கஞ்சி குடிக்காத காமாக்ஷி
காஞ்சீபுர மத்தியில் ராணியாக இருக்கிற அம்பாளையும் கஞ்சியையும் சம்பந்தப்படுத்தி ஒரு இருசொல் அலங்காரக் கவிதை இருக்கிறது.
மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அதற்கு அர்த்தம் என்னவென்றால், காமாக்ஷியம்பிகை கஞ்சி குடிக்க மாட்டாள். ஏதோ கம்பைப் பொங்கிச் சோறாகப்
போட்டாலும் சாப்பிட மாட்டாள். காய்கறி, அவியல், கூட்டு, ஊறுகாய் என்று ஏதாவது வியஞ்ஜனங்களையாவது இஷ்டப்பட்டு சாப்பிடுவாளா என்றால் அதுவும் மாட்டாள். அஞ்சு தலை பாம்புக்கு (பாம்புக்கு மரியாதை கொடுத்து ‘பாம்பார்' என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் செய்யுளில் ‘அரவம்' என்றில்லாமல் ‘அரவார்'
என்று வருகிறது) இப்படிப்பட்ட ஐந்து தலைப் பாம்புக்கு அம்பாள், ஆறாவது தலையாக மானசீகமாக ஆகிறாளாம்.

"கஞ்சி குடியாளே கம்பஞ்சோ றுண்ணாளே
வெஞ்சினங்க ளன்றும் விரும்பாளே - நெஞ்சுதனில்
அஞ்சுதலை யரவாருக் (கு) ஆறுதலை யாவாளே
கஞ்சமுகக் காமாட்சி காண்"

கஞ்ச முகம் என்றால் தாமரைப் பூப்போலவுள்ள
முகம். அம்பாள் முகம் அப்படி இருக்கிறது. கஞ்சி குடிக்காதவள், எதுவும் சாப்பிடாமல் கஞ்சத்தனமாயிருக்கிறாள் என்கிற மாதிரியும் த்வனிக்கிறது.
சரி, அம்பாளைப் பற்றி இப்படி ஏதோ அல்ப விஷயங்களைச் சொல்லி அப்புறம் ஆறுதலைப் பாம்பு என்று விஷமாக முடித்தால் என்ன அர்த்தம்? கொஞ்சம் யோசித்துப்
பார்த்தால் உங்களுக்கே புரிந்து விடும் – சிலதாவது;
‘கஞ்சி குடியாள்' என்றால் காஞ்சீபுரத்தில் குடி கொண்டிருப்பவள் என்று அர்த்தம். ‘கம்பஞ்சோறு உண்ணாள்' என்றால் ஏகம்பன் என்றும் கம்பன் என்றும் சொல்லப்படும் ஏகாம்பரநாதனுக்கு நைவேத்யமாகிற சோற்றை உண்ணாதவள் என்று அர்த்தம்.
சிவாலயங்களில்
முதலில் ஈஸ்வரனுக்கு நைவேத்யம் பண்ணிவிட்டு அப்புறம் அதையேதான் அவன் பிரசாதமாக அம்பாள் முதலான மற்ற எல்லா தெய்வங்களுக்கும் நைவேத்யம் செய்வார்கள். மதுரையிலே மட்டும் மீனாக்ஷிக்கு முதலில் செய்துவிட்டு அப்புறந்தான் சுந்தரேஸ்வரர் உள்பட மற்ற எல்லோருக்கும். காஞ்சிபுரத்திலே நூற்றெட்டு
சிவலாயங்கள் இருந்தபோதிலும் ஒன்றிலாவது அம்பாள் சந்நதியில்லாமல், அந்தப் பராசக்தி எல்லா மூர்த்திகளுக்கும் மேற்பட்ட பரப்ரஹ்ம ஸ்வரூபிணியாக காமாக்ஷி என்று தனிக்கோயிலில் வாசம் செய்கிறாள். அங்கே அவளுக்கென்றே தயார் செய்கிற நைவேத்யம்தான் அவளுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. ஏகாம்பரேச்வரர்
நைவேத்யம் அவளுக்கு வருவதில்லை. இதனாலே அவள் “கம்பஞ்சோறுண்ணாளே!”
