#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் பராசர பட்டர் ஒருமுறை காட்டுபாதையில் சென்றுக் கொண்டிருந்தார். திடீரென்று அங்கே ஏதோ ஒரு காட்சியைக் கண்டு மயங்கி விழுந்துவிட்டார். நெடுநேரம் ஆகியும் பட்டர் வீடு திரும்பாததால் அவரைத் தேடிச்சென்ற சீடர்கள், அவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டார்கள். அவரை மெதுவாக
வீட்டுக்கு அழைத்து வந்து மயக்கம் தெளிவித்தனர். பட்டர் எழுந்தவுடன், காட்டில் என்ன ஆயிற்று? கொடிய மிருகங்கள் ஏதாவது உங்களைத் தாக்க வந்தனவா? இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டனவா?என்றெல்லாம் வினவினார்கள் சீடர்கள். ஒன்றுமே இல்லை. நான் ஒரு காட்சியைக் கண்டேன். அதனால் மயங்கி விழுந்து
விட்டேன் என்றார் பட்டர். என்ன காட்சி என்று பதற்றத்துடன் சிஷ்யர்கள் கேட்டார்கள். ஒரு வேடன் ஒரு முயல்குட்டியைப் பிடித்தான். அதை ஒரு சாக்குப்பையில் மூட்டைக்கட்டி எடுத்துச்சென்றான். இதைக்கண்ட அந்த முயல்குட்டியின் தாய்முயல், அந்த வேடனைத் துரத்திச்சென்று, அவன் கால்களை பிடித்துக் கொண்டு
மன்றாடியது. தனது குட்டியை விட்டுவிடும்படிக் கெஞ்சியது. அதைக் கண்டு மனம் இரங்கிய அந்த வேடன், முயல் குட்டியைச் சாக்கு மூட்டையிலிருந்து விடுவித்தான். இக்காட்சியைக் கண்டதும் நான் மயங்கி விழுந்துவிட்டேன் என்றார் பட்டர். இந்தக் காட்சியில் மயங்கி விழும் அளவுக்கு என்ன இருக்கிறது என்று
கேட்டார்கள். என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்? சரணாகதியை எப்படிச் செய்யவேண்டும் என்று அந்த முயலுக்கு யாராவது சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? இல்லை சரணாகதி செய்தால் அவர்களைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்ற நீதியை அந்த வேடனுக்கு யாரேனும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? இரண்டிற்கும்
வாய்ப்பில்லை. ஆனாலும்,அந்த முயல் செய்த சரணாகதியை அந்த வேடன் அங்கீகரித்து, அது கேட்டதைத் தந்துவிட்டான். சரணாகதி என்றால் என்னவென்றே அறியாத ஒரு முயலுக்கு, ஒரு சாமானிய வேடன் இப்படி கருணைக் காட்டுகிறான் என்றால், சரணாகத வத்சலனான பெருமாள், அவனே கதி என்ற உறுதியுடன் அவன் திருவடிகளைச்
சரணடைந்த நமக்கு எவ்வளவு அனுக்கிரகம் செய்வான்! அவனே கதி என்று அவன் கால்களைப் பற்றும் நம்மைக் கைவிடுவானா? ஶ்ரீமன் நாராயணனின் அத்தகைய ஒப்பற்ற கருணையை உணராமல், இத்தனைக் காலம் வீணாகக் கழித்துவிட்டேனே என்று வருந்தினேன். ஶ்ரீமன் நாராயணன் நம்மைக் கைவிடவே மாட்டான், காப்பாற்றியே தீருவான்
என்ற உறுதி, இன்னும் என் மனத்தில் உதிக்கவில்லையே என ஏங்கினேன். அதனால்தான் மயங்கி விழுந்துவிட்டேன் என்று விடையளித்தார் பட்டர். பட்டரின் விளக்கத்தைக் கேட்ட சீடர்கள் வியந்து போனார்கள். சரணம் என்று தன்னை அண்டியவர்களை நழுவவிடாமல், கைவிடாமல் நமக்கு எவ்வளவு அனுக்கிரகம் செய்வான், அவனே கதி
என்று அவன் கால்களைப்பற்றும் நம்மைக் கைவிடுவானா? ஶ்ரீமன் நாராயணனின் அத்தகைய ஒப்பற்ற கருணையை உணராமல், இத்தனைக் காலம் வீணாகக் கழித்துவிட்டேனே என்று வருந்தினேன் எனக் கூறினார்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

8 Aug
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கங்கைக்கரை ஒட்டிய நவதீப்பில் முகிலன், கோவிந்தன் என இரண்டு நண்பர்கள் வசித்து வந்தனர். அதில் முகிலன் உண்மையான கிருஷ்ண பக்தன், கோவிந்தன் வெளியே மட்டுமே பக்தனாக நடித்தான் குறிப்பாக சாக்கு போக்கு சொல்லி எந்த பக்தி சேவையும் செய்யாமல் தட்டிக்கழித்து வந்தான். ஒரு
முறை கங்கைக் கரை அருகில் உள்ள மாயாப்பூர் என்னுமிடத்தில் ஆன்மீக மகான் ஒருவர் விஜயம் செய்தார். இதனை அறிந்த உண்மையான பக்தன் முகிலன் தனது நண்பனிடம் கங்கையின் மறு கரையில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக மகான் ஒருவர் வந்துள்ளார் நாம் சென்று அவரது ஆசியைப் பெறலாம் என்று கூறி அழைத்தான்.
