🌺காளிதாஸா.... வணங்குகிறேன்...🌺

ஒரு முறை மகாகவி காளிதாஸர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..

சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி, குடத்தில் எடுத்து, வந்து கொண்டிருந்தாள்!

காளிதாஸர் அவரைப் பார்த்து,
“அம்மா தாகமாக இருக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா?” என்று கேட்டார்...

அந்த கிராமத்துப் பெண்ணும்,

“தருகிறேன்... உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்”

என்றாள்! உடனே காளிதாஸருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு,

‘இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா?’ என நினைத்து,
”நான் ஒரு பயணி அம்மா”

என்றார். உடன் அந்த பெண்,

“உலகில் இரண்டு பயணிகள் தான்! ஒருவர் *சந்திரன்* ஒருவர் *சூரியன்* ! இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள்”

என்றாள்.

”சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள்”

என்றார் காளிதாஸர். உடனே அந்த பெண்,
”உலகில் இரண்டு விருந்தினர்தான் உண்டு! ஒன்று *செல்வம்* இரண்டு *இளமை* ! இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும்...”

என்றாள். சற்று எரிச்சலான காளிதாஸர்,

”நான் ஒரு பொறுமைசாலி”

என்றார். உடனே அந்த பெண்,

“அதுவும் இரண்டு பேர்தான்! ஒன்று *பூமி*... எவ்வளவு மிதித்தாலும்,
எவர் மிதித்தாலும் தாங்கும்!
மற்றொன்று *மரம்*... யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக் கொண்டு காய்களைக் கொடுக்கும்!

என்றாள். சற்றுக் கோபமடைந்த காளிதாஸர்,

”நான் ஒரு பிடிவாதக்காரன்”

என்றார். அதற்கும் அந்த பெண்,

“உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான்!
ஒன்று *முடி* மற்றொன்று *நகம்*...
இரண்டும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும், பிடிவாதமாக வளரும்!”

என்றாள் சிரித்தபடி. தாகம் அதிகரிக்கவே கோபமும் அதிகமாகி, காளிதாஸர்

“நான் ஒரு முட்டாள்”

என்று தன்னைத் தானே கூறிக்கொண்டார். உடனே அந்த பெண்,
”உலகிலேயே இரண்டு முட்டாள்கள்தான் உண்டு!
ஒருவன் நாட்டை *ஆளத்தெரியாத அரசன்* மற்றவன் அவனுக்கு *துதிபாடும் அமைச்சன்*!!

என்றாள். காளிதாஸர் செய்வதறியாது, அந்த பெண்ணின் காலில் விழுந்தார்...

உடனே அந்தப் பெண்,

“மகனே எழுந்திரு!”

என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாஸர் மலைத்துப்போனார்!
சாக்ஷாத் *ஸரஸ்வதி தேவி*யே அவர் முன் நின்றாள்...

காளிதாஸர் இருகை கூப்பி வணங்கியதும், தேவி தாஸரைப் பார்த்து,

“காளிதாஸா! எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கின்றானோ, அவனே மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான்!
நீ மனிதனாகவே இரு...” என்று கூறி,
தண்ணீர் குடத்தைக் காளிதாஸர் கை யில் கொடுத்து சரஸ்வதி தேவி மறைந்தாள்!

இது போலத்தான்...

“குழந்தைகள் எதிர் காலத்தில் பணம் சம்பாதிக்கவும், வசதியாக வாழவும் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்கிறார்களே தவிர, *மனிதனாக, தாய், தந்தை, மனைவி, மக்கள், உற்றார் உறவினருக்கு, நம் தாய் நாட்டிற்கு,
நமக்கு உணவு தரும் பூமிக்கு நாம் என்ன செய்ய வேண்டும்* என்பதை கற்றுத்தரவேண்டும்!

பெற்றோரை, தாய்நாட்டை , உறவுகளை பிரிந்து, ஏசி அறையே உலகம், தொலைபேசியே உறவு, பணம் சம்பாதிப்பதே வாழ்க்கை எ,ன வாழ்க்கையை இயந்திரமயமாக்கி, மனித நேயமில்லா வாழ்க்கை வாழக் கூடாது!
*நீ நீயாகவே மனிதனாகவே இரு! என்றும்,

“நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே
நல்லாரோடு இணங்கி இருப்பதுவும் நன்றே!”

