#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் பகவத்கீதையில் ‘நான் தபஸிற்கோ, கர்மயோகத்திற்கோ, யாகயோகத்திற்கோ, கிடைக்க மாட்டேன். பக்தி ஒன்றுக்கே கிடைப்பேன்’என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கூறுகிறார். யாகம், யோகம் இதையெல்லாம் செய்யக்கூடாது என்பது இதன் அர்த்தமல்ல. எதையுமே ‘நான்’ செய்கிறேன் என்ற அகம்பாவம் இல்லாமல்
பக்தியுடன் பகவத் சமர்ப்பணமாக செய்தல் வேண்டும். இவற்றை செய்ய முடியாதவர்கள்கூட பிரேம பக்தியால் பகவானை அடைந்துவிட முடியும். பகவான் ‘அன்பு’ என்ற கயிற்றுக்குத் தான் கட்டுப்படுவான். கர்நாடக மாநிலத்தில் ஒரு கிராமத்தில் #கனகதாசர் எனும் பக்தர் வாழ்ந்து வந்தார். அவர் மிகுந்த பணக்காரக்
குடும்பத்தில் பிறந்தவர். ஆடு மேய்க்கும் இடைஜாதியைச்
சேர்ந்தவர். பணம் பக்திக்கு இடையூறாக இருக்குமோ என்று கருதி கர்நாடகத்திலேயே போரூர் என்ற இடத்தில் ஆதிகேசவ பெருமாளுக்குஅற்புதமான ஒரு கோயிலைக் கட்டினார். (இன்று பார்த்தாலும் அந்தக் கோயிலின் வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன.)
கோயில் கட்டியதுபோக மீதம் இருந்த பணத்தையெல்லாம் ஏழை, எளியவருக்குத் தானம் செய்தார். கொஞ்சமும் பணம் இல்லாமல் சுதந்திரமாக ஆடுகளை மேய்த்துக்கொண்டு இடுப்பில் ஒரு துண்டுடன், ஆடு மேய்க்கும் குச்சியுடன் காணப்படுவார். கிராமத்தார்கள் கூப்பிட்டு ஏதாவது கொடுத்தால் சாப்பிடுவார். இல்லாவிட்டால்
பசியைப் பொருட்படுத்தவே மாட்டார். காட்டில் ஆடுகளை மேய விட்டுவிட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்து கிருஷ்ணனுக்கு மானசீகமாக பூஜை செய்து கொண்டிருப்பார். மிக பக்தியுடன் செய்யப்படும் அந்த பூஜைக்கு எல்லையே இல்லை. குடம் குடமாக பாலாபிஷேகம் செய்யலாம். பெரிய பெரிய அண்டாவில் சர்க்கரைப் பொங்கல்
செய்யலாம். மானசீகமாக கிருஷ்ணருக்கு சேவை செய்து வாழ்ந்து வந்தார். கிருஷ்ண தேவராயருடைய ராஜகுருவான வியாசராயர் ஒரு சமயம் அந்தப் பகுதிக்கு பல்லக்கில் வந்துகொண்டிருந்தார். வரும் வழியில் ஒரு துளசி வனத்தைக் கண்டார். துளசி என்றாலே கிருஷ்ணனின் நினைவுதான் வரும். இவரோ கிருஷ்ண பக்தர். உடனே
கீழே இறங்கி துளசிகளைப் பறிக்க அவகாசம் இல்லை. அதனால் மானசீகமாகவே துளசியைப் பறித்தார். அவற்றை மாலையாகத் தொடுத்தார். உடுப்பி கிருஷ்ணருக்கு கழுத்தில் சாத்தினார். இப்படி மானசீகமாக செய்த பூஜையில் கிருஷ்ணருக்கு சாத்திய மாலை, கழுத்தில் ஒரு பக்கம் மட்டும் தூக்கி நின்றது. இதில் என்னவோ குறை
இருக்கிறது என்று கருதி, மனதாலேயே அந்த மாலையை எடுத்தார். அதன்மேல் தீர்த்தம் தெளித்து மறுபடியும் கிருஷ்ணருக்கு சாத்தினார். அப்போதும் ஒரு பக்கம் தூக்கி நின்றது. இப்படி ஏன் நேருகிறது என்ற குழப்பத்துடன் அவர் தடுமாறியபோது, சாமி சாமி என்று ஒரு குரல் கேட்டது. வியாசராயர் பல்லக்கை நிறுத்த
சொல்லி, பதாகையை விலக்கி வெளியே பார்த்தார். சற்றுத் தொலைவில் கனகதாசர், நீங்கள் இப்பொழுது மானசீகமாக ஸ்ரீகிருஷ்ணனுக்கு சாத்திய துளசி மாலை அவன் கையிலிருக்கும் மத்தில் மாட்டிக்கொள்கிறது. அதை சரிசெய்தால் அது இரண்டு தோள்களிலும் அழகாக விழும்,’’ என்று கூறினார். திடுக்கிட்டார் வியாசராயர்.
