#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் டில்லியில் பரமேஸ்டி என்ற தையற்காரர் வசித்துவந்தார். அவர் உடலழகு இல்லாத கூன்முதுகர். ஆயினும் அவர் எல்லா நற்பண்புகளும் பெற்ற சிறந்த விஷ்ணு பக்தராக திகழ்ந்தார். தையற் தொழிலில் கைதேர்ந்த பரமேஸ்டி, டில்லி பாட்ஷாவிற்கு துணி தைத்து தருமளவிற்கு கீர்த்தி பெற்றவராக
இருந்தார். ஒரு சமயம் பாட்ஷா தங்க ஜரிகையும், முத்து மற்றும் வைரமும் பதிக்கப் பெற்ற விலையுயர்ந்த துணியொன்றை, இரண்டு தலையணைகளை தைப்பதற்காக பரமேஸ்டிக்கு அனுப்பிவைத்தார். அழகான துணியைப் பார்த்ததும் இது பிரபு ஜெகந்நாதரின் தலையணைக்கு மட்டுமே பொருத்தமானது. என்று பரமேஸ்டி மனத்திற்குள்
எண்ணினார். பரமேஸ்டி பாட்ஷாவிடமிருந்து துணியைப் பெற்றுக் கொண்ட சமயம் ரத யாத்ரை காலமாகும். #ஜெகந்நாதர் ரதத்திலேறி பஹண்டி விஜயம் செய்யும் சமயம். பரமேஸ்டி தலையணைகளைத் தைக்கத் தொடங்கினார். தைத்து முடித்த பிறகு நேர்தியாகவும் அழகாகவும் வடிவமைக்கபட்டிருந்த தலையணைகளை கண்டு, திருப்தியுடன்
கண்ணை மூடிக் கொண்ட பரமேஸ்டி, பிரபு ஜெகந்நாதரின் பஹண்டி விஜய லீலையை மனதில் நினைத்து பார்த்தார். ஜாதி மத பேதமின்றி ஆயிரக்கணக்கான பக்தர்களின் நடுவே பகவான் ஜெகந்நாதர் எல்லோரது மனதையும் வசீகரித்தபடி வந்து கொண்டிருந்தார். ஜெகந்நாதரை கோயிலிலிருந்து எடுத்துச் சென்றபோது அவர் தலையணையில்
சாய்ந்திருந்தார். சேவகர்கள் தலையணையை நகர்த்தி நகர்த்தி, ஜெகந்நாதரை ரதத்தில் ஏற்றுவார்கள். இந்தக் காட்சியனைத்தையும் பரமேஸ்டி தியானத்தில் பார்த்தார். திடீரென தலையணை பொத்துக் கொள்வதைப் பார்த்து, பகவானுக்கு இன்னொரு தலையணை தேவை என்பது அவருக்கு தெரிந்தது. ஏதோ நிஜமாகவே பிரபு ஜெகந்நாதர்
பக்கத்தில் நின்று கொண்டிருப்பது போல, அவர் பாட்ஷாவிற்காக தைத்து வைக்கப்பட்ட இரண்டு தலையணையில் ஒன்றை எடுத்துக் கொடுத்தார். மானசீகமாக கொடுத்ததை ஜெகந்நாதர் நிஜமாகவே வாங்கிக்கொண்டார். சேவகர்களும் அவரை ரதத்தை நோக்கி நகர்த்திக் கொண்டே போனார்கள். பரமேஸ்டியின் கற்பனை கலைந்தது. தன் வசம்
இரண்டு தலையணைகளுக்குப் பதிலாக ஒன்று மட்டுமே இருப்பதை கண்டார். ஒரு தலையணையை ஜெகந்நாதர் நிஜமாகவே எடுத்துக் கொண்டது அவருக்கு திடீரென உரைத்தது. பரமேஸ்டிக்கு இதைக் காண ஆச்சர்யம். தான் தைத்த ஒரு தலையணை பகவானுடைய ஏகாந்த சேவைக்குப் பயன் படுத்தியதை நினைத்து தையற்காரர் தன்னை பாக்யசாலியாக
எண்ணிக்கொண்டார். ஜெகந்நாதர் தன்னிடம் கருணை காட்டுவதாக அவர் நெஞ்சுருகினார். அதே சமயம் பயமும் அவரை தொற்றி கொண்டது. ஒற்றை தலையணையை மட்டும் கொண்டு போய் கொடுத்தால், பாட்ஷா தண்டிப்பார் என்பதில் சந்தேகமில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கையில், பாட்ஷாவின் தூதர் இரண்டு தலையணைகளையும்
