SSR Profile picture
30 May, 30 tweets, 6 min read
#தினம்_ஒரு_திருமந்திரம் டேக்கில் 5 நாட்களாக பரியங்க யோகம் வந்து கொண்டிருக்கிறது நண்பர்கள் விளக்கமாக கேட்டுக்கொண்டதற்காக தனி திரேட் இது.

நான் திருமந்திரத்தை நித்திக்கிற மாதிரி சில திடீர் சைவர்கள் என்னை போலி சாமியார் ரேஞ்சுக்கு சித்திரிக்க முயற்சிக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி 🙏
சங்கம் அவர்களை காலுக்கு அடியில் தூக்கி போட்டு மதித்து விட்டு திரேட்க்குள் செல்கிறது.

இனிப்பை நாக்கில் வைக்காதவன் சாதாரண துறவி,

இனிப்பை நாக்கில் வைத்தும் உமிழ்நீர் சுரக்கவிடாமல் இனிப்பு சுவையை வென்றவன் மகா துறவி ஏன நாம் புரிந்துகொள்வது தெளிவு

அதாவது திருமூலர் என்ன சொல்லுறார்னா
யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

இந்த வான்வெளி பிரபஞ்சம் முழுவதும் நிறைந்த இறைவனுடன் சேர்ந்ததால் எல்லையற்ற இன்பம் பெர்றேன் அதை வேதமாக திருமந்திரத்தில் கூறியுள்ளேன்,
அதை கற்று கடைபிடிக்க கடைபிடிக்க உங்கள் உடலுணர்வுகளில் அந்த இன்பம் தெரியும் என்கிறார்.

ஆண் பெண் இணைதலை கர்ப்பக்கிரியை மற்றும் பரியங்க யோகம் என இரண்டு அத்தியாயங்களில் திருமூலர் தனது திருமந்திரத்தில் கூறியுள்ளார்.

பரியங்க யோகத்தை விட கர்ப்பக்கிரியை இன்னும் விளக்கமாக இருக்கும்.
நம்ம டேக் கில் வரும்போது தனி தரேட்
போடலாம், இப்போ பரியங்க யோகம் மட்டும் பார்க்கலாம்.

திருமூலர் மட்டும் இல்லை நம்ம அகத்தியர் மாமுனி

ஆனேன்றால் பெண்வேண்டும் பெண்ணுக் காணும்
அல்லாட்டல் ஒன்றுமில்லை அலைச்சல் தானே

என்கிறார்.
அதாவது ஆணாகப் பிறந்தவருக்கு பெண்ணும் பெண்ணாகப் பிறந்தவருக்கு ஆணும் வேண்டும் அப்படி இல்லை என்றால் எந்த சித்தியும் கிடைக்காது தனித்து வாழ்வது வீணான முயற்சியாகும் என்கிறார்

கோரக்கர் சித்தரும்
இத்தரையில் மறைத்து வைத்தார் தீட்சை காணார்
இல்லறம்தான் இகபரத்தின் மோட்ச வீடே
என கூருகிறார்
அதாவது தசதீட்சை செய்து முக்தி பெறாதவர் தான் இல்லறத்தில் இருந்தால் முக்தி பெற முடியாது என்றும்,

அது உண்மையில்லை இல்லறம் தன உலகவாழ்வில் மற்றும் யோக சாதனையில் மோட்ச்சம் என்ற முக்தியை தரும்.என்கிறார்.
போகர் சித்தரின் வாக்கும்,

வாயத்த்தையா எந்தனுக்கு மனைவி தானும்
இல்லறமும் துறவரமும் எனக்கே சித்தி

அதாவது எனக்கு வாய்த்த மனைவியால் இல்லறத்தில் துறவறத்திலும் வெற்றி பெற்றான் என்கிறார் திருவள்ளுவர் முதல் சித்தர்கள் வரை இப்படி உதாரணங்கள் பல உள்ளன.
சித்தர்களில் ஓரிருவர் தவிர மற்றவர்கள் இல்லறம் நடத்தியே வாழ்ந்துள்ளனர்.

யோகமார்க்கத்தில் மெய்யறிவு பெற்று இறைநிலை அடைவதை மட்டுமல்ல இல்லறத்தில் வாழ்வோர்களும் எல்லா விஷயங்களையும் இறையுணர்வோடு செய்து இறைநிலை அடைய முடியும் என்று வாழ்ந்துகாட்டி அதற்கான வழிகளையும் சொல்லியிருக்கிறார்கள்
சிற்றின்பமாகட்டும், பேரின்பமாகட்டும் அதாவது
யோகமானாலும், போகமானாலும் இரண்டிலும் உபயோகப் பொருள் விந்துதான்.