தன் மானசீக பூஜை இவனுக்கு எப்படி தெரிந்தது என்று ஆச்சரியம்! அதை அவரிடமே கேட்டார். அதற்கு கனகதாசர், நான் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மானசீக பூஜை செய்துகொண்டிருந்தேன். துளசியைப் பறித்து அவன் திருவடிகளில் நான் பூஜை செய்தபோது நீங்களும் மானசீகமாக துளசி மாலையை அவன் கழுத்தில் போடுவதை பார்த்தேன்.
அது ஒரு தோளில் தூக்கியவாறு நின்றது. நீங்கள் அந்த மாலையை எடுத்துவிட்டு மறுமுறையும் சாத்துவதைப் பார்த்தேன். இப்போதும் மாலை அவன் இரு தோள்களில் சரியாக விழவில்லை. அதனால்தான் இதை உங்களிடம் கூறவந்தேன். நான் கூறியது தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள் என்று கூறினார். வியாச ராயர் மிகவும்
சந்தோஷத்துடன், நீயா எங்கள் அருகில் வரத்தகாதவன்? நீதானே உண்மையான ஞானி! என்று கண்களில் நீர் பனிக்க கனகதாசரை நோக்கிக் கூறி, அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். தான் கண்ணனுக்கு ஆராதனை செய்யும்பொழுது நகரி வாசிக்கும் கைங்கர்யத்தை கனகருக்குக் கொடுத்தார் வியாசராயர். அவருடைய சீடர்களுக்கு
குரு செய்வதெல்லாம் அதிகப் படியாகவே தோன்றியது. தாம் எவ்வளவு சாஸ்திரங்களை படித்து வித்வான்களாக இருக்கிறோம், எழுத்தறிவே இல்லாத இந்த ஆடு மேய்ப்பனுக்கு அவர் இவ்வளவு மதிப்பு கொடுக்கிறாரே என்று ஆற்றாமையுடன் பேசத் தொடங்கினர். ஓர் ஏகாதசி அன்று நிர்ஜல உபவாசமாக இருந்ததால் பகவத் கைங்கர்யம்
செய்ய முடியாதே என்பதற்காக வியாசராயர், சீடர்கள் எல்லாருக்கும் ஆளுக்கொரு வாழைப்பழத்தைக் கொடுத்தார். ‘இதை ஒருவரும் இல்லாத தனிமையான இடத்தில் சென்று சாப்பிடுங்கள்,’ என்றும் சொன்னார். அனைவரும் தூணுக்குப் பின் மறைந்து சாப்பிட்டுவிட்டு வந்தனர். கனகதாசர் மட்டும் பழத்தை அப்படியே கொண்டு
வந்து குருவிற்கு முன்வைத்தார். ஏன் கனகா நீ சாப்பிடவில்லை என்று கேட்டார் குருதேவர். நீங்கள் சூன்யமான இடத்தில் சாப்பிடச்சொன்னீர்கள். எவ்விதத்திலும் கண்ணன் பூரணனாகவே இருக்கிறானே, அவனுக்கும் தெரியாமல் எப்படி என்னால் சாப்பிட முடியும் என்று பதிலளித்தார் கனகதாசர். இதைக்கேட்ட குருநாதர்
மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இன்னொரு சம்பவம்- வியாசராயர் தன் சீடர்கள் எல்லோரிடமும் மூடிக்கொண்டிருக்கும் தன் உள்ளங்கையில் என்ன இருக்கிறது என்று கேட்டார். ஒருவர் சுண்டைக்காய் என்றார். மற்றொருவர் நெல்லிக்கனி
என்றார். எல்லோரும் அவரவருக்கு தோன்றியதை கூறினார்கள். கனகதாசரை குருதேவர்
கேட்டதும், எல்லா இடத்திலும் நிறைந்துள்ள வாசுதேவனே தங்கள் கையில் இருக்கிறான் என்றார். தாசருடைய இந்த பதிலில் இரண்டு அர்த்தங்கள் உள்ளன. எல்லா இடத்திலும் பரவியுள்ள வாசுதேவன் குருதேவரின் கையில் மட்டும் இல்லாமல் இருப்பானா? இரண்டாவது சீடர்களுக்கு உள்ளங்கையில் நெல்லிக் கனியாக பகவானை
காட்டித் தரக்கூடியவர் குருதேவரே என்பதாகும். குருதேவர் கையைப் பிரித்தார். வாசுதேவ சாளக்கிராமம் அவர் கையில் இருந்தது! பிரமித்த சீடர்கள், கனகதாசரை ப்ரும்ம ஞானி என்று ஒப்புக்கொண்டார்கள்.
