#தினம்_ஒரு_தகவல் -59

#தமிழ்நாடு -1

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கம்

உள்ளாட்சி அரசாங்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் ரிப்பன் பிரபுவால் அறிமுகம் செய்யப்பட்ட கிராமப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அரசாங்கங்கள் பின்வரும் சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளன.

#ஒன்றியஉயிரினங்கள் Image
1.உள்ளாட்சி அரசாங்கம் நன்றாக வரையறை செய்யப்பட்டுள்ள ஓர் அதிகார எல்லையைப் பெற்றுள்ளது. அது கிராமம் அல்லது மாவட்டம் போன்ற உறுதியானதோர் நிலைவரையைப் பெற்றுள்ளது. அதனுடைய குறிக்கோள், அந்த நிலப்பகுதிக்குள் அல்லது எல்லைக்குள் நிலவும் தனிப்பட்ட தன்மை வாய்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதாகும
2.உள்ளாட்சி அரசாங்கம், அவ்வட்டாரத்திற்குள் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளால் ஆட்சி செய்யப்படுகின்றது. அவர்கள் வட்டாரத்து வாக்காளர்களுக்குப் பொறுப்பானவர்கள். மைய மாநில அரசாங்கங்களின் தேவையற்ற தலையீடின்றி வட்டாரத்து அலுவல்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்
நிர்வாகம் செய்கின்றனர்.
3.வட்டார மக்களின் தேவைகளை மேம்படச் செய்வது உள்ளாட்சி அரசாங்கத்தின் தலையாயக் கடமையாகும்.
4.உள்ளாட்சி அரசாங்கம் தனது நிதி நிலை அறிக்கையினை தயாரிப்பதிலும், நிதி ஆதாரங்களைத் திரட்டுவதிலும் சுதந்திரம் பெற்றுள்ளது
நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்கள்
நகர்ப்புற அல்லது ஊரக மக்கட்தொகை மிக வேகமாக நம் நாட்டில் பெருகி வருகின்றது. அதன் பிரச்சினைகளும் சிக்கல் மிகுந்தவையாய் உள்ளன. அவைகளைத் நிறைவேற்றும் பொருட்டு, நகர்ப்புற அல்லது ஊரக உள்ளாட்சி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
இவ்வமைப்புகள் நகராட்சி அமைப்புகள் என்றும் அறியப்படுகின்றன. அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் பிறவற்றை இந்திய அரசியலமைப்பு உறுதி செய்துள்ளது. அவைகளுடைய பணிகள் 12 வது இணைப்புப்பட்டியலில் கூறப்பட்டுள்ளன. அரசியலமைப்பானது மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் நகரப் பஞ்சாயத்துக்கள் அரசியல்
அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை தவிர நகரியங்கள், இராணுவக் கூட வாரியங்கள், குறிக்கப்பட்ட பகுதிகளின் குழுக்கள் போன்ற வேறு சில நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் உள்ளன.
மாநகராட்சி
நகராட்சி அமைப்பில் மாநகராட்சி மிக உயர்ந்த வகையைச் சார்ந்ததாகும். மாநாகராட்சி அதிகப்படியான
அதிகாரங்களைப் பெற்றுள்ளது. ஏனைய வட்டார அமைப்புகளுடன் ஒப்பிடும்போது, அது விரிவான பணிகளையும், அதிக நிதித்தன்னாட்சியையும் அனுபவிக்கின்றது. மாநிலச் சட்டமன்றத்தால் இயற்றப்படும் சிறப்பு நகராட்சிச் சட்டங்களின் கீழ் மாநகராட்சிகள் பெரிய நகரங்களில் நிறுவப்படுகின்றன. நாடாளுமன்றத்தின் Image
சட்டத்தினால் யூனியன் பிரதேசங்களின் மாநகராட்சிகள் அமைக்கப்படுகின்றன.
சாதாரணமாக 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கட்தொகையைக் கொண்டுள்ள பெரிய நகரங்கள் மாநகராட்சிகளாக அமைக்கப்படுகின்றன. அவைகளுடைய ஆண்டு வருமானம் பொதுவாக ஒரு கோடியாகும். உதாராணமாக சென்னை, மும்பை, கொல்கத்தா, டில்லி,
ஹைதராபாத், பெங்களூர் மாநகராட்சிகள் இந்தியாவின் மிகப் பெரிய மாநகராட்சிகளாய் உள்ளன. அவை அதிக மக்கட்தொகையையும் சீரிய வருவாயையும் பெற்றுள்ளன. எனினும் இரண்டு இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டுள்ள நகரங்களிலும் மாநகராட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவைகளின் ஆண்டு வருமானம் ரூ50,000 மேற்படுவதில்லை. சந்தர்ப்பச் சூழலைப் பொறுத்து, மாநகராட்சியை நிறுவ அரசே முடிவெடுக்கும். காலம் மாறும்போது, அதன் முக்கியத்துவம் மாறலாம். சென்னையையும் சேர்த்து, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர்
கூட்டங்களில் கலந்து கொள்ளலாம். ஆனால் வாக்களிக்கும் உரிமை கிடையாது. நகராட்சி நிர்வாகத்தில் அனுபவம் கொண்டுள்ள நபர்களை மாநகராட்சி மன்றத்திற்கு மாநில அரசாங்கம் நியமனம் செய்யலாம். ஆனால் மன்றத்தில் வாக்களிக்கும் உரிமை அவர்களுக்குக் கிடையாது.
மாநகராட்சி மன்றத்தின்
உறுப்பினர்களின் எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம், வேறுபட்டுக் காணப்படுகின்றது. சென்னை மாநகராட்சி 200 உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது. தகுந்த காரணங்களுக்காக மாநகராட்சி மன்றம் முன்கூட்டிக் கலைக்கப்படுமாயின், ஆறு மாதங்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். மாநகராட்சி மன்றம்
ஒர் விவாத அமைப்பாகத் திகழ்கின்றது. உள்ளூர் சட்டப்பேரவையைப் போன்ற அது செயல்படுகின்றது. மக்களின் விருப்பத்தை நகரத்தின் சட்டங்களாக அது மாற்றுவிக்கின்றது.

