II பரிக்கல் ஸ்ரீலஷ்மி நரஸிம்ஹர் ||

நடு நாட்டு வைஷ்ணவத் ஸ்தலங்களில் பரிக்கல் ஸ்தலம் தனித்துவம் கொண்டது.

பரிக்கல் ஆலய கருவறைக்குள் மத்வ பீடாதிபதியான ஸ்ரீவியாசாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் உள்ளார்.

🙏🇮🇳1
உலகிலேயே இரட்டை ஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி இந்த ஆலயத்தில் உள்ளது.

இத்தலத்து லஷ்மி நரசிம்மர் அனைத்து பிரிவு மக்களாலும் குல தெய்வமாக கொண்டாடப்படுகிறார்.

பரிக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை மைல் தொலைவில் இந்த ஆலயம் உள்ளது.

🙏🇮🇳2
சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் கெடிலம் கூட்ரோட்டில் இருந்து இந்த ஆலயத்துக்கு செல்ல பஸ் வசதி உள்ளது.

விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் வழித்தடத்தில் சுமார் 21 கி.மீ. தொலைவுக்கு இத்தலம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

🙏🇮🇳3
விழுப்புரத்தில் இருந்து இந்த ஆலயத்துக்கு வர காலை 2 தடவை, மதியம் 1 தடவை, மாலை 1 தடவை ஆகிய 4 தடவை மட்டுமே பஸ் வசதி உள்ளது.

கெடிலம் பகுதியில் இருந்து இத்தலத்துக்கு வர மினி பஸ், ஆட்டோ வசதி இருக்கிறது.

1800 ஆண்டுகள் பழமையான இத்தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகும்.

🙏🇮🇳4
பரிக்கல் தலத்தில் இருந்து பூவரசன் குப்பம் தலம் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

இத்தலம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரைக்கும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைக்கும் திறந்து இருக்கும்.

🙏🇮🇳5
காலை 8 மணி முதல் 9 மணி வரை காலசாந்தி பூஜை, 11 மணி முதல் 12 மணி வரை உச்சிகால பூஜை, இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை ராக்கால பூஜை நடைபெறும்.

இத்தலத்தில் ரூ.10 கட்டணம் செலுத்தி சகஸ்ரநாமம் துர்ச்சனை செய்யலாம்.

🙏🇮🇳6
இத்தலத்தில் வருடத்தில் 12 மாதங்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. சித்திரையில் பிரம்மோற்சவம், வைகாசியில் நரசிம்ம ஜெயந்தி நடத்தப்படுகிறது.

🙏🇮🇳7
ஆந்திரா கர்நாடகாவைச் சேர்ந்த பலர் இத்தல நரசிம்ஹரை குல தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள். எனவே தெலுங்கு கன்னட வருடப் பிறப்பு இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

🙏🇮🇳8
முதல்-அமைச்சரின் அன்னதானத்திட்டம் இத்தலத்தில் செயல்படுத்தப்படுகிறது. தினமும் 50 பேருக்கு மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் விரும்பினால் ரூ.1000 செலுத்தி ஒரு நாள் அன்னதானம் வழங்கலாம்.

🙏🇮🇳9
இந்தியாவிலேயே இத்தலத்தில் மட்டுமே நரசிம்ஹரும் லஷ்மி தாயாரும் ஆலிங்கனம் செய்தபடி உள்ளனர்.

திருமண தடை இருப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்தில் வழிபட உடனடி பலன் கிடைக்கிறது.

🙏🇮🇳10
நரசிம்ஹரிடம் வேண்டிக் கொண்டவர்கள் இத்தலத்தில் எண்ணை, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, மஞ்சள், சந்தனம் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்யலாம்.

இத்தலத்தில் செய்யப்படும் வழிபாடுகளால் நவக்கிரக தோஷங்கள் விலகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

🙏🇮🇳11
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் இத்தலத்துக்கு வந்து வழிபாடுகள் செய்வது குறிப்பிடத்தக்கது.

வரதராஜபெருமாள் தெற்கு நோக்கி உள்ளார். ஸ்ரீரங்கத்திலும் வரதராஜ பெருமாள் இதே அமைப்புடன்தான் உள்ளார்.

இத்தலத்தின் புராண கால பெயர் ‘‘பரகலா’’ என்பதாகும்.