கனகதாசர் தான் கட்டிய கோயிலில் எழுந்தருளியிருக்கும் பகவான் ஆதிகேசவனிடத்தில் அதிக பிரேமை உள்ளவர்.
மேகும் அகம் ஒழித்தவர். அதனால் தன் பாடல்களின் முடிவில் தன் பெயரை குறிப்பிடாமல் ஆதிகேசவன் என்றே முத்திரை பதிப்பார். இந்த கனகதாசருக்காகத் தான் உடுப்பியில் கர்ப்பகிருகத்தில் கிழக்கு பார்த்து நின்று கொண்டிருந்த அர்ச்சாவதார கண்ணன் மேற்குபுறமாகத் திரும்பினான். தன் கையிலிருந்த மத்தால்
சுவரைத் தட்டி ஓட்டை செய்து அவருக்குக் காட்சி தந்து அன்று முதல் உடுப்பியில் ஸ்ரீகிருஷ்ணனின் சேவை மஹா துவாரம் வழியாக இல்லாமல் பின்புறமாக கனகதாசரின் பக்தி துவாரம் வழியாகவே நடைபெற்று வருகிறது.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சிவாவும் செல்வாவும் நெருங்கிய நண்பர்கள். செல்வா நாத்திகன், வாய் ஜால திறமையுடைவன். சிவா தீவிர கிருஷ்ண பக்தன். செல்வாவுக்கு மேடையில் கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை என்று பிரசங்கம் செய்வதே வேலை. எல்லா மதத் தலைவர்களும் தங்கள் வயிற்றுப்
பிழைப்புக்காக உண்டாக்கிக் கொண்ட கட்டுக்கதைகள் என்று வாய் ஜால திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருப்பான். செல்வாவுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடுவார்கள். கடைசியில் கடவுளுமில்லை கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம் என முடித்து யாராவது கேள்வி
கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம் என்று அழைப்பான். அப்போது ஒரு முறை நண்பன் சிவா மேடைமீது ஏறினான். தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான். நண்பா என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே எனக் கோபம் கொண்டான் செல்வா.
#NEET#நீட் இதற்கு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு ஏன்?
உச்சநீதிமன்றம் நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் விளைவு: 3 சுற்று கலந்தாய்வுக்கு பிறகும் இந்தியாவில் டீம்டு மருத்துவ பல்கலை கழககங்களில் இன்னும் 5,200 மாணவர் இருக்கைகள் நிரப்ப படாமல் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 947 இருக்கைகள்
நிரப்ப படவில்லை.
பாலாஜி மருத்துவக்கல்லூரி - 206 காலி. (திமுக முன்னாள் அமைச்சர் ஜகத்ரட்சகனுக்கு சொந்தமானது)
ACS மருத்துவ கல்லூரி - 146 காலி
(முன்னாள் அதிமுக அமைச்சர் AC சண்முகத்திற்கு சொந்தமானது)
மீனாக்ஷி மருத்துவ கல்லூரி - 130.
( கம்பெனி முதலாளி தெரியவில்லை தெரிந்தவர் கூறலாம்)
செட்டிநாடு மருத்துவ கல்லூரி - 127
( செட்டிநாடு சிமெண்ட் கம்பெனி )
SRM மருத்துவ கல்லூரி - 98
(உத்தமர் பச்சைமுத்து புதிய தலைமுறை தொலைக்காட்சி )
ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி - 76. (எம்ஜிஆர் ஆசிபெற்ற சாராய வியாபாரி உடையார் குடும்பம் )
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்#ராதாஷ்டமி
ஆவணி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமியன்று மதிய வேளையில் ராதா பிறந்தாள். அதாவது ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களுக்கு நடுவில் வரும் வளர்பிறை எட்டாம் நாள் பிறந்தாள். கிருஷ்ணரின் ஜன்மாஷ்டமியில் இருந்து பதினான்காம் நாள் ராதா பிறந்த ராதாஷ்டமி வருகிறது. இந்நாளை ராதா
பிறந்த ஊரான பர்சானா என்ற இடத்திலும் ப்ரஜ் பூமியின் எல்லா பகுதியிலும் சிறப்பாக மக்கள் கொண்டாடுகிறார்கள். எல்லாம் கோபிகைகளுடன் கிருஷ்ணர் விளையாடினாலும் ராதா அவருக்கு மிகவும் பிரியமானவள் ராதைக்கு சகலமும் கிருஷ்ணன்தான். ராதா என்பதன் பொருள்: ரா என்றால் தருவது, ஒப்புக்கொள்வது. தா
