புதுடில்லி : 'நெடுஞ்சாலைகளில் ஏன் எப்போதும் போராட்டங்கள் நடக்கின்றன' என, கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், 'சட்டத்தை அமல்படுத்த வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை' என்றும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து, டில்லி எல்லைகளில் ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் 10 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மோனிகா அகர்வால் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
டில்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
நொய்டாவிலிருந்து டில்லிக்கு 20 நிமிடத்தில் சென்ற எனக்கு, இப்போது இரண்டு மணி நேரத்துக்கு மேலாகிறது.
விவசாயிகள் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் சஞ்சய் கவுல், சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: விவசாயிகள் போராட்டம் நடக்கும் போதெல்லாம் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது ஏன்?
இதை தடுக்க நீதிமன்றம் அனுமதித்துள்ள சட்டங்களை அமல்படுத்த வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை.
பிரச்னைகளுக்கு நீதிமன்றம் வாயிலாகவோ, பார்லிமென்ட் விவாதங்கள் வழியாகவோ தீர்வு காணலாம். நெடுஞ்சாலைகளை மறிப்பதால் தீர்வு காண முடியுமா? இந்த போராட்டத்துக்கு முடிவு தான் என்ன?
இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.கே.நடராஜ் கூறியதாவது:
விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பல முறை பேச்சு நடத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்த விவசாயிகள் மறுத்துவிட்டனர்.
இந்த வழக்கில் விவசாய சங்க பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும். அப்போது தான் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.இவ்வாறு அவர் கூறினார். நீதிபதிகள் கூறுகையில், 'வழக்கில் விவசாயிகளையும் சேர்க்க வேண்டும் எனக் கோரி மத்திய அரசு தான் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
அதன் பின் அதுபற்றி பரிசீலிப்போம்' என்றனர். இதை, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏற்றுக் கொண்டார். விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு முறை பிரம்மா வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளிடம், ""வைகுண்டம் தவிர வேறு எங்கெல்லாம் நீர் இருக்கிறீர்?'' என்று கேட்க, ""ஸதம்வோ அம்ப தாமானி ஸப்தச்ச'' என்று வேதவாக்கியத்தின் மூலம் உணர்த்தினார். 🙏🇮🇳1
ஸதம் என்றால் நூறு. ஸப்த என்றால் ஏழு. ஆக பெருமாள் இருக்கும் இடங்கள் 107. பெருமாள் நித்யவாசம் செய்யும் வைகுண்டத்தை சேர்த்தால் 108. இந்த திவ்யதேசங்களை எல்லாம்ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
🙏🇮🇳2
நாலு வரிகளில் 108 திவ்யதேசங்கள் : --
ஸ்ரீ பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் 108 திவ்யதேசக் கணக்கை நான்கு வரிகளில் கீழ்காணும் பாடல் மூலம் தருகிறார்;
மகா பெரியவா ஆந்திரா பக்கம் பாதயாத்திரை செய்து கொண்டிருந்த சமயம் அது அப்போது ஒருநாள் பௌர்ணமி வந்தது.
சன்யாச தர்மப்படி பௌர்ணமி நாளில் வபனம் (க்ஷவரம் செய்து முடிகளை அகற்றுவது) செய்து கொள்ள வேண்டும்.
ஆசார்யா யாத்திரை செய்து கொண்டிருந்ததால், தெலுங்கரான நாவிதர் ஒருவரை அதற்காக அழைத்துக் கொண்டு வந்தார்கள்..
ஆந்திராவில் சுற்றுவட்டாரத்திலேயே மகாபெரியவா,மேலும் சில மாதங்கள் யாத்திரை செய்ததால், அடுத்தடுத்த பௌர்ணமி நாட்களிலும் அதே நாவிதர் வந்து வபனம் செய்தார்.
பிறகு ஒரு கட்டத்தில் அந்த நாவிதர் காஞ்சி மடத்திற்கு அழைத்து வரப்பட்டு,பெரியவா சேவைக்கு அமர்த்தப்பட்டார். ஆரம்பத்தில் மகா
பெரியவாளின் மகத்துவம் எதுவும் அவருக்குத் தெரியாது. யாரோ ஒரு சன்யாசிக்குத்தான் வபனம் செய்கிறோம் என்பதுபோல்தான் அவர் இருந்தார்
டில்லி நகரின் கழுத்தை நெரித்துவிட்டீர்கள்; விவசாயிகள் அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி: ஒட்டுமொத்த டில்லி நகரின் கழுத்தை நெரித்துவிட்டு, தற்போது நகருக்குள் வந்து போராட்டம் நடத்த அனுமதி கேட்கிறீர்கள் என விவசாய சங்கங்களிடம் உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டில்லியின் புறநகர் பகுதியில் நடக்கும் போராட்டம் ஓராண்டை நிறைவு செய்தது. இதனையடுத்து கடந்த மாதம் விவசாயிகள் பாரத் பந்த் நடத்தினர்.
மனு
இந்நிலையில் விவசாயிகள் மற்றும் கிசான் மகா பஞ்சாயத்து சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
நாம் இன்று பயன்படுத்தும் மின்சாரத்தை வெள்ளைக்காரன் தான் முதலில் கண்டுபிடித்தான் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் அது உண்மை அல்ல.
நமது சித்தர் பெருமக்கள் பலர் அந்தக்காலத்திலேயே அறிவியல் துறையில் பல சாதனைகள் புரிந்தவர்கள் என்பது நாம் அறிந்ததே. இரும்பை தங்கமாக்குவது, கிரகங்கள் மொத்தம் 9 என அறிந்தது இப்படி பல சான்றுகளை இதற்க்கு கூறலாம்.
அந்த வகையில் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்னரே மின்சாரத்தை கண்டறிந்தார் அகத்தியர் சித்தர். அதற்கான ஆதாரத்தை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
குஜராத் முந்த்ரா துறைமுகத்தில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3,000 கிலோ ஹெராயின் போதை பொருளை, வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், 'ஐ.இ.கோட்' எனப்படும் இறக்குமதி,- ஏற்றுமதி லைசென்ஸ் பெற்ற, சென்னையைச் சேர்ந்த ஏஜென்ட் மச்சாவரம் சுதாகர், அவரது மனைவி துர்கா பூரண வைஷாலி சிக்கினர். இந்த போதை பொருள், டில்லியில் இருக்கும் அமித் என்பவருக்கு செல்ல வேண்டியது என தெரிய வந்தது.
இந்த கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் குறித்தும் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் டில்லி, நொய்டா உள்ளிட்ட பல இடங்களிலும் சோதனை நடத்தினர். இறுதியில், ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் இருவர் கைது செய்யப்பட்டனர்.