ஆச்சாரியார் ரஜினீஷிடம் சீடர் ஒருவர் கேட்ட கேள்வி: எங்களுடைய வீடுகளும், உடைமைகளும் மதத் தீவிரவாதிகளால் கொளுத்தப்படும் பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும்? மத நல்லிணக்கத்திற்காக முயற்சி செய்ய வேண்டுமா அல்லது எங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சி எடுக்க வேண்டுமா?
ஆச்சாரியார் #ரஜனீஷ்
அவர்களின் பதில்: உங்களுடைய கேள்வியே விவேகமற்றதாகத் தெரிகின்றது. நீங்கள் உங்களுடைய வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. முகமது கஜினி சோமநாதபுரம் கோயிலைத் தாக்கியபோது அந்தக் கோயில்தான் இந்தியாவிலேயே, மிகவும் செல்வ வளம் பொருந்திய கோயிலாக இருந்தது. 1200 இந்து
சாதுகள் அங்கே தியானம் செய்து கொண்டும் இறைவனை துதித்துக் கொண்டும் இரவு பகலாக பக்தி செலுத்திக் கொண்டிருந்தனர். பல ஆயிரம் பேர் கோவிலில் பலவிதமான பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் நினைத்தது என்னவென்றால், நாம் கடவுளிடம் தூய பக்தியை செலுத்திக் கொண்டிருக்கின்றோம்; அந்தக் கடவுள் நம்மை
காப்பாற்றுவார் என்று. அந்தக் கடவுளும் காப்பாற்றவில்லை அங்கிருந்த அரசர்களும் காப்பாற்றவில்லை. அதனால் முகமது கஜினி அங்கிருந்த அனைவரையும் கொன்று, சிலைகளை உடைத்து, கோவிலை கொள்ளையடித்து, ஏராளமான தங்க, வெள்ளி, வைர ஆபரணங்களையும், மதிப்பிட முடியாத சொத்துக்களையும் எடுத்துச் சென்றான்.
அங்கிருந்த ஹிந்து துறவிகளின் தியானமோ, இறை நம்பிக்கையோ அவர்களைக் காப்பாற்றவில்லை. இன்றைக்கு பல நூற்றாண்டுகள் கழித்த பிறகும் கூட இதே மாதிரியான ஒரு பைத்தியக்காரத்தனம் தான் நம்மிடம் நிலவுகின்றது. கடவுளிடம் பக்தி செலுத்தினால் போதும் அவர் நம்மை காப்பாற்றுவார் என்று இன்னமும் நம்பிக்
கொண்டிருக்கின்றோம். உங்கள் முன்னோர்களிடமிருந்து நீங்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. பக்தியும், தியானமும், ஒருவரைப் பாதுகாக்கும் என்றால் ராமச்சந்திர மூர்த்தி ராவணன் மீது ஏன் போர் தொடுக்க வேண்டும்? தியானம் செய்து கடவுளிடம் முறையிட்டு ராவணனின் மனதை மாற்றி
இருக்கலாமே? அதேபோல் பக்தியும், இறை நம்பிக்கையும் மனங்களை மாற்றும் என்றால், கிருஷ்ண பரமாத்மா பாரதப் போருக்கு ஏற்பாடு செய்யாமல் துரியோதனிடம் மன மாற்றத்தை உருவாக்கி இருக்கலாமே?அர்ஜுனனைப் போர் செய்யும்படி அறிவுறுத்தி இருக்க வேண்டாமே?
மனிதகுல வரலாற்றில் மகாபாரதப் போர் ஒரு மாபெரும்
போர். ஏராளமான மனிதர்களைக் காவு கொடுத்த போர். அதனை ஏற்படாமலே தடுத்து இருக்க முடியுமே! இந்த பாரத தேசத்தில் எத்தனையோ மகிமை மிகுந்த, சக்தி மிகுந்த குருக்களும், ஆச்சாரியர்களும் இருந்து இருக்கிறார்கள். ஆனால் முகலாயர்களும் ஆங்கிலேயர்களும் இந்த நாட்டிற்குள் புகுந்து இந்த நாட்டினை அடிமை
கொண்டார்கள். குருநானக் எவ்வளவு நல்ல முறையில் முகலாய ஆட்சியாளர்களிடம் மதம் என்றால் என்ன என்று சொல்லிப் புரிய வைத்தார். ஆனாலும்கூட குரு கோவிந்த சிங் வரும்பொழுது அவர் வாள் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத்தானே தள்ளப்பட்டார். தியானமும் இறை நம்பிக்கையும் ஒரு மனிதனின் மனதைத்
தூய்மைப்படுத்தும், புனிதமாக்கும்.
