பவன் சிலையை வடிக்கும்பொழுது முட்டிக்குமேல் ஒரு இடத்தில் சில்லு தட்டிவிடுகிறது. அதை இவரிடம் சிற்பி சொன்னபொழுது நீலகண்டதீக்ஷிதர் ஒரு நொடி யோசித்துப் பார்த்துவிட்டு அந்த இடத்தில் ராணிக்கு ஒரு மச்சம் இருக்கும் என்று அவர்
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!