#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் இராவணன், இராமர் படைக் கூட்டத்தைப் பார்த்து மிகவும் மனக்கலக்கம் அடைந்து தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்து ஒரு தந்திரம் செய்தான். தனது தூதுவர்களில் சிறந்தவனான சுகனை வரவழைத்து அவனிடம் சுக்ரீவனிடம் தனியாக சென்று பேச வேண்டும் என்றும், பேசும் முறைகளையும் சொல்லி தூது
செல்ல அனுப்பினான். சுகன் ஒரு பறவை உருவத்தை அடைந்து கடலை தாண்டி யாருக்கும் தெரியாமல் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். ராமர் லட்சுமணர் உட்பட மற்ற அனைவரும் ஒன்றாக அமர்ந்து இருந்ததினால் அரசன் சுக்ரீவன் தனியாக வரும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த அசுரன் சுகனுக்கு அதற்கான சமயம்
அமைந்தது. சுக்ரீவன் அருகில் பறவை வடிவிலேயே சென்றான் சுகன். இலங்கையின் அரசனான ராவணன் தங்களிடம் என்னை தூதுவனாக அனுப்பியுள்ளார் என்று பேசஆரம்பித்தான்.
வானர அரசே! ராவணன் இலங்கையின் அரசன். நீங்களும் ஒரு அரச பரம்பரையில் பிறந்த மகத்தான கிஷ்கிந்தை நாட்டின் அரசன். ஒரு நாட்டின் அரசன்
இன்னோரு நாட்டின் அரசனோடு நட்பு கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வார்கள். இதுவே மரபு. ஒரு நாட்டில் இருந்து துரத்தப்பட்ட ராமருடன் நீங்கள் நட்பு கொண்டு அவருக்கு உதவி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இப்படி செய்வதால் அரசன் என்ற உங்களின் பெரும் மதிப்பு மிகத்தாழ்ந்து சென்று விடுகிறது
நீங்கள் ராமருக்கு உதவி செய்வதினால் இலங்கை அரசனை பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். உங்களுக்கும் ராவணனுக்கும் இதுவரையிலும் எந்த விதமான பகையும் விரோதமும் இல்லை. தற்போது பகை என்று வந்து விட்டால் இருவரின் படைகளுக்கும் சண்டை ஏற்படும். ராட்சசர்களின் படைகள் மிக வலிமையானது. அவர்களை வெற்றி
பெறுவது என்பது யாராலும் இயலாத காரியம். இலங்கை நகரத்தை வெற்றி பெற வேண்டும் என்று இதுவரை தேவர்கள், கந்தர்வர்களால் கூட நெருங்க முடியவில்லை. அப்படியிருக்க இந்த வானர படைகளை வைத்து நீங்கள் எப்படி வெற்றி பெற முடியும் என்று நம்புகிறீர்கள். நீங்கள் ராவணனுக்கு தம்பி போன்றவர். உங்களையும்
உங்களது எந்தப் படைகளின் அழிவையும் ராவணன் விரும்பவில்லை. உங்களிடம் நட்புடன் இருக்கவே விரும்புகிறார். ராமரின் மனைவி சீதையை ராவணன் தூக்கிச் சென்றதில் உங்களுக்கு ஒரு பாதிப்பும் வரவில்லை. எனவே இது பற்றி நீங்கள் நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள். விரைவில் உங்கள் படைகளுடன் உங்கள்
நாட்டிற்கு திரும்பி சென்று விடுங்கள். இதுவே உங்களுக்கு நன்மையை தரும் என்று சொல்லி முடித்தான். ராட்சசன் சுகன் சொன்னதை முழுமையாக கேட்ட சுக்ரீவன் கோபம் மிகவும் அடைந்தான். இந்த ராட்சசனை பிடித்து கட்டுங்கள் என்று தனது வானர படைகளுக்கு சுக்ரீவன் கட்டளை இட்டான். உடனே வானர வீரர்கள்
பாய்ந்து சென்று பறவை வடிவத்தில் இருந்த ராட்சசனை பிடித்து கட்டி அதனை துன்புறுத்த ஆரம்பித்தார்கள். ராமருக்கு தூதுவனாக வந்த ராட்சசனின் அலறல் சத்தம் கேட்டது. ராமர் தனது அருகில் இருந்தவர்களிடம் என்ன சத்தம் என்று கேட்டார். அதற்கு தூதுவன் என்று சொல்லிக் கொண்டு ராவணனிடம் இருந்து வந்த ஒரு
ராட்சதன் சுக்ரீவனின் மனதை கலைக்க பார்த்தான். அவனை நமது வானர வீரர்கள் கட்டி வைத்து துன்புறுத்துகிறார்கள். அந்த ராட்சதனின் சத்தம் தான் கேட்கிறது என்றார்கள். அதற்கு ராமர், தூதுவர்களாக இங்கு வந்தவர்களை துன்புறுத்துவதும் கொல்வதும் தர்மம் இல்லை. எனவே உடனே அவனை விட்டு விடுங்கள் என்று
உத்தரவிட்டார். ராமரின் கருணையால் நீ பிழைத்தாய். எனவே விரைவாக இங்கிருந்து ஓடி விடு என்று சுக்ரீவன் ராட்சதனை விரட்டி அடித்தான். ராட்சதன் விரைவாக அங்கிருந்து சென்று விட்டான். அரக்கன் சுகன் இலங்கை சென்று நடந்ததை எல்லாம் ராவணனிடம் தெரிவித்தான்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

13 Nov
I want to share this beautiful story on what is Dharmam. It really touched me.
இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு மேலாகிறது. மகா பெரியவா மீது அளவற்ற பக்தி கொண்ட ஒரு முதியவர், இறக்கும் தருவாயில், தன் மகனை அருகே அழைத்துப் பல விவரங்களைச் சொன்னார். கடைசியாகத் தான் ரூ.100 Image
ஒருவரிடம் கடன் பட்டதாகவும், அதை மகன் தான் திருப்பித் தரவேண்டும் என்று சொல்லியபின் உயிர் துறக்கிறார். அப்போது மகனுக்கு 62 வயது. கிராமத்தில் கர்ணம் வேலை பார்த்தவர். அவருக்கு சம்பளம் ₹15 ரூபாய். தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, மூன்று வருடங்கள் சிரமப்பட்டு ₹100
சேர்த்து விட்டார். ஆனால் தந்தைக்குக் கடன் கொடுத்தவர் யாரென்றே தெரியாத நிலை. சேமித்து வைத்த பணத்தை எங்கே கொண்டு போய்த் தருவது? காஞ்சி மகானின் பரம பக்தரான தனது தந்தையின் கடன் விவகாரம், ஒருவேளை மகானுக்குத் தெரிந்திருக்குமோ என்று காஞ்சி வந்த அவர், மகானிடம் விவரத்தைச் சொல்கிறார். ஒரு
Read 9 tweets
13 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் அழகிய குளம். அந்த குளத்திற்கு அருகில் ஒரு மரப்பொந்து ஒன்று இருந்தது. அந்த மரப்பொந்தில் சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்த சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது. தினமும் அந்த தவளையும் எலியும் சந்திப்பது வழக்கம். ஒரு நாள் எலி, தவளை நீரில் Image
விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தது. உடனே எலி தவளையிடம், எனக்கும் நீச்சல் கற்றுத் தர முடியுமா என்று கேட்டது. தவளையும், நாளை உனக்கு நீச்சல் நான் கற்றுத் தருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது. அடுத்தநாள் சுண்டெலிக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறிய தவளை தன்னுடடைய காலை எலியின் காலுடன்
சேர்த்து ஒரு கைற்றினால் கட்டிக்கொண்டது. அப்போது மேலே பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று இவைகளைப் பார்த்து தாக்க வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது. தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்து போனது. அதன் உடல் மேலே மிதந்த போதும்
Read 7 tweets
12 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் தினமும் காலையில் ஒரு அந்தணரின் வீட்டு திண்ணையில் அமர்ந்து ஸ்ரீனிவாசர் என்பவர் கிருஷ்ணனின் பாகவத கதையை உபன்யாசம் செய்து வந்தார். அவ்வூரில் உள்ள அனைவரும் கேட்டு ரசித்து வந்தனர். அவ்வூரின் தலைவரும் அதை விருப்பத்துடன் கேட்டு ரசித்து வந்தார். ஒரு நாள் கிருஷ்ணனும் Image
பலராமனும் பசுக்களை மேய்த்த கதையை கூறி உபன்யாசம் செய்தார். கிருஷ்ணன் கழுத்தில் உள்ள பொன் நகைகள் பலராமன் கழுத்தில் உள்ள பொன் நகைகள் பற்றியும் அழகாக வர்ணித்து அன்றைய உபன்யாசத்தை முடித்து கிளம்பினார். சிறிது தூரம் நடந்திருப்பார் ஹோய் சற்று நில்லும் என்று குரல் ஒரு மரத்தின் மறைவில்
இருந்து வந்தது. ஸ்ரீனிவாசரும் நின்று அழைத்தது யார் என்று பார்த்தார். கையில் கத்தியுடனும் ஒட்டிய வயிறுடனும் திருடன் ஒருவன் நின்றிருந்தான். ஸ்ரீனிவாசர் அதிர்ச்சியாகி ஓட, திருடன் அவரை பிடித்து மரத்தின் மறைவுக்கு அழைத்து சென்று அவரின் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போடாமல் நான்