அரண்மனைக்கு கொண்டு வரும்படியான பாட்ஷாவின் உத்தரவை தெரிவித்தார். பரமேஸ்டி உடனே ஒரேயொரு தலையணையை மட்டும் தன்னுடன் எடுத்துச் சென்றார். தன் வணக்கங்களை பாட்ஷாவுக்குத் தெரிவித்து அவரிடம் தலையணையை கொடுத்தார். பாட்ஷா குழம்பிப்போய், நான் இரண்டு திண்டுகளைச் தைக்கச் சொன்னேன். ஒன்று இங்கே
இன்னொரு திண்டு எங்கே என்றார். இவரும் அந்த இன்னொண்ணு தான் பாட்ஷா இது என்று சொல்லி அவரையும் குழப்பியிருக்கலாம் ஆனால் உண்மையை ஒப்புக் கொண்டார். பாட்ஷாவின் காலில் விழுந்து, மற்றொரு திண்டை பகவான் ஜெகந்நாதர் எடுத்துக் கொண்டதால் என்னிடம் இந்த ஒரு திண்டு மட்டுமே இருக்கிறது. தயவுசெய்து
இதை ஏற்றுக் கொண்டு, என்னை என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அப்படி செய்து கொள்ளுங்கள் என்று கூறினார். பாட்ஷா, நீ என்ன சுயநினைவில் இல்லையா, உன்னிடமிருந்து எப்படி அவரால் திண்டை எடுத்துக் கொள்ள முடியும்? #பூரி இங்கிருந்து வெகு தொலைவில் இருக்கிறது. எப்படி அவரால் ஒரே
நாளில் இவ்வளவு தூரம் வந்து உன்னிடமிருந்து திண்டை எடுத்துச் செல்ல முடிந்தது என்று பாட்ஷா கேட்டார். பாட்ஷாவின் அறியாமைக்கு பதில் கூற நினைத்த பரமேஷ்டி, பகவானின் புனித நாமத்தை உச்சரிக்கத் தொடங்கினார். பின் பாட்ஷாவிடம் தான் மரணத்திற்கு பயப்படவில்லை என்றும் பகவானுக்கும் பக்தனுக்கும்
இடையே எத்தனை தூரம் இருந்தாலும் அது அவருக்குப் பொருட்டேயில்லை. பக்தனின் மனோ பாவத்திற்கு ஏற்ப அவர் தனக்கு அளிப்பதை மிக பிரியமுடன் ஏற்றுக் கொள்கிறார் என்றார். பரமேஸ்டியின் இவ்விளக்கத்தைக் கேட்டு மிகவும் கோபம் கொண்ட பாட்ஷா, உன் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தித்துக் கொள். உனக்கு மரண தண்டனை
விதிக்கிறேன் என்றார். பின்னர் சேவகர்களை அழைத்து, இந்தக் கூன்முதுகனை சிறைச்சாலைக்கு அழைத்துப் போய் கை கால்களை கட்டி, பட்டினி போடுங்கள். அவன் பட்டினியால் சாகட்டும். அவன் கடவுள் அவனை எப்படி காப்பாற்றுகிறாரென்று நானும் பார்கிறேன் என்றார். பரமேஸ்டி சிறையில் பகவான் ஜெகந்நாதரிடம்
பிரார்த்திக்க ஆரம்பித்தார். ஓ பிரபு தயவு செய்து என்னை ரட்சிக்கவும். இந்த மொகலாய அரசரின் தண்டனையிலிருந்து என்னைக் காப்பாற்றவும். நீங்கள் என்னை எது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். ஏனென்றால் எதுவும் என் கட்டுப்பாட்டில் இல்லை. இப்படியே பிரார்த்தித்த பரமேஸ்டி, பகவானின் நாமத்தை கண்மூடி
உச்சரித்து தியானத்தில் ஆழ்ந்தார். பரமாத்மாவான பகவான் ஜெகந்நாதருக்கு அவரது பக்தர்கள் படும் அவஸ்தைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர் உடனடியாக சிறைக் கூடத்தில் தோன்றி தன் கருணைப் பார்வையை பரமேஸ்டியின் மீது செலுத்தினார். பகவானுடைய பார்வை அவர் மீது விழுந்த மாத்திரத்தில்
பரமேஸ்டியின் கைகால்கள், விலங்குகளில் இருந்து விடுபட்டன. அவர் கண்ணைத் திறந்ததும் தன் முன் பகவான் ஜெகந்நாதர் இருப்பதைப் பார்த்தார். பகவான் தனது தாமரைத் திருவடிகளை பரமேஸ்டியின் தலையில் வைத்தார். உடனடியாக பரமேஸ்டியின் கூன் முதுகு நிமிர்ந்து, அழகான உருவம் பெற்றார். பகவானின் தாமரைத்