கண்டிப்பாக நாம் ஒரு நாள் போவோம் ஆனால் இப்போது வேண்டாம், கொஞ்ச நாள் கழித்து செல்லலாம். இப்போது நிறைய வேலை உள்ளது என்று கூறி தட்டிக் கழித்தான் கோவிந்தன். இரண்டு நாட்கள் கடந்தன, கங்கைக் கரையில் களியாட்ட விழா நடந்தது. கோவிந்தன் முகிலனிடம் நாம் இங்கு விழாவை காண செல்வோமா அங்கு சூடான
Read 11 tweets
7 Aug
via WA
சுஜாதாவை தவிர வேறு யார் இப்படி எழுத முடியும்
அந்த காலம் தான்
நன்றாக இருந்தது!
ஒரு முறை ரேடியோவில் கேட்டாலே
சினிமாபாட்டு மனப்பாடம் ஆச்சு
பேருந்துக்குள் கொண்டுவந்து
மாலைமுரசு விற்பார்கள்
மிதி வண்டி வைத்திருந்தோம்
எம் ஜி ஆர் உயிரோடு
இருந்தார்.
ரஜினி, கமல் படம் ரிலிஸ்,
KB படங்கள் என்றால்
ஒரு மாதம் அலசுவோம்.
எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்.
கல்யாண வீடுகளில்
பாய் போட்டு சாப்பாடு.
கபில் தேவின்
கிரிக்கெட். FANTASTIC
5 நாள் MATCH
குமுதம், விகடன்
நேர்மையாக இருந்தது.
எல்லா வீடுகளிலும், ரேடியோவிலும்,
கேசட்டிலும்
பாடல் கேட்பது
சுகமானது.
வீடுகளின் முன் பெண்கள்
காலையில் கோலமிட்டார்கள்,
மாலைப் பொழுதுகளில் வீட்டின் முன்
அரட்டை அடிப்பார்கள்.
சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு
முன்பே திட்டமிடுவோம்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட
ஒரு மாதத்துக்கு முன்பே தயாராவோம்.
புது SCHOOL UNIFORM தான்
சிலருக்கு
Read 7 tweets
7 Aug
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு ஊரில் வயல்களின் நடுவே ஆங்காங்கே குளங்கள் இருந்தன. அதில் சிறிதும், பெரிதுமாக நிறைய மீன்கள் இருந்தன. அதில் மூன்று பெரிய மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக வாழ்ந்து வந்தன. அவைகள் எங்கு இருந்தாலும், என்ன செய்தாலும் ஒரே மாதிரி செய்து கொண்டு மிக்க நேசமாக
அக்குளத்தில் வாழ்ந்தன. மற்ற மீன்களுக்கு அவைகளிடம் மிக்க மரியாதையும், அன்பும் இருந்தது. அந்த மீன்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு விசேஷ குணம் இருந்தது. ஒன்றிற்கொன்று வித்தியாசமான குணமானாலும் அவைகளுக்குள் பிரச்சினை ஒன்றும் இல்லை. முதலாவது மீனின் இயல்பு எதிர்வரும் ஆபத்துகளிலிருந்து முன்
எச்சரிகையோடு தன்னை காப்பாற்றி கொள்ளும் குணமுடையது. இரண்டாவது மீனின் இயல்பு, ஆபத்தான சமயம் வரை காத்திருந்து , மிகவும் சிரமப்பட்டு தக்க உபாயத்தை கையாண்டு பல கடினங்களுக்கு பின் தன்னைத்தானே காப்பாற்றி கொள்ளும் குணமுடையது. மூன்றாவது மீனின் இயல்பு காலதாமதம் செய்து யாருடைய நல்ல
Read 13 tweets
5 Aug
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறப்பதை பார்த்து கேவி கேவி அழுதான் அர்ஜுனன். அதை பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கண்ணீர் விட்டு அழுதான். கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன் கண்ணனை இறுக பற்றிக்கொண்டு கண்ணா அபிமன்யு உன் மருமகன் அல்லவா அதனால் தான் நீயும் துக்கம்
