சீன கடன் செயலியின் ரூ.131 கோடியை முடக்கியது அமலாக்கத்துறை
புதுடில்லி : அன்னியச் செலாவணி மோசடி தொடர்பாக, இந்தியாவில் இயங்கும் சீன வங்கி சாரா நிதி நிறுவனத்தின் 131 கோடி ரூபாயை, அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டுபிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், வேலைவாய்ப்பை இழந்த ஏராளமானோர், உடனடியாக கடன் தரும் மொபைல் செயலிகள் வாயிலாக அதிக வட்டிக்கு கடன் பெற்றனர்.
கடன்தாரரின் சொந்த விபரங்களை பயன்படுத்தியும், பல வகையில் மிரட்டல் விடுத்தும் இந்த கடன் வசூலிக்கப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்தன.
இது குறித்த விசாரணையின் போது, 'கேஷ்பீன்' என்ற அலைபேசி கடன் செயலியை நிர்வகிக்கும், 'பி.சி. பைனான்சியல் சர்வீசஸ்' நிறுவனம் அன்னியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது பற்றி அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில் 2002ல் துவக்கப்பட்ட பி.சி.,பைனான்சியல் நிறுவனத்தின் நிர்வாகத்தை சீனாவைச் சேர்ந்த ஜோ யாவூய் என்பவரின் ஹாங்காங் நிறுவனங்கள் 2018ல் கைப்பற்றியுள்ளன. இதற்காக இந்தியாவில் 173 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் குறுகிய காலத்தில் 429 கோடி ரூபாய் சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு, மென்பொருள் சேவை, தொழில்நுட்ப உதவி, விளம்பரம் என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மென்பொருள்களும், சேவைகளும், இந்தியாவிலேயே குறைந்த விலையில் கிடைக்கின்றன. அத்துடன், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பிய பணத்திற்கு முறையான ஆவணங்களையும், நிறுவனத்தால் அளிக்க முடியவில்லை.
இதையடுத்து சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பிய குற்றச்சாட்டில் பி.சி.,பைனான்சியல் நிறுவனத்தின் 131 கோடி ரூபாய் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ளது.
இதே குற்றச்சாட்டுகளுக்காக பி.சி.பைான்சியல் நிறுவனத்தின் 1,089 கோடி ரூபாய் கடந்த ஆகஸ்டில் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு முறை பிரம்மா வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளிடம், ""வைகுண்டம் தவிர வேறு எங்கெல்லாம் நீர் இருக்கிறீர்?'' என்று கேட்க, ""ஸதம்வோ அம்ப தாமானி ஸப்தச்ச'' என்று வேதவாக்கியத்தின் மூலம் உணர்த்தினார். 🙏🇮🇳1
ஸதம் என்றால் நூறு. ஸப்த என்றால் ஏழு. ஆக பெருமாள் இருக்கும் இடங்கள் 107. பெருமாள் நித்யவாசம் செய்யும் வைகுண்டத்தை சேர்த்தால் 108. இந்த திவ்யதேசங்களை எல்லாம்ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
🙏🇮🇳2
நாலு வரிகளில் 108 திவ்யதேசங்கள் : --
ஸ்ரீ பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் 108 திவ்யதேசக் கணக்கை நான்கு வரிகளில் கீழ்காணும் பாடல் மூலம் தருகிறார்;
மகா பெரியவா ஆந்திரா பக்கம் பாதயாத்திரை செய்து கொண்டிருந்த சமயம் அது அப்போது ஒருநாள் பௌர்ணமி வந்தது.
சன்யாச தர்மப்படி பௌர்ணமி நாளில் வபனம் (க்ஷவரம் செய்து முடிகளை அகற்றுவது) செய்து கொள்ள வேண்டும்.
ஆசார்யா யாத்திரை செய்து கொண்டிருந்ததால், தெலுங்கரான நாவிதர் ஒருவரை அதற்காக அழைத்துக் கொண்டு வந்தார்கள்..
ஆந்திராவில் சுற்றுவட்டாரத்திலேயே மகாபெரியவா,மேலும் சில மாதங்கள் யாத்திரை செய்ததால், அடுத்தடுத்த பௌர்ணமி நாட்களிலும் அதே நாவிதர் வந்து வபனம் செய்தார்.
பிறகு ஒரு கட்டத்தில் அந்த நாவிதர் காஞ்சி மடத்திற்கு அழைத்து வரப்பட்டு,பெரியவா சேவைக்கு அமர்த்தப்பட்டார். ஆரம்பத்தில் மகா
பெரியவாளின் மகத்துவம் எதுவும் அவருக்குத் தெரியாது. யாரோ ஒரு சன்யாசிக்குத்தான் வபனம் செய்கிறோம் என்பதுபோல்தான் அவர் இருந்தார்
டில்லி நகரின் கழுத்தை நெரித்துவிட்டீர்கள்; விவசாயிகள் அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி: ஒட்டுமொத்த டில்லி நகரின் கழுத்தை நெரித்துவிட்டு, தற்போது நகருக்குள் வந்து போராட்டம் நடத்த அனுமதி கேட்கிறீர்கள் என விவசாய சங்கங்களிடம் உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டில்லியின் புறநகர் பகுதியில் நடக்கும் போராட்டம் ஓராண்டை நிறைவு செய்தது. இதனையடுத்து கடந்த மாதம் விவசாயிகள் பாரத் பந்த் நடத்தினர்.
மனு
இந்நிலையில் விவசாயிகள் மற்றும் கிசான் மகா பஞ்சாயத்து சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
நாம் இன்று பயன்படுத்தும் மின்சாரத்தை வெள்ளைக்காரன் தான் முதலில் கண்டுபிடித்தான் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் அது உண்மை அல்ல.
நமது சித்தர் பெருமக்கள் பலர் அந்தக்காலத்திலேயே அறிவியல் துறையில் பல சாதனைகள் புரிந்தவர்கள் என்பது நாம் அறிந்ததே. இரும்பை தங்கமாக்குவது, கிரகங்கள் மொத்தம் 9 என அறிந்தது இப்படி பல சான்றுகளை இதற்க்கு கூறலாம்.
அந்த வகையில் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்னரே மின்சாரத்தை கண்டறிந்தார் அகத்தியர் சித்தர். அதற்கான ஆதாரத்தை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
குஜராத் முந்த்ரா துறைமுகத்தில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3,000 கிலோ ஹெராயின் போதை பொருளை, வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், 'ஐ.இ.கோட்' எனப்படும் இறக்குமதி,- ஏற்றுமதி லைசென்ஸ் பெற்ற, சென்னையைச் சேர்ந்த ஏஜென்ட் மச்சாவரம் சுதாகர், அவரது மனைவி துர்கா பூரண வைஷாலி சிக்கினர். இந்த போதை பொருள், டில்லியில் இருக்கும் அமித் என்பவருக்கு செல்ல வேண்டியது என தெரிய வந்தது.
இந்த கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் குறித்தும் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் டில்லி, நொய்டா உள்ளிட்ட பல இடங்களிலும் சோதனை நடத்தினர். இறுதியில், ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் இருவர் கைது செய்யப்பட்டனர்.