பஞ்ச பூதத்தலங்களுள் அக்னித் தலமான திருவண்ணாமலையை பிரபுடதேவராயன் எனும் மன்னன் ஆட்சி செய்த காலம். ஒருநாள்,சபையில் அமைச்சர்கள் புடைசூழ வீற்றிருந்தான் மன்னன். அப்போது மன்னனின் நெருங்கிய நண்பனும்,ஆஸ்தான பண்டிதனுமான சம்பந்தாண்டான் அங்கு வந்தான்.
சமணக்கவியான சம்பந்தாண்டான் மந்திர சாஸ்திரங்கள் கற்றறிந்தவன்.தேவி உபாசகனும்கூட. அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றான் மன்னன்.தனது ஆசனத்தில் அமர்ந்த சம்பந்தாண்டான் மெல்லிய குரலில், ”மன்னா, நண்பன் என்ற முறையில் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.ஆனால்…” என்று
நிறுத்தியவன்,மன்னனின் முகத்தை ஏறிட்டான். சம்பந்தாண்டாரே!எதுவாயினும் தயங்காமல் சொல்லுங்கள்!” என்றார் மன்னர்.சம்பந்தாண்டான் தொடர்ந்தான்: ”மன்னா! சமீப காலமாகத் தங்களுடன் நட்புறவாடி வரும்,அருணகிரியைப் பற்றி தங்களது அபிப்ராயம்?”
அந்தப் பெயரைக் கேட்டதும் மன்னனின் முகத்தில் பிரகாசம்!
”அருணகிரியார் மிகப்பெரிய ஞானி.அவருக்கு, முருகப்பெருமான் தரிசனம் தந்தது, வேலாயுதத்தால் அவர் நாவிலே ஆறெழுத்து மந்திரத்தை எழுதி முத்தமிழைப் புகட்டியது, ‘சும்மா இரு சொல்லற…’ என்று மௌனோபதேசத்துடன் ஜபமாலையும் தந்தருளியது... அப்பப்பா, அருணகிரியாரின் வாழ்வில் எத்தனை அற்புதங்கள்?!
எல்லாவற்றுக்கும் மேலாக முருகப்பெருமான், ‘முத்தைத் தரு’ என்று முதலடி எடுத்துக்கொடுத்து, அருணகிரியாரை பாமாலை இயற்றுமாறு பணித்தாரே… அந்த அருளாடலை நினைத்தால், என் உள்ளம் சிலிர்க்கிறது!” என பரவசத்துடன் விவரித்தான் மன்னன்.இதைக் கேட்டதும் சம்பந்தாண்டானது மனதுக்குள் பொறாமைத் தீ,
கொழுந்து விட்டு எரிந்தது. ‘அருணகிரியால்,மன்னரிடம் நமக்கு இருக்கும் செல்வாக்கு குறைந்து போகுமோ!’ என்று பயந்தான். எனினும்,அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்தான்:
”தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.அருணகிரியார் சர்வ வல்லமை பொருந்தியவரே.ஆனாலும்…”
”ஆனாலும்… என்ன? சொல்ல வந்ததை தயங்காமல் சொல்லுங்கள்!”. "வேறொன்றுமில்லை.அட்டமாஸித்திகளும் கைவரப்பெற்ற அருணகிரியாரைப் பற்றி நாம் மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் போதுமா?அவரது புகழை உலகம் போற்றும்படி செய்யவேண்டும் என்பதே இந்த சிறியவனின் ஆசை. இதைப்பற்றியே சொல்லவந்தேன்”
என அழகுற பொய்யுரைத்தான் சம்பந்தாண்டான். இதைக் கேட்டதும் மன்னனின் முகத்தில் மலர்ச்சி.சம்பந்தாண்டாரே உமக்கு எவ்வளவு உயர்ந்த எண்ணம்.சரி,அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்பதையும் தாங்களே கூறிவிடுங்கள்!” என்றான் உற்சாகத்துடன்.இதைத்தானே சம்பந்தாண்டானும் எதிர்பார்த்தான்.