எனும் வாக்கின் படியாவது நில்!

🙏: வாட்ஸப்

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app compile

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan

Vasavi Narayanan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

5 Nov
🌺இப்போது தேவை அறிவா? வெற்று ஆர்ப்பாட்டமா??🌺

நமது ஸநாதன தர்மம் அழிகிறது என்கிறோம். 1000 பேர் காரணம் என்கிறோம்... எல்லாம் சரி. ஆனால் நமது தர்மம் பற்றி, இதுவரை உண்மை தெரியாவிடினும், யாரேனும் எழுதுகையில் அதையாவது படிக்க வேண்டாமா?

உண்மையில் மன வலியோடுதான் இதனை நான் எழுதுகின்றேன்.
எனது பதிவுகளை, வெறும் லைக்கிற்காக மட்டும் போடுவதென்றால் அதற்கும் ஆயிரம் விஷயம் உள்ளது.

ஆனால், நம் தர்மம் என்னவென உண்மை உணர்த்தும் ஆய்வுகளை தேடி, படித்து, அறிவியல் ஆய்வுகள் கண்டு ஒப்புநோக்கி, உண்மை என்பதை எல்லா தரவுகளின் துணையோடும், எளிமையாகத் தருகிறேன்...
ஆனால் எத்தனை பேர் அதைப் படிக்கிறார்கள் எனவும் பார்க்கிறேன்.... மிகக் குறைவு.

மன்னிக்கவும்... ஒரு சிறு உதாரணம் - நேற்று
🔔கோயில் மணி ஓசை🔔 பற்றிய அறிவியல் தகவல்களை அளித்திருந்தேன். யாராவது, அதுபற்றி ஏதேனும் சந்தேகம் கேட்பார்களா எனப் பார்த்தேன்.... ஏமாற்றம் தான் மிஞ்சியது.😞
Read 7 tweets
4 Nov
🌺யார் இந்த அஸ்வத்தாமன்?🌺

இவ்வளவு நாட்களாக தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கும், ஆலய நுழைவு பிரேவசத்திற்கும், ஈவேரா உழைத்ததாக ஊரை ஏமாற்றிக்கொண்டிருந்த #திராவிட கூட்டத்தை தர்மஅடி அடித்திருக்கிறார் பா.ஜ.க அஸ்வத்தாமன் அவர்கள்....
#ராஜாஜி தான் சட்டம் கொண்டு வந்தாரா, உங்க ஈ.வே.ரா எதுவும் கிழிக்கலயா? என மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

சீப்பு செந்தில், சுப.வீரபாண்டியன் உட்பட பலரையும் விளக்கம் (டுபாக்கூர் விளக்கம் தான்) சொல்லி அலைய விட்டுவிட்டார்.
இந்து தர்மத்திற்கு எதிராக யாரும் பேசினால் உடனடியாக புகார் அளிப்பார். இப்போது கூட, இந்து பெண்களை பற்றி இழிவாக பேசி, அந்த கருத்து இந்து தர்மத்தில் கூறப்பட்டுள்ளது என்று பொய்யுரைத்த, #திருமாவளவன் என்கிற நபர் மீது காவல்துறையில் புகார் அளித்து, FIR போடச் செய்தவர் அஸ்வத்தாமன்.
Read 15 tweets
4 Nov
🌺ஆன்மீகத்தில் நமது அறிவியல்... தயவு செய்து இந்த வீடியோவைப் பாருங்கள்...🌺

🌿Pls don't miss this video... My sincere Request... This is a proof for one of our spiritual science.🌿



🔔வெண்கல ஓசை…🔔

பாரதத்தில், நமது கோயிலில் மணி அடிக்கும் ஓசை எழுவதால்,
தங்களது நமாஸுக்கு அது தொந்திரவாக உள்ளது என கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கினார்கள்

Reference -1:
hinduexistence.org/2012/01/28/rin…
Reference -2:
hindujagruti.org/news/13373.html

இஸ்லாமிய தெரு, இவற்றின் வழியாக நம் கோயில் உற்சவர் ஊர்வலம் செல்லத் தடை வாங்கினார்கள்...
கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்தக் கூடாது என்று ரகளை செய்தார்கள்… மிக்க மகிழ்ச்சி.

