SSR Profile picture
20 Oct, 26 tweets, 18 min read
அட்டவீரட்டானம்:- (Thread)

ஸ்ரீ காலபைரவரின் அஷ்ட வீரட்டான தலங்கள்:-

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து செயல்களைப் புரியும் சிவபெருமான், தமது லீலைகளின் மூலம் பலருடைய ஆணவத்தை அடக்கி, பக்தர்களைக் காப்பாற்றியிருக்கிறார்.

#நோக்கம்சிவமயம்
#SSRThreads
குறிப்பாக பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, ஆட்கொண்ட தலங்களே அட்ட வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

அட்ட வீரட்டத் தலங்கள் அனைத்துமே தமிழ்நாட்டில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
1) திருக்கண்டியூர் : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்.
ம்
2)திருக்கோவலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம்.

3) திருவதிகை : திரிபுரத்தை எரித்த இடம்.

4) திருப்பறியலூர் : தக்கன் தலையைத் தடிந்த தலம்.
5) திருவிற்குடி : சலந்தராசுரனை வதைத்த தலம்.
5)திருவழுவூர் : கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட தலம்.

6) திருக்குறுக்கை : மன்மதனை எரித்த தலம்.

7) திருக்கடவூர் : மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்.
8 திருதலங்களிலும் எம்பெருமான் ஈசன் வீரனாட்டேஸ்வரர் என்ற திருநாமத்தோடு அழைக்கபடுகிறார்.

மும்மூர்த்திகளில் பிரம்மாவுக்கு பூமியில் கோவில்கள் கிடையாது அப்படிப்பட்ட சாபத்தை அவர் தனது தவற்றினால் பெற்றுவிட்டார்.

மஹாவிஷ்ணு காக்கும் கடவுள் அவர் காப்பதற்கு உதவி புரிவது துணைவி மஹாலட்சுமி.
அழிப்பவர் ருத்ரன்(சிவன் அல்ல) இங்கே அழிப்பது என்பது நம்மை அழிப்பது அல்ல. நமது கர்மவினைகளை அழிப்பது ருத்ரன்.

இந்த மும்மூர்த்திகளையும் நேரடியாக நிர்வகித்து வருபவரே கால பைரவர்.

காலம் என்னும் சக்கரத்தை இயக்கி கொண்டிருப்பதால் இவருக்கு கால பைரவர் என்று பெயர் வந்தது.
8 விதமான பைரவர்களில் நம்மால் வழிபடக்கூடியவர் இரண்டே இரண்டு மட்டுமே ஸ்ரீகால பைரவர் & ஸ்ரீசொர்ண பைரவர்,

முருக கடவுளின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த இடங்களே அறுபடைவீடுகளாக இருக்கின்றன திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை தமிழ்நாடெங்கும் முருகக்கடவுளின் அறுபடைவீடுகள் பரவிக்கிடக்கின்றன.
அதே போல, அட்டவீரட்டானங்கள் என்பது ஸ்ரீகாலபைரவரின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த இடங்கள் ஆகும்.

மயிலாடுதுறை எனப்படும் மாயவரத்தைச் சுற்றிலும் நான்கு வீரட்டானங்களும், திருவாரூருக்கு அருகே ஒரு வீரட்டானமும், பண்ருட்டிக்கு அருகே ஒரு வீரட்டானமும், தஞ்சாவூருக்கு அருகே ஒரு வீரட்டானமும்,
திருஅண்ணாமலைக்கு அருகே ஒரு வீரட்டானமும் அமைந்திருக்கிறது.

சுமாராக நானூறு சதுர கி.மீ.தூரத்துக்குள் அட்டவீரட்டானம் அமைந்திருக்கின்றன.

இந்த அட்ட வீரட்டானங்களிலும் ஒன்றிரண்டு மட்டுமே பிரபலமான சிவாலயமாக அமைந்திருக்கிறது.
இந்த அட்டவீரட்டானங்களிலும் ஸ்ரீகாலபைரவ பெருமான் மூலஸ்தானத்தில் சிவபெருமானாகவே காட்சியளிக்கிறார்.

இந்த அட்டவீரட்டானங்களின் வரலாறு பல நூற்றாண்டுகளாக பிரபலமடையவில்லை.

இந்த அட்டவீரட்டானங்களை முழுமையாக தரிசிக்க நான்கு நாட்கள் தேவைப்படும்.

ஒரு நாளுக்கு காலை ஒரு வீரட்டானம்.
மாலை ஒரு வீரட்டானம் வீதம் நான்கு நாட்களில் எட்டு வீரட்டானங்களுக்குச் செல்ல முடியும்.