திருவடியை தலையில் ஏந்திய பரமேஸ்டி, பக்தி பரவசமடைந்தார். பிறகு பகவான் ஜெகந்நாதர் அரண்மனையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பாட்ஷாவின் கனவில் தோன்றி, முட்டாள் அரசனே! ஒரு எளிய வஸ்துவான திண்டை எனக்குகளித்தமைக்காக நீ என் பக்தனை தண்டித்துவிட்டாயா? இந்த ஜகத்தில் உள்ளவை எல்லாம் எனக்குரியவை.
அவர் எனக்கு உரியதையே திருப்பிக் கொடுத்தார். உடனடியாக அவரை விடுதலை செய்து அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் என்று கூறி பாட்ஷாவிற்கு கசையடி கொடுத்து அரண்மனையிலிருந்து வெளியேறினார். கத்திக் கதறி படுக்கையிலிருந்து எழுந்த பாட்ஷா, தான் ஏதோ கெட்ட கனவு கண்டோமோ என்று எண்ணினார்.
ஆனாலும் தன் முதுகில் செந்தழும்புகள் இருப்பதை பார்த்து தான் கண்டது சாதாரண கனவல்ல என்று அவருக்கு புரிந்தது. தனது பக்தனின் பொருட்டு, எனக்கு பாடம் புகட்ட, எனது கனவில் வந்து தண்டனை அளித்திருகிறார் பகவான் ஜெகந்நாதர். அவருடைய ஆணைகளை நிறைவேற்ற நான் தாமதித்ததால், நான் இன்னும் பெரிய
ஆபத்திற்கு உள்ளாவேன் என்றெண்ணி பரமேஸ்டியை விடுவிக்க சிறைச்சாலைக்கு விரைந்தார். சிறைச்சாலையில் பரமேஷ்டியின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டும், அவரது முதுகு கூன் நிமிர்ந்தும், அழகு மிளிர பிரகாசத்துடன் இருந்த பரமேஸ்டியை கண்டு வியந்தார். அவர் எந்த வித பாதிப்பு இல்லாதவராய் ஹரி நாமத்தை
உச்சரித்து கொண்டிருந்தை கண்டார். பரமேஸ்டியிடம் மன்னிப்பு வேண்டிய பாட்ஷா அவருக்கு வெகுமதிகளை அளித்தும், பட்டத்து யானை மேல் அமர்தி ராஜ மரியாதையுடன் அவரது இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

16 Sep
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சிவாவும் செல்வாவும் நெருங்கிய நண்பர்கள். செல்வா நாத்திகன், வாய் ஜால திறமையுடைவன். சிவா தீவிர கிருஷ்ண பக்தன். செல்வாவுக்கு மேடையில் கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை என்று பிரசங்கம் செய்வதே வேலை. எல்லா மதத் தலைவர்களும் தங்கள் வயிற்றுப் Image
பிழைப்புக்காக உண்டாக்கிக் கொண்ட கட்டுக்கதைகள் என்று வாய் ஜால திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருப்பான். செல்வாவுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடுவார்கள். கடைசியில் கடவுளுமில்லை கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம் என முடித்து யாராவது கேள்வி
கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம் என்று அழைப்பான். அப்போது ஒரு முறை நண்பன் சிவா மேடைமீது ஏறினான். தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான். நண்பா என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே எனக் கோபம் கொண்டான் செல்வா.