ஆனால் நம்முடைய உடமைகளையும், குடும்பத்தையும், வீடுகளையும் காக்க வேண்டுமென்றால் நாம் அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டாக வேண்டும்.
இவரின் பதில் இன்றைய தமிழக கோவில்களுக்கு ஏற்பட்டிருக்கும் அபாயத்தை நீக்க நாம் துணிச்சலுடன் எதிர்க்கவேண்டும் என்பதை தான்
நமக்கு அறிவுறுத்துகிறது. யாருக்கு வந்த விருந்தோ என்றோ ஐயோ அந்தக் கட்சியா என்று பயந்து இருந்தாலோ நாளைய தலைமுறைக்கு ஓர் அருளில்லாத வெற்று சமுதாயத்தை தான் விட்டு செல்கிறோம் என்பதை நாம் உணரவேண்டும். எத்தனையோ உயிர்த் தியாகங்களுக்குப் பிறகு தான் நம் கோவில்கள் இன்று நம் வசம் உள்ளன. அவை
நம். கை நழுவி விடாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சிவாவும் செல்வாவும் நெருங்கிய நண்பர்கள். செல்வா நாத்திகன், வாய் ஜால திறமையுடைவன். சிவா தீவிர கிருஷ்ண பக்தன். செல்வாவுக்கு மேடையில் கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை என்று பிரசங்கம் செய்வதே வேலை. எல்லா மதத் தலைவர்களும் தங்கள் வயிற்றுப்
பிழைப்புக்காக உண்டாக்கிக் கொண்ட கட்டுக்கதைகள் என்று வாய் ஜால திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருப்பான். செல்வாவுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடுவார்கள். கடைசியில் கடவுளுமில்லை கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம் என முடித்து யாராவது கேள்வி
கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம் என்று அழைப்பான். அப்போது ஒரு முறை நண்பன் சிவா மேடைமீது ஏறினான். தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான். நண்பா என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே எனக் கோபம் கொண்டான் செல்வா.
#NEET#நீட் இதற்கு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு ஏன்?
உச்சநீதிமன்றம் நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் விளைவு: 3 சுற்று கலந்தாய்வுக்கு பிறகும் இந்தியாவில் டீம்டு மருத்துவ பல்கலை கழககங்களில் இன்னும் 5,200 மாணவர் இருக்கைகள் நிரப்ப படாமல் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 947 இருக்கைகள்
நிரப்ப படவில்லை.
பாலாஜி மருத்துவக்கல்லூரி - 206 காலி. (திமுக முன்னாள் அமைச்சர் ஜகத்ரட்சகனுக்கு சொந்தமானது)
ACS மருத்துவ கல்லூரி - 146 காலி
(முன்னாள் அதிமுக அமைச்சர் AC சண்முகத்திற்கு சொந்தமானது)
மீனாக்ஷி மருத்துவ கல்லூரி - 130.
( கம்பெனி முதலாளி தெரியவில்லை தெரிந்தவர் கூறலாம்)
செட்டிநாடு மருத்துவ கல்லூரி - 127
( செட்டிநாடு சிமெண்ட் கம்பெனி )
SRM மருத்துவ கல்லூரி - 98
(உத்தமர் பச்சைமுத்து புதிய தலைமுறை தொலைக்காட்சி )
ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி - 76. (எம்ஜிஆர் ஆசிபெற்ற சாராய வியாபாரி உடையார் குடும்பம் )
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்#ராதாஷ்டமி
ஆவணி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமியன்று மதிய வேளையில் ராதா பிறந்தாள். அதாவது ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களுக்கு நடுவில் வரும் வளர்பிறை எட்டாம் நாள் பிறந்தாள். கிருஷ்ணரின் ஜன்மாஷ்டமியில் இருந்து பதினான்காம் நாள் ராதா பிறந்த ராதாஷ்டமி வருகிறது. இந்நாளை ராதா
பிறந்த ஊரான பர்சானா என்ற இடத்திலும் ப்ரஜ் பூமியின் எல்லா பகுதியிலும் சிறப்பாக மக்கள் கொண்டாடுகிறார்கள். எல்லாம் கோபிகைகளுடன் கிருஷ்ணர் விளையாடினாலும் ராதா அவருக்கு மிகவும் பிரியமானவள் ராதைக்கு சகலமும் கிருஷ்ணன்தான். ராதா என்பதன் பொருள்: ரா என்றால் தருவது, ஒப்புக்கொள்வது. தா