நாம் உண்ணும் உணவிலிருந்து ஏழு தாதுக்கள் பெறப்பட்டு உருவாவது இந்த தேகம் (உடம்பு).

சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர் என்ற ஏழாகும்
அதாவது (இரசம், இரத்தம், மாமிசம், மேதசு, அத்தி, மச்சை, சுக்கிலம்)

சாரம், செந்நீர், வெண்ணீர் இம்மூன்றும் ஒருநாள் ஒரு புல்லின் நுனியில் நிற்கும் பனித்துளி போல் திரண்டு நிற்கும் என்றும். அதுவே விந்து என்றும் இது 21 நாட்கள் வரை உடம்பில் வளரும் என்றும் திருமூலர் சொல்கிறார்.
மனித உடலை உருவாக்குவது நாதபிந்துக்கள்.

இந்த நாதபிந்துக்களை உருவாக்குவது அன்னம்.

ஆண்களுக்கு பிந்து நாதமும், பெண்களுக்கு சுரோணித நாதமும் உருவாகிறது.

இந்த விந்தானது மூன்று நாட்கள் உடல் விந்தாகவும், பிறகு மன விந்தாகவும் மாற்றமடையும் என்றும்,
அதை கலையாகிய அறிவு
விந்தாக அமைத்து புருவ மத்தியில் தியானித்து இருப்பவர்களுக்கு உடலை விட்டு நீங்காது என்றும்,

உலக இல்வாழ்வில் பற்று கொண்டோர்களுக்கு மனதுடன் அழியும் அல்லது கழிவாகி வெளியேறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு வீணே கழியும் விந்தின் பெருமையை உணராதவர்கள் அதை வீணாக்கி உடலையும் மனதையும் நாசம் செய்கின்றனர்.

ஒரு துளி விந்தில் 80 துளி வெண்ணீர் துளிகள் உள்ளன.

ஒரு வெண்ணீர் துளி 80 துளி இரத்தத்தின் சாறு ஆகும். ஆக ஒரு துளி விந்து
அழிந்தால் 6400 துளி இரத்தம் வீணாகிறது.
இதனால் உடலும் தளரும் என்பதை யாரும்
உணர்வதுமில்லை.

ஆனால் காமசக்தியான விந்து சக்தியையும், காம உணர்ச்சியையும், புணர வேண்டும் என்கிற ஆசையையும் மனிதன் ஓரளவுக்கு மேல் அடக்க முடியாது, அடக்கவும் கூடாது.

அதிகமாகப் புணர்ந்தாலோ உடல் நலம் கெடும்.
என்னதான் செய்யலாம் என்று சிந்தித்த சித்தர்கள் அதற்கென சில வழிமுறைகளைக் கண்டுபிடித்தனர்.

வஜ்ரோலி முத்திரை, பரியங்க யோகம் போன்ற யோகங்களே அவைகள்.

மணமான யோகம் செய்யும் ஆண் பெண்ணிடம் சேர்ந்தாலும் உடல்கள் சங்கமிக்கும் ஆனால் உள்ளம் சிவனிடத்தில் இருக்குமாகையால் விந்து
கழியாது.
இதற்கு இருபாலினருக்கும் பயிற்சியும், ஒருங்கிணைந்த மனப் போக்கும் அவசியம்.

இதனால் விரைவில் குண்டலினி மகாசக்தி மகிழ்ந்து மேலேறுவாள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இத்தகைய யோகியர் மக்கட்பேறு
வேண்டி விந்துவினை விடுவார்களே அன்றி, காதல் வயப்பட்டு அதிகம் விடமாட்டார்கள்.
விந்துவினை மூலதாரத்தில் அனலால்
செம்மையுற செய்து அங்கிருந்து தொப்புள் முதல் நெஞ்சம் வரையுள்ள சூரிய மண்டலத்துக்கு வலதுநாடி வழியாக ஏற்றி
அங்கிருந்து நெற்றி வரை இடப்பால் நாடி வழியாக ஏற்றி சந்திர மண்டலம் சேர்ந்து அமுதம் உண்ணலாம்.