அவள் பரம பிரேமையே ஒரு ரூபமாக ஆனவள். நாம் பண்ணுகின்ற தப்புகளுக்கு, அபசாரங்களுக்கு நம் மேல் அவளுக்கு எத்தனையோ கோபம் கோபமாக வர வேண்டும்.
ஆனால் அவளுக்குக் கோபித்துக் கொள்வது என்றால் கொஞ்சங்கூடப் பிடிப்பதில்லை.
‘வெஞ்சினங்கள் ஒன்றும் விரும்பாளே' என்றது இப்படி வெம்மையாக, அதாவது ரொம்ப உஷ்ணமாக, சினம் கொள்வதில் அவளுக்கு இஷ்டமே இல்லை என்று, அவளுடைய தயையை, க்ஷமையை (மன்னித்தருளும் மனப்பான்மையை) தெரிவிக்கிற வாசகமாக ஆகிறது. ‘வ்யஞ்ஜனம்' என்பதை தமிழ்ப்பாட்டில் ‘வெஞ்சினம்' என்று சொல்லலாம்.
அப்படிச்
சொல்லும்போது, கஞ்சி காமாக்ஷிக்கு வியஞ்ஜனமில்லாமல் சுத்தான்னம் மட்டும் நிவேதிக்க வேண்டுமென்று இருக்கிற அபிப்பிராயத்தை இந்தப் பாட்டு சொல்லுவதாகவும் ஆகும். அரவார் என்றால் ஹரனான சிவனைச் சேர்ந்த அடியார் என்று அர்த்தம்.
சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு. அதனால் அவர் ‘அஞ்சுதலை அரன்'
ஆகிறார். அவரை மனசிலே வைத்து உபாசிக்கிறவர்கள் ‘நெஞ்சுதனில் அஞ்சுதலை யரவார்'. ‘ஆறுதலையாவாள்' என்றால் ‘ஆறுதலை அளிக்கிறவள்', ‘ஆறுதலாக இருப்பவள் என்று அர்த்தம். நெஞ்சத்தில் ஈஸ்வரனை உபாசிக்கிறவர்களுக்கு சம்சாரக் கஷ்டம் தெரியாமல் ஆறுதலாக இருப்பவள் அம்பாள்.
- தெய்வத்தின் குரல் (பாகம்3)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

28 Jul
கோயில்களுக்குக் காணிக்கையாக வந்த 2000 கிலோ தங்கம் பயனின்றி உள்ளதாகவும் அவற்றை வைப்பு நிதியாக வைத்து அரசின் நிதிச் சுமையை குறைக்க ஸ்டாலின் திட்டம் போட்டுள்ளார். இது குறித்து #திமுக செய்தித் தொடர்பாளர் கண்ணதாசன் “கோயில் சொத்துகள் ஒரு காலத்தில் அந்தக் கோயில் மற்றும் அதைச் சார்ந்து
உள்ள ஊர் மக்களுக்குப் பயன் படுவதற்காகக் கொடுக்கப் படவைதான். அதன் ஒரு பகுதியாகத்தான் கோயில் நகைகள் மூலம் வருமானம் ஈட்ட எடுக்கப்பட்டுள்ள அரசின் முயற்சி. இதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து கோயில்களைச் சீரமைப்பதோடு மக்கள் நலத் திட்டங்களையும் செயல்படுத்த முடியும். தமிழ்நாட்டின்
கோவில்களைச் சார்ந்து பல லட்சம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. அதன் மூலம் பலகோடி வருமானம் வருகிறது. உண்டியல் மற்றும் இதர காணிக்கைகள் மூலம் ஆண்டுக்குக் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. இவற்றை நெறிப்படுத்தினால் தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் நிதிச் சுமையைச் சரி செய்ய முடிவதோடு
Read 16 tweets
28 Jul
#திருஇந்தளூர் 26வது #திவ்யதேசம்
சோழர்காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும். அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோயில். காவிரி கரையில் அமைந்த வைணவத் தலங்கள் பலவற்றுள் 5 அரங்கங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தன. அவை திருவரங்க பட்டணம் (மைசூர்), திருவரங்கம், அப்பால ரங்கம் (கோவிலடி), கும்பகோணம்