என்றால் விடை பெறுதல், பிடிப்பை தளர்த்துதல். தருவதற்கும், பெறுவதற்கும் விரும்புதல், மனதை ஒருமுகப்படுத்துதல், அதற்காக பாடுபடுதல் என்பதே இவ்விரு எழுத்துக்களும் கூடினால் மிகச்சுவையான விளக்கங்கள் கூறலாம். எப்போது நாம், நான் என்ற பிடிப்பை தளர்த்தி, சத்தியத்தின் மேல் நம் மனதை
#ஶ்ரீகுருஷ்ணன்கதைகள் மன்னன் வீரவர்ம ராஜாவுக்கு பல யானைகள் இருந்தன. அதில் ஒரு யானை மணிகண்டன் மிகவும் பலம் வாய்ந்தது. கீழ்படிந்து நடக்கும் குணமும் விவேகமும் கொண்டது. போர்க்களத்தில் வீரவர்ம ராஜாவுக்கு எப்பொழுதும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்து திரும்பி வரும். எனவே ராஜாவின் மிகவும்
பிரியமான யானையானது மணிகண்டன். யானைக்கு வயதாகியது. முன்பு போல களத்தில் போர் செய்ய முடியவில்லை. எனவே மன்னர் வீரவர்மன் அதை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை. ஆனாலும் அவரது அணியின் ஒரு பகுதியாகவே யானை மணிகண்டன் இருந்தது. ஒரு நாள் யானை மணிகண்டன் தண்ணீர் குடிக்க ஏரிக்குச் சென்றபோது
சேற்றில் சிக்கி மூழ்கத் தொடங்கியது. பல முறை முயன்றும் சேற்றில் இருந்து காலை அதனால் வெளியே எடுக்க முடியவில்லை. அதன் அலறல் சத்தத்திலிருந்து யானை சிக்கலில் இருப்பதை மக்கள் அறிந்து கொண்டனர்.
மணிகண்டன் சேற்றில் சிக்கிய செய்தி ராஜாவை சென்றடைந்தது. ராஜா வீரவர்மன் உட்பட மக்கள் அனைவரும்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ரசிக முராரி என்பவர் ஒடிஸாவில் ரோகினி நகர் என்னும் ஊரில் 1590ல் பிறந்தவர். சிறு வயது முதலே பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் மேல் தீவிர பக்தி கொண்டிருந்த அவர் எப்போதும் கிருஷ்ணன் பெயரையே உச்சரித்துக் கொண்டிருப்பார். அவரது குரு சியாமானந்தர் 1608 ஆம் ஆண்டு ரசிக முராரிக்கு
கிருஷ்ண மந்திரத்தை உபதேசித்து மக்களை நல்வழிப்படுத்தி வரும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் அங்கேயே மடம் அமைத்துக்கொண்டு பகவத் சேவை செய்து வந்த சியாமானந்தர் 1630 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். அவர் சமாதி ஒடிஸாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ளது. அவர் அணிந்த காலணிகளை இன்னும் அங்கு
பாதுகாத்து வருகின்றனர். சியாமானந்தரிடம் கிருஷ்ண மஹா மந்திரத்தை உபதேசம் பெற்ற ரசிக முராரி கோபிபல்லவபூர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார். பானாபூரை ஆண்டு வந்த பைத்தியநாத் பஞ்ச் என்னும் ஒரு அரசனின் அரவணைப்பில் ரசிக முராரி வாழ்ந்துவந்த காலகட்டத்தில், அப்போது ஒடிஸா மாநில பொறுப்பாளராக
#மாசாணிஅம்மன் ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் தல வரலாறு.
பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஆனைமலையில் மிக பிரமாண்டமாக ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆனை மலைப்பகுதியை நன்னன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். அவரைச் சந்திக்க ஒரு துறவி வந்தார். அவரை
வரவேற்று பல உபசரிப்புகள் செய்த நன்னனின் உபரசரிப்பில் மகிழ்ந்த துறவி அவருக்கு ஓர் மாங்கனியை கொடுத்தார். ‘மன்னா இது அதிசய மாங்கனி இதை எனது குருநாதர் பரிசாக அளித்தார். உன்னால் மகிழ்வுற்ற நான் இந்த மாங்கனியை பரிசளிக்கிறேன், முக்கியமான ஒன்று இதை உண்ட பின் இந்த மாங்களி கொட்டையை ஆற்றில்
விட்டு விடு, இல்லையெனில் இது ஆபத்தாக முடிந்து விடும்’ என்றார். மன்னர் சரி என்று சொல்லி துறவியை வழியனுப்பி விட்டு மாங்கனியை சுவைத்தார். சுவை நன்றாக இருக்கவே அந்த மாங்கொட்டையை துறவி சொன்னதை அலட்சியப்படுத்தி தமது நந்தவனத்தில் ஆற்றோரம் நட்டு பராமரித்து வந்தார். மரம் பெரியதாகி பழம்