தொடரும் ........

#ஒன்றியஉயிரினங்கள்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சிங்கம்🦁

சிங்கம்🦁 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Singamonfire

27 Dec
#தினம்_ஒரு_திட்டம் - 12

கால்நடைகளுக்கு காப்பீடு

நோக்கம்
விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் திடீரென நோயுற்றாலோ அல்லது இயற்கை சீற்றத்தினால் இறந்துவிட்டாலோ அதனை ஈடு செய்யும் விதமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

#ஒன்றியஉயிரினங்கள்
கால்நடையின் மதிப்பு ரூ. 20 ஆயிரத்துக்கு ஒரு வருடம் வரையிலும் காப்பீடு செய்ய தேவைப்படும் தொகை ரூ. 500 இல் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை 50 சதவீதம் வழங்குகிறது. மீதமுள்ள 50 சவீதம் பயனாளியால் வழங்கப்பட வேண்டும்.
அதற்கு மேல் மதிப்பிற்கோ அல்லது ஒரு வருடத்திற்கு கூடுதலாகவோ
பயனாளி காப்பீடு செய்ய விரும்பினால் தேவைப்படும் காப்பீட்டுத்தொகை பிரீமியம் பயனாளியால் செலுத்தப்பட வேண்டும்.
பயன்கள்
ரூ.500 காப்பீட்டுத்தொகை பிரீமியத்திற்கு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மானியம் கூடுதலாக ரூ.100 அரசால் வழங்கப்படும்.
ஒரு பயனாளிக்கு 5 பசுக்கள் வரை காப்பீடு
Read 8 tweets
27 Dec
#கல்வி - 26
#தனித்துவம்_வாய்ந்த_படிப்புகள்

சட்டப் படிப்புகள் (LAW COURSES)

தெளிவான அருமையான கருத்துகளோடு பேசுபவர்களைப் பார்த்து, பொதுவாக “இவன் என்ன சட்டம் பேசுகிறான்?” என்று சொல்வது வழக்கம். ஒருவர் தனது கருத்துள்ள பேச்சில் -

#ஒன்றியஉயிரினங்கள்
நெறிமுறைகளை கடைபிடித்து பேசினால் அவரை ‘சட்டம் தெரிந்தவர்’ என்று மரியாதை செய்கிறார்கள். இதனால்தான், சட்டத்தை முறையாகப் படித்து பேசுபவர்களுக்கு இந்த சமூகம் முறையான மரியாதையை வழங்குகிறது.

‘இந்தியாவின் தந்தை’ என அழைக்கப்பட்ட மகாத்மா காந்தியடிகள் சட்டம் படித்தவர்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு முறையாக சட்டக் கல்வி பயின்றவர். ‘சட்டமேதை’ என அழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்வியை நன்கு கற்றுணர்ந்து சட்டம் இயற்றும் அளவுக்கு புகழ் பெற்றவர் ஆவார். முறையாக சட்டம் பயின்று அரசியலில் நுழைந்தவர்களும் பெருமை பெற்றிருக்கிறார்கள். எந்த
Read 31 tweets
27 Dec
#தினம்_ஒரு_தகவல் -61