Reference:
islamindia.wordpress.com/2017/08/07/mus…

இப்படித் தடை வாங்குமளவுக்கு நமது கோயில் மணி ஓசைகளில் என்ன கொடுமையைக் கண்டுவிட்டார்கள் இவர்கள்?

கொடுமை இல்லை…. தாழ்வு மனப்பான்மை….
Read 41 tweets
3 Nov
🌺WHY MENTAL CONFUSION BEYOND 60?🌺

Causes of : MENTAL CONFUSION IN THE THIRD AGE
By : Arnaldo Liechtenstein, physician.

Whenever I teach clinical medicine to students in the fourth year of medicine, I ask the following question:
What are the causes of mental confusion in the elderly?

Some offer: "Tumors in the head". I answer: No!

Others suggest: "Early symptoms of Alzheimer's". I answer again: No!

With each rejection of their answers, their responses dry up.
And they are even more open-mouthed when I list the three most common causes:

- uncontrolled diabetes;
- urinary infection;
- dehydration;

It may sound like a joke, but it isn't. People over 60 constantly stop feeling thirsty and consequently stop drinking fluids.
Read 12 tweets
23 Oct
@naturaize ji, you are 100% correct. சில காலங்கள் கொடுமைகள் நடந்தது உண்மை. ஆனால் ப்ராமணன் மட்டுமா செய்தான்?

இன்று ஒரு ப்ராமணனை அப்படிக் காட்டட்டும்... ஆனால் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் மக்களே தங்களுக்குள் அதிகத் தீண்டாமையை மெற்கொள்கின்றனரே?

இதைப் பேசும் பெரியார் பேத்தி ஒருத்தி
தன் வீட்டில் வேலைக்காரி கழுவிய பாத்திரங்களை மஞ்சள் தண்ணீர் தெளித்து எடுப்பதும்,

பால்காரிக்கு வைத்த சொம்பிலிருந்து, ஒரு துணியை வைத்து பாலை மட்டும் வேறு பாத்திரத்தில் மாற்றி, அந்த சொம்பை வெளியில் தனியாக வைத்திருப்பதும்,

வேலைக்காரி வீடு பெருக்கிச் சென்றதும், ஒரு முறை ஈர Mop-ல்
வீட்டைத் துடைப்பதும் கண்ணால் கண்டேன். ஏனென அவரைக் கேட்டால்,

“என்ன ஆனாலும், என்னளவுக்கு சுத்தமா இருப்பாங்களா தெரியாது. அவங்க வீட்டையே சுத்தமா வச்சிருக்க மாட்டாங்க. மாத்திக்கவும் மாட்டாங்க... எனக்கு பிடிக்காதுப்பா இப்படி இருந்தா...” என்கிறார்.

இதில் இரண்டு விஷயம் உள்ளது.
Read 24 tweets
22 Oct
🌺நவராத்திரி ஆறாம் நாள்...🌺

இந்திராணி ரூபத்தில் மஹாலக்ஷ்மி...

இந்த்ராணி என்பவள் தேவர்களின் ராணி, அதாவது இந்த்ரனின் துனைவியாகக் காட்டப்படுகிறாள்.

நவராத்திரியின் ஆறாம் நாளான் இன்று, மெல்லிய சிவப்பு வர்ண ஆடையால் அவளை அலங்காரம் பண்ண வேண்டும்.
செம்பருத்திப் புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும்.
மாதுளை முத்துக்களை உதிர்த்து வைத்து, தேங்காய் சாதம் வைத்து வழிபட வேண்டும்.

இன்று எட்டு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, பாதபூஜை செய்து, நலங்கிட்டு, சிவப்பு கண்னாடி வளையல், பட்டுத்துணி வழங்குதல் விசேஷம்.
இந்த்ராணி காயத்ரி மந்த்ரம்:

ஓம் கணத்வஜாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ இந்த்ராணிஃ ப்ரசோதயாத்

இந்த்ராணி தேவியாய் ஸ்ரீதேவி நமக்கு எல்லா வளமும் நலமும் தந்து ரக்ஷிக்கட்டும்

🍁வாஸவி நாராயணன்🍁
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!