மத்தியரங்கம், திருஇந்தளுர் பரிமளரங்கம் என்பவை ஆகும். இறைவனது திருமேனி மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த பச்சை மரகதத் திருமேனியாக காண்போர் கண்ணையும் மனதையும் கவருவதாக அமைந்துள்ளது. இத்தலத்தை சுற்றிலும் நறுமணம் வீசும் புஷ்பக் காடுகள் நிறைந்திருந்ததால் இவற்றின் நறுமணம்
வீசுகிறது. இதனால் பெருமாளுக்கு சுகந்தவன நாதர் என்று மற்றொர் பெயரும் பெருமாளுக்கு உண்டு. மூலவர்  பரிமள ரெங்கநாதரின் முகாரவிந்தத்தில் சூரியனாலும், பாதாரவிந்தத்தில் சந்திரனாலும், நாபிக்கமலத்தில் பிரம்மாவினாலும் பூஜிக்கப்படுகிறார்கள். தென்புறத்தில் காவிரி தாயாரும், வடபுறத்தில் கங்கை
Read 16 tweets
28 Jul
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் பத்ம புராணத்தில் இருந்து:
வாரணாசியில் கிரிகலா என்ற ஸ்ரீ விஷ்ணு பக்தன் வாழ்ந்து வந்தான். திடீரென்று ஸ்ரீ விஷ்ணு கோவில்கள் தீர்த்த யாத்திரை போக வேண்டுமென்று மனைவியிடம் சொன்னான். சுகலா என்பவள் அவன் மனைவி தானும் உடன் வருவேன் என்று அடம் பிடித்தாள். வழியில்
எத்தனையோ இடையூறுகள் ஏற்படுமென்று அஞ்சிய கிரிகலா அவளிடம் சொல்லாமலே யாத்திரைக்குப் புறப்பட்டு விட்டான். கணவனிடம் மிக்க அன்பு கொண்ட சுகலா உணவு, உறக்கம் என்பதை விட்டுத் தரையில் கிடந்து உறங்கத் தொடங்கினாள். அவளது உறவினர்கள் அவளிடம் உன் கணவன் ஸ்ரீ விஷ்ணு கோவில்கள் தீர்த்த
யாத்திரைக்குத் தானே போயிருக்கிறார். நீ ஏன் இப்படி மனத்தைக் குழப்பிக் கொண்டு, உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய் என்று கூறினர். அவர்கள் கூறியதை ஏற்காத மனைவி சுகலா என்னிடம் சொல்லாமல் போனதே என்னை ஒதுக்கி வைத்தது போலத் தான். ஆகவே நான் இந்த விரதங்களை அனுஷ்டிப்பது நியாயம்தான் என்று
Read 10 tweets
27 Jul
ஈஸ்வரனைக் காட்டிலும் குரு பெரியவர், ஈஸ்வர பக்தியைக் காட்டிலும் குருபக்தி விசேஷம் என்கிறார்களே ஏன் என்று கேட்டால், ஈசுவரனை யாரும் பார்க்கவில்லை। ஆனால் பிரத்தியக்ஷமாக நாம் பார்க்கக்கூடிய ஒரு மனிதர் எப்போதும் ஞானம் உடையவராய், அசைவு இல்லாத சித்தம் உடையவராய், அப்பழுக்கு இல்லாமல்
நமக்குக் கிடைத்துவிட்டால் நாம் எந்த மனச்சாந்திக்காக ஈசுவரனிடத்தில் போகிறோமோ அந்த சாந்தி இவரிடம் பக்தி செலுத்தினாலே கிடைத்து விடுகிறது। அதனால் தான்,

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர: |

என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த சுலோகத்தில் குருவுக்கும்
பரமாத்மாவுக்கும் பேதமின்மையை சொல்லியிருப்பது ஒரு விசேஷம்.
