#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆட்சியில் இருக்கும் பொறுப்பான மனிதன் சாதுவின் குணங்களுடன் இருக்க வேண்டும் என்ற போதிலும், கோழையாக இருக்கக் கூடாது. உதாரணமாக, பகவான் இராமரிடம் சாதுவின் குணங்கள் பொதிந்திருந்த காரணத்தினால், இன்றும் இராம ராஜ்ஜியம் புகழப்படுகிறது. ஆனால் இராமர் ஒரு போதும் கோழையாக
இருந்ததில்லை. சீதையைக் கடத்திச் சென்ற இராவணன் அவருக்கு அக்கிரமம் இழைத்த போது தேவையான பாடத்தை அவனுக்கு நன்கு கற்பித்தார். அர்ஜுனனின் விஷயத்தில் அக்கிரமக்காரர்கள் வித்தியாசமானவர்கள்! சொந்த பாட்டனார், சொந்த ஆச்சாரியர், நண்பர்கள், மகன்கள், பேரன்கள் முதலியோர் அவனுக்குத் தீங்கிழைத்தனர்
அதனால் அவர்களின் மீது சாதாரண அக்கிரமக்காரர்களின் மீது தீவிர நடவடிக்கை எடுப்பதைப் போல செயல்பட அர்ஜுனனால் முடியவில்லை. மேலும் சாதுக்கள், மன்னிப்பதே சிறந்தது என அறிவுறுத்துகின்றனர். அரசியல் காரணங்களுக்காக சொந்த உறவினர்களைக் கொல்வதைக் காட்டிலும், நற்குணத்தை, தர்மத்தை அடிப்படையாகக்
கொண்டு அவர்களை மன்னித்து விடுதல் சிறந்தது என்று எண்ணினான். தற்காலிகமான உடல் சுகத்திற்காகக் கொலை செய்வதை அவன் இலாபமென்று கருதவில்லை. ராஜ்யங்களும் அவற்றினால் பெறப்படும் சுகங்களும் நிலையானவை அல்ல. அவ்வாறிருக்க உறவினரைக் கொல்வதன் மூலம் தனது சுய வாழ்க்கைக்கும் நித்திய விடுதலைக்கும் ஏன
ஆபத்தை தேடிக்கொள்ள வேண்டும்? இந்த சந்தேகத்தை #மாதவ அல்லது 'அதிர்ஷ்ட தேவதையின் கணவர்' என்று கிருஷ்ணரை விளித்து கேட்கிறான். அதிர்ஷ்ட தேவதையின் கணவரான அவர், இறுதியில் துரதிர்ஷ்டத்தைக் கொடுக்ககூடிய செயலைச் செய்யும்படித் தன்னைத் தூண்டக் கூடாது என்று அர்ஜுனன் சுட்டிக் காட்ட
விரும்புகிறான். ஸ்ரீ கிருஷ்ணரோ யாருக்குமே துரதிர்ஷ்டத்தைக் கொடுப்பவரல்ல என்பதால், அவரது பக்தர்கள் விஷயத்தில் சொல்ல வேண்டிய தேவையே இல்லை.
மாதவா என்று கண்ணனை அழைப்போம், அதிர்ஷ்டத்தை வரவழைத்துக் கொள்வோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jul 3
#அறிவோம்_மகான்கள் #சற்குரு_சுவாமிகள் திருச்சி மாவட்டத்தில் திருவானைக்கோவில் ஸ்ரீ சற்குரு இராஜயோகத் திருமடத்தில் அகத்தியர் மரபு வழித் தோன்றலான ஸ்ரீசற்குரு நாத மாமுனிவர் மக்களிடையே உள்ள சாதி சமயம், உயர்வு தாழ்வு, ஆணவம் அகந்தை, என்ற அறியாமையை நீக்கி, எளிய மக்களும் இறைஞானப் பேரருளைப்
பெற்று பிறவிப் பயனை எளிதில் அடைவதற்காக 19வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழகத்தின் பொதிகை மலை, சுருளி மலை, நீலகிரி மலை, வெள்ளியங்கிரி, பழனி மலை, போன்ற பல்வேறு மலைகளிலும், திருச்சி, தேனீ, நீலகிரி, பழனி போன்ற பல்வேறு ஊர்களில் பூமிக்கடியில் மற்றும் தண்ணீருக்கடியில் பல நாட்கள் வெளியே
வராமல் இராஜயோக தவம் செய்து பொதுமக்கள் நன்மையடையும் விதமாக அருளாற்றல் நிரம்பிய பல தவ மையங்கள் அமைத்துள்ளார்.
110 ஆண்டுகளுக்கு முன் விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே நடுப்பட்டி கிராமத்திலிருந்து சற்குருநாதர் நடந்து வந்து எம்.சுப்புலாபுரம் கிராமத்தில் தங்கினார். இங்கு ஊர் பெரியோர்
Read 9 tweets
Jul 3
#MahaPeriyava
There was this young lady, a satvik by nature, deeply devoted to Periyava and would often come for darśan. She was quiet, never asked for anything or spoke about herself. She got married and settled down happily. When Periyava was camping in Chennai, he was walking
through T.Nagar one day. This young lady lived there. She came out of her house when Periyava walked down that street, and prostrated to Periyava.
“Periyava must be gracious to give me his pādukas” she said. It was mid-day and blistering hot.
“How shall I walk if I give you my
pādukas?”
“Here, Periyava,” said the lady in readiness and placed another pair she had brought with her, at Periyava’s feet.
