#TheKashmirFiles #காஷ்மீரர்ஃபைல்ஸ் இந்தியாவின் பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. உண்மை சரித்திரம் அறியாத பலர் இந்த திரைப்படத்தை பார்த்து விட்டு இப்படியெல்லாம் கூட கொலைபாதகம் செய்வார்களா என கேட்கையில் அவர்களின் அறியாமை புலப்படுகிறது, வேதனையளிக்கிறது.
#மெக்காலே மாற்றிய சரித்திரத்திற்கு காரணம் உள்ளது. நம் தேசம் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை அடைந்த பிறகும் நம் அரசாங்கங்கள் சரித்திரத்தை, உண்மையை குழி தோண்டி புதைத்துள்ளதை எப்படி மன்னிப்பது? உண்மை சரித்திரத்தை மீட்டெடுத்து அதை மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டியது மிக அவசியம்
தமிழகத்தை பொறுத்தவரை 13ம் நூற்றாண்டில் #மதுரைமீனாட்சி கோவிலில் நடந்த அராஜக தாக்குதல்கள், கொலை பாதகங்கள், 12,000 வைணவர்கள் முஸ்லீம் படைகளுக்கு எதிராக ஸ்ரீரங்கத்தில் வெறும் கைகளோடு போராடி செய்த உயிர் தியாகங்களை படம் எடுக்கலாம். #மருது_சகோதரர்கள் ஆங்கிலேய மற்றும் முகம்மது அலிகான்
எனும் ஆற்காடு நவாபை எதிர்த்து களமிறங்கியது, காடுகளில் இருந்து கொரில்லா போர் புரிந்தது, மருது சகோதரர்களின் தளபதியாக இருந்த #உதயபெருமாள்_கவுண்டர் எனும் துப்பாக்கி கவுண்டர் (இவர் ஒரு வேளாளக் கவுண்டர், துப்பாக்கி சுடுவதில் மிகுந்த நிபுணராக, மருது சகோதரர்களுக்கு பிரத்யேகமான ஒரு
துப்பாக்கி படையை உருவாக்கினார். அவர்களின் வெற்றியில் இவரின் பங்களிப்பும் முக்கியமானது) இவற்றை எல்லாம் படமெடுக்கலாம். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் நிர்மூலம், அதன் தலைநகரம் ஹம்பி மாதக்கணக்கில் அழிக்கப்பட்டதை படம் எடுக்கலாம். காஷ்மீர் இந்துக்கள் இன ஒழிப்பை போல், 1946-ல் வங்காளத்தில்
நடந்த நவகாளி இந்துகள் இன ஒழிப்பு, 1964-ல் அதே பங்களாதேஷின் #டாக்கேஷ்வரி கோவில் உட்பட பல்வேறு பகுதிகளில் நடந்த இந்துகள் தொடர் படுகொலைகள், #பாக்கிஸ்தான் பிரிவினையில் #சிந்து பகுதியில் இருந்த இந்துகள் லட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டதும், அவர்கள் சந்தித்த கொடுமைகள் என இவற்றை
எல்லாம் எத்தனை திரைப்படம் எடுத்தாலும் போதாது. இதற்கு சற்றும் சளைக்காமல் #ஆங்கிலேய, #போர்ச்சுகீசிய அராஜகங்கள், கோவாவில் 15ம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு வரை கத்தோலிக்கர்களால் இந்துகள் மீது நடந்தேறிய இனஒழிப்பு படுகொலைகள், அதுபோலவே வங்காளத்தில் லட்சக்கணக்கான இந்திய விவசாயிகள்
தங்கள் வயல்களில் உணவு தாணியத்தை பயிரிட இயலாமல், ஆங்கிலேயர்களால் #ஓபியம் எனும் போதைப் பொருளை பயிரிட கட்டாயப்படுத்தப்பட்டு அதன் விளைவாக 1770ல் வங்காள பஞ்சம் ஏற்பட்டு லட்சக்கணக்கான இந்தியர்கள் மடிந்தது, 1876-78ல் உணவு தாணியங்கள் பெருமளவு ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, உள்ளூர்
உணவு தேவைக்கு போதிய சேமிப்பு இல்லாமல் மெட்ராஸ் பஞ்சம் ஏற்பட்டு பட்டினியாலும், நோய்களினாலும் லட்சக்கணக்கான மக்கள் மடிந்தது. இவை ஒவ்வொன்றையும் குறித்து படமெடுக்கலாம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். யூதர்கள் படுகொலை, மற்ற இனத்தவர் படுகொலைகள் உலகம் முழுக்க பேசப்படுகிறது. இந்துகளை