அவன் மெள்ள தனது திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தான
”மன்னா!பாரிஜாதம் என்ற அபூர்வ வகை மலர் ஒன்று உண்டு. கற்பகவனத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த மலரை, நம்மைப் போன்றவர்கள் எடுத்துவருவது இயலாத காரியம். ஆனால் அருணகிரியாருக்கு அது வெகு சுலபமாயிற்றே. பாரிஜாதத்தை அவர் கொண்டு
வந்துவிட்டால்,இந்த உலகமே அருணகிரியாரின் மகிமையை அறிந்து போற்றுமே"என்றான் சூழ்ச்சியுடன்.அவனது வஞ்சகத்தை அறியாத மன்னனும் அருணகிரியாரைச் சந்தித்து, தனது விருப்பத்தை எடுத்துக்கூறினான். ”முருகப் பெருமானது திருவருள்படி நடக்கட்டும்” என்ற அருணகிரியார் பாரி ஜாதத்தை,கொண்டு வர சம்மதித்தார்.
பிறகு, திருவண்ணாமலை ஆலய கோபுரத்துக்குச் சென்று தியானத்தில் ஆழ்ந்தார் அருணகிரியார்.சற்று நேரத்தில் கண் விழித்தவர் எதிரில் இறந்து கிடக்கும் ஒரு கிளியைக் கண்டார். ‘கந்த வேளுடன் ஐக்கியம் ஆவதற்கான வேளை வந்துவிட்டது’ என்று உணர்ந்தார்.பிறகு தனது உடலை கோபுரத்தில் கிடத்திய அருணகிரிநாதர்,
'கூடு விட்டுக் கூடு பாய்தல்’ எனும் கலையின் மூலம் கிளியின் உடலில் புகுந்தார். அங்கிருந்து கற்பகக் காட்டை நோக்கிப் பறந்தார்.இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான் சம்பந்தாண்டான்.ஆலய கோபுரத்தில் கிடக்கும் அருணகிரியாரது உடலை மன்னன் உட்பட அனைவருக்கும் காட்டினான்.
மேலும், ”அருணகிரியார், தன்னால் பாரிஜாத மலரைக் கொண்டு வரமுடியாது என்று கருதினார் போலும்.அதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு தன்னையே மாய்த்துக் கொண்டு விட்டாரே"என்று நீலிக்கண்ணீர் வடித்தவன்,உடலை தகனம் செய்யும்படி மன்னரிடம் வேண்டிக்கொண்டான்.அருணகிரியாரது இழப்பைத் தாங்கமுடியாமல்
கதறியழுதான் மன்னன்.தொடர்ந்து,சம்பந்தாண்டான் கூறியபடி தகனக் கிரியைகளையும் செய்து முடித்தான்.அருணகிரியாரது உடல் எரிந்து சாம்பலானது.(பார்வை இழந்த பிரபுடதேவ ராய மன்னன் மீண்டும் பார்வை பெறும் பொருட்டே அருணகிரியார் பாரிஜாத மலரைத் தேடிச் சென்றதாக வேறொரு கதையும் உண்டு.)
பாரிஜாத மலர்களோடு கிளி வடிவில் திரும்பி வந்த அருணகிரியார் கோபுரத்தை அடைந்தார்.அங்கு தம் உடலைக் காணாது திகைத்தார். பிறகு ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தவர், கிளி வடிவிலேயே மன்னனிடம் சென்று பாரிஜாத மலர்களைக் கொடுத்தார்.உண்மையை உணர்ந்த மன்னன் கதறினான். ‘மிகப் பெரிய பிழையைச் செய்து
விட்டேனே’ என்று வருந்தினான்."வருந்தாதே மன்னா.எல்லாம் முருகவேளின் விருப்பம்.இன்னும் சிறிதுகாலம் இந்த உருவத்திலேயே இருப்பேன்.உனக்கு மட்டும் புரியும்படி உன்னோடு உரையாடுவேன்!” என்று அவனைத் தேற்றிய அருணகிரியார், மீண்டும் கோபுரத்தை அடைந்தார்.
அதன் பிறகு, அவர் (கிளி உருவிலேயே) பாடி அருளியதே கந்தரனுபூதி.'தன் வினை தன்னைச் சுடும்!’ என்பது போல், தேவி உபாசகனான சம்பந்தாண்டானின் அழிவு, தேவியாலேயே நிகழ்ந்தது என்பர். சில காலங்களுக்குப் பின்னர், மன்னன் பிரபுடதேவ ராயனும் இறந்து போனான்.அதன் பிறகு, கிளி வடிவில் இருந்த அருணகிரியார்,
தன் இனத்துடன் கயிலாய மலைக்குப் பறந்து சென்றார். அங்குள்ள கந்தகிரி சிகரத்தை அடைந்தவர் ‘ஞானானுபூதி’ பாடினாராம் (ஞானானுபூதி என்பது பன்னிரண்டு விருத்தங்களின் தொகுதி). பின்னர் முருகப் பெருமான், அந்தக் கிளியை ஏற்று தனது தோளில் வைத்துக் கொண்டதாகக் கூறுவர்.
