பிரதமர் #மோடி பற்றிய பேச்சு வந்தால் அவர் இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்தி இருக்கிறார் என்பது போன்ற வாழ்த்துகள் இந்துத்துவர்களிடையே குவிந்து விடுகின்றன.

சமீபத்தில் கூட 'இந்திய பாஸ்போர்ட்டின் மகிமையை மோடி உயர்த்தி விட்டிருக்கிறார் என்கிறார் நம் உள்துறை அமைச்சர் #அமித்_ஷா.!
எப்படி உயர்த்தி இருக்கிறார் என்ற விபரங்கள் எதுவும் ஷா கொடுக்கவில்லை.

பரவாயில்லை. அவர் கொடுக்காவிடில் கொடுக்க நமக்கு ஆட்கள் இருக்கிறார்கள்.

ஒரு பாஸ்போர்ட்டின் மதிப்பு என்பது உலகெங்கும் ஒரே ஒரு அளவீட்டில் மட்டுமே கணக்கிடப்படுகிறது.

அது என்ன கணக்கீடு தெரியுமா?
அந்தப் பாஸ்போர்ட்டை வைத்து எத்தனை நாடுகளுக்கு விசா தேவைப்படாமல் செல்ல முடியும் என்பதுதான் அது.

பிரிட்டன், அமெரிக்க பாஸ்போர்ட்களை வைத்து பெரும்பாலான ஐரோப்பிய, தென் அமெரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஜாலியாக பிளேன் பிடித்து அதை வைத்திருப்பவர்கள் போய் வரலாம்.
ஏறக்குறைய பஸ்சில் ஏறி திருச்சி, மதுரை போவது போலத்தான்.

தொடர்ந்து அதிகதிக நாடுகள் தங்கள் எல்லைகளை ஒரு தேசக் குடிமக்களுக்கு திறந்து வைக்கும் பொழுது அந்தப் பாஸ்போர்ட்டின் மகிமை உயர்கிறது.

இந்த விபரங்களை பன்னாட்டு அளவில் பின் தொடர்ந்து Henley என்ற நிறுவனம் துல்லியமாக வெளியிடுகிறது.
பாஸ்போர்ட் அட்டவணை, Passport Index என்ற தரவரிசையைத் தொடர்ந்து அந்த நிறுவனம் பதிப்பித்து வருகிறது.

அந்தத் தரவின்படி உலகிலேயே அதிக நாடுகளுக்கு சகஜமாக பயணிக்கும் நிலையில் இருப்பது ஜப்பானிய சிங்கப்பூர் குடிமக்களே.

அவர்கள் பாஸ்போர்ட் "192 நாடுகளின்" கதவுகளை அலட்சியமாகத் திறக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் பாஸ்போர்ட் "185 நாடுகளைத் திறந்து" 8 ம் இடத்தில் இருக்கின்றன.

#இந்தியா.?

நாம் 58 நாடுகளின் கதவுகளை மட்டுமே திறந்து 90ம் இடத்தில் இருக்கிறோம்.

அது கூட விஷயமல்ல. பிரதமர் #மோடி பொறுப்பேற்ற ஆண்டு நாம் 75ம் தரவரிசையில் இருந்தவர்கள்.
கடந்த ஏழு ஆண்டுகளில் 90க்கு சரிந்திருக்கிறோம்.

அதுவுமின்றி புதிதாக நாடுகளை சேர்ப்பதிலும் நம்மிடம் சுணக்கம் இருந்திருக்கிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் வெறும் 5 நாடுகளை மட்டுமே நமது Visa-Free பட்டியலில் சேர்த்திருக்கிறோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஒப்பீட்டளவில் பார்ப்போமா.?
அப்படி ஒப்பீட்டளவில் பார்த்தால் கூட, இதர நாடுகள் நம்மை விட அதிக அளவில் நாடுகளை பட்டியலில் இணைத்துள்ளன.

உதாரணம்: சீனா-39, ரஷ்யா-30, பிரேசில்-29, தென் ஆப்பிரிக்கா-11. Etc...

#அமித்_ஷா எந்தத் "தரவும் இல்லாமல் இப்படி அடித்து விடுகிறார்" என்பதில் நிச்சயம் ஆச்சரியமில்லை.
ஆனால் தன்னிடம் இல்லாவிடில் உலகில் எவனிடமும் இருக்காது என்று நம்பும் அவரின் அந்த அறிவீன இறுமாப்பு ஆச்சரியப்பட வைக்கிறது.

