Mr.Bai Profile picture
13 May, 25 tweets, 5 min read
#Remdesivir #COVID19
இந்திய முழுவதும் கொரோன தொற்று வேகமெடுத்து வரும் நிலையில் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது,அதில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு பயன்படுத்தும் ஒரு மருந்தாக இந்த மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள் இதனால் இந்த
மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்ப்பட்டு உள்ளது.அரசின் சார்பிலும் முக்கிய ஊர்களில் மருந்துகள் விநியோகிக்கபட்டு வந்தாலும் மக்கள் நீண்ட வரிசையில் இரவு பகலாக நின்று மருந்தை வாங்கி செல்கின்றனர்.

ஆனால் உண்மையிலேயே இந்த மருந்து கொரோனா சிகிச்சை பெரும் அனைத்து நோயாளிகளுக்கும் தேவைப்படும
என்றால் கிடையாது,அதுகுறித்து தான் இந்த #Thread ல பார்க்க போறோம்.

கொரோனா நோய் ஆரம்பித்த நேரம் முதல் தனது முகநூலில் அதுகுறித்து எச்சரிக்கை பதிவுகளை சிறந்த தரவுகளோடு பகிர்ந்து வரும் #டாக்டர்பாரூக்அப்துல்லாஹ் அவர்கள் இந்த Remdesivir மருந்து பற்றியும் விளக்கமாக எழுதி உள்ளார்கள்,
அவர் எழுதிய பதிவை பகிர்கிறேன் படித்து அறிந்து கொள்வோம்...........