தாள முடியாமல் அழுகிறாயோ என்று கேட்டான். கண்ணன், இல்லை அர்ஜுனா நான் துக்கம் தாளாமல் அழவில்லை. உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம் தாளாமல் அழுகிறேன் என்றான் கண்ணன். அர்ஜுனன், கண்ணா நீயோ கடவுள். உனக்கு உறவு, பற்று, பாசம், பந்தம் எதுவும் கிடையாது ஆனால் என்னால் அப்படி இருக்க
முடியாது. கண்ணன் சொன்னார், உறவு, பற்று, பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா. அப்படி சொல்லாதே கண்ணா, மானிடர்கள் மறைந்தாலும் பாச பந்தம் அவர்களை விட்டு போகாது என்றான் அர்ஜுனன். அப்படியா? இப்பொழுதே வா என்னோடு சொர்க்கலோகம் செல்லலாம். அங்கே தான் இறந்த உன் மகன்
Read 9 tweets
4 Aug
#சிவன்_சொத்து_குலம்_நாசம் நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்த மகா பெரியவரின் தீட்சண்யத்தை- தீர்க்கதரிசனத்தை விளக்கும் இன்னொரு சம்பவம்! இதை பகிர்ந்து கொண்டவர் சங்கர பக்த ஜன சபாவின் செயலாளர் வைத்தியநாதன். இவர் இளவயது முதல் மகா பெரியவரின் கூட இருந்த அடியவர். அது, மாசி மாதத்தின் வைகறைப்
பொழுது. வெண்ணியாற்றின் வடகரை வழியே பயணித்துக்கொண்டிருந்தது அந்தப் பல்லக்கு ஊர்வலம். முதலில் பல்லக்கு, அதைப் பின்தொடர்ந்து அடியார் கூட்டம், அவர்களுக்கும் பின்னால் யானை, குதிரை, ஒட்டகப் பரிவாரங்கள் என நகர்ந்த அந்த ஊர்வலம், மாயனூர், ஹரிச்சந்திரபுரம், திட்டச்சேரி தாண்டி நத்தம் என்ற
இடத்தை அடைந்தபோது அந்த இடத்தில் ஒரு பிள்ளையார் கோயில். அங்கிருந்து இடமும் வலமுமாக இரண்டு பாதைகள் பிரிந்தன. அப்பொழுது பல்லக்கின் உள்ளே இருந்து, தண்டத்தால் ஒலியெழுப்பும் சத்தம்! சட்டென்று நின்றது ஊர்வலம். அவர் இரண்டு நாட்களாக மௌன விரதத்தில் இருந்தார். மெயின் ரோட்டில் இருந்து இடது
Read 34 tweets
3 Aug
#ஸ்ரீகிருஷ்ணங்கதைகள் ஒரு முறை, மன்னன் அம்சவரதனைக் காண ஒரு சாது வந்தார். ஆசி வழங்கிய சாது, அவனிடம் ஒரு விருப்பத்தை முன்வைத்தார். இந்த ஊரிலேயே மிகப்பெரிய முட்டாள் ஒருவனைக் கண்டுபிடித்து அவனுக்கு வேலை கொடுப்பாயாக. அவனது கையில் ஒரு குச்சியைக் கொடுத்து ஊரெங்கும் வலம் வரச் சொல்.
அதுவே அவனது வேலையாக இருக்க வேண்டும், அதற்காக அவனுக்குத் தக்க ஊதியமும் வழங்க வேண்டும் என்றார். சாதுவின் வேண்டுகோளைக் கேட்டு திகைப்புற்ற போதிலும், ஒரு வித பயத்தினால் காரணம் ஏதும் கேட்காமல், மன்னன் அம்சவரதன் ஒப்புக் கொண்டான். சாதுவும் அரசவையை விட்டு வருத்தத்துடன் வெளியேறினார்.
சாதுவின் விசித்திரமான கட்டளையை மன்னன் மிகுந்த கவனத்துடன் நிறைவேற்றினான். தனது அமைச்சர்களின் உதவியுடன் நாட்டிலேயே மிகப்பெரிய முட்டாள் ஒருவனைக் கண்டுபிடித்தான். அவன் முட்டாளா என்பதை நன்கு சோதித்து அவனை வேலைக்கு அமர்த்திக் கொண்டான். அவன் கையில் ஒரு குச்சியைக் கொடுத்து ஊரெங்கும் வலம்
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(