ஸ்ரீதர் சுப்ரமணியம் என்கிற அன்பர் பதிவு.
#படித்ததில்_பிடித்தது

மக்களை என்ன மாதிரி முட்டாளாக நினைத்திருந்தால் இந்த மாதிரி அமித் பொதுவில் அடித்துவிடக் கூடும்.?

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with விஷ்வா I Viswa

விஷ்வா I Viswa Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @chennaiviswa2

18 Oct
புத்தரை வாய்க்கு வந்தபடி திட்டிய ஒரு கயவன், அவர் எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனம் சாதிப்பதைக் கண்டு,

"உனக்குச் சூடு, சுரணையே இல்லையா?" என்று கேட்ட போது புத்தர் கூறினாராம்:

''உன்னிடம் இருக்கும் ஒரு பொருளை எனக்குத் தருகிறாய். அதை நான் ஏற்காவிடின் அது என்னவாகும்.?"
அவன்,''நீ ஏற்காவிடின் அது எனக்கே சொந்தமாகும்'' என்றானாம். ''உன் இழிமொழிகளை அப்படித் தான் நான் ஏற்கவில்லை" என்று அவர் 'நெத்தியடி' அடித்தார்.

நம் உடலில் உள்ள இதயம், கெட்ட இரத்தத்தை உள்ளே அனுமதிப்பதில்லை.

சிறுநீரகம் கழிவுப் பொருளை வெளியே தள்ளுகிறது.
நுரையீரல் என்ன செய்கிறது.?
கேடான கார்பன்- டை-ஆக்சைடை அப்புறப் படுத்துகிறது.

கண், சிறு தூசி பட்டாலும் கணப் பொழுதில் நம் இமையை மூடி விடுகிறது.

மூக்கு சிறு துகள் நுழைந்தாலும் தும்மி வெளியேற்றுகிறது.

நம் வாய்க்குள் சிறு கல் நுழைந்தாலும் நாக்கு உடனே கண்டறிந்து நம்மைத் துப்பச் செய்கிறது.
Read 4 tweets
17 Oct
ஒரு சிறிய நகரம்.

அதில் ஒரு சிறந்த வயலின் வித்வான் வாழ்ந்து வந்தார்.

அவர் வயலின் இசைக்கு யாவரும் வசப்படுவர்.

அப்படிப்பட்ட ஞானமுடையவர்.

இந்நிலையில் அவ்வூரில் முகாமிட்டிருந்த சர்க்கஸ் கூடாரத்திலருந்த புலி ஒன்று தப்பித்து ஊருக்குள் புகுந்து விட்டதாக தகவல் பரவியது. (1)
இதைக் கேட்ட மக்கள் தங்களை பாதுகாப்பதில் ஈடுபட்டதோடு அவர்கள் மிகவும் நேசித்த வயலின் வித்வானையும். எச்சரித்தனர்.

இந்த நிலையில் வித்துவானின் கெட்ட நேரம், புலியும் அவர் முன்னே வந்து நின்றது

வித்வான் பயப்படவே இல்லை. பட்டென்று தன் வயலினை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். (2)
அவருடைய நம்பிக்கை நம் இசை கேட்டு புலி நம் வசமாகிவிடும் என்று.

மக்கள் இவரின் செயலை பார்த்து இது என்ன முட்டாள்தனம் என்று பார்த்து கொண்டிருக்கும் போதே,

நல்ல வேளை சர்க்கஸ் கூடாரத்திற்கு புலி ஊருக்குள் வந்த தகவல் போய்,
சர்க்கஸின் ரிங் மாஸ்டர் அங்கு வந்து சேர்ந்தார். (3)
Read 5 tweets
16 Oct
ஒருவர் தனக்கு பெரிய கஷ்டம் வந்து விட்டது என்றும், அதை எப்படித்தான் சமாளிப்பது என்று தெரியவில்லை தனது நண்பர் ஒருவரிடம் புலம்பி கொண்டே இருந்தார்.

அந்த நண்பர் தினமும் கேட்டு கேட்டு அலுத்து கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார் அவர் நண்பர். கஷ்டப்படுகிற நண்பருக்கு ஒரு அறிவுரை சொன்னார்:
"ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணிய எடுத்து உங்க உள்ளங்கையில் வைத்து இருங்கள்" என்று மட்டும் சொல்லி விட்டு மறுநாள் சந்திப்பதாக கூறி சென்று விட்டார்.

கஷ்டத்தில் உழல்பவர் கொஞ்சம் சிந்தித்தார்.