தற்போது இந்தியாவில் எங்கு காணினும் ரெம்டெசிவிர் மருந்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் ப்ரிஷ்க்ரிப்ஷன் சீட்டில் ரெம்டெசிவிர் தேவை என்று எழுதிக் கொடுத்து விட நோயாளியின் உறவினர்கள்
அங்குமிங்கும் அலைந்து திரிவதைப்பார்க்கையில் உள்ளம் நொந்து போகின்றது
ஒரு பக்கம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டும் ரெம்டெசிவிர் அனைவருக்கும் தேவையான மருந்தன்று . அது உயிர் காக்கும் மருந்தன்று என்று தெரிவித்துள்ளது. மிக மிக தேவையான நபர்களுக்கு மட்டும் மருத்துவர் பரிந்துரையில்
அந்த மருந்து வழங்கப்பட்டால் தான் அந்த மருந்தினால் நன்மை உண்டாகிறது. அனைவருக்கும் தேவையில்லை என்ற செய்தியைக் கூறுகின்றது.
இந்நிலையில் ரெம்டெசிவிர் மற்றும் கோவிட் நோயில் அதன் பங்கு குறித்து இதுவரை செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சிகள் மற்றம் அதன் விவரங்களைப் பார்த்து சிறந்த முடிவுக்கு
வர இயலும்.ரெம்டெசிவிர் மருந்தானது வெக்லுரி எனும் பெயரில் ஹெப்பாடைட்டிஸ் சி எனும் கல்லீரல் கிருமித்தொற்றுக்கு எதிரான வைரஸ் கொல்லியாக கண்டறியப்பட்டது
கோவிட் நோய் பரவத்தொடங்கிய கடந்த ஆண்டில் இந்த நோய்க்கு எதிராக இந்த மருந்து வேலை செய்கிறது என்று அந்த மருந்து தயாரிக்கும் கில்லாடு
நிறுவனம் கூறியதும் உலகமே பரபரப்பானது.
இந்த மருந்து வழங்கப்பட்டவர்கள் ஏனையோரை விட 65% அதிக உடல் நல முன்னேற்றத்தை 11வது நாளில் காண்கிறார்கள் என்றது அதன் ஆய்வு
கில்லாடு நிறுவனம் தான் செய்த ஆராய்ச்சியில் ஐந்து நாட்கள் ரெம்டெசிவிர் மருந்தை மிதமான கொரோனா தொற்றுக்குள்ளாகி (MODERATE)
மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் நோயாளிகளுக்கு வழங்கும் போது நோய்க்குறியில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படுகிறது என்று கூறியது.
இதனையொட்டி அமெரிக்கா தீவிர கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை உபயோகிக்க அவசர கால முன் அனுமதி வழங்கியது.இந்த மருந்து உண்மையிலேயே மரணங்களைக் குறைக்கிறதா
? என்பதை ஆய்வு செய்ய மிகப்பெரிய ஆய்வொன்றை SOLIDARITY எனும் பெயரில் 30 நாடுகளில் 405 மருத்துவமனைகளில் செய்தது.
ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்ட மக்களுக்கும் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படாத மக்களுக்கும் இடையே 28 நாட்கள் கழித்து மரண விகிதத்தில் மாற்றம் இருக்கிறதா என்று ஆய்வு
செய்தது.
இதில் ரெம்டெசிவிர் ஊசி போடப்பட்ட 2743 பேரில் கோவிட் நோய்க்கு 301 பேர் மரணமடைந்தனர் (11%)
ரெம்டெசிவிர் போடப்படாமல் சிகிச்சை அளிக்கப்பட்ட 2708 பேரில் 303 பேர் மரணமடைந்தனர் (11.2%)
இரண்டு குழுக்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் தோன்றவில்லை.
எனவே உலக சுகாதார நிறுவனம்
💮ரெம்டெசிவிர் மருந்து கோவிட் நோயால் மரணமடைவதை தடுப்பதில்லை.
💮 வெண்ட்டிலேட்டர் தேவையை குறைப்பதில்லை
💮 மருத்துவமனைகளில் தங்கியிருக்கும் காலத்தையும் குறைப்பதில்லை
என்று கூறியது.
ஆனால் இத்தோடு கதை முடியவில்லை
NEJM எனும் மருத்துவ இதழில்
ஜில்லாடு நிறுவனம் நிதி உதவி செய்து
நடத்திய ஆய்வான ACTT-1 வெளியிடப்பட்டது
அந்த ஆய்வில் 1062 பேர் பங்குகொண்டனர்
அவர்கள் இரு சரிசமமான குழுக்களாக பிரிக்கப்பட்டு
541பேருக்கு ரெம்டெசிவிர் ஊசி வழங்கப்பட்டது
521 பேருக்கு ரெம்டெசிவிர் தவிர்த்த மற்றொரு ப்ளாசீபோ ஊசி வழங்கப்பட்டது
⭕⭕⭕⭕⭕⭕
ஆய்வு முடிவில்
ரெம்டெசிவிர்
மருந்து வழங்கப்பட்ட மக்கள் குணமடைய சராசரியாக 10 நாட்கள் எடுத்துக்கொண்டனர்.
ப்ளாசீபோ குழுவில் குணமடைய 15 நாட்கள் சராசரியாக எடுத்துக்கொண்டனர்
28 நாட்கள் கழித்து
ரெம்டெசிவிர் குழுவில் 11.4% மரணமடைந்தனர்
அதுவே ப்ளாசீபோ குழுவில் 15.2% பேர் மரணடைந்தனர்
இதன் முடிவாக ரெம்டெசிவிர்
ப்ளாசீபோவை விட நோய் தன்மையை கட்டுப்படுத்தி விரைவில் குணமளிக்கிறது என்று அந்த ஆய்வு கூறியது.
⭕⭕⭕⭕⭕⭕
ஆகஸ்ட் 21,2020 அன்று
JAMA எனும் மருத்துவ இதழில் தீவிர கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் வழங்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது
அதில் 5 நாட்கள் ரெம்டெசிவிர் பெற்ற நபர்கள் இந்த
மருந்து பெறாத நபர்களை விட சீக்கிரம் குணமடைகிறார்கள்
ஆயினும் மரணங்களைக் குறைப்பதில் ரெம்டெசிவிருக்கு பெரிய பங்கு இருப்பது போல் தோன்றவில்லை என்றது.
⭕⭕⭕⭕⭕
லான்சட் இதழில் வெளியிடப்பட்ட சீனாவின் ஹூபய் மாகாணத்தில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வில் ரெம்டெசிவிரால் சிறந்த நோய்
குணமாக்கும் பலனை எட்டமுடியவில்லை என்று தெரிவித்தது.
⭕⭕⭕⭕⭕⭕
லான்சட் இதழில்
கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான ரெம்டெசிவிரின் பங்கு எனும் தலைப்பில்
வெளியிடப்பட்டுள்ளதாவது
சாதாரண(Mild) மற்றும் மிதமான( Moderate) கொரோனாவுக்கும் செயற்கை சுவாசம் தேவைப்படாத மக்களுள்
ரெம்டெசிவிர்
தேவையற்றது.
தீவிர தொற்று ஏற்படும் நிலையில் இருப்பவர்களுக்கும் ஆக்சிஜன் தேவையுடன் இருப்பவர்களுக்கும் தொற்றின் அறிகுறிகள் தோன்றிய பத்து நாட்களுக்குள் ரெம்டெசிவிர் வழங்கப்படும் போது
குணமாகத்தேவையான நாட்களின் எண்ணிக்கை குறைகிறது மற்றும் நோய் அடுத்த நிலைக்கு முற்றுவதைத் தவிர்க்கிறத