இதில் விஷ்ணு, சிவன் இருவரையும் சொல்லியிருப்பதால் இந்த சுலோகத்தைச் சொல்லி நாம் குருவந்தனம் பண்ணினால் நமக்கு சிவ- விஷ்ணு பேதமின்மை பாவமும் உண்டாகி விடும்.
ஆனால் தெய்வ பக்தியை மறக்கக் கூடாது. குருவை நம்மோடு சேர்த்து
Read 6 tweets
27 Jul
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஆயர்பாடியில் ததிபாண்டன் என்ற ஒரு தயிர் வியாபாரி இருந்தான். ஒரு சமயம் கண்ணனை அன்னை யசோதை பிரம்பைக் கையில் ஏந்தியபடி துரத்திக் கொண்டே வர, ததிபாண்டன் கடைக்கு ஓடி வந்தான் விஷமக்காரக் கண்ணன்.
காலியாக இருந்த தயிர்ப் பானையைத் தலையணையாக வைத்தபடி உறங்கிக் கொண்டு
இருந்தான் ததிபாண்டன். மாமா மாமா என்று இனிய, ஆழமான குரலில் அவனைக் கண்ணன் அழைத்தான். அவன் கண்விழித்துப் பார்த்து என்ன என்று கேட்டான். மாமா நான் வீட்டிலிருந்த வெண்ணெய் எல்லாம் திருடித் தின்றதால் என் அம்மா என் மேல் கோபத்துடன் பிரம்பை எடுத்துக் கொண்டு என்னைத் துரத்தி வருகிறாள். நான்
ஒளிந்து கொள்ள இடம் தேடி வந்துள்ளேன். உங்களுடைய காலிப் பானை ஒன்றினுள் நான் ஒளிந்து கொள்கிறேன். நான் ஒளிந்து கொள்ளும் பானையின் வாயைத் துணிபோட்டுக் கட்டிவிடுங்கள். என் தாய் வந்து கேட்டால் நான் இங்கு இல்லை என்று சொல்லிவிடுங்கள் என்றான். ததிபாண்டனும் அதற்குச் சம்மதித்து அவ்வாறே
Read 10 tweets
26 Jul
தினமும் நம் வீட்டு பூஜையறையில் உள்ள நம் குலதெய்வம் மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் அன்னம் நைவேத்தியம் செய்து அதை வீட்டிலுள்ள அனைத்து ஸ்வாமி படங்களுக்கும் காண்பித்துவிட்டு காகத்திற்கு போடவேண்டும். ஆனால் சிலர் நான் காலையில் குளிக்காமல் குக்கர் வைப்பதால் சாதம் நைவேத்தியம் Image
செய்வதில்லை என்கின்றனர். அது தவறு. தயவுசெய்து கண்டிப்பாக தினமும் ஸ்வாமிக்கு சாதம் எப்படியாவது நைவேத்தியம் செய்ய வேண்டும். அதுவும் குக்கரில் வைத்த அனைத்து அன்னத்தையும் அல்லது வடித்த சோறு அனைத்தையும் சிறிது நெய்விட்டு அப்படியே நைவேத்யம் செய்யவேண்டும். வைணவர்கள் கண்டருளப் பண்ணுதல்
என்று அழகிய தமிழில் இதை சொல்வார்கள். நைவேத்தியம் என்றால் அறிவிக்கிறேன் என்று பொருள் அதாவது இன்று இது உன் அருள் இது எப்போதும் எல்லோர்க்கும் கிடைக்கவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். சிலர் சிறிய கிண்ணத்தில் கொண்டு
வந்து வைக்கிறார்கள். அது வேண்டாம். அந்த அன்னம்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(