🙏🇮🇳12
ஒவ்வொரு மாதமும் ஸ்வாதி நட்சத்திர தினத்தன்று மாலையில் ஸ்வாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

"பரிக்கல் ஸ்ரீலஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி திருவடிகளே சரணம்"

#வாழ்க_பாரதம் 🙏🇮🇳
#வளர்க_பாரதம் 🙏🇮🇳🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

1 Oct
சிம்லாவில் சிக்கிய ஆப்கன் புள்ளி: ஹெராயின் கடத்தலில் திருப்பம்

குஜராத் முந்த்ரா துறைமுகத்தில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3,000 கிலோ ஹெராயின் போதை பொருளை, வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், 'ஐ.இ.கோட்' எனப்படும் இறக்குமதி,- ஏற்றுமதி லைசென்ஸ் பெற்ற, சென்னையைச் சேர்ந்த ஏஜென்ட் மச்சாவரம் சுதாகர், அவரது மனைவி துர்கா பூரண வைஷாலி சிக்கினர். இந்த போதை பொருள், டில்லியில் இருக்கும் அமித் என்பவருக்கு செல்ல வேண்டியது என தெரிய வந்தது.
இந்த கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் குறித்தும் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் டில்லி, நொய்டா உள்ளிட்ட பல இடங்களிலும் சோதனை நடத்தினர். இறுதியில், ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
Read 14 tweets
1 Oct
சீன கடன் செயலியின் ரூ.131 கோடியை முடக்கியது அமலாக்கத்துறை

புதுடில்லி : அன்னியச் செலாவணி மோசடி தொடர்பாக, இந்தியாவில் இயங்கும் சீன வங்கி சாரா நிதி நிறுவனத்தின் 131 கோடி ரூபாயை, அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டுபிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், வேலைவாய்ப்பை இழந்த ஏராளமானோர், உடனடியாக கடன் தரும் மொபைல் செயலிகள் வாயிலாக அதிக வட்டிக்கு கடன் பெற்றனர்.
கடன்தாரரின் சொந்த விபரங்களை பயன்படுத்தியும், பல வகையில் மிரட்டல் விடுத்தும் இந்த கடன் வசூலிக்கப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்தன.
Read 9 tweets
1 Oct
விவசாயிகள் சாலை மறியல் உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடில்லி : 'நெடுஞ்சாலைகளில் ஏன் எப்போதும் போராட்டங்கள் நடக்கின்றன' என, கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், 'சட்டத்தை அமல்படுத்த வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை' என்றும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து, டில்லி எல்லைகளில் ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் 10 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மோனிகா அகர்வால் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
டில்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
Read 10 tweets
1 Oct
இது உங்கள் இடம்: முதல்வரின் கணக்கில் இடம்பெற்ற வாக்குறுதிகள்!

கு.காந்தி ராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில், ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களுக்குள், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டியுள்ளதாக,
முதல்வர் ஸ்டாலின் பெருமைப்பட்டு கொள்கிறார்.

தி.மு.க., 505 வாக்குறுதிகள் அளித்தாலும், அதில் சிலவற்றை தான் மக்கள் எதிர்பார்த்து ஓட்டு அளித்தனர்.'நீட் தேர்வை ரத்து செய்வோம்' என வாக்குறுதி வழங்கினர்.
தி.மு.க., ஆட்சி அமைந்ததும், 'நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
Read 11 tweets
1 Oct
கோவில் நகைகளை உருக்கி வங்கிகளில் முதலீடு செய்யும் திட்டத்திற்கு பா.ஜ., எதிர்ப்பு
சென்னை: 'கோவில் தங்க நகைகளை உருக்கி, வங்கிகளில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் வட்டியை செலவு செய்வோம் என்பது சட்ட விரோதமானது' என்று தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: பக்தர்கள் கோவிலுக்கு செலுத்தும் தங்க காணிக்கைகளை உருக்கி, அதை வங்கிகளில் தங்க பத்திரங்களாக மாற்றி, அதிலிருந்து கிடைக்கும் வட்டியை, மற்ற கோவில்கள் பராமரிப்புக்கு செலவு செய்வோம் என்பது சட்ட விரோதமானது.
Read 7 tweets
1 Oct
அருள்மிகு சேக்கிழார் திருக்கோயில், குன்றத்தூர், காஞ்சிபுரம்

குருபூஜை விழா:
 
வைகாசி பூசத்தில் சேக்கிழார் குருபூஜை 11 நாட்கள் நடக்கிறது. குருபூஜை விழாவின் மூன்றாம் நாளில் இவர் சோழ மன்னனுக்கு மந்திரியாக பொறுப்பேற்று மந்திரி அலங்காரத்தில் புறப்பாடாகிறார். 🇮🇳🙏1
சேக்கிழார் கட்டிய திருநாகேஸ்வரர் கோயில், இங்கிருந்து சற்று தூரத்தில் இருக்கிறது. விழாவின் நான்காம் நாளில், சேக்கிழார் இத்தலத்திற்கு எழுந்தருளி சிவபூஜை செய்கிறார்.

🇮🇳🙏2
ஆறாம் நாளில் பெரிய புராணம் இயற்றிய வைபவமும், பின்பு சேக்கிழார் நடராஜருடன் சேர்ந்து வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

 எட்டாம் நாளில் பெரியபுராணம் அரங்கேற்றமும், சேக்கிழாருக்கு குன்றத்தூர் முருகன் காட்சி தரும் வைபவமும் நடக்கிறது. 🇮🇳🙏3
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(