இது உங்கள் இடம்: முதல்வரின் கணக்கில் இடம்பெற்ற வாக்குறுதிகள்!
கு.காந்தி ராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில், ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களுக்குள், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டியுள்ளதாக,
முதல்வர் ஸ்டாலின் பெருமைப்பட்டு கொள்கிறார்.
தி.மு.க., 505 வாக்குறுதிகள் அளித்தாலும், அதில் சிலவற்றை தான் மக்கள் எதிர்பார்த்து ஓட்டு அளித்தனர்.'நீட் தேர்வை ரத்து செய்வோம்' என வாக்குறுதி வழங்கினர்.
தி.மு.க., ஆட்சி அமைந்ததும், 'நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
இதை தானே, முந்தைய அ.தி.மு.க., அரசும் செய்தது... தி.மு.க., அரசின் தீர்மானத்தால், எந்த பயனும் விளையப் போவதில்லை.நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், கொரோனா நிவாரணம் 4,000 ரூபாய், ஆவின் பால் விலையில் 1 லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு ஆகிய மூன்று வாக்குறுதிகளை மட்டுமே,
தி.மு.க., அரசு முழுமையாக நிறைவேற்றியிருக்கிறது.
கொரோனா நிவாரணத்தைப் பொறுத்தவரை, முந்தைய பழனிசாமி அரசும் இதே போன்ற நிதியுதவி வழங்கியிருக்கிறது.பெட்ரோல் விலையில் 1 லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்போம் என வாக்குறுதி அளித்து விட்டு, இப்போது 3 ரூபாய் மட்டுமே குறைத்துள்ளனர்.
டீசலுக்கு, 3 ரூபாய் விலை குறைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. தி.மு.க.,வின் வெற்றிக்கே கீழ்கண்ட வாக்குறுதிகள் தான் பிரதான காரணமாக இருந்தன.
* இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் தலா 1,000 ரூபாய் வழங்கப்படும்
* அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் முறை அமல்படுத்தப்படும்
* எல்.பி.ஜி., காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் அளிக்கப்படும்
* மின் கட்டணம் மாதந்தோறும் கணக்கிடப்படும்
* ரேஷன் கடைகளில் 1 கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்; உளுத்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும்
* கல்விக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்
* பழங்குடியினர் பட்டியலில், மீனவர் சேர்க்கப்படுவர். மீன்பிடி தடைக்கால நிவாரணம் 5,000 ரூபாயில் இருந்து 8,000 ரூபாயாக உயர்த்தப்படும்
* சாலையோர சிறு வியாபாரிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன்
* முதியோர் ஓய்வூதிய தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்
* தொழில் நிறுவனங்களில் 75 சதவீத பணியிடங்கள் தமிழர்களுக்கே வழங்கப்படும்
* நெல்லுக்கு ஆதரவு விலை குவிண்டாலுக்கு 2,500 ரூபாய்; கரும்பு டன்னுக்கு 4,000 ரூபாயாக உயர்த்தப்படும்
இப்படி முக்கிய வாக்குறுதிகள் எதையும், தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை.
சிலை அமைத்தல், மணிமண்டபம் கட்டும் அறிவிப்பு எல்லாம், முதல்வர் ஸ்டாலினின் கணக்கில் வருகிறதே தவிர, முக்கியமான வாக்குறுதிகள் ஏதும் அதில் இடம்பெறவில்லை.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு முறை பிரம்மா வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளிடம், ""வைகுண்டம் தவிர வேறு எங்கெல்லாம் நீர் இருக்கிறீர்?'' என்று கேட்க, ""ஸதம்வோ அம்ப தாமானி ஸப்தச்ச'' என்று வேதவாக்கியத்தின் மூலம் உணர்த்தினார். 🙏🇮🇳1
ஸதம் என்றால் நூறு. ஸப்த என்றால் ஏழு. ஆக பெருமாள் இருக்கும் இடங்கள் 107. பெருமாள் நித்யவாசம் செய்யும் வைகுண்டத்தை சேர்த்தால் 108. இந்த திவ்யதேசங்களை எல்லாம்ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
🙏🇮🇳2
நாலு வரிகளில் 108 திவ்யதேசங்கள் : --
ஸ்ரீ பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் 108 திவ்யதேசக் கணக்கை நான்கு வரிகளில் கீழ்காணும் பாடல் மூலம் தருகிறார்;
மகா பெரியவா ஆந்திரா பக்கம் பாதயாத்திரை செய்து கொண்டிருந்த சமயம் அது அப்போது ஒருநாள் பௌர்ணமி வந்தது.