ஆனால்
அதி ஓட்ட ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கும் வெண்ட்டிலேட்டர் சிகிச்சையில் இருப்பவர்களைக் குணப்படுத்துவதில் இந்த மருந்தின் பங்கை வரையறுக்க முடியவில்லை ( UNCERTAIN)
என்று கூறியுள்ளது
ரெம்டெசிவிர் குறித்த
நமது கருத்து
1. ரெம்டெசிவிர் பெரிய அளவில் உயிரைக் காக்கும் என்று
பெரிய அளவில் செய்யப்பட்ட ஆய்வுகளில் நிறுவ முடியவில்லை. எனவே ரெம்டெசிவிர் உயிர் காக்கும் மருந்து இல்லை என்று மத்திய அரசும் உலக சுகாதார நிறுவனமும் வெளியிட்டிருக்கும் அறிக்கைகள் வலிமை பெறுகின்றன.
2. மிதமான மற்றும் தீவிர கொரோனா நோயாளிகளுக்கு அதிலும் ஆக்சிஜன் தேவை இருப்பவர்களுக்கு,
ரெம்டெசிவிர் நோய் ஏற்பட்டு குணமாகும் காலத்தை குறைக்கிறது.
3. ஆக்சிஜன் தேவையுள்ள தொற்று தீவிரமாகும் வாய்ப்புள்ளவர்களுக்கு அறிகுறிகள் ஆரம்பித்த பத்து நாட்களுக்குள் ரெம்டெசிவிர் ஆரம்பிப்பது நோய் அடுத்த நிலைக்கு செல்லாமல் இருக்க உதவுகிறது.
4.கொரோனா தொற்று கண்டறியப்படும்
அனைவருக்கும் ரெம்டெசிவிர் பயனளிப்பதில்லை. நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில் இருப்பவர்கள் எனும் சிறிய அங்கத்தினருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் தேவை.
ரெம்டெசிவிர் இல்லாமலும் கொரோனா தொற்றுக்கு எதிராக சிகிச்சை அளிக்க முடியும் என்பதை அறிவியல் பூர்வமாக உணர்ந்துள்ள
தமிழக சுகாதாரத்துறை
தனது ப்ரோடோகாலில் மிதமான மற்றும் தீவிர கொரோனா நோயாளிகளை ரெம்டெசிவிர்
இல்லாமலேயே சிறப்பாக சிகிச்சை அளிக்குமாறு வகுத்துள்ளது.
மிதமான தீவிர கொரோனா நோயாளிகளில் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளில் தேவைப்படுவோருக்கு மட்டும் ரெம்டெசிவிர் உபயோகிக்கலாம் என்று
ப்ரோடோகால் வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே
சொந்தங்களே
தயவு செய்து ரெம்டெசிவிருக்காக அலைந்து திரியாதீர்கள்
ரெம்டெசிவிர் இல்லாவிட்டாலும் உயிர்களைக் காப்பாற்ற முடியும்
ஆக்சிஜன்
வெண்ட்டிலேட்டர்
ரத்த உறைதல் தடுக்கும் மருந்து
ஸ்டீராய்டு மருந்து
சிறப்பான மருத்துவர்கள்
சிறப்பான செவிலியர்கள்
மருத்துவ பணியாளர்கள்
இவர்கள் கூட்டு சேர்ந்து பல மரணங்களைத் தடுத்து வருகிறார்கள்.
எனவே ரெம்டெசிவிருக்காக பணத்தை அதிகமாக செலவழிக்க வேண்டாம்.
அலைந்து திரிய வேண்டாம்.
கூட்டம் போட்டு கொரோனாவை வாங்க வேண்டாம்.
அரசின் அறிவிப்புகளை கடைபிடியுங்கள்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mr.Bai

Mr.Bai Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Mr_Bai007

15 May
#knowledge
இன்னைக்கு நாம 5 websites பத்தி பார்ப்போம் கொஞ்சம் பயனுள்ளதா இருக்கும்னு நினைக்கிறேன்.

1.Duolinga
இது ஒரு Language learning website இந்த வெப்சைட் மூலமா சுலபமா நமக்கு தெரியாத சில மொழிகளை கத்துக்கலாம்,ஆரம்பம் முதல நல்ல கத்துக்கலாம் நம்ம தமிழ் மொழியை உயிர் எழுத்துக்கள் Image
அதுல இருந்து கத்துகிறது போலத்தான்.
வேற எதாவது ஒரு மொழி கத்துக்கணும் அப்டினு ஆசை பட்றவங்க இந்த வெப்சைட் தாராளமா போலாம்.ரொம்ப பெருசா Expert Levelku கத்துக்க முடியாடியும் ஒரளவுக்கு கத்துக்கலாம்.