என்றால் விடை பெறுதல், பிடிப்பை தளர்த்துதல். தருவதற்கும், பெறுவதற்கும் விரும்புதல், மனதை ஒருமுகப்படுத்துதல், அதற்காக பாடுபடுதல் என்பதே இவ்விரு எழுத்துக்களும் கூடினால் மிகச்சுவையான விளக்கங்கள் கூறலாம். எப்போது நாம், நான் என்ற பிடிப்பை தளர்த்தி, சத்தியத்தின் மேல் நம் மனதை
#ஶ்ரீகுருஷ்ணன்கதைகள் மன்னன் வீரவர்ம ராஜாவுக்கு பல யானைகள் இருந்தன. அதில் ஒரு யானை மணிகண்டன் மிகவும் பலம் வாய்ந்தது. கீழ்படிந்து நடக்கும் குணமும் விவேகமும் கொண்டது. போர்க்களத்தில் வீரவர்ம ராஜாவுக்கு எப்பொழுதும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்து திரும்பி வரும். எனவே ராஜாவின் மிகவும்
பிரியமான யானையானது மணிகண்டன். யானைக்கு வயதாகியது. முன்பு போல களத்தில் போர் செய்ய முடியவில்லை. எனவே மன்னர் வீரவர்மன் அதை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை. ஆனாலும் அவரது அணியின் ஒரு பகுதியாகவே யானை மணிகண்டன் இருந்தது. ஒரு நாள் யானை மணிகண்டன் தண்ணீர் குடிக்க ஏரிக்குச் சென்றபோது
சேற்றில் சிக்கி மூழ்கத் தொடங்கியது. பல முறை முயன்றும் சேற்றில் இருந்து காலை அதனால் வெளியே எடுக்க முடியவில்லை. அதன் அலறல் சத்தத்திலிருந்து யானை சிக்கலில் இருப்பதை மக்கள் அறிந்து கொண்டனர்.
மணிகண்டன் சேற்றில் சிக்கிய செய்தி ராஜாவை சென்றடைந்தது. ராஜா வீரவர்மன் உட்பட மக்கள் அனைவரும்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ரசிக முராரி என்பவர் ஒடிஸாவில் ரோகினி நகர் என்னும் ஊரில் 1590ல் பிறந்தவர். சிறு வயது முதலே பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் மேல் தீவிர பக்தி கொண்டிருந்த அவர் எப்போதும் கிருஷ்ணன் பெயரையே உச்சரித்துக் கொண்டிருப்பார். அவரது குரு சியாமானந்தர் 1608 ஆம் ஆண்டு ரசிக முராரிக்கு
கிருஷ்ண மந்திரத்தை உபதேசித்து மக்களை நல்வழிப்படுத்தி வரும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் அங்கேயே மடம் அமைத்துக்கொண்டு பகவத் சேவை செய்து வந்த சியாமானந்தர் 1630 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். அவர் சமாதி ஒடிஸாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ளது. அவர் அணிந்த காலணிகளை இன்னும் அங்கு
பாதுகாத்து வருகின்றனர். சியாமானந்தரிடம் கிருஷ்ண மஹா மந்திரத்தை உபதேசம் பெற்ற ரசிக முராரி கோபிபல்லவபூர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார். பானாபூரை ஆண்டு வந்த பைத்தியநாத் பஞ்ச் என்னும் ஒரு அரசனின் அரவணைப்பில் ரசிக முராரி வாழ்ந்துவந்த காலகட்டத்தில், அப்போது ஒடிஸா மாநில பொறுப்பாளராக
#மாசாணிஅம்மன் ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் தல வரலாறு.
பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஆனைமலையில் மிக பிரமாண்டமாக ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆனை மலைப்பகுதியை நன்னன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். அவரைச் சந்திக்க ஒரு துறவி வந்தார். அவரை
வரவேற்று பல உபசரிப்புகள் செய்த நன்னனின் உபரசரிப்பில் மகிழ்ந்த துறவி அவருக்கு ஓர் மாங்கனியை கொடுத்தார். ‘மன்னா இது அதிசய மாங்கனி இதை எனது குருநாதர் பரிசாக அளித்தார். உன்னால் மகிழ்வுற்ற நான் இந்த மாங்கனியை பரிசளிக்கிறேன், முக்கியமான ஒன்று இதை உண்ட பின் இந்த மாங்களி கொட்டையை ஆற்றில்
விட்டு விடு, இல்லையெனில் இது ஆபத்தாக முடிந்து விடும்’ என்றார். மன்னர் சரி என்று சொல்லி துறவியை வழியனுப்பி விட்டு மாங்கனியை சுவைத்தார். சுவை நன்றாக இருக்கவே அந்த மாங்கொட்டையை துறவி சொன்னதை அலட்சியப்படுத்தி தமது நந்தவனத்தில் ஆற்றோரம் நட்டு பராமரித்து வந்தார். மரம் பெரியதாகி பழம்