Read 26 tweets
12 Nov
#நரசிம்மர்_குடைவரை_கோவில்
இந்தியாவில் சிறந்து விளங்கும் குடவரைக் கோவில், மும்மூர்த்தி தலம் என்ற சிறப்பினை உடைய இத்திருக்கோவிலில் ஈருயிர் ஓர் உடலாக சங்கர நாராயணனாக, பரந்தாமன் காட்சி தரும் அழகிய திருக்கோலம் சைவ வைணவ பேதம் போக்குகிறது. மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம
அவதாரத்தை தரிசிக்க இயலாத மகாலட்சுமி பெருமாளிடத்தில் அவரின் நரசிம்ம அவதாரத்தை தான் தரிசிக்க ஒரு வழி கேட்டார். அதற்கு அவர், ஸ்ரீசைலம் எனும் ஷேத்ரத்தில் கமலாலய குளத்தில் அமர்ந்து அஷ்டக்ஷரமாகிய திருஎட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து அதன் பலனாக தன் நரசிம்ம கோலத்தை தரிசிப்பாய் என்றார்.
அதன்படி மகாலட்சுமி கமல மலர்கள் நிறைந்திருந்த கமல வனத்தினில் ‘கமலாலயம்’ என்னும் குளத்தில் நரசிம்ம மூர்த்தியை நினைத்து கடுந்தவம் புரிந்தாள்.
இந்த சமயத்தில் திரேதாயுகத்தில் ராமராவண யுத்தத்தில் மூர்ச்சையான லக்ஷ்மணனின் மயக்கத்தை தெளிய வைப்பதற்காக சஞ்சீவி பர்வதத்தை ஆஞ்சநேயர் எடுத்து
Read 14 tweets
11 Nov
A beautiful story from #SrimadBhagavatam. There was a rich man who was devoted to Krishna. He used to observe the ekadashi vratam every month and the next day he would feed the pious people as It is considered a great punyam to do so. Pleased with his vratam, Krishna appeared
before him one day and said 'Ask me for a boon! You are doing so much wonderful work.' The rich man said, 'If you bless me with more wealth, I will be happy to do this service on a large scale.' Krishna blessed him with abundant wealth. The man was very happy. There was another
devotee, an old lady who used to think about Krishna, meditate on Krishna all the time; she was practically living with Krishna. She was a poor lady and had only a cow as her property. She also used to observe the ekadashi vratam, and the next day she would make a little butter
Read 8 tweets
11 Nov
#குருபக்தி
#ஆதிசங்கரர் அவருக்குப் பதினாறு வயதாகும் போது காசியில் அவர் பாஷ்யங்கள் எழுதி முடித்த சமயத்தில் பத்மபாதர் அவருக்கு சிஷ்யரானார். ஆதி சங்கரரின் முதல் சிஷ்யர் பத்மபாதர். சோழ நாட்டிலிருந்து சென்ற அவர் பெயர் ஸனந்தனன். ஆதிசங்கரரை தரிசித்து, பக்தி ஏற்பட்டு, ஆதிசங்கரருக்குக்
கைங்கர்யம் செய்து வந்தார். ஒரு நாள் கங்கையில், அந்த பக்கம் அக்கரையில், பத்மபாதர் இருந்தார். இந்த பக்கம் இக்கரையில ஆதி சங்கரர் இருந்தார். குரு ஸ்னானம் செய்துவிட்டு “துண்டு கொண்டுவா” என்றார். குருநாதர் ஈரமாக நிற்கிறாரே, துண்டு கேட்கிறாரே என்று நடுவில் நதி இருப்பது கூடத் தெரியாமல்
பத்மபாதர் நதியிலேயே நடந்து சென்றார். அப்போது கங்காதேவி அவர் பாதங்களை தாங்கிக் கொள்ள பத்மங்களை- தாமரைகளை உண்டாக்கி அதில் அவர் கால் வைத்துக் கொண்டு வர வழி செய்கிறாள். ஒடி வந்து வந்து துண்டை எடுத்துக் கொடுத்தார். அப்போது ஆதி சங்கரர் அவரிடம் காண்பிக்கிறார் “பார், கங்காதேவி பத்மங்களை
Read 26 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(