#DrShanta சென்னை மயிலாப்பூரில் (1927) பிறந்தவர். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி சர். சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் இவரது தாய்மாமா. சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949-ல் MBBS 1955-ல் MD பட்டம் பெற்றார். நாட்டின் முதல் பெண்
மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியால் சென்னை அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில் எம்.டி. பட்டம் பெற்ற உடனே பணியில் சேர்ந்தார். கொள்கைப் பிடிப்பும், தொலைநோக்கும், கண்டிப்பும் கொண்ட டாக்டர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியை தனது குருவாகப் பெற்றார். 12 படுக்கைகளுடன் இயங்கி வந்த
அடையாறு மருத்துவமனையை தனது குருவுடன் சேர்ந்து உலகத் தரம்வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றினார். இவரது தன்னலமற்ற மருத்துவ சேவையால் அடையாறு புற்று நோய் மருத்துவமனை பல சாதனைகளைப் படைத்துள்ளது. 63ஆண்டுகளாக இந்த மருத்துவமனையையே தன் வீடாக மாற்றிக்கொண்டவர். புற்றுநோய் தொடர்பாக
தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஆயிரக்கணக்கில் கட்டுரைகள் எழுதியுள்ளார். மகசேசே விருது, பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். விருதுகள் மூலம் கிடைக்கும் தொகை முழுவதையும் மருத்துவமனை வளர்ச்சிக்கே செலவு
செய்வார். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தார். இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழுவின் உறுப்பினர், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவர் என மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார். உலகில் எந்த மூலையில் புற்றுநோய் ஆராய்ச்சி
நடந்தாலும், புதிய மருந்துகள், புதிய மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றை உடனடியாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறிமுகம் செய்துவிடுவார்.
எளிமை, பணிவு நிறைந்தவர். ஓய்வின்றி நாள் முழுவதும் உழைப்பவர். நோயாளிகளுக்கு உதவுவதுடன் ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கு
வழிகாட்டியாக செயலாற்றி வந்தார். சிறிதும் சுயநலம் கூடாது என்பதையும், பெறுவதைவிட கொடுப்பதே சிறந்தது என்ற கொள்கையையும் குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து கற்றதாகக் கூறியிருக்கிறார். மகோன்னத மருத்துவ தொண்டாற்றி மகேசன் திருவடியை இன்று காலை அடைந்துள்ளார் செல்வி Dr.சாந்தா🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

15 Jan
#திருவள்ளுவர்தினம் 13-14ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட மயிலை திருவள்ளுவர் கோவிலில் ஆரம்பம் முதல் வைகாசி-அனுஷ தினத்தன்றுதான் திருவள்ளுவர் அவதாரதினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில்தான் திருவள்ளுவர் திருநாட்கழகத்தினர் அதே தினத்தன்று 18 மே-1935) மாநாட்டை ஏற்பாடு செய்தனர்
மறைமலை அடிகளும் அதே வைகாசி அனுஷ தினத்தைத்தான் தன்னுடைய ஆராய்ச்சி முடிவாக அம்மாநாட்டில் அறிவித்தார். அம்மாநாட்டின் முக்கிய நோக்கமே திருவள்ளுவர் பிறந்த தினத்தை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் ஒரே தினத்தில் கொண்டாட வேண்டும் என்பதும் அத்தினத்தில் ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்
என்பதும்தான். அம்மாநாட்டில் பங்கு பெற்ற நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்களும் ஒரே மனதாக வைகாசி அனுஷமே திருவள்ளுவர் அவதார தினம் என்று முடிவு செய்தனர். ஆனால் கருணாநிதி பொய்யாக அந்த மாநாட்டில், அதுவும் பொய்யாக நடக்கவே நடக்காத தேதியில் -1921-ல் மறைமலை அடிகள் தலைமையில் பச்சையப்பன்
Read 11 tweets
13 Jan
கோவை திமுக ஹோட்டல் நடத்துநரின் வாட்ஸ் ஆப் பதிவின் சுருக்கம். #திருட்டு_திமுக

சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம் மலிவு விலை சமூக உணவகத்தை ஆரம்பித்து மற்ற ஹோட்டல்கள் உணவை விட தரமான உணவை அவர்கள் விற்கும் விலையில் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு கொடுக்க ஆரம்பித்தவுடன் பல ஹோட்டல்கள் அதனால்
பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட இவரும் அவரை சந்தித்து இது எப்படி முடிகிறது என்று கேட்டபோது அவர் சொன்னது, பெரிய முதலீடு செய்து ஆடம்பரமாக கடையை கட்டவில்லை, குறைந்த முதலீடு அதிக வியாபாரம், இரண்டாவது அனைத்து பொருட்களையும் விவசாயிகளிடமே நேரடியாக வாங்குவதால் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு
கொடுக்கமுடிகிறது என்று கூறியிருக்கிறார்.
சில நாட்களில் அந்த ஏரியா திமுக செயலர் அப்பகுதி அனைத்து ஹோட்டல்காரர்களையும் திரட்டி சுப்பிரமணியம் அவர்களை சந்திக்க அழைத்து சென்று விலையை ஏற்ற வேண்டும் என்று அவர்கள் முன்னிலையில் மிரட்டியிருக்கிறார். அசராத சுப்ரமணியம் இன்னும் விலையை
Read 16 tweets
12 Jan
#Pongal #MakaraSankaranthi #பொங்கல் #அர்த்தமுள்ளஇந்துமதம்
இன்று தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் மகரசங்கராந்தி என்று பாரதம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது! இது அறுவடை திருநாளாகும்! விவசாயத்திற்கு உதவியாக உள்ள ஏர், சூரியன், பசு காளைகளுக்கு நன்றி கூறும் விழா! சுருக்கமாக
முல்லை நில மக்களது விழாவாகும்! முல்லை நிலத் தெய்வம் கிருஷ்ணர் கையில் ஏரை உடைய அவரது அண்ணன் விவசாய தெய்வம் பலராமர். எனவே இது கிருஷ்ணர் பலராமன் விழாவாகும்! பொங்கலுக்கு முதல்நாள் போகி -பலராமனை 'புஜங்கம புரஸ்ஸர போகி' எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய
மன்னனின் தளவாய்புரச் செப்பேடு குறிப்பிடுகிறது எனவே போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே! போகி இந்திர விழாவா? இல்லை. போகி பலராமன் விழாவே! இந்திரவிழா சித்திரை மாதம் நடந்தது என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது! பூம்புகாரில் இந்திர விழாவின்போது
"சித்திரைச்
Read 14 tweets
25 Dec 20
#BhagavadGitaDay வைகுண்ட ஏகாதசி அன்று தான் பகவத் கீதை பிறந்த நாளும் கொண்டாடப் படுகிறது. பகவத் கீதை என்றால் கடவுளின் பாடல்கள். பகவத் கீதை பிறந்ததற்கு அடிப்படையாக அமைந்தது மகாபாரதப் போர். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் போர் தொடங்கியபோது வில் ஏந்திய அர்ச்சுனன் தனக்கு எதிராக
நிற்கும் பீஷ்மர், விதுரன், துரோணர், கிருபர் உள்ளிட்ட பங்காளிகள், உறவினர்கள், நண்பர்கள், குருமார்கள் என அனைவருமே தெரிந்தவர்களாக இருந்ததால் அவர்களை எதிர்த்து போர் புரிய அவனுக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. சொந்த உறவுகளையும் நண்பர்களையும் எதிர்த்து எப்படி வில் எய்வது என்று யோசித்தான்
அவன் மனம் சோர்ந்து போனது. போரை விட்டு விலகி விடலாம் என்று நினைத்தான். அப்போது அவனுக்குத் தேரோட்டியாக இருந்த கிருஷ்ண பரமாத்மா நிறைய உபதேசங்களை செய்தார். அவன் மனக் கிலேசத்தைப் போக்கினார். தர்மத்துக்காக போர் புரியும்போது உறவு முறைகளை பார்க்கக் கூடாது என்று அறிவுறுத்தினார். அந்த
Read 9 tweets
24 Dec 20
அன்றைய தினம் பற்றி பஞ்சாங்கம் படிப்பதையும் கேட்பதையும் பார்த்திருக்கிறேன். இதை தினமும் படிப்பதனாலோ கேட்பதனாலோ என்ன பயன் என்று யோசித்ததுண்டு. #TIL யார் தினமும் பஞ்சாங்கம் படிக்கின்றனரோ அல்லது கேட்டறிய ஆசைக்கொண்டு கேட்டு அறிகின்றனரோ அவர்களுக்கு அக்னிஷ்டோம யாகம் செய்தபலன் மற்றும்
தினமும் கங்கையில் குளித்த பலன் கிடைக்கும். தானே பஞ்சாங்கம் பார்த்துக்கொள்ள வேண்டும். அல்லது உரியவர்கள் மூலமாக கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.
திதியை அறிவதனால் ஐஶ்வர்யங்கள் கிடைக்கும், கிழமையை அறிவதனால் ஆயுசு அதிகரிக்கும், நட்சத்திரத்தை அறிவதனால் பாவம் விலகும், யோகத்தை அறிவதனால்
நோய் நீங்கும், கரணத்தை அறிவதனால் செயல்கள் வெற்றிபெறும். பஞ்சாங்கத்தை தினமும் படிப்பதனால் இந்த பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது. #பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். அவை
1.வாரம் 2.நட்சத்திரம்
Read 5 tweets
23 Dec 20
நம் வீடுகளில் எல்லா சுப காரியங்கள் நடக்கும்போதும் ஆலயங்களிலும் கேட்கும் ஒரு சின்ன சில நிமிஷ ஸமஸ்க்ரித மந்திரம் இது. செவிக்கினிமையான ''மந்த்ர புஷ்பம்''. அதன் பொருளை புரிந்து கொண்டால் அதன் அருமை புரியும். விரும்பி மனப்பாடம் செய்ய தோன்றும். வேதத்தில்
தைத்ரீய அரண்யகம் என்ற பகுதியில் வருகிறது. நீரின்றி அமையாது உலகம். எனவே எங்கும் நீர் வளம் பெருக, வேண்டும் மந்திரம் இது. நீர் ஒன்றே சுபிக்ஷத்தின் அறிகுறி.

யோ பாம் புஷ்பம் வேத’ புஷ்ப’வான் ப்ரஜாவா”ன் பஶுமான் ப’வதி |
சம்த்ரமா வா அபாம் புஷ்பம் |
புஷ்ப’வான் ப்ரஜாவா”ன் பஶுமான் ப’வதி |
ய ஏவம் வேத’ | யோஉபாமயத'னம்
வேத'| ஆய்தனவான் பவதி |
நீர் என்பதே ஒரு புஷ்பம். ஜலபுஷ்பம். இதை புரிந்து கொண்டவனிடம் புஷ்பங்கள் சேருகின்றன. பூக்களாகிய குழந்தைகள்,ஆநிரை , ஆடு முதலிய செல்வங்கள் சேருகின்றன. சந்திரன் என்னும் நிலவு நீரின் குளுமையில் பூவாகிறது. நீரின் ஆதாரம் புரிந்தவன்
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!