#தமிழ்நாடு -3

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கம்
விருப்பப் பணிகள்.
1.நகரப் பகுதிகளை வகுத்து அமைத்தல்.
2.பெண்டிர் காப்பு இல்லங்கள், அனாதை இல்லங்கள், தொழுநோயாளிகளின் இல்லங்கள், ஓய்விடங்கள், நூலகங்கள், பொது பூங்காக்கள், தோட்டங்கள்
#ஒன்றியஉயிரினங்கள்
முதலானவற்றை நிறுவி பராமரித்தல்.
3.சாலையோரங்களில் மரங்களை நடுதல்.
4.நில அளவைகளை மேற்கொள்ளுதல்.
5.நலிவுற்ற பிரிவினருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தல்.
6.நகராட்சிப் பணியாளரின் பொது நலத்தைப் பேணிக்காத்தல்.
7.நகராட்சிப் பகுதிக்குள் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி மக்களுக்கு
கலாச்சாரம் மற்றும்பிற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல். வருவாய் ஆதாரங்கள்
நகராட்சியின் முக்கிய வருவாய் ஆதரங்களாவன.
1.சொத்து வரி.
2.தொழில் வரி.
3.பொருள்கள் மீதான வரிகள் - சுங்க வரிகள்.
4.கால்நடை மற்றும் வாகன வரி.
5.கேளிக்கை வரி.
6.குடிநீர் மற்றும் விளக்கு வரி.
Read 14 tweets
26 Dec
#தினம்_ஒரு_தகவல் -60

#தமிழ்நாடு -2

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கம்

மேயர் மற்றும் துணை மேயர்
மேயர் மாநகராட்சியின் அரசியல் ரீதியிலான தலைவர் ஆவார். அவர் நகரத்தின் முதற்குடிமகன் மற்றும் தந்தை என அழைக்கப்படுகின்றார். மேயரை மக்களே நேரடியாகத் தேர்நதெடுக்கின்றனர்
#ஒன்றியஉயிரினங்கள் Image
கவுன்சிலர்கள் தமக்குள்ளிலிருந்து ஒருவரை துணை மேயராக தேர்ந்தெடுக்கின்றனர் அவர்களுடைய பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். மாநகராட்சியின் மேயர் மாநகராட்சி சட்டதிட்டங்களுக்கு முரணாக செயல்பட நேரிட்டால், மாநகராட்சியின் மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் மூன்று பகுதியினர் எழுத்துமூலமாக
மாநகராட்சி ஆணையருக்குத் தெரிவித்து, அதன் மீது ஐந்தில் நான்கு பகுதியினர் மேயருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்படவேண்டும். மேற்படி தீர்மானத்தை அரசு பரிசீலித்து மேயரின்விளக்கத்தினைப் பெற வேண்டும். மேயரின் விளக்கம் அரசுக்கு ஏற்புடையதாக இல்லை எனில், அரசு மேயரை
Read 20 tweets
15 Dec
#கல்வி - 23

தனித்துவம் வாய்ந்த படிப்புகள்

ஏவியேஷன் படிப்புகள் - Aviation Courses

வானூர்தி தொடர்புடைய இந்த படிப்புகள் பொதுவாக பறப்பது, விமான சேவைக் குழு, ஏர் டிராபிக் நிர்வாகம், விமான நுணுக்கங்கள், பயணிகள் பாதுகாப்பு,கட்டுப்பாட்டுக் கொள்கைகள், விமான நிலையம்
#ஒன்றியஉயிரினங்கள்
தொடர்புடைய பொருளாதாரஅம்சங்கள் போன்றவற்றுடன் தொடர்புடையவை.

அரசு சார்ந்த விமானப் பணிகள், பறப்பது குறித்த கட்டுப்பாட்டு அமைப்புகள், ஏவியேஷன் கன்சல்டன்ட் போன்ற பணிகளைப் புரிய ஈடுபாடு காட்டுபவர்கள் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஏவியேஷன் படிப்புகளைப் படிக்கலாம். உலகமயமாக்கல்,
தாராளமயம், தனியார் மயம் கொள்கைகளால் மாறிவரும் விமானத் துறையில் ஏவியேஷன் படித்தவருக்கு மிக அதிக அளவிலான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.ஏவியேஷன் படிப்புகள் பொதுவாக இவற்றைப் பற்றியே இருக்கின்றன.

* ஏர்லைன் வாடிக்கையாளர் பின்புல சேவைப் பணிகள்
* பயணிகளை அணுகும் முறை தொடர்பான பணி
Read 10 tweets
15 Dec
#தினம்_ஒரு_தகவல் -57

தமிழ்நாடு அரசுத் துறைகள்- 28

இந்து சமய அறநிலையத் துறை

அமைச்சர்
திரு. பி.கே. சேகர்பாபு
044-25670374

Secretary to Government
திரு.B. சந்திர மோகன்
25670820
#ஒன்றியஉயிரினங்கள்
இந்து சமய அறநிலையத் துறை தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு 1 சனவரி 1960 முதல் செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது.
மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(