Website Link:duolingo.com/learn
2.Coursera
இது ஒரு Learning Websites இந்த வெப்சைட்ல நிறைய Free courses இருக்கு,அது மூலமா உங்களக்கு விருப்பமான எதாவது ஒரு course எடுத்து படிக்கலாம் முழுவதும் free அப்டினு சொல்லமுடியாது அந்த course முழுவதும் முடித்த பிறகு உங்களுக்கு certificate வேணும்னா நீங்க பணம் கட்டணும். Image
Read 12 tweets
14 May
#SPOILER
#Nayattu(2021) மலையாளம் மொழியில வெளிவந்து இருக்க கூடிய ஒரு survival thriller படம்.இந்த பாத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா,முதல JoJu George என்கிற ASI மணியன் அப்பறம் பிரவீன் மைகேல்,சுனிதா இவங்க முணு பெற சுத்தி தான் கதை நகரும்.இவங்க எல்லாரும் ஒரே ஸ்டேஷன்ல வேலை Image
பார்ப்பாங்க,சுனிதா ஒரு வீடு கட்டிட்டு இருப்பாங்க அப்ப அங்க வந்து சில பேரு பிரச்சனை பண்ணுவாங்க அதனால் இவங்க ஸ்டேஷன்ல இந்த விஷயத்தை பத்தி சொல்லணும்னு இருப்பாங்க,அப்பறம் அந்த பிரச்சனை பண்ண எல்லாரும் ஸ்டேஷன் வந்து இருப்பாங்க அப்ப அந்த குரூப்ல உள்ள ஒருத்தன் போலீஸ் ஸ்டேஷன் சுவருல எச்சி Image
துப்பிருவான் அப்ப பக்கத்துல இருந்த ASI மணியன் போலீஸ் ஸ்டேஷன் எச்சி துப்புவியான்னு அடிக்க போவாரு அப்பறம் பக்கத்துல உள்ளவங்க எல்லாரும் தடுத்தருவாங்க,அப்பறம் உள்ள பிரவீன் லீவு கேட்டு உள்ள இன்ஸ்பெக்டர் கிட்ட பேசிகிட்டு இருப்பாரு அப்ப லீவு எல்லாம் தரமுடியாது இது தேர்தல் நேரம் அப்படினு Image
Read 9 tweets
30 Apr
நேற்று நடந்த ஒரு உண்மை சம்பவம் முகநூலில் ஒருவர் பகிர்ந்த செய்தி உறுதிசெய்யப்பட்டது

முதலில் சிகப்பு பை அணிந்துசெல்லும் இளைஞனை பார்த்துக்கொள்ளுங்கள்.
தூரத்தில் கேட்டுக்கு வெளியே வரிசை நிற்பதுப்தெரிகிறதா?
இந்தப்பையனும் நேற்று அப்படி ரெம்டெசிவிர் மருந்துக்காக நின்றவன் தான்.
நேற்ற
ு காலை 3 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை வரிசையில் நின்று டோக்கன் வாங்கிச் சென்றவன். இன்று காலை 6 மணிக்கெல்லாம் வந்து வரிசையில் நின்றிருக்கிறான்.
டோக்கன் வரிசையில் 50வது ஆள். கிட்டத்தட்ட 30 பேர் ரெம்டெசிவிர் வாங்கிச் சென்றுவிட்டனர். அப்போது அவனுக்கு ஒரு ஃபோன் வந்தது.
சிறிது
நேரம் ஹலோ ஹலோ என்றவன் திடீரென அழத் தொடங்கினான்.
மூச்சு விடுங்க மூச்சு விடுங்க என எதிர் திசையில் இருந்தவரிடம் பேசினான்.
ப்ளீஸ் ப்ளீஸ் என கெஞ்சினான்.
நர்ஸ் கிட்ட குடுங்க என கத்தினான்.
சிறிது நேரம் கழித்து யார் எதிர் திசையில் பேசினார்கள்.
கொஞ்ச நேரம் ட்ரை பண்ணுங்க மேடம் மருந்து
Read 6 tweets
22 Apr
#Knowledge
நாம இன்னைக்கு முக்கியமான ஒரு ஐந்து Websites பத்தி பாப்போம்,இந்த Websites எல்லாம் College படிக்கிறவங்களுக்கு அப்பறம் Research பண்றவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.