முருகப் பெருமானுடன் மட்டுமல்ல.திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம், வேல் விருத்தம், சேவல் விருத்தம் மற்றும் மயில் விருத்தம் முதலான பாடல்கள் மூலம் இன்றும் நம்மோடு வாழ்கிறார் அருணகிரியார்!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அவருடைய இயற்பெயர் ஸ்ரீனிவாச நாயக்.கி.பி.1480லேயே 9கோடி சொத்திற்கு அதிபதி.ஆனால் ஒரு மகாகருமி.நாயக் 18வயதில், கடவுள் பக்தையான,தான-தர்மத்தில் சிறந்தவளான, சரஸ்வதி எனும் பெண்ணை மணந்தார்.அவர் வாழ்ந்த ஊரில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பாண்டுரங்கனாகக் காட்சியளித்தான்.
மக்கள் தெருவில் தினமும் பஜனை பாடுவார்கள்.நாயக் கண்டுகொள்ளமாட்டார்.பார்த்தான் பாண்டுரங்கன்.ஒரு முதிய ஏழை அந்தணன் உருவில்,ஏழு வயது சிறுவனோடு,நாயக்கின் கடைமுன் வந்து நின்றான் இறைவன்."ஐயா!தர்மப்பிரபுவே"
நாயக் அந்த அந்தணனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. விடுவானா இறைவன்?
திரும்பவும் கூப்பிட்டார்."டேய்!யாருடா நீ?"அதட்டினார் நாயக்.
"ஐயா நான் ஓர் ஏழை பிராமணன்.இவன் என் ஒரே மகன்.ஏழு வயது.பூநூல் போடவேண்டும்.நீங்கள் உதவி செய்தால் நடக்கும் பிரபு.ஏதாவது கொஞ்சம் பணம் கொடுங்கள் சாமி."
"போ போ வேறு எங்காவது பிச்சை எடு.என்னிடம் பணமே இல்லை"விரட்டினார் நாயக்.
ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.டிக்கெட் பரிசோதகரின் காலில் ஏதோ இடறியது. குனிந்து அதை எடுத்தார்.அது ஒரு பழைய மணி பர்ஸ்.ஓரமெல்லாம் ஜீரணம் ஆகி,மெருகு குலைந்திருந்தது. பர்ஸைத் திறந்தார்.சில கசங்கிய நோட்டுகளும்,சில்லறைகளும் இருந்தன.அத்துடன் ஸ்ரீகிருஷ்ணரின் படம் ஒன்றும் இருந்தது.
பர்ஸைத் தலைக்கு மேலே பிடித்துக் காட்டிய பரிசோதகர்,இது யாருடையது?என்று குரலை உயர்த்திக்கேட்டார்.ஒரு முதியவர்,அது என்னுடையது என்றார்.பர்ஸின் நிலையையும்,முதியவரின் வயதையும் கண்டு,ஜோடிப் பொருத்தம் பார்த்தே பர்ஸை தந்திருக்கலாம்.ஆனாலும் பரிசோதகர்,உம்முடையதுதான் என்பதற்கு என்ன ஆதாரம்?
எனக் கேட்டார்.அதில் கிருஷ்ணர் படம் இருக்கும் என்றார் பெரியவர்."இதெல்லாம் ஒரு ஆதாரமா?யார் வேண்டுமானாலும் கிருஷ்ணர் படம் வைத்திருக்கலாமே". "ஐயா" என்று செருமியவாறு முதியவர் ஏதோ கதை சொல்வது போல் சொல்ல ஆரம்பித்தார். வண்டி வேகமெடுத்ததால் காற்று பெட்டியினுள் பரவ, இறுக்கம் விலகியது.
காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகக்குலத்தை சேர்த்த செல்வந்தன் ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்துவந்தார்.தம்பதிகள் அறிவிலும் அறத்திலும் சிறந்தவர்களாக விளங்கினர்.காலப்போக்கில் வணிகன் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அக்குழந்தை சீராட்டி வளர்க்கப்பட்டு,உரிய காலத்தில் மணப்பருவத்தை அடைந்தது.