சன்யாச தர்மப்படி பௌர்ணமி நாளில் வபனம் (க்ஷவரம் செய்து முடிகளை அகற்றுவது) செய்து கொள்ள வேண்டும்.
ஆசார்யா யாத்திரை செய்து கொண்டிருந்ததால், தெலுங்கரான நாவிதர் ஒருவரை அதற்காக அழைத்துக் கொண்டு வந்தார்கள்..
ஆந்திராவில் சுற்றுவட்டாரத்திலேயே மகாபெரியவா,மேலும் சில மாதங்கள் யாத்திரை செய்ததால், அடுத்தடுத்த பௌர்ணமி நாட்களிலும் அதே நாவிதர் வந்து வபனம் செய்தார்.
பிறகு ஒரு கட்டத்தில் அந்த நாவிதர் காஞ்சி மடத்திற்கு அழைத்து வரப்பட்டு,பெரியவா சேவைக்கு அமர்த்தப்பட்டார். ஆரம்பத்தில் மகா
பெரியவாளின் மகத்துவம் எதுவும் அவருக்குத் தெரியாது. யாரோ ஒரு சன்யாசிக்குத்தான் வபனம் செய்கிறோம் என்பதுபோல்தான் அவர் இருந்தார்
டில்லி நகரின் கழுத்தை நெரித்துவிட்டீர்கள்; விவசாயிகள் அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி: ஒட்டுமொத்த டில்லி நகரின் கழுத்தை நெரித்துவிட்டு, தற்போது நகருக்குள் வந்து போராட்டம் நடத்த அனுமதி கேட்கிறீர்கள் என விவசாய சங்கங்களிடம் உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டில்லியின் புறநகர் பகுதியில் நடக்கும் போராட்டம் ஓராண்டை நிறைவு செய்தது. இதனையடுத்து கடந்த மாதம் விவசாயிகள் பாரத் பந்த் நடத்தினர்.
மனு
இந்நிலையில் விவசாயிகள் மற்றும் கிசான் மகா பஞ்சாயத்து சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
நாம் இன்று பயன்படுத்தும் மின்சாரத்தை வெள்ளைக்காரன் தான் முதலில் கண்டுபிடித்தான் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் அது உண்மை அல்ல.
நமது சித்தர் பெருமக்கள் பலர் அந்தக்காலத்திலேயே அறிவியல் துறையில் பல சாதனைகள் புரிந்தவர்கள் என்பது நாம் அறிந்ததே. இரும்பை தங்கமாக்குவது, கிரகங்கள் மொத்தம் 9 என அறிந்தது இப்படி பல சான்றுகளை இதற்க்கு கூறலாம்.
அந்த வகையில் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்னரே மின்சாரத்தை கண்டறிந்தார் அகத்தியர் சித்தர். அதற்கான ஆதாரத்தை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
குஜராத் முந்த்ரா துறைமுகத்தில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3,000 கிலோ ஹெராயின் போதை பொருளை, வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், 'ஐ.இ.கோட்' எனப்படும் இறக்குமதி,- ஏற்றுமதி லைசென்ஸ் பெற்ற, சென்னையைச் சேர்ந்த ஏஜென்ட் மச்சாவரம் சுதாகர், அவரது மனைவி துர்கா பூரண வைஷாலி சிக்கினர். இந்த போதை பொருள், டில்லியில் இருக்கும் அமித் என்பவருக்கு செல்ல வேண்டியது என தெரிய வந்தது.
இந்த கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் குறித்தும் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் டில்லி, நொய்டா உள்ளிட்ட பல இடங்களிலும் சோதனை நடத்தினர். இறுதியில், ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் இருவர் கைது செய்யப்பட்டனர்.