“Why! I thought that I was smart, but she is smarter than I thought I was! She has never asked me anything for herself.” Periyava stepped out his wooden
Read 42 tweets
Jul 2
#பாணலிங்கம் சிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம். பஞ்சாயதன பூஜை செய்பவர்கள் சிவனார் அம்சமாக பாண லிங்கத்தை வைத்து வழிபடுவார்கள். நர்மதை ஆற்றில் நீரில் சுழற்சியின் காரணமாக நீள் உருண்டையாகத் திகழும் பாண லிங்கங்கள் உளுந்தளவு முதல் பெரும் பாறை அளவுக்கும் கிடைகின்றன. நர்மதை
நதிக்கரையில் சோணபுரத்தை ஆட்சி செய்தவன் வாணாசுரன். சிறந்த சிவபக்தன். அவன் கோட்டையைச் சிவபெருமானே காவல் செய்தார் என்பதில் இருந்து அவனின் சிவபக்தியின் ஆழம் நமக்குப் புலப்படும். இந்த வாணாசுரன் தினமும் ஆயிரம் சிவலிங்கங்களை வைத்து பூஜிப்பான். பூஜை முடிந்ததும் லிங்கங்களை நர்மதை நதியில்
விட்டுவிடுவான். அப்படி அவன் நர்மதையில் விட்ட லிங்கங்கள் அனந்த கோடி என்பார்கள். அவையே இப்போது பாண லிங்கங்களாக வெளிப்படுகின்றன என்பது நம்பிக்கை. நர்மதையில் கிடைக்கும் பாண லிங்கங்களைக் காசிக்குக் கொண்டு சென்று கங்கையில் நீராட்டிப் பூசித்து எடுத்து வருவது விசேஷம். பாண லிங்கங்களை
Read 6 tweets
Jul 2
#அழகியசிங்கர் #அஹோபிலமடம்
திரு @sujathadesikan அவர்கள் பதிவு இது. Just copy pasting here.

1901 ஆம் ஆண்டு தேவனார்விளாகத்தில் ஸ்ரீ உ.வே வித்துவான் பருத்திப்பட்டு வங்கீபுரம் திருவேங்கடாசர்யார் அவர்களுக்கு ப்லவ வருஷம் கார்த்திகை மாதம் பூராட நட்சத்திரத்தில் அவதரித்தார்

ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மாசாரியார் ஸ்வாமி.  
செல்வச்சிறப்படைய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், “இந்த வீடு, தோட்டம், செல்வம் எல்லாம் தம்முடையது கிடையாது, எல்லாம் கண்ணனுடையது, இவற்றுக்கு டிரஸ்டியாக அடியேனை நியமித்துள்ளான், இதை கவனத்தில் கொண்டே காரியங்களைச் செய்து வருகிறேன்” என்று
தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல், மிக்க எளிமையுடனும், வைராக்கியத்துடனும் வாழ்ந்து வந்தார். சிறுவயதில் மற்ற சிறுவர்களுடன் பெருமாள் விக்ரகங்களுடன் விளையாடிக் கொண்டு பொழுதைக் கழித்து சாஸ்திரங்களையும் ஆழ்வார் அருளிச் செயல்களையும் கற்று, சிறுவயது முதலே பலருக்குக் காலட்சேபம்
Read 12 tweets
Jul 2
#மகாபெரியவா என் தாயார் என்னை என் கோடை விடுமுறைக்கு அரக்கோணம் அத்தை வீட்டில் சில நாள் அழைத்து சென்ற பொழுது அது பெரியவா ஜெயந்திக்கு முந்தைய நாள். எங்கள் அத்தை, என் தாயை, அரக்கோணம் ராஜகோபால் ஐயர் வீட்டில் பெரியவா பெரிய படம் இருக்கும், அவர்கள் வீட்டில் பெரியவா ஜெயந்தி அன்று
ஆயுட்ஷேம பூஜை செய்வார்கள், அதனால் இன்றே போய் பாத்து விட்டு வர அழைத்து சென்று இருக்கிறார்கள். அம்மாவுக்கு பெரியவா படம் பாத்தவுடன், அவரை நேரில் தரிசனம் செய்ய ஆசை, மனதார வேண்டி கொண்டு இருகிறார்கள். ஆனால் எவ்வாறு செல்வது, பெரியவா இருப்பது கலவையில். நங்கள் இருப்பது அரக்கோணம். பணம்
பெரிய அளவில் இல்லாத குடும்பம்.
ராஜகோபால் ஐயர் வீட்டு, மாமிக்கு என் அம்மாவை பிடித்துப் போக, நீங்கள் பெரியவா ஆயுட்ஷேம பூஜைக்கும் நாளை நிச்சயம் வரணும் என்று அழைப்பு விடுத்தார். ஜெயந்தி அன்று, எப்பொழுதும் 6 கஜம் புடவை கட்டும் அம்மா, தீடிர் என 9 கஜம் புடவை கட்டி போகலாம் என ஏதோ தோண, 9
Read 6 tweets
Jul 1
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
அய்யா நான் மகா விஷ்ணுவைக் கண்ணால் காண முடியுமா என குரு ஒருவரிடம் கேட்டான் சுரேஷ்.
“தம்பி, நான் உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?”
அய்யா எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை நான்
எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்!
“தம்பி, கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் பரிபூரண ஸ்ரீ மகா விஷ்ணுவின் அன்பை உணரும் நுட்பமும் திட்பமும் அமைந்து
இருக்க வேண்டும். உடம்பை நீ பார்க்கிறாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகிறதா?”
ஆம். நன்றாகத் தெரிகிறது.
“தம்பி, அவசரப்படாதே. எல்லாம் தெரிகிறதா?”
என்ன ஐயா விளையாட்டு! தெரிகிறது தெரிகிறது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாம் தான் தெரிகிறது.
“தம்பி, எல்லா அங்கங்களும் தெரிகிறதா?”
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(