Read 7 tweets
16 Sep
#NEET #நீட் இதற்கு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு ஏன்?
உச்சநீதிமன்றம் நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் விளைவு: 3 சுற்று கலந்தாய்வுக்கு பிறகும் இந்தியாவில் டீம்டு மருத்துவ பல்கலை கழககங்களில் இன்னும் 5,200 மாணவர் இருக்கைகள் நிரப்ப படாமல் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 947 இருக்கைகள்
நிரப்ப படவில்லை.
பாலாஜி மருத்துவக்கல்லூரி - 206 காலி. (திமுக முன்னாள் அமைச்சர் ஜகத்ரட்சகனுக்கு சொந்தமானது)

ACS மருத்துவ கல்லூரி - 146 காலி
(முன்னாள் அதிமுக அமைச்சர் AC சண்முகத்திற்கு சொந்தமானது)

மீனாக்‌ஷி மருத்துவ கல்லூரி - 130.
( கம்பெனி முதலாளி தெரியவில்லை தெரிந்தவர் கூறலாம்)
செட்டிநாடு மருத்துவ கல்லூரி - 127
( செட்டிநாடு சிமெண்ட் கம்பெனி )

SRM மருத்துவ கல்லூரி - 98
(உத்தமர் பச்சைமுத்து புதிய தலைமுறை தொலைக்காட்சி )

ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி - 76. (எம்ஜிஆர் ஆசிபெற்ற சாராய வியாபாரி உடையார் குடும்பம் )

சவீதா பல் மமருத்துவ கல்லூரி - 77.
(எம்ஜிஆர்
Read 7 tweets
15 Sep
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் #ராதாஷ்டமி
ஆவணி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமியன்று மதிய வேளையில் ராதா பிறந்தாள். அதாவது ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களுக்கு நடுவில் வரும் வளர்பிறை எட்டாம் நாள் பிறந்தாள். கிருஷ்ணரின் ஜன்மாஷ்டமியில் இருந்து பதினான்காம் நாள் ராதா பிறந்த ராதாஷ்டமி வருகிறது. இந்நாளை ராதா
பிறந்த ஊரான பர்சானா என்ற இடத்திலும் ப்ரஜ் பூமியின் எல்லா பகுதியிலும் சிறப்பாக மக்கள் கொண்டாடுகிறார்கள். எல்லாம் கோபிகைகளுடன் கிருஷ்ணர் விளையாடினாலும் ராதா அவருக்கு மிகவும் பிரியமானவள் ராதைக்கு சகலமும் கிருஷ்ணன்தான். ராதா என்பதன் பொருள்: ரா என்றால் தருவது, ஒப்புக்கொள்வது. தா
என்றால் விடை பெறுதல், பிடிப்பை தளர்த்துதல். தருவதற்கும், பெறுவதற்கும் விரும்புதல், மனதை ஒருமுகப்படுத்துதல், அதற்காக பாடுபடுதல் என்பதே இவ்விரு எழுத்துக்களும் கூடினால் மிகச்சுவையான விளக்கங்கள் கூறலாம். எப்போது நாம், நான் என்ற பிடிப்பை தளர்த்தி, சத்தியத்தின் மேல் நம் மனதை
Read 7 tweets
14 Sep
#ஶ்ரீகுருஷ்ணன்கதைகள் மன்னன் வீரவர்ம ராஜாவுக்கு பல யானைகள் இருந்தன. அதில் ஒரு யானை மணிகண்டன் மிகவும் பலம் வாய்ந்தது. கீழ்படிந்து நடக்கும் குணமும் விவேகமும் கொண்டது. போர்க்களத்தில் வீரவர்ம ராஜாவுக்கு எப்பொழுதும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்து திரும்பி வரும். எனவே ராஜாவின் மிகவும் Image
பிரியமான யானையானது மணிகண்டன். யானைக்கு வயதாகியது. முன்பு போல களத்தில் போர் செய்ய முடியவில்லை. எனவே மன்னர் வீரவர்மன் அதை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை. ஆனாலும் அவரது அணியின் ஒரு பகுதியாகவே யானை மணிகண்டன் இருந்தது. ஒரு நாள் யானை மணிகண்டன் தண்ணீர் குடிக்க ஏரிக்குச் சென்றபோது
சேற்றில் சிக்கி மூழ்கத் தொடங்கியது. பல முறை முயன்றும் சேற்றில் இருந்து காலை அதனால் வெளியே எடுக்க முடியவில்லை. அதன் அலறல் சத்தத்திலிருந்து யானை சிக்கலில் இருப்பதை மக்கள் அறிந்து கொண்டனர்.