பின்பு ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு தன் கையில் வைத்திருக்க ஆரம்பித்தார்.
மறுநாள், நண்பரை பார்க்க வேகமாக வந்து விட்டார் தண்ணீரை கிண்ணத்தில் பிடித்து கையில் வைத்திருந்தவர்.

நண்பர் அவரை பார்த்து "என்ன நண்பா, நான் சொன்ன மாதிரி செய்தீங்களா?" என்றார். 

ஆமாம் நண்பரே, கையிலேயே வைத்திருந்ததால் மிகவும் கடினமாக இருந்தது கையெல்லாம் ரொம்பவும் வலிக்கிறது.
Read 6 tweets
29 Sep
கேரளாவில் ஒதுக்குப்புறமா ஒரு ஊரு. அங்க 8 சென்ட்டுக்கு நடுவுல, மூன்று சென்டுல ஒரு வீடு.

வீட்டை சுத்தி தோப்பு. தொடர்ச்சியான பருவ மழையும், குளிர்ச்சியான கிளைமேட்டும் சேர்ந்து மரப்பட்டையில் பச்சையா பாசம் படிந்த மரங்கள்.

பாக்குற எல்லா பக்கமும் பச்சை பசேல்னு ஒரே குளிர்ச்சி.
இந்த வீட்டுக்கு பக்கத்து வீடு எங்க வீடு. பக்கத்து வீடுன்னு சொல்லக்கூடாது. சரியாச் சொல்லணும்னா அடுத்த வீடு.

அந்த வீட்ல ஒரு வயதான தம்பதிகள். அவங்கள தேடி யாரும் வந்த மாதிரி இல்ல. பசங்க எல்லாம் வெளிநாட்டில இருப்பாங்க போல.

நாங்க புதுசா கல்யாணம் ஆன இளம் ஜோடி. வேலைக்கும் போறோம்.
வார நாட்களில் எங்க ரெண்டு பேருக்கும் வேலைக்கு போய்ட்டு வரவே சரியா இருக்கும்.

எப்படியோ எங்களுக்குள்ள பழக்கம் ஆகி ஒவ்வொரு Sunday ஈவினிங்கும் அவங்க நந்தவனத்தில் தான் எங்களுக்கு காபி.

காபி குடித்து விட்டு ஒரு மணி நேர சம்பாஷணைக்கு பின் தான் வீடு வருவோம். நல்லா ரிலாக்ஸ்டா இருக்கும்.
Read 11 tweets
28 Sep
ஒரு ஊரில் தச்சர் ஒருவர் இருந்தார்.

அவர் காலையில் அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார்.

போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை தள்ளிக்கொண்டே சென்று மெக்கானிக் கடையில் பழுது பார்த்து புறப்பட்டார்.
அதனால் ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்குச் சென்றார்.

தாமதமாக வேலைக்கு வந்ததால் அவருடைய முதலாளி அவரை கடுமையாக திட்டினார்.

அதனால் மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார்.
சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம்பட்டது.

இது என்னடா நமக்கு இன்று வந்த சோதனை.?
என்று நினைத்தபடியே தன் காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார்.

சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது.

என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே.? என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் விரைவாக முடித்தார்.
Read 13 tweets
27 Sep
ஒரு முறை ரமண மகரிஷியை ஒரு விழாவிற்கு அழைத்திருந்தார்கள் அருளுரை வழங்க வேண்டி.

விழாவில் அனைவருக்கும் அறுசுவை உணவு தயாராகி இருந்தது.

ரமணரின் அருளுரை முடிந்து உணவு இடைவேளை வந்தது.

பெரும் திரளான கூட்டம். எல்லாம் போக பிச்சைக்காரர்கள் வேறு கூட்டமாக உணவருந்த வந்து விட்டனர் அங்கே.! Image
நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு பெரிய தர்ம சங்கடமாகிவிட்டது.
என்ன செய்வது என்றுத் தெரியவில்லை.

ஒரு முடிவுக்கு வந்து பிச்சைக்காரர்கள் அனைவரும் வெளியேறுங்கள் என்று மைக்கில் அறிவிப்பு செய்தார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்.

மிகவும் சிரமப்பட்டு பிச்சைக்காரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ரமணமகரிஷிக்கு உணவு பரிமாறிவிட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மகரிஷியைத் தேடிக்கொண்டிருந்தனர்.

இறுதியில் "ரமணமகரிஷி பிச்சைக்காரர்களுடன்" வெளியே அமர்ந்திருந்தார்.!

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஒரே அதிர்ச்சி. பதைபதைத்துப் போனார்கள். ரமணரை உள்ளே வந்து உணவருந்த வேண்டினார்கள்.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(