இந்த வேளையில் மேலேறும் விந்துவைக் கட்டும் வழி உள்ளது
திருவருட் சக்தியின் துணை கொண்டு மூலத்திடை விளங்கும் அனலை எங்கும் போகமாட்டாமல் சிவசிவ என்னும் நான்மறையால் கைவரச் செய்து யோகியானவர் தன் வாழ்க்கைத் துணைவியாம் பெண்ணின் செந்நீராம் நாதத்துடன் தன் நடுநாடி வழியாக விந்துவாம் வெண்ணீரைச் செலுத்தினால் அவ்விந்து கட்டுப்படும்.
இதை ஒவ்வொரு ஆதாரமாக மேலேற்றுவார்களாம்.

இதற்கு நெற்றி வழியாக அருந்தும் சந்திர அமிர்தமும் துணை நிற்கும். ஆரம்ப நிலையில் குண்டலினி யோகம் செய்கிறவர்களுக்கு ஏற்படும் அதிகபட்சமான வீரியத்தை சமநிலைக்கு கொண்டுவர பெண் சம்போகம்
தேவையாகும்.
பிறகு அவர்கள் வஜ்ரோலி முத்திரை மூலமாக விந்து விரையமாகாமல் போகம் செய்து, அதையும் சிவயோகமாகச்
செய்து இருவரும் மேன்மை அடைவர்.

மாதம் இருமுறை சம்போகம் செய்பவர்களுக்கு இதெல்லாம் தேவையில்லை என்பதே சித்தர்கள் வாக்கு.
யோக மார்க்கத்தில்
மேன்மையடைய சம்போகத்தையே பயன்படுத்தும் தாந்திரீக யோகமும் உண்டு. அதாவது மன உணர்வினை உடலில் அனுபவித்து விந்தை வெளிவிடாது மனதை ஒரு நிலைப்படுத்துவர்.

கடும் பயிற்சிக்குப் பின் இருவருடைய ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்தக்
கலை சிறக்கும்.
இந்த நிலையில் யோகியானவர் யோகாசனம் தெரிந்த பெண்ணோடு உடல் அதிக உஷ்ணமடையாத வண்ணமும், சுவாசம் தறிகெட்டு ஓடாத வண்ணமும் சுவாச முறைகளைக் கையாண்டு நீண்ட நேரம் சம்போகம் செய்வார்.

இந்த நேரத்தில் காம உணர்வோடு கூடாமல், சிந்தையை புருவ மத்தியில் திரட்டி, விந்தை வெளியே விடாமல் நீண்ட நேரம் கூடி
உள் உணர்வுகளை ஒருங்கிணைத்து
தெய்வநிலை அடைவர்.

உடல் புணர்ச்சி நிலையில் திளைத்திருந்தாலும் மனம் மட்டும் புருவ மத்தியிலேயே நிலைத்திருக்கும்.

இதனால் குண்டலினியானது வெளியே கிளம்பும் போகத்தால் குண்டலினியைக் கிளப்புவர்.
இதில் பெண்ணும் ஒத்துழைத்து மனதை புருவ மத்தியில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லையெனில் மனதை ஏதாவது ஒரு
ஆதாரத்தில் நிறுத்தலாம்.

இந்த நிலையில் சுவாசத்தைக் கட்டுப்படுத்தி இருவரும் கூடும் போது இந்திரிய சக்தி விரையமாகது
என்பதோடு ஆன்மிக சக்தியான குண்டலினியும் கிளப்பி விடப்படும்.
இருவரும் அதை ஒவ்வொரு ஆதாரமாக ஒருமித்த கருத்துடனும், முனைப்புடனும் மேலேற்றுவர்.

விந்துவும் நாதமும் அருளாகப் பொருந்தி உடன் கூடி சந்திர மண்டலத்தை எட்டுமாயின் ஆயிரம் இதழ்
தாமரை பரவெளியிலிருந்து அமிழ்தம் வெள்ளம் போல் பெருகுமாம்.
பொதுவாகவே MULTITASKING ஒரு பொய்யென்றும் அப்படி ஒன்று கிடையாதென்றும் உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் நமது சித்தர்கள் உடலுறவின் போது மூளையை கையாளக்கூடிய SERIOUS MULTITASKING செய்து காட்டி அதை ஒரு கலையாக நமக்கும் தந்துவிட்டு போய் இருக்கிறார்கள்.
எப்படிப்பட்ட ஆற்றலுடன் நம்மை வழி நடத்த ஆயுதமாக இருந்திருப்பார்கள் என்று கற்பனை செய்துபாருங்கள்.