இவைகளில் பெரும்பாலானவை பிரதான சாலையிலிருந்து விலகியே இருக்கின்றன. ஸ்ரீகாலபைரவரை சிவனாக தரிசித்தே ஆகவேண்டும் என்ற வேட்கையாருக்கு வருகிறதோ அவர்கள் மட்டுமே தரிசிக்க முடியும் வாய்ப்பும் அமையும்,
முதன் முதலில் அப்படி தரிசிக்கும்போது நாம் என்ன வேண்டுகிறோமோ அந்த வேண்டுதல் உடனே நிறைவேறிவிடும் என்பது அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த உண்மை ஆகும்.

நம்ப முடியவில்லையா? முயற்சி செய்து பாருங்கள்.

அட்டவீரட்டானங்களும் அவைகளுக்கான வழித்தடங்களும்:-
1 வீரட்டானம்=திருக்கண்டியூர்

தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையத் தடிந்திட்டுத் தானங்கியிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித் தலையைப் பரிந்திட்டு சந்தி செய்தானே
(திருமந்திரம் 340)
2வது வீரட்டானம்-திருக்கோவிலூர்

கோவல்நகர் தென்பெண்ணை நதிக்கரையோரத்தில் அமைந்திருக்கிறது திருஅண்ணாமலைக்கு அருகில் உள்ளது

கருத்துறை அந்தகன் தன் போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ் செய்தா னென்று வானவர் வேண்டக் குருத்துயர் சூலங்கை கொண்டு கொன்றானே
(திருமந்திரம் 339)
3 வது வீரட்டானம்-திருவதிகை

பண்ருட்டிக்கும் சீர்காழிக்கும் இடையே அமைந்திருக்கிறது.

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறிவாரே

(திருமந்திரம் 343)
4 வது வீரட்டானம்-திருப்பறியலூர்

மாயவரம் என்ற மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் செல்லும் சாலையில் செம்பொன்னார் கோயில் என்ற ஊருக்கு வர வேண்டும்.

அங்கிருந்து பரசலூருக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று விசாரிக்க வேண்டும்.

திருப்பறியலூரின் உள்ளூர் பெயரே பரசலூர் ஆகும்.
5 வது வீரட்டானம்-திருவிற்குடி

திருவாரூரிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் விற்குடி எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது.

எங்கும் பரந்தும் இரு நிலந்தாங்கியும்
தங்கும் படித்தவன் தாளூணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன் தலை முன்னற
அங்கு அச்சுதனை உதிரங்கொண்டானே

(திருமந்திரம் 341)
6 வது வீரட்டானம்-வழுவூர்

எளிதாகச் செல்லக்கூடிய நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் வீரட்டானம் இது.

ஏன் இப்படி நமக்கு மெய்சிலிர்க்கிறது என்பதற்கான காரணத்தை அறிய நமக்கு தகுந்த குரு இந்த பிறவியில் அமைந்தால் தெரியும்.

இல்லாவிட்டால் அடுத்த பிறவி வரையிலும் காத்திருக்க வேண்டியதுதான்.
இவரை பார்த்த உடனே நமக்குள்ளே இருக்கும் அத்தனை அகங்காரமும் கரைந்து காணாமல் போய்விடும்.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் எட்டாவது கி.மீ.தூரத்தில் வழுவூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார் 1 கி.மீ.தூரத்துக்கு உள்ளே பயணித்தால் மிகப்பிரம்மாண்டமான ஆலயத்தை காணலாம்.
7 வது வீரட்டானம்:திருக்குறுக்கை

மயிலாடுதுறைலிருந்து மணல்மேடு செல்லும் சாலையில் கொறுக்கை எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது.

இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியது போக்கி
திருந்திய காமன் செயலழித்தங்கண்
அழுந்தவ யோகங்கொறுக்கை அமர்ந்ததே

(திருமந்திரம் 346)
காமம் சார்ந்த பிரச்னைகளால் சில பல வருடங்களாக படாத பாடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் இங்கே வந்து தொடர்ந்து வழிபட,வழிபட மனதில் இருக்கும் அத்தனை அழுக்குகளும் காணாமல் போகும்.

முதல் தடவை வந்து சென்றதுமே நமது மனது பரிசுத்தமாகிவிடும் என்பதை உணரலாம்.
8 வது வீரட்டானம்-திருக்கடவூர்

எப்போதும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து செல்லும் வீரட்டானம் இது.

காரணம் இங்கே 60 ஆம் கல்யாணம் மிகச் சிறப்பாகவும்,காலம் காலமாகவும் நடைபெற்றுவருகிறது.