வணிகன் மதுரையில் வாழ்ந்து வந்த,ஏற்கனவே திருமணமான தன் மருமகனுக்கே பெண்ணை கொடுக்கப் போவதாக உறவினர்களிடம் கூறிக்கொண்டிருந்தான்.சில நாட்கள் சென்றதும் வணிகனும், அவனது மனைவியும் இறந்துவிட்டனர்.இறந்தவருக்குச் செய்யவேண்டிய இறுதிக் கடன்களை செய்து முடித்த சுற்றத்தார்,
மதுரையில் உள்ள மருமகனுக்கு அச்செய்தியை ஓலை மூலம் தெரிவித்தனர்.அவ்வோலையில், “உன் மாமனும்,மாமியும் இறந்து விட்டனர்.உன் மாமனுக்கு நிறைய சொத்தும் ஒரு பெண்ணும் உண்டு.ஆதலால் நீ வந்து உன் மாமன் பெண்ணைத் திருமணம் செய்து செல்வாயாக"என்று எழுதியிருந்தனர்.
நாம் என்ன பேசுகிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது. அப்படி இருக்க, நல்ல இனிய சொற்களை விட்டு விட்டு தேவை இல்லாத தீய சொற்களை ஏன் பேச வேண்டும்?எப்போதும் இனிய சொற்களையே பேசி வந்தால் என்ன கிடைக்கும் என்று கூறுகிறது இந்த நீதி நூல் பாடல்.
முதலில் புகழ் கிடைக்கும். " அவரு ரொம்ப நல்லவரு. எப்ப போனாலும் சந்தோஷம்,சிரிச்சு பேசி,மனசுக்கு இதமா நாலு வார்த்தை சொல்லுவார்"னு,
நம்மைப் பற்றி புகழ்ந்து பேசுவார்கள்.இனிய வார்த்தை சொல்லாவிட்டால் "அதுவா,எப்ப பாரு எரிஞ்சுஎரிஞ்சு விழும்.வாயில நல்ல வார்த்தையே வராதே"என்ற இகழ் வரும்.இரண்டாவது,நம்மை பிடிக்காதவர்கள்,வேண்டாதவர்கள் இருத்தால் கூட, இனிமையாக பேசினால் நாளடைவில் அவர்களும் நமக்கு நண்பர்காளாகி விடுவார்கள்.
ஜனக மகராஜா ஒருநாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது.அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல் கனவு.கனவில் அவர் மிகவும் துன்பப்பட்டார்.அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை.நிஜம் போலவே இருந்தது.திடுக்கிட்டு "நாராயணா" என்று அலறினார்.
கண் விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது.சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார்.
இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது.அவர் தினசரி இரவு தூங்கும்போது, கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.
பகலில் எழுந்தால் மன்னனாக சகல சம்போகங்களுடன் இருப்பார்.
ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது."நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா?
அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா?" என சந்தேகம் வந்து விட்டது.
பெண்மணி ஒருத்தி், ஐரோப்பாவில் தன்னுடைய மிக நீண்ட சுற்றுலாவை முடித்துக்கொண்டு, தன் சொந்தநாடான தென் ஆப்பிரிக்கா போக, லண்டன் ஏர்போர்ட்டில் காத்திருந்தாள்.அடுத்த பிளேனுக்கு நேரம் நிறைய இருந்ததால், டீயும் பிஸ்கெட்டும் வாங்கிகொண்டு, யாருமில்லாத ஒரு டேபிளில் வந்தமர்ந்தாள்.
காலைப்பேப்பரைப் படித்துக்கொண்டிருந்த அவளுக்கு எதிரிலிருந்து,சடசட என்று சத்தம்கேட்டது.நிமிர்ந்து பார்த்தவளுக்கு, பலத்த அதிர்ச்சி.பார்க்க, படித்தவன்போல் நன்றாக, உயர்ந்த விலையில் உடை உடுத்தி இருந்த ஒரு இளைஞன்,அவள் பிஸ்கெட் ஒன்றை அதன் கவரில் இருந்து எடுத்து சுவைத்துக் கொண்டிருந்தான்.
ஒரு பிஸ்கெட்டுக்காக, அந்நிகழ்ச்சியை பெரிதுபடுத்த விரும்பாத அப்பெண், அமைதியாக தானும் ஒன்றை எடுத்துத் தின்றாள். ஒன்று இரண்டு நிமிடங்கள் கடந்தன. திரும்பவும் சடசட என்ற அதே சத்தம். இன்றொரு பிஸ்கெட்டை எடுத்து அந்த இளைஞன் தின்றுக் கொண்டிருந்தான். மாற்றி மாற்றி இருவரும் எடுத்துத்தின்று,