திட்டமிட்டு அழித்த வரலாறு மட்டும் ஏன் பேசப்படுவதில்லை? அழித்தவர்கள் கிறுஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என்பதாலா?உண்மை சரித்திரத்தை மீட்டு, அதை மக்கள் பார்வைக்கு கொண்டு சென்றாலே போதும். விழிப்புணர்வு ஏற்பட்டுவிடும். விழிப்புணர்வு ஏற்பட்டு விட்ட மக்கள் மட்டுமே தங்கள் வேர்களை
உணர்ந்து தேசியவாதிகளாக மறுமலர்ச்சி அடைவார்கள்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 16
#மகாபெரியவா பந்தநல்லூர் ஸ்ரீ பந்தாடு நாயகி சமேத பசுபதிநாதர் கோவிலில் உள்ள துர்க்கையின் கண்களில் இருந்து கண்ணீர் ஓரமாக கசிந்து கொண்டே இருந்தது. பக்தர்களும் இதை கவனிக்கத் தொடங்கினர். அம்பாளுக்கு அபிஷேக, அலங்காரங்கள் செய்யும் ஶிவஸ்ரீ ஜகதீஶ ஶிவாச்சார்ய குருக்கள் அவளுடைய கண்களை பதமாக ImageImage
துடைத்து விட்டாலும் அது நின்றபாடில்லை! கண்களின் ஓரத்தில் கண்ணீர் கசிவு தெரிந்தது. அவர் மனசும் மிகவும் வேதனைப் பட்டது. அம்மா! உனக்கே ஏன் இந்த வேதனை என்று வருந்தினார். ஒரு கன்னியாப் பெண்ணை துர்க்கையாக பாவித்து, ஆராதனை செய்து, அவளுக்கு சௌபாக்ய திரவ்யங்களை சமர்ப்பித்தார். பிறகு
நவாக்ஷரி மந்த்ர ஜபம் செய்தார். பிறகு துர்க்கையாக ஆராதனை செய்யப்பட்ட பெண்ணின் முன்னால் அமர்ந்து கொண்டு, "அம்மா! என்ன குறை? ஏன் இந்தக் கண்ணீர்?" தாயிடம் கெஞ்சிக் கேட்டார். அந்தப் பெண்ணும் ஏதோ ஒருவித 'trance'ல் இருந்தாள். இவர் இப்படிக் கேட்டதும், அந்தப் பெண் "பச்சை நிறத்தில் பாவாடை Image
Read 15 tweets
Mar 16
சாபங்கள் மொத்த‍ம் 13 வகையானவை.
1) பெண் சாபம்
பெண்களை ஏமாற்றுவதாலும் சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

2) பிரேத சாபம்
இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், Image
பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

3) பிரம்ம சாபம்
நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக்
கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.

4) சர்ப்ப சாபம்
பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும்.
இதனால் கால-
Read 12 tweets
Mar 15
15/3/2022 பங்குனி செவ்வாய்.
பிலவ வருடத்தின் கடைசி மாதமான பங்குனி மாதம் தொடக்கம் செவ்வாய்க் கிழமையில் அமைந்திருக்கிறது. இந்நாள் குறிப்பாக முருகனை வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் அளிக்கும் நாளாக அமைகிறது. பங்குனி செவ்வாயில் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருபவர்களுக்கு Image
நீண்ட நாள் வேண்டுதல் கூட விரைவாக நிறைவேறி விடும் என்பது நம்பிக்கை. பல வருடங்களாக குழந்தை பேறுக்காக வேண்டி காத்திருப்பவர்கள், எப்படியாவது சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்று தவம் இருப்பவர்கள், விரும்பிய வேலை கிடைக்க, விரும்பிய தொழிலை செய்ய இப்படி நீங்கள் நீண்ட நாட்களாக
நினைக்கும் விஷயங்கள் கூட இந்நாளில் பிணை செய்தால் நிறைவேறும். அதிகாலையில் எழுந்து நீராடி விபூதி பூசிக் கொண்டு, பூஜை அறையை சுத்தம் செய்து மாக்கோலம் இடுவது போன்ற அலங்காரங்களை செய்து முடித்த பின் முருகன் படம் மற்றும் முருகனுடைய வேல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். முருகனுடைய விக்ரஹம்
Read 9 tweets
Mar 15