இந்தக் கோவிலின் புராதனப்பெயர் வில்வாரண்யம்.
மூலத்துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கி முற்காலுற்று காலனைக் காய்ந்தங்கி யோகமாய் ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே
(திருமந்திரம் 345)

8 வது வீரட்டானம் திருக்கடவூருக்கு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும் தேவாரம் பாடியுள்ளார்.
கொன்றாய் காலனை உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு,மான் கன்றாருங் காவாக் கடவூர் திருவீரட்டத்துள் என் தாதை பெருமான் எனக்கு யார் துணை நீயலதே
(தேவாரம்)

அட்டவீரட்ட தலங்களை வழிபட்டால் நம் மனதில் இருக்கும் ஆணவம்,கண்மம்,மாயை ஆகிய மூன்றையும் வென்று இறைவனின் திருவருளைப் பெற்று சிறப்புற வாழலாம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SSR

SSR Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SSR_Sivaraj

18 Oct
இயக்குனர் SP.முத்துராமன் பார்வையில் தலைவர் ரஜினி (Part-3)

கமலையும் ரஜினியையும் மாறி மாறி இயக்கும் வாய்ப்புகளை நான் பெற்றாலும் ரஜினியை இயக்குவதில் ஒரு உற்சாகம் பிறக்கும்.

எனது இயக்கத்தில் கமலும் ரஜினியும் இணைந்து நடித்த ஒரே படம்

"ஆடு புலி ஆட்டம்"

#SSRThreads Image
கமல் ரஜினி சேர்ந்து நடித்த படங்களில் ஒன்றை நான் இயக்கியது எனது குழுவுக்குக் கிடைத்த பெருமை.

இப்படத்தைத் தயாரித்தவர் மலையாளக் குணச்சித்திர நடிகர் சத்யனின் ஒப்பனையாளர் சாந்தி நாராயணன்.

இவர் சிறந்த ஒப்பனையாளர் மட்டுமல்ல சிறந்த சினிமா தயாரிப்பாளரும் ஆவார். Image
இப்படத்தில் கதாநாயகன் கமல். வில்லன் ரஜினி இளமை கலந்த இரண்டு திறமைசாலிகள் மோதிக்கொண்டனர்.

பி.யூ.சின்னப்பா- தியாகராஜ பாகவதர்.
சிவாஜி - எம்.ஜி.ஆர்.
அவர்கள் வழியில் கமல் - ரஜினி.

இவர்களுக்குள் போட்டி இருக்கிறதோ இல்லையோ, இவர்களின் ரசிகர்களிடம் போட்டி, மோதல் எல்லாம் உண்டு. Image
Read 26 tweets
8 Sep
#திருட்டு_திமுக வின் இந்தி திணிப்பு அரசியல்:-

மக்கள் அனைவரும் தெளிவு பெற தரேட் வடிவில் 👇👇👇👇

பிரிட்டிஷ்காரன் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தபோது 1930 களின் இறுதியில் இந்தியை தமிழகத்தில் திணிக்கும் முயற்சி நடந்தது.

நன்றி-FB,Google,Whatsapp
#SSRThreads
பிரிட்டிஷ்காரனை எதிர்த்து சுதந்திரப்போராட்டத்தில் அனைவரையும்
ஒருங்கிணைக்க இந்தியை நாடு முழுவதும் பரப்பி ஒரே தேசமாக காட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூளையில் உதிர்த்த சிந்தனை அது.

ஒரே குரலில் நாடு முழுவதும் இந்தியில்
சுதந்திரப்போராட்டக்குரல் ஒலித்தால் தேசபக்தியின்
ஒற்றுமையை காட்ட உதித்த அபாரமான யோசனை ஆனால் அந்த சிந்தனையை தென்னிந்தியாவில் எடுத்த எடுப்பிலேயே மக்கள் ஒத்துகொள்ளாமல் எதிர்த்தனர்.

தென்னிந்தியாவின் அரசியல் தலைமைப்பீடமாக திகழ்ந்த சென்னை மகாணத்தை ஆண்ட ராஜாஜி அரசாங்க பள்ளிகளில் இந்தியை கட்டாயம் படிக்கவேண்டும் என்றார்.
Read 33 tweets
29 Aug
வாரியாரால் வீழ்ந்த திமுக:-

வாரியாரின் பயோ முன்னமே எழுதியதால் சங்கம் நேராக தலைப்புக்குள் செல்கிறது.

இசை மற்றும் புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த கிருபானந்த வாரியாரின் தந்தை மல்லையதாசர் முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான "கிருபானந்த வாரி" எனும் பெயரை சூட்டினார்.
"கிருபை" என்றால் கருணை என்றும், "ஆனந்தம்" என்றால் இன்பம் என்றும்,
"வாரி" என்றால் பெருங்கடல் என்றும் பொருள்.