முதல் வெப்சைட் PDF DRIVE இந்த வெப்சைட்ல ஏகப்பட்ட Books எல்லாம் இலவசமா கிடைக்கும், நீங்க PDF இத Download
பண்ணி வச்சுக்கலாம்,மத்த வெப்சைட்ல உள்ள Paid Books எல்லாம் இதுல இலவசமா கிடைக்கும்,College subject Related books கூட இதுல கிடைக்கும்.Try panni parunga.
Website Link:pdfdrive.com
இரண்டாவது வெப்சைட் Core இது ஒரு Open Access Research Papers இருக்குற website,நீங்க ஒரு Titleல ஆராய்ச்சி பண்றிங்கனா உங்களுக்கு அந்த Topic relateda ஏதவாது Reference வேணும்னா இந்த வெப்சைட் தாராளமா போகலாம் உதாரணத்துக்கு நீங்க Digital Marketing Topicla Research பண்றீங்க இந்த வெப்சைட்
Read 12 tweets
18 Apr
நம்ம எல்லார்கிட்டையுமே இப்ப Smartphones இருக்கு,சின்ன பையன்ல இருந்து மூத்த வயது உள்ளவங்க வரை,அதிலும் பெருபான்மையான மக்கள் சமூகவலைத்தளங்கள் ஆன Facebook,whatsapp போன்ற தளங்கள Account இல்லாதவங்களே கிடையாது,அப்டினு சொல்லலாம்.அந்தளவுக்கு நம்ம மக்கள் சமூகவலைத்தளங்களை பயன்படுத்திகிட்ட
வராங்க,இதில் எந்தளவுக்கு நன்மை இருக்கோ அதே அளவுக்கு தீமையும் இருக்கு,நன்மை அப்டினு பார்த்தோம்னா உதாரணத்துக்கு ஒரு மனிதருக்கு உடனே இரத்தம் தேவைப்படுகிறது என்று வைத்து கொள்ளுங்கள்,அது உடனடியாக Whatsapp அல்லது facebook போன்ற பக்கங்களில் பகிரப்பட்டு அந்த தேவை பூர்த்தி செய்யப்படுகிறது
இது போன்ற எண்ணற்ற உதவிகள் மக்களுக்கு இலகுவாக கிடைக்கிறது.
இது ஒரு புறம் என்றால் மறுபுறம் அதற்கு அப்படியே மாற்றமாக ஒரு பக்கம் இருக்கிறது அதுதான் #Fakenews எதோ ஒரு பக்கத்தினால் ஒரு செய்தி பகிரப்பட்டு அந்த செய்தியின் உண்மைதண்மை அறியாமல் பலரும் அந்த செய்தியை பகிர்கிறார்கள்,அந்த
Read 11 tweets
17 Apr
கருடன் பூ போடாதுடா புளுக்க தான்டா போடும்... எத்தனை பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாதுடா...

லாரி உள்ள இருக்க அத்தன ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டியாடா இந்த எலுமிச்சை பழத்துல ஓடும்

வண்டி ஓடனும்னா பூஜை போட கூடாதுடா சாவி போடனும், டீசல் போடனும்

எங்க மீசையோட பவர் தெரியாம பேசாத
கருடன் பூ போடாதுடா புளுக்க தான்டா போடும்... எத்தனை பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாதுடா...

லாரி உள்ள இருக்க அத்தன ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டியாடா இந்த எலுமிச்சை பழத்துல ஓடும்

வண்டி ஓடனும்னா பூஜை போட கூடாதுடா சாவி போடனும், டீசல் போடனும்

எங்க மீசையோட பவர் தெரியாம பேசாத
: என்ன பெரிய பவரு அதுல இருந்து கரெண்ட்டு எடுத்து கேரளாக்கு உன்னால அனுப்ப முடியுமா ?

இது மட்டும் இல்லடா Indian National highways ல ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் உங்க குல தெய்வத்த தான்டா வச்சிருக்கு கவர்ன்மெண்ட்டு

வர்ணம் கொடில தான் டா இருக்கனும் மனுஷங்க கிட்ட இருக்க கூடாதுடா
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(