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் மணிகண்டன் அரச சபைக்கு வேலை கேட்டு வந்தான். அவனுடைய திறமையைப் பற்றி கேட்டபோது, அவன், என்னால் ஒரு மனிதனை அல்லது ஒரு மிருகத்தைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவர்களின் குணாதிசயத்தை தெரிவித்திட முடியும் என்றான். இதைக் கேட்ட அரசர் சண்முக பாண்டியன் Image
அவனை வேலைக்கு அமர்த்தினார். அவரது விஷேசமான குதிரைகள் இருக்கும் தொழுவத்தை பாதுகாக்கும் பொறுப்பை அவன் மீது ஏற்பட்ட நம்பிக்கையால் வழங்கினார். சில நாட்களுக்குப் பிறகு, மன்னர் சண்முக பாண்டியன், தன்னிடம் இருக்கின்ற விலைமதிப்புமிக்க குதிரையைப் பற்றிக் கேட்டார். மணிகண்டன், இது நல்ல
இனத்தைச் சேர்ந்தது இல்லை என்று கூறினான். அரசர் சண்முக பாண்டியன் திகைத்தார். அந்த குதிரையை விற்றவனை அழைத்து வரச் செய்து அவனிடம் இதைப் பற்றிக் கேட்டார். அவன், இந்த குதிரை நல்ல இனத்துக்குச் சொந்தமானதுதான். ஆனால் இந்த குதிரை பிறந்தவுடனேயே, இதனுடைய தாய் இறந்து போய் விட்டது. ஆகவே இந்த
Read 15 tweets
Mar 14
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
தாய், தந்தை, மகள் மூவருமே ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பக்தர்கள். குருவை வணங்குவதில் பணக்காரராக இருந்தாலும் வறுமையில் வாழ்ந்து வந்தனர். பெண் நல்ல அழகானவள் மட்டுமல்ல நல்ல குணமும் கொண்டவள். நன்றாக அவள் படித்தாலும் மேற்கொண்டு அவள் தந்தையால் படிக்க வைக்க முடியவில்லை.
பெண் பருவ வயது வந்ததும் தீவிரமாய் வரன் பார்க்க தொடங்கினர். நல்ல வரன் குருவின் அருளால் இனிதாய் அமைந்தது. பிள்ளை வீட்டாரும் வரதட்சினை எதுவும் வேண்டாம் என்றும் உங்களுக்கு எங்கு விருப்பமோ அங்கு திருமணத்தை நடத்துங்கள் என கூறி விட்டனர்.
எல்லாம் குருராயர் அருள்தான் என நினைத்திருந்த
சமயத்தில் அவர்களின் அடுத்த வார்த்தை பெரிய பாறையையே தலையில் தூக்கி வைத்ததை போல உணர்ந்தனர். திருமணத்திற்கு வருபவர்களை நன்றாக உபசரிக்க வேண்டும். அவர்கள் வயிராற உணவு அருந்த வேண்டும் என தெரிவித்தனர். இவர்களும் சரி என்ற உடன் தேதி குறிக்கப் பட்டது. தந்தைக்கோ தன்னுடைய வறுமையிலும் பெண்ணை
Read 15 tweets
Mar 14
#மகாபெரியவா
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தொகுதவர்-கோதண்டராம சர்மா
சாத்தனூர் கிருஷ்ணமூர்த்தி அய்யர் என்பவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன், முதன் முதலாகப் பெரியவா தரிசனத்துக்கு வந்தார். என்ன தோன்றிற்றோ அவருக்கு, பெரியவாளிடம் ஒரு விசித்தரமான வேண்டுகோளை விண்ணப்பித்துக் கொண்டார்.
"நான் கடைசி மூச்சு விட்டதும், பெரியவாள் 'கங்கா ஜலமும், துளசிதளமும்' பிரசாதமாக கொடுத்தனுப்பி அந்தச் சரீரத்தையும் ஆத்மாவையும் சுத்தப்படுத்தி, நல்ல கதி கிடைக்க அனுக்ரஹம் செய்யணும்”
இந்தப் பிரார்த்தனையைப் பெரியவாளைத் தவிர வேறு யாரும் கேட்கவில்லை. சாத்தனூர் அய்யரும் மற்றவர்களிடம்
சொன்னதில்லை. மஹாராஷ்டிர மாநிலம் சதாராவில் ஸ்ரீ மடம் முகாம் செய்திருந்தபோது, தொலை பேசியில் செய்தி வந்தது. சாத்தனூர் கிருஷ்ணமூர்த்தி அய்யர் சற்றுமுன் சிவலோகப் பிராப்தி அடைந்தார். உரிய சந்தர்ப்பத்தில் பெரியவாளிடம் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. பெரியவா ஒரு நிமிஷம் மௌனமாக
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(