தந்தை மல்லையதாசர் ஒருநாள் சொற்பொழிவு ஒன்றுக்குப் போக முடியாத நிலை தந்தைக்குப் பதிலாக அந்தச் சொற்பொழிவிற்கு வாரியார்
செல்கிறார்.
சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் மல்லையதாசர் சொற்பொழிவிற்கு வருவதாக ஒத்துக்கொண்டு தான் வராமல் இளம் வயது மகனை அனுப்பி வைத்திருக்கிறாரே என்று வருத்தப்பட்டனர்.

வாரியார் அன்று முதன் முதலாக செய்த சொற்பொழிவைக் கேட்டவர்கள் அசந்து போய்விட்டனர் மகிழ்ந்து போனார்கள்.
Read 35 tweets
18 Aug
ருத்ராட்சம் :- (Thread)

ஆன்மிகத்திற்கும்,அறிவியலுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

இந்து மதவழிபாடு என்பது அனைத்து மதத்திற்கு அப்பாற்பட்ட வாழ்வியல் முறை

ருத்ராட்சம் அணிவது என்பது இந்து மத ஆன்மிக நம்பிக்கையாக இருந்தாலும் இதற்கு பின்னால் பெரும் அறிவியல் ஒளிந்திருக்கிறது,
ருத்ராட்சம் அணிவது என்பது இந்து மத ஆன்மிக நம்பிக்கையாக இருந்தாலும் இதற்கு பின்னால் பெரும் அறிவியல் ஒளிந்திருக்கிறது,

முதலில் ருத்ராட்சத்தின் வரலாறும், அறிவியல் சார்ந்த மருத்துவ குணங்களும் அதன் பிறகு ஆன்மீக வளர்ச்சியின் பங்கையும் பார்ப்போம்
ருத்ராட்சம் இதன் வேதியல் பெயர் எலீயோகார்பஸ்( Elaeocarpus)
எலீயோகார்பஸ் மரத்திற்கு 36 உட்பிரிவுகள் இருக்கிறது ஆனால் அந்த 36 மரங்களின் கொட்டைகளையும் ருத்ராட்சமாக பயன்படுத்துவது கிடையாது,

அதிலிருந்து குறிப்பிட்ட மூன்று மரங்களின் கொட்டைகளை மட்டுமே ருத்ராட்சமாக பயன்படுத்துகிறோம் அவை,
Read 35 tweets
15 Aug
1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதற்கான சட்ட ரீதியிலான வேலைகள் நடந்து கொண்டிருந்தன
அப்போது மௌண்ட் பேட்டன் நேருவை அழைத்து இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம். அதை எப்படிப் பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள் என்று கேட்டார்

#IndependenceDayIndia
நேருவுக்கு எதை அடையாளமாக வைத்து சுதந்திரத்தைப் பெறுவது? என்பதில் குழப்பம் ஏற்பட்டது நேரு மூதறிஞர் ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டார்.

உடனே ராஜாஜி கவலை வேண்டாம் தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது ராஜகுருவாக இருப்பவர்

#IndependenceDayIndia
செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து ஆட்சி மாற்றம் செய்வார். அதைப்போல நாமும் ஒரு செங்கோலைத் தயாரிப்போம். அதை வெள்ளைக்காரர்களிடமிருந்து நமது குருமார்களில் ஒருவர் மூலம் பெற்றுக் கொள்வோம் என்றார்.
நேருவும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்.

#IndependenceDayIndia
Read 11 tweets
10 Aug
#45YearsOfRajinismCDP டேக் 1M அடிச்சாச்சு ரொம்ப சந்தோஷம் நாம எல்லாரும் இப்போ Back to Normalக்கு வந்து கொஞ்சம் அரசியல் பேசலாம்

பணம்,பெயர்,புகழ் என்று உச்சத்தை தொட்ட தலைவர் ஒய்வு எடுத்து அமைதியாக வாழ வேண்டிய வயதில் ஏன் அரசியலுக்கு வருகிறார்?

(சின்ன தரேட் தான் ஜாலியா படிங்க)
திரு.கருணாநிதி சாணக்கியத்தனமான தலைமை பண்பு,

செல்வி ஜெயலலிதா தன்னகரில்லா ஆளுமை திறன்,

இவர்கள் இருவரும் விட்டு சென்ற வெற்றிடம் இருக்கும்போதே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் அபார வெற்றி,

22 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் அதிமுகவை ஆதரித்து வெற்றி பெற வைத்தது,
இதை வைத்து தான் நாமும் பெரிய அரசியல்வாதி மக்கள் நம்மளையும் நம்பி ஓட்டு போடுறாங்க நாம தான் அடுத்த முதல்வர் என கனவு காண்கிறார்கள் ஸ்டாலினும்,ஏடப்படியும்,

ஆனால் மக்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் குடிநீர் பற்றாக்குறை, மின்சார பற்றாக்குறை,வேலையிண்மை,
தொழில் வளர்ச்சி இல்லாமை,
Read 20 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!