மணிகண்டன் சேற்றில் சிக்கிய செய்தி ராஜாவை சென்றடைந்தது. ராஜா வீரவர்மன் உட்பட மக்கள் அனைவரும்
Read 8 tweets
13 Sep
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ரசிக முராரி என்பவர் ஒடிஸாவில் ரோகினி நகர் என்னும் ஊரில் 1590ல் பிறந்தவர். சிறு வயது முதலே பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் மேல் தீவிர பக்தி கொண்டிருந்த அவர் எப்போதும் கிருஷ்ணன் பெயரையே உச்சரித்துக் கொண்டிருப்பார். அவரது குரு சியாமானந்தர் 1608 ஆம் ஆண்டு ரசிக முராரிக்கு Image
கிருஷ்ண மந்திரத்தை உபதேசித்து மக்களை நல்வழிப்படுத்தி வரும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் அங்கேயே மடம் அமைத்துக்கொண்டு பகவத் சேவை செய்து வந்த சியாமானந்தர் 1630 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். அவர் சமாதி ஒடிஸாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ளது. அவர் அணிந்த காலணிகளை இன்னும் அங்கு
பாதுகாத்து வருகின்றனர். சியாமானந்தரிடம் கிருஷ்ண மஹா மந்திரத்தை உபதேசம் பெற்ற ரசிக முராரி கோபிபல்லவபூர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார். பானாபூரை ஆண்டு வந்த பைத்தியநாத் பஞ்ச் என்னும் ஒரு அரசனின் அரவணைப்பில் ரசிக முராரி வாழ்ந்துவந்த காலகட்டத்தில், அப்போது ஒடிஸா மாநில பொறுப்பாளராக
Read 14 tweets
6 Sep
#மாசாணிஅம்மன் ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் தல வரலாறு.
பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஆனைமலையில் மிக பிரமாண்டமாக ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆனை மலைப்பகுதியை நன்னன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். அவரைச் சந்திக்க ஒரு துறவி வந்தார். அவரை
வரவேற்று பல உபசரிப்புகள் செய்த நன்னனின் உபரசரிப்பில் மகிழ்ந்த துறவி அவருக்கு ஓர் மாங்கனியை கொடுத்தார். ‘மன்னா இது அதிசய மாங்கனி இதை எனது குருநாதர் பரிசாக அளித்தார். உன்னால் மகிழ்வுற்ற நான் இந்த மாங்கனியை பரிசளிக்கிறேன், முக்கியமான ஒன்று இதை உண்ட பின் இந்த மாங்களி கொட்டையை ஆற்றில்
விட்டு விடு, இல்லையெனில் இது ஆபத்தாக முடிந்து விடும்’ என்றார். மன்னர் சரி என்று சொல்லி துறவியை வழியனுப்பி விட்டு மாங்கனியை சுவைத்தார். சுவை நன்றாக இருக்கவே அந்த மாங்கொட்டையை துறவி சொன்னதை அலட்சியப்படுத்தி தமது நந்தவனத்தில் ஆற்றோரம் நட்டு பராமரித்து வந்தார். மரம் பெரியதாகி பழம்
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(