உடலுறவு என்பதே ஒரு பரமானந்த நிலை அதாவது இந்து மதப்படி
சிவன் (ஆண்)
சக்தி ( பெண்)
இருவரும் இணைந்து புதிதாக ஒன்னறப் படை த்தல். இங்கு ஆண் , பெண் பேதம் மறந்து உணரும் ஓர் நிலை.
தியானத்தின் மூலம் யோகிகள் அடையும் உச்சத்தை ஆணும் பெண்ணும் கலவியில் உயிருடன் உயிர் சங்கமிக்கும் போது உணரலாம்.

இது பரமானந்த நிலையை ஒத்தது.

கலவி என்பதும் ஒரு வகை தியானம். அனுபவியுங்கள்.
பிரம்மச்சரியத்தால் மட்டுமே சிவத்தை அடையமுடியும் என கூறி நம்மை ஏமாற்றி வைத்துள்ள மூடர்களை இனியும் நம்பாமல்
கிரகஸ்தானாலயும் சிவத்தை அடையமுடியும் என நம்புங்கள்.

தொடரும்.......,

#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
#SSRThreads

நன்றி,
வணக்கம் 🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SSR

SSR Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SSR_Sivaraj

31 May
விழிப்புணர்வு திரேட் :-

#திருட்டு_திராவிட கட்சிகள், விசுவாசிகள் தயவு செய்து இந்த திரேட் படிக்க வேண்டாம், கருத்திடவும் வேண்டாம் ஏனெனில் ஆன்மீகம் சார்ந்த பதிவு இது.

திருட்டு திராவிட அரசுகள் நினைத்திருந்தால்
அறநிலையத்துறையையும் மேம்படுத்தி நிறைய மருத்துவமனைகளைக் கட்டியிருக்கலாம்.
ஆனால் தமிழின தலைவர் என சொல்லி கொண்ட கலைஞர் என்ன செய்தார் ?

அறநிலைதுறையை ஏற்படுத்தி கொள்ளைதான் அடித்தர் அந்த விஞ்சான ஊழல்வாதி,

இனி அவர்களை சொல்லி எதுவும் ஆக போவது இல்லை மக்களாகிய நாம் தான் விழிப்படைய வேண்டும்.

நடக்கும் அநியாயத்தை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அறநிலைதுறையில் கீழ் வரும் பழமை வாய்ந்த கோயிலின்
உண்டியலில் பணம் எங்கே ?

ஏன் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் ஆலயங்கள் பல அழிந்து போகும் நிலையில் உள்ளன ?

காரணம் என்ன??

எல்லாம் கட்டுமரம் வகுத்த வழியில் ஊழல் செய்வதால்.

ஒரு கணக்கு போடுவோமா ?
Read 22 tweets
29 May
ராமாயணத்தின் தத்துவம்:-

ராமாயணம் என்பது நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த கதை மட்டுமல்ல இது ஒரு தத்துவ ஆன்மீக முக்கியத்துவத்தையும் மற்றும் அதில் ஒரு ஆழமான உண்மையையும் கொண்டுள்ளது. ராமாயணத்தை நாமே நமது சொந்த உடலில் உணரலாம்.

இது எத்தனை பெருக்கு தெரியும் ?
‘ரா’ என்றால் ஒளி என்று பொருள். ‘ம’ என்றால் எனக்குள் என் இதயத்தில் என்று பொருள்.
‘ராம’ என்றால் எனக்குள் இருக்கும் ஒளி (ஆத்மா) என்று பொருள்.

ஆத்மா - ராமர்
மனம் - சீதை
மூச்சுக் காற்று - அனுமன்
விழிப்புணர்வு - லட்சுமணன்
அகங்காரம் - ராவணன்
ராமர் தசரதருக்கும் கௌசல்யைக்கும் பிறந்தவர்.

தசரத் என்றால் 10 தேர்கள் என்று பொருள்.

பத்து தேர்கள் என்பது மனிதர்களின் செயல் உறுப்புகளாகிய

வாய் (பேசுதல்)
கைகள் (செயல்)
கால்கள் (போக்குவரவு)
எருவாய் (கழிவுகளை நீக்குதல்)
கருவாய் (இன்பமும் பிறப்பும்)
Read 7 tweets
28 May
நான் ஒரு சாப்பாட்டு பிரியர்னு இங்க நிறையபேருக்கு தெரிய வாய்ப்பில்லை அசைவம்னா விரும்பி சாப்பிடுவேன்

இப்போ 2வருடமா சாப்பிட முடியல இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்கள் உணவை சாப்பிட ஆசை

என்னை போல எதனை பேரு ஆசைப்படுறீங்க எந்த மாநிலத்தின் உணவுனு Quote பண்ணி சொல்லுங்க
😋😋😋😋😋😋😋😋😋 Image
😋😋😋😋😋 Image
Read 30 tweets
28 Dec 20
போன வாரம் ஆபிஸ்ல செம வேலை நேத்து நைட் அடிச்சு புடிச்சு வேலூர் வந்து சேர்ந்துட்டேன்.

ஆபிஸில் நிறைய பேர் கொத்தடிமைங்க தான்

நான் #தலைவர்_வெறியன்_SSR னு தெரியும் அதனால எவனும் நம்ம கிட்ட வச்சுக்க மாட்டானுவ ஆனா #திருட்டு_திமுக டேமேஜ் பண்ணுறது தான் என் வேலை.

#SSRThreads
அப்படி ஒரு உபி கிட்ட பேசும்போது பெரிய வாக்குவாதம் ஆயிடுச்சு அதை அப்படியே உங்ககிட்ட பகிர்கிறேன்,

உபி :- கருணாநிதி இல்லனா நான் BE படிச்சிருக்க முடியாது இப்போ IT ல வேலை செய்திருக்க முடியாது, நல்ல சம்பாதிச்சு வசதியா வாழ முடியாது இது எல்லாத்துக்கும் காரணம் தமிழின தலைவர் தான்.
நான் :- த்தா டேய் நான்கூட தான் டா BE, MBA வேற எஸ்ட்ரா படிச்சிருக்கேன்.

என் அப்பா என்ன படிக்கவச்சாரு இப்ப நான் சம்பாதிச்சு என் அப்பா அம்மாவை நல்லா பாத்துக்குறேன் இதுல 3 பொண்டாட்டி காரன் எங்கடா வந்தான் நடுவுல,

ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு மாதிரி ஊழல் செஞ்சவன் டா கருணாநிதி.
Read 19 tweets
26 Dec 20
பாபா படம் எதிர்பாராத வெற்றி அடையாத போது

"ரஜினி இனி அவ்ளோ தான்"

சந்திரமுகி மூலம் செருப்படி வாங்கினானுங்க

#SuperStarRajinikanth
#SSRThreads ImageImage
உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற போது

''ரஜினி இனி அவ்ளோ தான்''

கோச்சடையான் கபாலி என செருப்படி வாங்கினானுங்க. ImageImageImageImage
காலா, கபாலி போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்ததால் ரஜினி இனி வயதான வேடத்திற்கே லாயக்கு

''ரஜினி இனி அவ்ளோ தான்''

பேட்ட என்னும் மரண மாஸ் காட்டி மரண அடி கொடுத்தார்

அதையும் வெட்கமே இல்லாம வாங்கி கட்டிகிட்டானுங்க. ImageImageImageImage
Read 5 tweets
17 Nov 20
நண்பர் ஒருவர் கேட்டார் திருவண்ணாமலையா சார் நீங்க அண்ணாமலையார் மீது இவ்வளே பக்தியா இருக்கிங்க உங்க சிவபக்தி மெய்சிலிர்க்க வைக்கிறது.

அவன் அருளாளே அவன் தாள் வணங்கி தான் சிவன் கிட்டயே நெருங்கவே முடியும் நீங்க கொடுத்து வைத்தவர் உங்களுடன் நான் பயணிப்பது பெரும் பாக்கியம் என்றார்.

1/3
இதற்க்கு காரணம் தலைவர் ரஜினி தான் உங்களால் நம்ப முடிகிறதா ?

2005ல் தலைவர் ரசிகர்களுடன் விளையாட்டாய் ஆரம்பித்த கிரிவலம்,

15 வருடங்களாக இன்று வரை தொடர்கிறது.

ஒரு வீரசைவனாக தினமும் சிவபூஜை செய்யும் அளவிற்க்கு என்னை ஆன்மிகத்தில் வளர்த்தது என் தலைவர் மட்டும் தான்.

2/3
ஈசன் என்னை தலைவர் மூலம் தான் ஆட்கொண்டார்.

கிரிவலத்தை நமக்கு 1997ல் பிரபலபடுத்தியது வாழும் கடவுள் தலைவர் தான்.

லட்சோப லட்சம் பேரை நெற்றியில் திருநீறு கழுத்தில் ருத்ராட்சம் அணிய வைத்து கிரிவலம் வர செய்த மெய்அடியார் தலைவர்.

அவர் பொற்பாதங்களை அடியேனுக்கு அடியேனாக வணங்குகிறேன்🙏
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(